பக்கங்கள்

29 டிசம்பர் 2010

தமிழில் படம் இல்லை என்கிறார் தமன்னா.

தமன்னாவுக்கு தமிழில் புதிய படம் எதுவும் இல்லையாம். படம் ஏதும் வராத நிலை இல்லை, அவர்தான் புதிய படம் எதையும் ஒப்புக் கொள்ளவில்லையாம். காரணம், தெலுங்கில் 3 புதிய படங்களில் நடிக்கப் போவதால் தமிழில் ஒப்புக் கொள்ள முடியவில்லையாம்.
கேடி மூலம் தமிழுக்கு வந்த தமன்னா கடும் முயற்சியின் விளைவாக தமிழில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர். வந்த வேகத்தில் முக்கிய நடிகர்களுடன் ஜோடி போட்டு விறுவிறுப்பான நிலைக்கு உயர்ந்தார்.
அண்ணன் சூர்யாவுடன் அயன் படத்தில் நடித்தவர் தம்பி கார்த்தியுடன் பையா படத்தில் ஜோடி சேர்ந்தார். அதையடுத்து மீண்டும் கார்த்தியுடன் சேர்ந்து சிறுத்தை படத்திலம் நடித்துள்ளார். அடுத்து தனுஷுடன் வேங்கை படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை தொடர்ந்து அவர் தெலுங்குக்குப் போகிறார். அங்கு 3 படங்களை ஏற்றுள்ளாராம். இதனால் தமிழில் படம் எதையும் ஒப்புக் கொள்ளவில்லையாம். 2011ம் ஆண்டு பிற்பகுதியில்தான் தமிழுக்கு வரத் திட்டமிட்டுள்ளாராம். அதுவரை தெலுங்கிலேயே இருப்பாராம்.
தான் நடித்த படங்கள் சில சரியாக ஓடாதது குறித்து தனக்கு வருத்தமில்லை என்று கூறும் தமன்னா, நான் நல்ல கதைகளைத் தேர்வு செய்துதான் நடிக்கிறேன். படங்கள் சரியாக போகவில்லை என்றால் அதற்கு நான் மட்டுமே பொறுப்பில்லை என்கிறார் பொறுப்புணர்ச்சியுடன்.
பையா படத்தைப் போல சிறுத்தையும் அனைவரையும் கவரும் என்று கூறும் தமன்னா, இப்படத்தை மற்றவர்களைப் போல தானும் அதிகம் எதிர்பார்த்திருப்பதாக கூறுகிறார்.

24 டிசம்பர் 2010

படம் பார்க்க ஆளில்லை... தியேட்டர்களில், காலை-இரவு காட்சிகள் ரத்து!!

சினிமா பார்க்கும் ஆர்வம் கிட்டத்தட்ட குறைந்துவிட்டதோ என்ற எண்ணம் தோன்றும் அளவுக்கு மிக மோசமான நிலை உருவாகியுள்ளது. காரணம், பெரும்பாலான திரையரங்குகள் காத்து வாங்குகின்றன, காலி இருக்கைகளுடன்.
இதற்கு தியேட்டர்களில் அதிக கட்டணம் என்று சிலர் முக்கிய காரணம் என்று கூறப்பட்டாலும், அதையும் தாண்டி, வேறு சில காரணங்களும் உள்ளன என்கிறார்கள் திரையுலகைச் சேர்ந்தவர்கள்.
முன்பெல்லாம் பொதுமக்களின் ஒரே பொழுதுபோக்கு சாதனமாக சினிமா மட்டுமே இருந்தது. இப்போது டெலிவிஷன், இண்டர்நெட், மொபைல் போனில் படம் பார்க்கும் வசதி என மாற்றுப் பொழுதுபோக்கு சாதனங்கள் வளர்ந்து விட்டன.
சென்னை, கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்களில் ஆட்டபாட்டங்களுடன் கூடிய கிளப்புகள், பப்கள், நடன மையங்கள் பெருகி வருகின்றன. புதிதாக பெண்கள் மசாஜ் கிளப்புகளும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.
நடுத்தர மக்களை பொறுத்தவரை, தியேட்டர்களில் அதிக கட்டணம் வைக்கப்பட்டிருப்பது பெரும் பாதிப்பாகவே கருதப்படுகிறது. ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்து படம் பார்ப்பதை விட, 20 அல்லது 30 ரூபாய்க்கு டி.வி.டி. வாங்கி குடும்பம் முழுவதும் படம் பார்த்துவிடலாம் என்ற மனநிலைக்கு நடுத்தர மக்கள் வந்துவிட்டார்கள்.
தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கிற கூட்டம் குறைந்து விட்டது. ஒரு காட்சிக்கு நான்கு பேர் அல்லது ஐந்து பேர் மட்டுமே வருவதால், மின்சார கட்டண செலவுக்கு கூட போதவில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் வேதனைப்படுகிறார்கள்.
காலை-இரவு காட்சிகள் ரத்து
இதனால் பெரும்பாலான தியேட்டர்களில், காலை காட்சியும், இரவு காட்சியும் ரத்து செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 1,200 தியேட்டர்கள் உள்ளன. சென்னை நகரில் மட்டும் 70 தியேட்டர்கள் உள்ளன. இதில், பெரும்பாலான தியேட்டர்களில் காலை-இரவு காட்சிகள் நடைபெறுவதில்லை என்பதுதான் உண்மை.
இந்த பாதிப்புக்கு, டிசம்பர் மாத கடும் குளிரும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. கடுமையான பனிப்பொழிவையும், குளிரையும் தாங்கிக்கொண்டு தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்க யாரும் தயாராக இல்லை.
புதிதாக வெளியாகியுள்ள படங்களில் எந்தப் படத்துக்கும் கூட்டமில்லை. இருபது பேர் கூட தேறுவது கடினமாக உள்ளதாக புலம்புகிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.
தியேட்டர்களில் வசூல் அடிவாங்கினாலும், சினிமா தொழில் ஆரோக்கியமாகவே இருக்கிறது என்கிறார்கள், சில மூத்த பட அதிபர்கள்.
"இந்த வருடம் மட்டும் மொத்தம் 125 படங்கள் தயாராகி திரைக்கு வந்துள்ளன. இதன் மூலம் சினிமாவில் குறைந்தபட்சம் ரூ.450 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணத்தில் 50 சதவீதம், நடிகர்-நடிகைகளின் சம்பளத்துக்கு போய் விடுகிறது. மீதி 50 சதவீதம், தயாரிப்பு செலவுக்கு போய் விடுகிறது. நடிகர்-நடிகைகளுக்கு போகிற சம்பளம், சினிமாவுக்கு திரும்பி வருவதில்லை. ரியல் எஸ்டேட் போன்ற வேறு தொழில்களுக்கு போய் விடுகிறது என்பதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம்,'' என்கிறார்கள் அந்த பட அதிபர்கள்.

15 டிசம்பர் 2010

யாரும் என் இடுப்பைக் கிள்ளவில்லை!

ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் எனது இடுப்பை யாரும் கிள்ளவில்லை. என்னுடன் சேர்ந்து போட்டோ எடுக்க முண்டியவரைத்தான் நான் நிறுத்தி அறிவுரை கூறினேன் என்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை சினேகா.
சமீபத்தில் நிருபர்களைச் சந்தித்த அவர் கூறியது:
ஈரோட்டில் என் இடுப்பை யாரும் கிள்ளவில்லை. என்னுடன் போட்டோ எடுக்க பலர் ஆர்வப்பட்டனர். அந்த ரசிகரும் முண்டியடித்தார். அப்போது அவசரப்படாதீர்கள் என்று அறிவுரை சொன்னேன்.
என் இடுப்பை கிள்ளியதாகவும், நான் ஆவேசப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. இடுப்பை கிள்ளி இருந்தால் அந்த ரசிகர் ஓடியிருப்பார். நானும் அறிவுரை சொல்லி இருக்கமாட்டேன். அடித்திருப்பேன்.
நான் அரசியலில் குதிப்பதாகவும், பிரச்சாரத்துக்குப் போகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனக்கு அரசியல் பற்றி தெரியாது. எனவே அரசியலுக்கு வரமாட்டேன். தேர்தலில் ஏதேனும் கட்சி பிரசாரத்துக்கு அழைத்தாலும் போகமாட்டேன்.
ஆனால் அரசியலுக்கு வருபவர்கள் நல்ல அரசியல்வாதியாக இருக்க வேண்டும்.
இப்போது ஆக்ஷன் படத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்துக்காக நிஜமாகவே சண்டை போட்டேன். நிஜத்தில் நான் அடிக்க வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் பெயர்களை சொல்ல முடியாது.
அடுத்து நான் நடித்து வரும் ஒரு படத்தில் இப்படி ஒரு பஞ்ச் டயலாக் உள்ளது: ஆம்பளையா இருந்தாலும், பொம்பளையா இருந்தாலும் போலீஸ் போலீஸ் தாண்டா... பஞ்ச் டயலாக் பேச ஹீரோவாகத்தான் இருக்கணுமா... ஹீரோயின் பேசக்கூடாதா?, என்றார்.
பேசலாமே, நல்லாப் பேசலாமே...!

10 டிசம்பர் 2010

புவனேஸ்வரியும் 'பாவத்தின் சம்பளமும்'!

கடந்த ஆண்டு தமிழ் சினிமா- பத்திரிகையுலம் கடுமையாக மோதிக்கொள்ளும் அளவுக்குப் போனதற்கு முக்கிய காரணம் நடிகை புவனேஸ்வரி.
விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி பற்றிய செய்திகள் வெளியானபோது, கூடவே, மேலும் யார் யார் இந்தத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என படத்தோடு செய்தி வெளியாக பொங்கிவிட்டனர் திரையுலகினர். குறிப்பாக நடிகர்கள் சூர்யா, விவேக், சத்யராஜ், விஜயகுமார், அவர் மகன் அருண் விஜய் போன்றவர்கள் ஆபாசமாகத் திட்டினர். அலுவலகம் புகுந்து பத்திரிகையாளர்களைக் கொல்லுவோம் என்றெல்லாம் பேசினார்கள். ரஜினிகாந்த், விசி குகநாதன் முன்னிலையில் நடந்த பெரும் கூட்டத்தில் இதெல்லாம் நடந்தது.
ஆனால் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் வழக்கு தொடர்ந்தபோது, இப்படியொரு கூட்டமே நடக்கவில்லையே என்று போலீஸே எழுதிக் கொடுத்தது.
இந்த ரகளையில், பிரச்சினைக்கு மூல காரணமான புவனேஸ்வரியை மறந்துவிட்டனர் பலரும். அவரும் கொஞ்ச காலம் கோயில், குளம் என்று பக்தி காஸ்ட்யூமில் இருந்தார். பின்னர், சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் பிரிவு செயலாளர் ஆனார். இப்போது மீண்டும் நடிப்பைத் தொடர களத்தில் இறங்கிவிட்டார்.
இவர் நடிக்கவிருக்கும் டிவி தொடருக்குப் பெயர் 'பாவத்தின் சம்பளம்'!!

07 டிசம்பர் 2010

புது நடிகைகளில் டாப் ஹீரோக்களின் சாய்ஸ் அமலா பால்!

புதிய நாயகிகளில் இப்போது அதிக படங்களை வைத்திருப்பவர் அமலா பால் என்ற அனகா. முன்னணி நடிகர்களும் முதல் சாய்ஸ் அவர்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
கேரளத்தைச் சேர்ந்த அமலா நடித்த முதல் படம் சிந்து சமவெளி. மாமனாருடன் கள்ளத் தொடர்பு கொள்ளும் விவகாரமான பாத்திரம் அது. கொஞ்சம் பேர் பாராட்டினார்கள். நிறைய பேர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
அடுத்து வந்த படம் மைனா. முதல் படத்தில் வாங்கிக் கட்டியதற்கெல்லாம் சேர்த்து இந்தப் படத்தில் நல்ல பெயர் கிடைத்தது.
இதன் விளைவு, நயன்தாரா, த்ரிஷா ரேஞ்சுக்கு பேசுகிறார்கள் அமலாவை.
விக்ரமின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடி அமலாதான். லிங்குசாமி இயக்கும் படம், ஆர்யா - மாதவன் நடிக்கும் வேட்டை என பெரிய படங்கள் அமலாவின் கைவசம். மேலும் இரு பெரிய பட்ஜெட் படங்களிலும் நடிக்க பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இப்போதே பெரிய பட வாய்ப்புகள் வந்துவிட்டது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் நிச்சயம் பேரைக் காப்பாற்றிக் கொள்வேன்", என்றார்.

05 டிசம்பர் 2010

சிக்கு புக்கு ப்ரீத்திகா.

சினிமா செய்தியாளராக இருந்து இப்போது நடிகையாக அவதாரம் எடுத்துள்ளார் ப்ரீத்தீகா.
பத்திரிக்கை ஒன்றுக்கு சினிமா செய்திகளைக் கொடுக்கும் நிருபராக இருந்தவர்தான் இந்த ப்ரீத்திகா. இப்போது இவர் சிக்கு புக்கு படம் மூலம் நடிகையாகியுள்ளார். ஷ்ரியாவுடன் இணைந்து ஆர்யாவுடன் ஜோடி போட்டுள்ளார் ப்ரீத்திகா.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆர்வமாக இரு்நதேன். அதற்கேற்ப சிக்கு புக்கு பட வாய்ப்பு வந்ததும் கப்பென்று பிடித்துக் கொண்டேன். எனது புகைப்படத்தைப் பார்த்து இயக்குநர் மணிகண்டன் இந்த வாய்ப்பைக் கொடுத்தார்.
நான் நடித்த ரோலில் முதலில் வித்யா பாலன்தான் நடிப்பதாக இருந்தது. பின்னர் அவர் நடிக்கவில்லை. இதையடுத்து என்னை தேர்வு செய்தனர். படப்பிடிப்புக்காக பத்து நாட்கள் சென்னையில் தங்கியிருந்தேன்.
ஒரு நடிகையாக என்னை இந்தப் படம் சரியாக அடையாளம் காட்டியுள்ளதாக கருதுகிறேன். மேலும், நான் ஒரு மாடல் ஆக இருந்ததும் பெரும் உதவி புரிந்தது. அனைத்து ஷாட்களையும் ஒரே ஷாட்டில் முடித்துக் கொடுத்தேன்.
முதலில் எனக்குத் தமிழ் தெரியாது. இருந்தாலும் ஆர்யாவும், இயக்குநரும் உதவி செய்தனர். இதையடுத்து என்னால் தமிழ் உச்சரிப்பை சரியாக செய்ய முடிந்தது.
முதன் முதலில் நான் கேமராவுக்கு முன்பு தோன்றியது அமிதாப் பச்சனுடன் நடித்த காட்பரீஸ் சாக்லேட் விளம்பரப் படம்தான்.
படத்தில் நானும், ஷ்ரியாவும் சேர்ந்து வருவது போல காட்சி இல்லை. எனவே எங்களுக்குள் எந்த சண்டையும் நடக்கவில்லை என்கிறார் ப்ரீத்திகா.

29 நவம்பர் 2010

கரீனாவை மிஞ்சுவாரா இலியானா?

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக இலியானா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியில் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படம் 3 இடியட்ஸ். வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்த படம். இப்படத்தை ஷங்கர், தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளார்.
இதற்கான கலைஞர்களைத் தேர்வு செய்யும் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. நாயகியாக இலியானா நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் தமிழுக்கு மீண்டும் வருகிறார் இலியானா. கேடி படத்தின் மூலம்தான் இவர் நடிகையானார். ஆனால் கேடி ஓடாததால், அதிருப்தி அடைந்து தெலுங்கோடு நின்று விட்டார்.
தற்போது ஷங்கர் படம் என்பதால் 3 இடியட்ஸ் ரீமேக்குக்கு ஒப்புக் கொண்டு நடிக்கவுள்ளார். இந்திப் படத்தில் கரீனா கபூர் நடித்த வேடத்தில் இலியானா நடிக்கிறார். கரீனா கபூர் அப்படத்தில் பின்னி எடுத்திருப்பார். அதை மிஞ்சும் வகையில் இலியானா நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இலியானாதான் நாயகியாக நடிக்கவுள்ளாராம். தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ஜோடியாக நடிப்பார். தமிழில் விஜய்யுடன் ஜோடி போடுவார்.
இப்படத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக இந்தி 3 இடியட்ஸை மீண்டும் மீண்டும் பார்த்து ஸட்டி செய்து வருகிறாராம் இலியானா.

28 நவம்பர் 2010

மேகனாவுடன் ஷக்தி ஜோடி சேரும் 'கள்ளச்சிரிப்பழகா'

இயக்குநர் பி. வாசுவின் மகன் ஷக்தி, அடுத்த முயற்சியாக கள்ளச்சிரிப்பழகா என்ற படத்தை பெரிதும் நம்பியுள்ளார்.
இயக்குநர் பி. வாசுவின் மகன் ஷக்தி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். சின்னத் தம்பி படத்தில் வந்த அந்த குண்டுப் பையன்தான் இப்போதைய ஷக்தி.
தனது தந்தையின் இயக்கத்தில், தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் நாயகன் ஆனார். தற்போது பல படங்களி்ல் நாயகனாக நடித்து வருகிறார். இதுவரை பிரேக் கிடைக்கவில்லை.
தற்போது புதிதாக கள்ளச்சிரிப்பழகா படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் இயக்குநர் புதுமைப்பித்தன், லவ்லி ஆகிய படங்களை இயக்கிய எஸ்.கே.ஜீவா. இவர் தான் அழகிய தமிழ் மகன் படத்தி்ன் கதாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜீவா மகேந்திரன், சந்தானபாரதி, பிரதாப்போத்தன் போன்றவர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
கள்ளச்சிரிப்பழகனுடன் சேர்ந்து கள்ளச்சிரிப்பு சிரிக்கவிருப்பது காதல் சொல்ல வந்தேன் நாயகி மேகனா. நகைச்சுவையில் கலக்கவிருக்கிறார் சந்தானம்.
கதாபாத்திரங்கள் மற்றும் இயக்குநர் அறிமுகம் முடிந்துவிட்டது. தற்போது கதைக்கு வருவோம். அது தானே முக்கியமானது. தான் என்ன தான் கஷ்டப்பட்டாலும் அடுத்தவர்களுக்கு புன்னகையுடன் உதவும் இளைஞனின் கதைதான். ஆக, அரைத்த மாவையே வித்தியாசமாக அரைக்கவிருக்கின்றனர்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார், என்.ரவி ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறதாம்.

26 நவம்பர் 2010

நடிகர் சங்கத்துக்கு ஃபெப்ஸி கடும் கண்டனம்!

குகநாதனுக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கத்துக்கு ஃபெப்சி அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நடிகர் ஆர்யா சில தினங்களுக்கு முன் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், "நான் ஒரு மலையாளி என்பதில் பெருமைப்படுகிறேன். பொதுவாக மலையாளிகள் ரசனையில் உயர்ந்தவர்கள். க்ளாஸ் படங்கள், உயர்ந்த நடிப்புதான் அவர்களுக்குப் பிடிக்கும். தமிழர்கள் ரசனை அப்படியல்ல. சுமாராக நடித்தாலும் லட்சங்கள், கோடிகளைக் கொட்டுவார்கள்" என்றெல்லாம் கூறியிருந்தார்.
இது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. நி்கழ்ச்சியைப் பார்த்த விசி குகநாதன், ஆர்யாவுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். ஆனால் அதில் அவர் நேரடியாக ஆர்யாவின் பெயரைக் குறிப்பிடவில்லை.
இந்த நிலையில், நடிகர் சங்கம் குகநாதனைக் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டது கடந்த செவ்வாய்க்கிழமை.
இப்போது நடிகர் சங்கத்தின் கண்டனத்துக்கு குகநாதன் தலைவராக உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பான (ஃபெப்ஸி) கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பெப்ஸி பொதுச்செயலாளர் சிவா உள்பட அனைத்து நிர்வாகிகளும் அதில் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த அறிக்கை:
திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் குறிப்பிட்ட ஒரு நடிகருக்கு எதிராக ஃபெப்ஸி தலைவர் பேசும் போது, 'இதனை நான் ஃபெப்ஸி தலைவராக அல்லாமல், ஒரு தமிழனாகவே கூறுகிறேன்' என்றார் தெளிவாக. ஆனால் நடிகர் சங்கமோ ஃபெப்ஸி தலைவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தலைவர் விசி குகநாதனுக்கு மட்டுமல்லாமல், அனைத்து தொழிலாளர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் சினிமா அமைப்புகளில் பல பொறுப்புகளிலும், இங்கே பல சங்கங்களில் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றியவர் வி சி குகநாதன். 250 படங்களில் பணியாற்றி, தனது 64 வது வயதிலும் எங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் எங்கள் தலைவரை வெடி கொளுத்திப் போடுகிறார், கயிறு திரிக்கிறார் என்றெல்லாம் கூறி அறிக்கை விட்டது மிகவும் கண்டிக்கத் தக்கது.
நடிகர் சங்க செயலர் ராதாரவி, டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் சங்கத் தலைவராகவும் உள்ளார். இது பெப்ஸியின் ஒரு அங்கம். அப்படியிருக்கையில், நேரிலோ கடிதம் மூலமாகவோ வி சி குகநானிடம் இதுபற்றி விளக்கம் கேட்டிருக்கலாம். அதை விட்டுவிட்டு, பத்திரிகைகள் மூலம் பெப்ஸியை வம்புக்கிழுத்திருப்பது வேதனைக்குரியது. வண்மையாக கண்டிக்கத்தக்கது", என்று அதில் கூறப்பட்டுள்ளது.

24 நவம்பர் 2010

கரு பழனியப்பனின் 'ப்ளாக்கர்ஸ் ஷோ'!

வலைப்பூ எனப்படும் பிளாக் எழுதுவது இன்று ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. தெரிந்ததையெல்லாம் மொழி, இலக்கணம், நடை எதைப் பற்றியும் கவலைப் படாமல் எழுதித் தள்ளலாம் என்ற வசதி, எல்லோரையுமே ஒரு முறை எழுதிப் பார்க்கத் தூண்டியுள்ளது வலையுலகில்.
சிலர் இதிலேயே கணிசமாக பணம் பார்ப்பதும் நடக்கிறது. தனி நபர் நிறுவனங்கள் சில விளம்பரமெல்லாம் தருகின்றன!
வெகுஜன ஊடகங்களில் எட்டிப் பார்க்காத அறிவு ஜீவித்தனங்களும் இவற்றில் உண்டு... அதேநேரம் அங்கே காட்ட முடியாத வக்கிரங்கள், ஆபாசங்களையும் சிலர் கொட்டித் தீர்ப்பதையும் பார்க்க முடிகிறது. பலர் ஏற்கெனவே வந்ததை காப்பி பேஸ்ட் செய்வதே ப்ளாக் எழுதுவது என்பதில் தெளிவாக உள்ளனர்.
இவர்களுக்கென்று சங்கமெல்லாம் வைத்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 3000 பதிவர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களில் சிலருக்கென வாசகர் வட்டமும் உள்ளன. பெரும்பாலான வலைப்பதிவாளர்கள் சினிமா விமர்சனம் எழுதுகிறார்கள். நாலு வரி, நாலு பக்கம் என்று அவரவர் நோக்கத்துக்கு எழுதுகிறார்கள்.
இப்போது இந்த விமர்சனங்களுக்கு ஒரு அங்கீகாரம் தரும் நோக்கில் இயக்குநர் கரு பழனியப்பன் தனது மந்திரப் புன்னகை படத்துக்காக தனி ஷோ ஒன்றை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு ஞாநி உள்பட 50க்கும் மேற்பட்ட வலைப்பதிவாளர்கள் திரண்டிருந்தனர்.
இது கரு பழனியப்பனுக்கு சந்தோஷத்தை அளித்தாலும், ஏற்கெனவே இணையதள பத்திரிகையாளர்களை தடுப்பதில் குறியாக உள்ள சில பிஆர்ஓக்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளதாம்.
'இவிங்களும் இனி ரெகுலர் ஷோவுக்கு வருவாங்களோ...' என்று ஒருவருக்கொருவர் கவலையுடன் பேசிக் கொண்டதுதான் கரு பழனியப்பனின் ப்ளாக்கர்ஸ் ஷோவின் ஹைலைட்!!

21 நவம்பர் 2010

சிம்ரன் இடத்தை நிரப்ப விரும்பும் சனா!

கவர்ச்சி, நடிப்பு என இரண்டையும் கலந்து அடித்துக் கலக்கிய சிம்ரன் போல ஆக விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் சனா கான்.
சிலம்பாட்டம் மூலம் தமிழில் நடிக்க வந்த சனா கான், கவர்ச்சிகரமான நடிகை என்ற பெயரை எடுத்தவர். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கவர்ச்சியை மூட்டை கட்டி வைத்து அடக்கம் ஒடுக்கமாக நடித்துள்ளார்.
அப்படியானால் இனி கவர்ச்சி கிடையாதா என்றால், சிம்ரன் இருந்தார். நடிப்பிலும், கவர்ச்சியிலும் கலக்கியவர். அவரது இடத்தை நிரப்ப யாரும் இன்னும் வரவில்லை.
எனக்கும் கூட நடிப்பிலும், கவர்ச்சியிலும் கலக்க வேண்டும் என்பதே ஆசை. கவர்ச்சியாகவும் நடிப்பேன், ஆயிரத்தில் ஒருவன் போலவும் நடிப்பேன்.
நான் இளம் வயது நடிகை. எனவே கவர்ச்சி வேண்டாம் என்று சொல்ல மாட்டேன், சொல்லவும் முடியாது. முழுப் படத்திலும் கவர்ச்சிகரமாக நடிக்க நான் தயார்தான். அதேசமயம், பாவாடை, தாவணியில் வந்து போகவும் ஆசை உண்டு.
கவர்ச்சியில்லாமல் நடிப்பதும் அழகான சினிமாதான். ஆனால் அப்படிப்பட்ட படங்களில் நடிப்பது அபூர்வமாக இருக்க வேண்டும்.
தெலுங்கில் இப்போது கத்தி என்ற படத்தில் நடித்துள்ளேன். தூக்கலான கவர்ச்சி அதில். அங்கு ரசிகர்கள் கவர்ச்சி இல்லாவிட்டால் படத்தை ரசிக்க மாட்டார்கள். கவர்ச்சிக்காகவே வருகிறார்கள். எனவே அங்கு கவர்ச்சியாக மட்டுமே நடிக்க முடியும் என்கிறார் சனா.

18 நவம்பர் 2010

தனி ஹீரோவாக களமிறங்கும் ஷாம்!

ஷாம் - ரவி தேஜா நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் கிக், ஆந்திராவில் பிளாக்பஸ்டர் படமாக வசூலைக் குவித்தது.
இதைத் தொடர்ந்து ஷாமுக்கு தெலுங்குப் படங்களில் வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் நல்ல கதைகளைத் தேர்வு செய்யக் காத்திருந்த ஷாம், இப்போது ஷேத்ரம் என்ற படத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்குகிறது. தமிழ் நடிகரான தனக்கு தெலுங்கில் தனி ஹீரோ வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் ஷாம்.
தமிழில் ஏற்கெனவே அவர் நடித்த அகம் புறம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இந்தப் படத்துக்குப் பின், தூசி படத்தை தயாரித்து நடிக்கிறார் ஷாம்.

15 நவம்பர் 2010

வெளி வருகிறது மயிலு!

பிரகாஷ் ராஜ் - மோசர் பேர் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான படம் மயிலு. ஜீவன் இயக்கியிருந்தார்.
ரிலீசுக்கு முன்பே இளையராஜாவின் பாடல்கள் பெரிதும் பேசப்பட்ட படம் இது. ஒரு பொங்கல் தினத்தில், இந்தப் பாடல்கள் உருவான விதத்தை இசைஞானி லைவ்வாகவே காட்ட, மெய் மறந்துபோனார்கள் ரசிகர்கள் .
ஆனால் தயாரிப்பாளர்களுக்கிடையில் எழுந்த மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அப்படியே நின்றுவிட்டது மயிலு.
அந்தப் படத்தில் அறிமுகமாகவிருந்த இயக்குநர் ஜீவன், அதற்குப் பிறகு பா. விஜய்யை வைத்து ஞாபகங்கள் எடுத்துவெளியிட்டது நினைவிருக்கலாம்.
இப்போது மீண்டும் மயிலை வெளியிடும் முயற்சியில் தீவிரமாக உள்ளார் தயாரிப்பாளரும் நடிகருமான பிரகாஷ் ராஜ். கிறிஸ்துமஸுக்கு இந்தப் படம் வெளியாகிறது.
மதுரையை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதையில் ஷம்முவும் புதுமுகம் ஸ்ரீயும் நடித்துள்ளனர்.
படம் குறித்து பிரகாஷ் ராஜ் கூறுகையில், "இந்தப்படம் வெளியாவது நல்ல சினிமாவுக்கு, நல்ல இசைக்குக் கிடைத்த வெற்றி என்பேன். இந்தப் படத்தின் நாயகன் இளையராஜாதான். தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத படமாக, இசையாக மயிலு அமையும்," என்றார்.

11 நவம்பர் 2010

இந்தி போய் கஷ்ரம் வேண்டாம் என்கிறார் காஜல்!

தன்னைத் தேடி வரும் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் காஜல் அகர்வால். இந்திப் பட வாய்ப்புகளை மறுத்து வருகிறாராம் அவர்.
நல்ல பெரிய கண்களுடன், செமத்தியான உயரத்துடன், பளிச்சென்று பொம்மை போல இருக்கும் காஜலுக்கு தமிழை விட தெலுங்கில் நல்ல கிராக்கி. தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர் தமிழிலும் பெரிய ரவுண்டுக்கு ஆயத்தமாகி வருகிறார்.
தெலுங்கில் அவரைத் தேடி ஏகப்பட்ட வாய்ப்புகளாம். பார்த்து, பதவிசாக படங்களைத் தேர்வு செய்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். தமிழிலும் கூட நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். கை கொள்ளாத அளவுக்கு ஆர்டர்கள் குவிவதால் படு ஹேப்பியாகியிருக்கும் அகர்வால், இந்த இரு மொழிப் படங்களில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்துவது என முடிவு செய்துள்ளார்.
இதனால் தன்னைத் தேடி வரும் இந்திப் பட வாய்ப்புகளை நிராகரித்து வருகிறாராம். இதனால் இந்திப் படத் தயாரிப்பாளர்கள் சோகமாகியுள்ளார்களாம். காஜல் சேவை தெலுங்கு, தமிழுக்கு மட்டும்தானா, எங்களுக்கு இல்லையா என்று வருத்தப்படுகிறார்களாம்.
ஆனால் காஜலோ, எனக்குத்தான் மன மகிழ்ச்சி தரும் அளவுக்கு தெலுங்கிலும், தமிழிலும் வாய்ப்புகள் வருகிறதே, பிறகு எதற்காக இந்திக்குப் போய் பிற நடிகைகளைப் போல கஷ்டப்பட வேண்டும் என்று விளக்குகிறார்.
பரவாயில்லையே, ஆசின், திரிஷா ஆகியோர் இந்திக்குப் போய் திண்டாடி வருவதைப் பார்த்து கவனமாகத்தான் காய் நகர்த்துகிறார் காஜல்...!

08 நவம்பர் 2010

'அர்ஜூன் ராசா..'-உருகும் ஹரிப்ரியா!

நடிகர் அர்ஜூன், இதயங்களை கொள்ளை கொள்ளும் ராஜா என்று அர்ஜூன் புராணம் பாடிக் கொண்டிருக்கிறாராம் நடிகை ஹரிப்ரியா.
கன்னடத்து ஹரிப்ரியா, அர்ஜூனுடன் இணைந்து வல்லக்கோட்டை படத்தில் நடித்துள்ளார். படத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் இன்று வரை நிற்காமல் அர்ஜூன் புராணம் பாடி புளகாங்கிதமடைந்து காணப்படுகிறாராம் ஹரிப்ரியா.
ஏன் இப்படி அர்ஜூன் புராண் என்று 'ஹரி'யிடம் கேட்டால், அர்ஜூன் சார் அப்படி ஒரு 'அமைக்கபிள்' ஆன நபர். அவருடன் நடிக்கப் போகிறேன் என்று கேட்டதுமே எனக்கு திரில்லாகி விட்டது. அர்ஜூன் சாருடன் இணைந்து நடித்தது இதுவே முதல் முறையாகும். இதற்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
எனக்கு அர்ஜூன் படங்களிலேயே மிகவும் பிடித்தது ஜென்டில்மேன்தான். படத்தின் பெயருக்கேற்ப அவரும் உண்மையில் ஒரு ஜென்டில்மேன்தான்.
மிகவும் எளிமையானவர் அர்ஜூன். இயல்பாக பழகினார். டயலாக்கை எப்படி உச்சரிப்பது என்பது குறித்து எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தார். இயல்பாக நடிக்க எனக்கு பேருதவி புரிந்தார்.
படத்தில் வரும் டூயட் பாட்டில் மகதீரா, மகதீரா என்று வரிகள் வரும். மகதீரா என்றால் தெலுங்கில் ராஜா என்று பெயர். உண்மையிலேயே அர்ஜூனும் இதயங்களை கொள்ளை கொள்ளும் ராசாதான் என்கிறார் ஹரிப்ரியா.
நமக்கே ரொம்ப புல்லரிக்குதே...!

05 நவம்பர் 2010

'சிக்' ஷ்ரியா-சிலிர்க்கும் ஹீரோக்கள்!

ஷ்ரியாவின் நடிப்புக்குப் பாராட்டு கிடைக்கிறதோ இல்லையோ அவரது அழகுக்கும், உடல் அமைப்புக்கும் நிறையவே பாராட்டுக்கள் கிடைக்கிறதாம்-ஹீரோக்களிடமிருந்து.
சிக் உடல் நாயகிகளுக்குத்தான் இன்று மார்க்கெட் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக இந்தியில், சைஸ் ஜீரோ நாயகிகளுக்கு செம கிராக்கி உள்ளது. தமிழ் சினிமாவிலும் கூட இப்போது சிக் நாயகிகள் பெருத்துப் போய் விட்டார்கள்.
அவர்களில் முக்கியமானவர் ஷ்ரியா. இவரது உடல் வாகு தொடர்ந்து ஒரே மாதிரியாக இருப்பதாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்கள். நடிக்க வந்தபோது என்ன சைஸில் இருந்தாரோ அதை அப்படியே மெயின்டெய்ன் செய்கிறாராம் ஷ்ரியா.
தற்போது மேலும் ஸ்லிம்மாகி பல ஹீரோக்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளாராம். ஆனால் இந்த ஹீரோக்கள் எல்லாம் இந்தி ஹீரோக்களாம். அவர்கள் ஷ்ரியாவின் ஸ்லிம் அழகை பாராட்டியதோடு, எப்படி இப்படி தொடர்ந்து கட்டுக்கோப்பாக உடலை வைத்துக் கொள்ள முடிகிறது என்றும் ஆச்சரியத்தோடு கேட்கிறார்களாம்.
எல்லோருக்கும் ஷ்ரியா சொல்கிற ஒரே பதில் யோகா செய்வதால்தான் என்பதுதானாம். ஹீரோக்களுக்கு மட்டுமல்லாமல் தனக்கு நெருக்கமான சில ஹீரோயின்களுக்கும் கூட யோகா செய்யுமாறு அட்வைஸ் செய்கிறாராம் ஷ்ரியா.
ஷ்ரியாவின் அட்வைஸைக் கேட்டு உடம்பை ஸ்லிம்மாக்க யோகாவுக்கு மாறி தீவிரமாக அதைக் கடைப்பிடித்து வருகிறாரம் ஷ்ரியாவின் தோழியான ரீமா சென்.

03 நவம்பர் 2010

'உம்மாடா செல்லம்':சொன்னது பாக்கியாஞ்ச்சலிதான்.

நான் நடிகை பாக்யாஞ்சலியை திருமணம் செய்து கொள்ளுமாறு கோரி வற்புறுத்தவில்லை. மாறாக, நடிகை பாக்யாஞ்சலிதான் என்னைக் காதலிப்பதாக கூறி எனக்குக் கடிதம் எழுதினார், எஸ்.எம்.எஸ். அனுப்பினார் என்று கோர்ட்டில் வில்லன் நடிகர் வேலு தெரிவித்துள்ளார்.
நெல்லு, உன்னையே காதலிப்பேன், கோட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளவர் பாக்யாஞ்சலி. அதற்குள் பெரும் பிரச்சினையைக் கிளப்பியுள்ளார். வில்லன் நடிகர் வேலு தன்னை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்வதாகவும், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதாகவும், தனது வீட்டில் வைத்து அடித்து உதைத்ததாகவும், முத்தம் கொடுத்தது போல புகைப்படம் எடுத்து வைத்துள்ளதாகவும் அவர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்துப் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து துணை ஆணையர் லட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். நடிகையிடம்நேரில் விசாரணை நடந்துள்ளது.ஆனால் நடிகர் வேலு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அப்படியும் வரவில்லை. இதையடுத்து அவரைக் கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி செஷன்ஸ் கோர்ட்டை நாடியுள்ளார் வேலு.
இந்த மனு நேற்று 4வது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பரஞ்சோதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் வேலுவின் வக்கீல் ஆஜராகி, வேலுவுக்கு பாக்யாஞ்சலி காதல் கடிதம், எஸ்.எஸ்.எஸ் அனுப்பியுள்ளார்.
'உம்மாடா செல்லம்'
அந்தக் கடிதத்தில், மை டியர் வேலு, நீ எங்கே இருக்கிறாய்? நீ இல்லாமல் நான் இல்லை. நீ எனக்கு தேவை. உன்னைப் பார்க்கணும். உன்னை கட்டித் தழுவ வேண்டும். ஐ லவ் யூ சோ மச், உம்மாடா செல்லம். நான் எப்போதும் உன்னுடன் இருக்க வேண்டும். கடிதத்தின் கீழே ஐ லவ் யூ என்று 6 தடவை எழுதியுள்ளார் என்று தெரிவித்தார்.
இதையடுத்து கடிதத்தை பாக்யாஞ்சலிதான் எழுதினாரா என்பதை கண்டுபிடிக்க அவகாசம் தேவை என்பதால் விசாரணையை ஒத்திவைக்குமாறு அரசுத் தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்ற நீதிபதி,நாளை மறுநாளைக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

02 நவம்பர் 2010

நான் இனிமே அமலா-அனகா!

நடிகை அனகா தனது பெயரை மீண்டும் ஒரிஜினல் பெயரான அமலா பால் என்றே மாற்றி விட்டார்.
கேரளாவிலிருந்து நடிக்க வந்தவர் அனகா. சிந்துசமவெளி படத்தில் சர்ச்சைக்குரிய கேரக்டரில் நடித்த அவர் அந்த சர்ச்சையை தற்போது மறக்க விரும்புகிறாராம்.
யாராவது சிந்துசமவெளி படம் குறித்து கேட்டால், அய்யோ, அதை விடுங்க சார், இப்போது மைனா படத்தில் நடித்திருக்கிறேன். அதைப் பற்றிக் கேளுங்கள் என்று கூறி மைனா குறித்து விரிவாகப் பேசுகிறார்.
சிந்துசமவெளிக்கு் முன்பு வரை அமலா பால் என்ற பெயரிலேயே அவர் நடித்து வந்தார். ஆனால், சிந்துசமவெளி படத்தின்போது இயக்குநர் சாமிதான் அனகா என்று பெயரை மாற்றினார். இப்போது சிந்துசமவெளி தொடர்பான அடையாளத்தையே வெறுக்கும் அனகா, தனது ஒரிஜினல் பெயரான அமலா பாலுக்கே மாறி விட்டாராம்.
இனிமேல் என்னை அமலா என்றே அழையுங்கள் என்றும் கொஞ்சலாக கூறுகிறார்.
சிந்துசமவெளி சர்ச்சையின்போது பெரும் மன வேதனை அடைந்திருந்தாராம் அனகா. அப்போது அவரது தோழியர்தான் பெரும் ஆறுதல் கூறினார்களாம். கேரளாவில் பிஏஆங்கிலம் படித்து வருகிறார் அனகா என்பது உபரித் தகவல்.

01 நவம்பர் 2010

பாடல் மூலம் அம்புவிடும் மன்மதன் கமல்!

மன்மதன் அம்பு படத்தில் கமல் ஹாஸனே அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
சினிமா உருவாக்கம் என்று வந்தால் கமல்ஹாஸன் ஒரு நிஜமான சகலகலா வல்லவன். இயக்கம், பாடுவது, நடனம், நடிப்பு என அவர் அனைத்து துறையிலுமே வல்லவர்தான்.
ஏற்கெனவே தன்னை ஒரு திறமையான பாடலாசிரியராக, ஹே ராம் படத்தில் நிரூபித்தார். இளையராஜா இசையில் எப்போது கேட்டாலும் இதயத்தை வருடும், 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...' பாட்டு கமல் எழுதியதுதான்.
அடுத்து மன்மதன் அம்பு படத்துக்காக தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் 4 பாடல்களை எழுதியுள்ளார் கமல்.
இதுகுறித்து இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறுகையில், "மன்மதன் அம்பு படத்தில் கமல்தான் ஹைலைட். நடிப்பு என்றில்லாமல், பல துறைகளிலும் கமலின் பங்களிப்பு இந்தப் படத்தில் அதிகம். அதற்கு ஒரு உதாரணம், இந்தப் படத்தின் 5 பாடல்களில் நான்கை கமல் சாரே எழுதியிருப்பதுதான்..." என்றார்.
பாடல் வெளியீட்டு விழா நவம்பர் 20-ம் தேதி சிங்கப்பூரில் நடக்கிறது. படம் டிசம்பர் 10-ம் தேதி வெளியாகிறது.

30 அக்டோபர் 2010

மீண்டும் ஆட்டம் போடுகிறார் மாளவிகா!

கல்யாணம் பண்ணி, குழந்தை பிறந்து, ஓய்வு முடிந்து மீண்டும் கோலிவுட்டுக்குத் திரும்பிவிட்டார் மாளவிகா.
எம்.ஜி.ஆர் நம்பி தயாரித்து இயக்கும் படம் பொறுத்திரு என்ற படத்தில் ஒரு கவர்ச்சி ஆட்டம் போடுகிறார்.
எம்ஜிஆரின் 'எங்க வீட்டு பிள்ளை' படத்தில் இடம் பெற்ற 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்...' பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாளவிகா நடனமாடுகிறார். எம்ஜிஆர் நம்பியே ஹீரோவாகவும் நடிக்கிறார்.
"நான் பால்காரன் வேடத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். மாளவிகா திருமணத்துக்கு பிறகு முதன் முறையாக நடிகை மாளவிகாவாகவே நடிக்கிறார். கிராமத்துக்கு டீக்கடை திறக்க வரும் அவரை, ஊர் பெரிய மனிதர் என்ற முறையில் வரவேற்கிறேன். மாளவிகாவையும் என்னையும் இணைத்து எனது அத்தை மகள் கனவு காண்பதாக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாட்டுக்கு புதிதாக ட்யூன் போடாமல், 'எங்க வீட்டு பிள்ளை' படத்தில் இடம்பெற்றுள்ள நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்... பாடலையே ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியுள்ளோம்.
மறைந்த எஸ்.எஸ்.சந்திரன் 12 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இதுதான் அவருக்கு கடைசி படம்..." என்றார் இயக்குநர் எம்ஜிஆர் நம்பி.

27 அக்டோபர் 2010

'டைரக்டர் மட்டும் இல்லேன்னா... '-அதிர்ச்சியில் அஞ்சலி!

தம்பி வெட்டோத்தி சுந்தரம் படப்பிடிப்பில் நடந்த திடீர் தாக்குதலில் இயக்குநரால் காப்பாற்றப்பட்டார் நடிகை அஞ்சலி.
இயக்குநர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நான் தப்பித்திருக்கவே முடியாது', என்கிறார் அஞ்சலி அதிர்ச்சி விலகாமல்.
அஞ்சலியும் கரணும் ஜோடியாக நடிக்கும் 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படப்பிடிப்பு குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள மங்கலம் பகுதியில் நடந்தது. நேற்று பகல் அஞ்சலி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.
அப்போது 7 பேர் அடங்கிய கும்பல ஆட்டோவில் வந்து இறங்கி, 'குமரி மாவட்டத்துக்காரன் கதையை எப்படி சினிமாவாக எடுக்கலாம்' என கேட்டு இயக்குனர் வடிவுடையானை அடித்து உதைத்தது. சட்டை கிழிக்கப்பட்டது. கார் உடைக்கப்பட்டது. படப்பிடிப்பு சாதனங்கள் உடைக்கப்பட்டன.
ஹீரோயின் அஞ்சலியையும் தாக்க தேடினார்கள். அப்போது அஞ்சலியை போர்வையால் போர்த்தி ஒரு வீட்டுக்குள் ஒளித்து வைக்கும்படி உதவி இயக்குநர்களுக்கு உத்தரவிட்டார் இயக்குநர். இதர துணை நடிகர், நடிகைகள் அலறியடித்து ஓடினார்கள்.
"தக்க சமயத்தில் இயக்குநரும் உதவி இயக்குநர்களும் என்னைக் காப்பாற்றினார்கள். அந்த கும்பல் கையில் கிடைத்திருந்தால் நான் என்ன ஆகி இருப்பேன் என்று பயமாக இருக்கிறது.." என்றார் அஞ்சலி.

25 அக்டோபர் 2010

தமிழ்,தெலுங்கு இரண்டும்தான் எனது பலம்,களம்.

தமிழ்,தெலுங்கு சினிமாதான் எனது பலம், களம் என்று எனக்கு நன்றாக தெரியும். அதை விட்டு நான் போக மாட்டேன். இந்தியில் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறுவது சரியில்லை. வாய்ப்புகள் வருகின்றன, ஆனால் நல்ல வாய்ப்புகளை மட்டுமே நான் ஏற்பேன் என்று கூறுகிறார் 'தென்னிந்திய தேவதை' திரிஷா.
நடிகர்களுக்கு இணையாக ரசிகர் மன்றம் வைத்து, பேனர் கட்டி, பாலாபிஷேகம் செய்து அசத்தியவர்கள் திரிஷா ரசிகர்கள். தென்னிந்திய தேவதை என்றும் பட்டம் சூட்டி மகிழ்ந்தனர். இதெல்லாம் தமிழிலும், தெலுங்கிலும் திரிஷா படு பிசியாக ஓடிக் கொண்டிருந்தபோது.
இப்போது திரிஷாவின் பரபரப்பு சற்றே அடங்கினாற் போல உள்ளது. காரணம் அவர் திடீரென கட்டா மீட்டா என்று இந்தியில் நடிக்கப் போனதால். அதேசமயம், மறுபடியும் அவர் தமிழிலில் பிசியாகியுள்ளார். கமல்ஹாசனுடன் மன்மதன் அம்பில் நடித்து முடித்துள்ளார். அடுத்து அஜீத்துடன் மங்காத்தா ஆடவுள்ளார்.
இதை வைத்து இந்தியில் வாய்ப்பிழந்து விட்டார் திரிஷா. அதனால்தான் மீண்டும் செளத்துக்கே வந்து விட்டார் என்று செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. இதைக் கேட்டு திரிஷா 'டெர்ரர்ஷா'வாகியுள்ளார். ஏன்தான் இப்படியெல்லாம் வதந்திகள் பரப்புகிறார்களோ என்று அழாத குறையாக புலம்புகிறார்.
கட்டா மீட்டா அருமையான படம். இந்தியில் அதற்கு நல்ல விமர்சனங்கள்தான் வந்தன.அதன் பிறகும் கூட எனக்கு நிறையப் பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனக்கும் நடிக்க வாய்ப்பு இருக்க வேண்டுமே. அப்படிப்பட்ட படங்களைத்தானே நான் ஒப்புக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட வாய்ப்புகளுக்காக மட்டுமே நான் காத்திருக்கிறேன் என்றார் திரிஷா.
அத்தோடு நில்லாமல், எனக்கு தமிழும், தெலுங்கும்தான் உண்மையான பலம், எனக்கான களம். எனவே நான் இங்குதான் அதிக கவனம் செலுத்துவேன். அதுதான் இயல்பு. அப்படித்தான் இப்போது தமிழிலும், தெலுங்கிலும் நடித்து வருகிறேன். ஆனால் தேவையில்லாமல் எனக்கு வாய்ப்புகள் போய் விட்டது என்று வதந்தி பரப்புகிறார்களே என்று விசனப்படுகிறார்.
வதந்தியாளர்களே, பொம்பளங்க பொல்லாப்பு வேண்டாமப்பு, சொல்லிப்புட்டோம், அம்புட்டுதேன்..!

24 அக்டோபர் 2010

தினமும் ஆபாச வார்த்தைகள் மாயா மீது சீதா புகார்!

நடிகைகள் சீதாவுக்கும், மாயாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கூறியுள்ளனர்.
சீதா, மாயா வீடுகள் சாலிகிராமத்தில் உள்ள புஷ்பா காலினியில் அருகருகே உள்ளது.மாயா வீட்டை தாண்டிதான் சீதா வீட்டுக்கு செல்ல வேண்டும். சீதாவை பார்க்க வருபவர்கள் தனது வீட்டு முன்கார்களை நிறுத்தி விடுவதாக மாயா புகார் கூறியுள்ளார்.
சீதா வீட்டுக்கு தினமும் இரவிலும், பகலிலும் நிறைய பேர் காரில் வந்து செல் கிறார்கள். அவர் வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
சீதா வீட்டில் வசிக்கும் சதீஷ் என்னோடு சண்டை போடுகிறார். கொலை மிரட்டலும் விடுக்கின்றார் என்றெல்லாம் மாயா புகார் கூறினார்.
சீதா சார்பில் டி.வி. நடிகர் சதீஷ் போலீஸ் கதிஷனர் அலுவலகத்தில் மாயா தரக்குறைவாக பேசி மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். மாயா குற்றச்சாட்டுகள் பற்றி சீதாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-
மாயா வீடும் என் வீடும் தள்ளித் தள்ளித்தான் இருக்கிறது. என்னுடன் கடந்த இரண்டு வருடமாகவே இவர் சண்டை போட்டு வருகிறார். ரோடு எல்லோருக்கும் பொதுவானது. அதில் யாரோ காரை நிறுத்தினால் நானா பொறுப்பு. சினிமாவில் இருப்பவர்களை பார்ப்பதற்கு ஆட்கள் வரத்தான் செய் வார்கள்.
நடிக்க ஒப்பந்தம் செய்யவும், கதை சொல்ல வும், சூட்டிங்குக்கு அழைத்து போகவும் பலர் வந்து போவது உண்டு. அதை மாயா தவறாக பேசுகிறார். தினமும் தெருவில் நின்று கொண்டு கெட்ட கெட்ட வார்த்தைகளால் என்னை திட்டுகிறார். பெண் தாதாவை போல் மிரட்டுகிறார்.
நான் நாகரீகம் கருதி பதில் பேசுவது இல்லை. ஒதுங்கி போகிறேன். அவரது அடாவடித்தனங்கள் எல்லை மீறி போய்விட்டது. நானும் மாயாவின் தரம் பற்றி பேச முடியும். அவர் எப்படிப்பட்டவர் என்று சினிமா உலகத்துக்கே தெரியும். போலீசார் மாயா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சீதா கூறினார்.

21 அக்டோபர் 2010

அது நானில்லை… ஏமாந்துடாதீங்க!- அசின்.

தன் பெயரில் இணையதளத்தில் தொடர்ந்து மோசடி நடப்பதாகவும், இதைத் தடுக்கக் கோரியும் முடியாததால், ரசிகர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் நடிகை அசின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இணைய தளத்தில் அசின் பெயரில் போலி வெப்சைட்கள் இயங்குகின்றனவாம். ஆர்குட்டிலும் அசின் பெயர் உள்ளது. அசின் பேசுவதுபோல் அவற்றில் தகவல்கள் பரப்பப்பட்டு உள்ளது. அவரது படங்களும் போடப்பட்டு உள்ளது. அதை பார்த்து ரசிகர்கள் அசின் என்று நம்பி பதில்களை அனுப்பி வருகின்றனராம்.
இதுபற்றி அசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும், உடனடியாக இவற்றை தடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும் சில ரசிகர்கள் கேட்கிறபாடில்லையாம். இதனால் அவர்களுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் அசின்.
“இணையதள வெப்சைட்களில் நான் இல்லை. ட்விட்டர், ஆர்குட், பேஷ்புக் போன்ற எதிலும் நான் கிடையாது. எனது பெயரில் போலியாக சிலர் அவற்றை நடத்துவதாக என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. என்னுடைய நண்பர்களும், ரசிகர்களும் அவற்றை உண்மை என்று நம்பி எனக்கு தகவல்கள், கடிதங்கள் அனுப்பி வருகிறார்கள். நான் அவற்றை பார்ப்பதே இல்லை. தயவு செய்து ரசிகர்கள் ஏமாற வேண்டாம். விரைவில் சைபர் கிரைம் பிரிவில் புகார் தரப் போகிறேன்” என்கிறார் அசின்.

20 அக்டோபர் 2010

‘இந்தியாவில் நம்பர் ஒன்…’- த்ரிஷாவின் ஆசை!!

No,one நடிகை என்று பெயர் வாங்கிய பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்கிறார் நடிகை த்ரிஷா.
திரையுலகில் 1999-ல் அறிமுகமானவர் திரிஷா. சாமி, கில்லி போன்ற பல ஹிட்படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கியது.
தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் ஜோடியாக நடித்துள்ளார். காட்டா மீட்டா படம் மூலம் இந்திக்கும் போனார். தற்போது கமல் ஜோடியாக நடித்து வரும் மன்மதன் அம்பு நவம்பரில் வெளியாகிறது.
அஜீத்துடன் மங்காத்தா படத்தில் நடித்து வரும் த்ரிஷா, இந்தப் படம் முடிந்ததும் திருமணம் செய்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. காரணம் அவருக்கு இப்போது வயது 27ஐத் தாண்டிவிட்டது.
ஆனால் த்ரஷாவோ இதனைக் கடுமையாக மறுக்கிறார்.
“என் வயசெல்லாம் ஒரு வயசா… நான் சினிமாவுக்கு வந்து எட்டு வருடங்கள்தான் ஆகின்றன. ஆரம்பத்தில் சுமாரான கதையம்சம் உள்ள படங்களில் நடித்தேன். ஆனால் சமீபகாலமாக நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருகின்றன.
அபியும் நானும், விண்ணைத் தாண்டி வருவயா படங்ககள் சிறந்த கதையம்சம் உள்ளவை மன்மதன் அம்பு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
நம்பர் ஒன் நடிகை என பெயர் வாங்குவதே என் லட்சியம். எனவே திருமணத்துக்கு அவசரப்பட மாட்டேன். திரையுலகில் எனக் கென்று ஒரு அங்கீகாரம் இப்போது தான் கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது.
இந்தியில் நான் நடித்த காட்டா மீட்டா படம் ஹிட்டாக வில்லை என்று பேசுகிறார்கள். நடிப்பதுதான் என் வேலை. படம் வெற்றியா? தோல்வியா என்றெல்லாம் சிந்திக்க மாட்டேன்.
இந்திப் படம் நடித்ததன் மூலம் மும்பையில் நிறைய பேர் பழக்கமாகி இருக்கிறார்கள். மீண்டும் இந்திப் படங்களில் நடிப்பேன், இந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என்ற பெயரெடுத்த பிறகுதான் திருமணம் பற்றி யோசிப்பேன்”, என்றார்.

19 அக்டோபர் 2010

நடிக்க விருப்பம்தான்: ஆசையை போட்டு உடைத்த நயன்தாரா!

நடிக்க எனக்கு விருப்பம்தான். ஆனால் நான் நடிக்க பிரபுதேவா விடமாட்டார் என்று நடிப்பு மீது தனக்கிருந்த ஆசையை போட்டு உடைத்துள்ளார் நடிகை நயன்தாரா.
பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை கை கழுவிவிட்டு நயன்தாராவுடன் வாழத் தயாராகி விட்டார். ரமலத் சட்டப்படி பிரச்னையை அணுகப் போவதாக தெரிந்ததும் அவருடன் சமாதானப் பேச்சிலும் அவர் ஈடுபட்டார்.
இந்த நிலையில் திருமணத்துக்குப் பின் நடிக்கமாட்டேன் என்று கூறி வந்த நயன், திருமணத்துக்கு ஏற்பட்ட தடங்கல்களைப் பார்த்து மனதை மாற்றி்க கொண்டுள்ளார்.
மேலும் எனக்கு நடிக்க விருப்பமே. ஆனால் அவர்தான் விடமாட்டேன்கிறார். அவர்கிட்டயே கேட்டுக்குங்க என்று தயாரிப்பாளர்களை பிரபுதேவா பக்கம் திருப்பி விட்டும் வருகிறார்.

17 அக்டோபர் 2010

காப்பி அடித்தது ஷாருக்கா, ஷங்கரா?

ரஜினியின் எந்திரன் / ரோபோவில் வரும் காட்சியைப் போலவே ஷாரூக்கானின் படத்திலும் ரயில் சண்டைக் காட்சி இடம்பெற்றுள்ளதாம். ஆனால் தனது படத்தில் வருவது போன்ற காட்சி ரோபோவில் வந்து விட்டதால் இப்போது அந்தக் காட்சியை மாற்றத் திட்டமிட்டுள்ளாராம் ஷாருக்.
பெரும் பொருட் செலவில் ரா ஒன் என்ற விஞ்ஞானப் படத்தை எடுத்து வருகிறார் ஷாரூக்கான். இந்தப் படத்தில் ஒரு பிரமாண்டமான ரயில் சண்டைக்காட்சி இடம்பெற்றுள்ளதாம்.
எந்திரன் வெளியான பிறகு, ஷாரூக்கான் அதிர்ச்சியடைந்துவிட்டாராம். காரணம் அந்த ரயில் சண்டைக் காட்சி எந்திரனில் இடம்பெற்றது போலவே அச்சு அசலாக வந்திருந்ததுதானாம்.
இதே காட்சி ரோபோட்டில் இடம் பெற்றிருப்பதால், ரோபோட்டை பார்த்து நாம் காப்பி அடித்து விட்டதாக ரசிகர்கள் சொல்வார்களே என்று ஷாருக்கானிடம் எடுத்துக் கூறியுள்ளனர். இதையடுத்து காட்சியை மாற்றச்சொல்லி விட்டாராம் ஷாரூக்.
ஆனால் அந்த சண்டைக் காட்சிக்கு ஷாரூக் செலவிட்ட தொகை ரூ 3 கோடியாம்.
ஷங்கரை விட பிரமாண்டம்தான்!

15 அக்டோபர் 2010

கண் சிகிச்சையால் பார்வை இழப்பு: அசின் பதில் சொல்ல வேண்டும்!

சிறிலங்க அரசோடு இணைந்து யாழ்ப்பாணத்தில் நடிகை அசின் நடத்திய கண் சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்ற பலர் கண் பார்வை இழந்துள்ளனர். இதற்குப் பொறுப்பேற்று நடிகை அசின் பதில் சொல்ல வேண்டும் என்று மே 17 இயக்கம் கோரியுள்ளது.
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழா (ஐஃபா), தமிழ்த் திரைப்பட உலகம், தமிழர் இயக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிர்ப்பால் படுதோல்வியில் முடிந்தது.
அதன் பிறகு இந்தி நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடித்த ‘ரெடி’ திரைப்பட படபிடிப்பிற்காக இலங்கை சென்ற நடிகை அசின், படபிடிப்பு முடிந்ததும் இலங்கை அரசின் விருந்தினராக தங்கியிருந்தார். அப்போது சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சவின் உதவியுடன் தமிழர் பகுதிகளில் கண் சிகிச்சை முகாம் நடத்தச் சென்றார். யாழ்ப்பாணத்திலும், முல்லைத் தீவிலும் இந்த கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கண் வெண்விழிப்படலத்திற்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மேலும் 10 ஆயிரம் பேருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்போவதாகவும் நடிகை அசின் கூறியிருந்தார்.
நடிகை அசின் முன்னிலையில் நடத்தப்பட்ட அந்த கண் சிகிச்சை முகாமில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பலருக்கு கண் பார்வை போய்விட்ட அதிர்ச்சி செய்து வந்துள்ளது. கண் பார்வை இழந்தவர்கள் மீண்டும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றால், அரசு மருத்துவமனையில் ரூ.4,500 செலுத்த வேண்டும் என்றும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுதாக இருந்தால் ரூ.25,000 வரை செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையை இன்று செய்தியாளர்களிடம் விளக்கிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், சிறிலங்க அரசோடு இணைந்து நடிகை அசின் நடத்திய கண் அறுவை சிகிச்சை முகாம் அவர்களின் வாழ்வை அழித்துவிட்டது என்று குற்றம் சாற்றினார்.
போரினால் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ள மக்களை, மனிதாபிமான போர்வையில் நடத்தப்பட்ட கண் சிகிச்சை முகாமினால் நடிகை அசின் அவர்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளார் என்றும், இதற்காக அவர் ஈழத் தமிழர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.
அசின் நடத்திய கண் சிகிச்சை முகாம் இங்குள்ள நடிகர்கள் சிலருக்கு ஒரு கண் திறப்பாக இருக்கட்டும் என்று கூறிய திருமுருகன், இதற்குப் பிறகாவது சிறிலங்க அரசின் இப்படிப்பட்ட சூழ்ச்சிகளில் தமிழ்த் திரைப்பட நடிகர்களும், நடிகைகளும் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
திருமுருகனுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய இதழாளர் கா.அய்யநாதன், சிறிலங்க அரசிற்கு உண்மையிலேயே தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்துக் கொண்டிருக்கும் ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் அயல் நாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதை ஏன் சிறிலங்க அதிபரின் இளைய சகோதரர் பசில் ராஜபக்ச தடுத்து வருகிறார் என்று கேள்வி எழுப்பினார்.
வன்னி முகாமில் இருந்து தங்கள் வாழ்விடங்களுக்கு மீள் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு ரூ.25,000 நிவாரண உதவி அளித்தது சர்வதேச இடம்பெயர்வோர் அமைப்புதான் (International immigration organization) என்றும், இன்றுவரை சிறிலங்க அரசு அவர்களுக்கு எந்த உதவியையும் செய்யவில்லை என்றும் கூறிய அய்யநாதன், பிழைக்க வழியின்றி, கண்ணி வெடிகளை அகற்றுதல் போன்ற மிக ஆபத்தான வேலைகளில் தமிழ்ப் பெண்கள் ஈடுபட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் திரைப்பட உலகின் எதிர்ப்பை மீறி ஐஃபா விழாவில் கலந்து கொண்ட இந்தி நடிகர் நடித்துள்ள ரத்த சரித்திரம், அசின் நடித்து வெளிவரும் திரைப்படங்களை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று ஜனநாயக வழியில் இயக்கம் நடத்துவோம் என்று அவர்கள் கூறினர்.

12 அக்டோபர் 2010

குழந்தைகள் சிரிப்பிலே சினேகா பிறந்தநாள்!

விரும்புகிறேன்’ படத்தில் தனது சினிமா பயணத்தை தொடங்கி, சுமார் பத்தாண்டுகளாகியும் சினிமா உலகில் அனைவராலும் விரும்பி போற்றப்படுபவர் ‘புன்னகை இளவரசி’ சினேகா. இன்று (12.10.10) அவர் பிறந்த நாள்.
பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடனும், சினிமா நண்பர்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்துகளுடனும் இனிதே தொடங்கியது சினேகாவின் பிறந்தநாள் காலைப்பொழுது.
சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சிறப்பு வழிபாடு செய்தார் சினேகா. அதன் பிறகு, கீழ்பாக்கத்தில் உள்ள பால விஹார் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் தனது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார்.
அங்குள்ள குழந்தைக்களுக்கு கேக்கினை ஊட்டி மகிழ்ந்தார் சினேகா. சில மணிப்பொழுதுகளை அந்தக் குழந்தைகளுடன் ஆனந்தமாக கொண்டாடினார். பாலவிஹாஸ் இல்லத்துக்கு தேவையான உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் வாங்கித்தந்தார். குழந்தைகள் அனைவருக்கும் ஆடைகள், இனிப்புகள், எழுது பொருட்கள் வழங்கினார். அத்துடன் அந்தக் குழந்தைகளுக்கு தேவையான இன்னும் பிற உதவிகளையும் செய்தார்.
இப்படி ஆதரவற்ற குழந்தைகளின் மகிழ்ச்சிப் புன்னகையில், புன்னகை இளவரசியின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சினேகாவின் நல்ல மனம் வாழ்க! என நாமும் வாழ்த்துவோம்.

11 அக்டோபர் 2010

த்ரிஷாவுக்கு ‘கெட் அவுட்’-எமிக்கு ‘வெல்கம்’!

கவுதம் மேனன் தனது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்திப் பதிப்பின் வேலைகளைத் துவங்கிவிட்டார்.
ஆரம்பத்தில் இந்தப் படத்திலும் த்ரிஷாவே நாயகி என்று கூறப்பட்டது. கவுதமும் அப்படித்தான் சொல்லி வந்தார். ஆனால் இப்போது அதில் மாற்றம்.
மதராஸப்பட்டினம் புகழ் எமி ஜாக்ஸனுக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்துள்ளார். இந்தியில் த்ரிஷாவின் முதல்படமே பப்படமாகிவிட, இனி அவரால் அந்த ரோலுக்கு எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து இந்த முடிவுக்கு வந்தாராம்.
இதற்கிடையே, சமீபத்தில் தான் தயாரிக்கும் அழகர்சாமியின் குதிரை படத்துக்கு இளையராஜா இசையில் வந்திருக்கும் பாடல்களைக் கேட்டு, சிலிர்த்துப் போனாராம் கவுதம்.
இசையில் அவரோட டச்சே தனி என்றாராம் படத்தின் இயக்குநர் சுசீந்திரனிடம்!

09 அக்டோபர் 2010

தமிழ் பேசப்போகும் கவர்ச்சிப் பாம்பு!

மல்லிகா ஷெராவத்துக்கு அறிமுகம் தேவையில்லை. அம்மணி ஹிஸ் எனும் சர்வதேசப் படத்தில் நடித்துவருகிறார். அதென்ன ஹிஸ் என்கிறீர்களா? பாம்பு சீறும்போது எழுப்புமே சத்தம் அதே தான்.
படத்தில் மல்லிகா நாகப் பெண்மணியாக வருகிறார். ரொமாண்டிக் காமெடிப் படமாம். ரொமான்ஸ் இல்லாமல் மல்லிகாவை வைத்துப் படமெடுப்பார்களா என்ன?
இந்த சர்வதேச ரொமான்ஸ் மூவியை தமிழிலும் டப் செய்து வெளியிட்டு தமிழ் ரசிகர்களின் வயிற்றில் பால் வார்க்கத் திட்டமிட்டிருக்கின்றனர் அதன் தயாரிப்பாளர்கள்.
மல்லிகா மாதிரியான கவர்ச்சிக் கன்னிகளின் படத்துக்கு மொழியே தேவையில்லை எனும் மகத்தான விஷயம் அதன் தயாரிப்பாளருக்குத் தோன்றாமல் போனதேன்?

08 அக்டோபர் 2010

‘பாலக்காட்டுக்கு போங்க… அதான் சேஃப்!’ – அசின் அடம்!

காவலன் படத்தின் மிச்சப் பகுதியை கேரளாவிலே வச்சிக்கலாம். பாலக்காட்டுக்குப் போயிடலாம் அதான் சேஃப் சேட்டா!’
மேட்டுப் பாளையத்தில் பெரியார் திகவினர் மேற்கொண்ட கறுப்புக் கொடி போராட்டத்தைப் பார்த்து மிரண்டுபோன அசின் சொன்னது இது.
ஹீரோயினாச்சே… அதிலும் விஜய்யின் பேவரிட் ஹீரோயின் சொன்ன பிறகு அப்பீலேது?
அடுத்த நாளே பாலக்காடு பறந்தது காவலன் படக்குழு, ஹீரோ விஜய்யுடன்.
மேட்டுப் பாளையத்தில் எடுக்க வேண்டிய பல காட்சிகளை ஒத்தப்பாலம் மற்றும் பாலக்காடு பகுதியிலேயே வைத்து எடுத்துக் கொண்டார்களாம். மூன்று தினங்கள் நடந்த இந்தப் படப்பிடிப்பில் வடிவேலுவும் பங்கேற்றார். “இப்போதான் எனிக்கு ரிலீஃப்” என்று அசின் கூற, “அதெப்படி… ரிலீசாகணுமில்ல. அதையும் பாலக்காட்டிலேயே வச்சிக்கிற முடியுமா… போத்தா!” என்று நக்கலடித்தாராம் வடிவேலு.
அது!

07 அக்டோபர் 2010

டான்ஸிலும், நடிப்பிலும் கலக்கியுள்ளார் ஐஸ்வர்யா-அமிதாப் பச்சன் பாராட்டு.

எந்திரன் படத்தில் இதுவரை காணாத அளவுக்கு மிக அற்புதமாக டான்ஸ் ஆடியுள்ளார் ஐஸ்வர்யா ராய். நடிப்பு, டான்ஸ் இரண்டிலும் கலக்கி விட்டார் என்று பாராட்டியுள்ளார் மாமனார் அமிதாப் பச்சன்.
மும்பையில் நடந்த எந்திரன் இந்திப் பதிப்பின் விசேஷக் காட்சியை ரஜினிகாந்த், ஐஸ்வர்யா, ஜெயா பச்சன் உள்ளிட்டோருடன் சேர்ந்து பார்த்து ரசித்தார் அமிதாப் பச்சன்.
பின்னர் அங்கேயே ரஜினியையும், ஐஸ்வர்யாவையும் அவர் பாராட்டினார். தற்போது தனது பிளாக்கிலும் பாராட்டித் தள்ளியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஐஸ்வர்யா ராய் கலக்கி விட்டார். இதுவரை அவருடைய எந்தப் படத்திலும் இப்படி ஒரு நடனத்தை நான் பார்த்ததில்லை. படு ஸ்டைலாக இருக்கிறது டான்ஸ். அதை விட நடிப்பும். இரண்டிலும் பிரதமாதப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா.
ரஜினியைப் பற்றி என்ன சொல்வது. என்ன செய்வார் என்பதை கணிக்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு ஒவ்வொரு படத்திலும் பிரமாதப்படுத்துகிறார்.
வேடிக்கை, புதுமை, தொழில்நுட்பம் என அனைத்தும் கலந்த கலவையாக வந்துள்ளது ரோபோட்.
ரஜினி படம் பார்க்கும்போது நீங்கள் விரும்புவதெல்லாம் அதில் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் அதில் உள்ள வேடிக்கையை, ரசனையை அனுபவிக்கலாம். அந்த அனுபவத்திற்காக ரஜினி படத்தைப் பார்க்கலாம். அந்த வகையில் இந்தப் படத்தில் அந்த அனுபவம் சற்று கூடுதலாகவே உள்ளது என்று பாராட்டியுள்ளார் அமிதாப் பச்சன்.

05 அக்டோபர் 2010

காதலிக்கிறேனா…?’ – தமன்னா விளக்கம்.

நான் யாரையும் காதலிக்கவில்லை. நடிப்புதான் எனக்கு முக்கியம். தேவையில்லாத வதந்திகளைப் பரப்ப வேண்டாம், என்றார் தமன்னா.
தமன்னாவுக்கும் நடிகர் ஒருவருக்கும் தீவிர காதல் என்று தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.
ஆனால் இதனை தமன்னா தொடர்ந்து மறுத்து வருகிறார்.
தான் நட்பு ரீதியாகக் கூடப் பழகாத ஒருவருடன் காதல் என்றெல்லாம் வதந்தி பரப்பு தவறானது. அந்த மாதிரி எதிர்மறை விளம்பரம் எனக்குத் தேவையுமில்லை என்றார்.
மேலும் அவர் கூறுகையில்,
“பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்துவிட்டேன். ஷங்கர், கவுதம், பாலா போன்ற திறமையான இயக்குனர்கள் படங்களிலும் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.
நான் எந்த நடிகைக்கும் போட்டியில்லை. என்னை நம்புகிறேன். எனது வேலையை சிறப்பாக செய்கிறேன். நிறைய நடிகைகள் அறிமுகமாகிக் கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”, என்றார்.

04 அக்டோபர் 2010

துருக்கியில் துள்ளாட்டம் போட்ட ஸ்ருதி!

ஓயாத பயணத்தில் இருக்கும் எனக்கு இப்போ தேவை ஒரு professional packer…” – இதுதான் ஸ்ருதி ஹாஸனின் லேட்டஸ்ட் ட்வீட்!
எதற்காகவோ..?
அம்மணி சென்னை, மும்பை, துருக்கி, லண்டன், அடுத்து பாங்காக் என பறந்து கொண்டே இருக்கிறாராம். தனக்கு தேவையான பொருள்களை அடுக்கி பக்காவாக எடுத்துச் செல்லக் கூட நேரமில்லை என்பதால்தான், அதற்கு உதவ ஒரு தொழில்முறை பணியாளர் இருந்தால் தேவலை என்று ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் – தெலுங்கில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ஒன்றுக்காக சமீபத்தில் துருக்கி போன ஸ்ருதியை, அந்த நாட்டின் பல லொக்கேஷன்களில் வைத்து துள்ளாட்டம் போட வைத்து படமாக்கியுள்ளனர்.
“கிட்டத்தட்ட 24 மணி நேரமும் ஷூட்டிங் இருந்தது. நான் கொஞ்சம் கறுத்துப் போனேன் என்று கூடச் சொல்லலாம். ஆனால் சந்தோஷமாகத்தான் இருந்தது” என்கிறார் ஸ்ருதி.
அடுத்து 7-ம் அறிவுக்காக சூர்யாவுடன் ஆட்டம் போட பாங்காக், அங்கிருந்து சில தீவுகளுக்குப் பயணமாகிறாராம்!

29 செப்டம்பர் 2010

டைட்டானிக் திரைப்பட நடிகை 100 வயதில் மரணம்!

1930ஆம் ஆண்டுகளில் ஹாலிவுட்டின் அழகு நடிகையும், டைட்டானிக் திரைப்படத்தில் முக்கியத் துணை நடிகை பாத்திரமேற்று நடித்தவருமான க்ளோரியா ஸ்டூவர்ட் காலமானார். அவருக்கு வயது 100 என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் திரைப்படத்தில், அந்தக் கப்பல் நீரில் மூழ்கியபோது உயிர்பிழைத்த 101வயது மூதாட்டியின் இளவயது நாயகி கதாபாத்திரத்தில் நடித்த கேட் வின்ஸ்லெட்டுடன் இணைந்து ரோஸ் கால்வெர்ட் என்ற கதாபாத்திரத்தில் க்ளோரியா ஸ்டூவர்ட் நடித்தார்.
கேட் வின்ஸ்லெட் பெயர் சிறந்த நாயகிக்கான ஆஸ்கார் விருதுக்கும் சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு ஸ்டூவர்டும் பரிந்துரை செய்யப்பட்டனர்.
ஆனால் ஆஸ்கார் அம்முறை எல்.ஏ.கான்ஃபிடென்ஷியல் படத்தில் நடித்த கிம் பேசிஞ்சர் என்பவருக்குச் சென்றது.
இவரது மறைவு குறித்து கூறிய டைட்டானிக் அழகு நாயகி கேட் வின்ஸ்லெட் "இவரது மறைவு என்னை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடன் இணைந்து நடித்ததில் நான் பெருமை அடைகிறேன்." என்றார்.
டைட்டானிக் இளம் நாயகனாக நடித்த லியானாரோடோ டி கேப்ரியோ, ஸ்டூவர்ட் படப்பிடிப்பின் உள்ளேயும் வெளியேயும் ஒரு சக்தியாக விளங்கினார் என்று புகழாரம் சூட்டினார்.
மேலும் ஹாலிவுட் பொற்காலங்களின் மிகச்சிறந்த நடிகை என்றும் டி கேப்ரியோ புகழ்ந்துள்ளார்.
டைட்டானிக் திரைப்படம் உலக அளவில் சாதனையான 1.8பில்லியன் டாலர்கள் வசூல் படைத்தது. சமீபமாக கேமரூனின் "அவதார்" திரைப்படம் இந்த சாதனையை முறியடித்தது என்பது கூடுதல் தகவல்.

28 செப்டம்பர் 2010

சந்திரபோஸ் உயிருடன் இருக்கிறார் : மகன் வினோத்.!

பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ் காலமாகிவிட்டதாக செய்திகள் பரவியது. கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், இன்று காலை இயற்கை எய்தி விட்டதாக செய்திகள் பரவின.
ஆனால் அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று அவரது மகன் வினோத் தெரிவித்தார். அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார் அவர்.
கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவமனை நிர்வாகத்தால் வீட்டுக்கு அனுப்பப்பட்டாராம் அவர். இந்த நிலையில் அவரை வீட்டுக்கு சென்று சந்தித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன், மற்றும் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் இருவரும் கடைசி வரை முயற்சி செய்யலாமே. மீண்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று அறிவுறுத்தியதுடன் அதற்கான செலவையும் ஏற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தகவல். அவர்களது நம்பிக்கை வீண் போகவில்லை. மரணத்தின் இறுதி வாசலில் நின்ற சந்திரபோஸ் பிழைத்துக் கொண்டார்.
கலைவாணிக்கும் கவனித்துக் கொண்ட மருத்துவர்களுக்கும் சந்திரபோசின் இசை ரசிகர்கள் சார்பில் ஆரோக்கியமான நன்றி!

27 செப்டம்பர் 2010

முடிந்தது மன்மதன் அம்பு.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் ‘மன்மதன் அம்பு'. கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார் கமல்ஹாசன். படத்தில் அவருக்கு ஜோடி த்ரிஷா. மாதவன், சங்கீதா இன்னொரு ஜோடி. 'ரொம்ப நாளைக்கு பின் கமல் ரொமான்டிக் ஹீரோவா நடிக்கிற படம். 30 வயது இளைஞனா வர்றார். இதனையடுத்து மன்மதன் அம்பு படப்பிடிப்பு முடிந்ததாக மாதவன் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என மாதவன் கூறிப்பிட்டுள்ளார்.

24 செப்டம்பர் 2010

வில்லியாக நடிக்க விரும்புகிறேன்-பியா.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோவாÕவில் நடித்தார் பியா. அடுத்து ஜீவாவுடன் ‘கோ படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது:
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘கோவில் நடித்திருக்கிறேன். இப்பட ஷூட்டிங் முடியும் நிலையில் உள்ளது. இதில் என்ன வேடம் என்பதை இப்போதைக்கு சொல்ல மாட்டேன். இதையடுத்து தெலுங்கு, மலையாள மொழிகளில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ஹீரோயின் வேடத்தில்தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. எந்த வேடமாக இருந்தாலும் நடிப்பேன். வில்லி வேடத்தில் நடித்தால் திறமையை வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன். அப்படியொரு கதாபாத்திரம் பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில் நடிக்க முடிவான பின், போட¢டோக்களை பார்த்தாலே ‘யார் இது பியாவா?Õ என்று பலர் ஆச்சர்யப்படுவார்கள். இவ்வாறு பியா கூறினார்.

22 செப்டம்பர் 2010

பிரபுதேவா - நயன் மீது காவல்துறை நடவடிக்கை?

பிரபு தேவா - நயன்தாரா இருவர் மீதும் தமிழக காவல்துறை தானாகவே வழக்கு தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான அச்சாரத்தை நேற்று போட்டிருக்கிறார் பிரபுதேவாவின் மனைவி ரமலத்.
அண்ணாநகர் மேற்கில் 12 ஆவது பிரதான சாலையில் உள்ளது ரமலத்தின் இல்லம். இந்த இல்லம் முன்பாக அவர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நேற்றிரவு தகவல் பரவியது.இதனால் அப்பகுதிக்கு ஊடக நண்பர்கள் குவிந்தனர்.
அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் தகவல் அறிந்த திருமங்கலம் காவல் நிலைய காவலர்கள் விரைந்து வந்தனர். ஒரு மணி நேர காத்திருப்புக்குப் பின், ரமலத் உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை என்பதும், அது ஒரு வதந்தி என்பதும், ரமலத் அந்த வீட்டில் இல்லை, வெளியில் சென்றிருக்கிறார் என்பதும் தெரிய வந்ததும் காவல் துறையினரும், ஊடக நண்பர்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
பிரபுதேவா ரமலத் விவகாரம் குறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில்
'முதல் மனைவியான ரமலத்தை முறைப்படி விவாகரத்து செய்யாமல், பிரபு தேவா மற்றொரு பெண்ணுடன் சுற்றுவதும், அவரை திருமணம் செய்யப் போவதாக வெளிப்படையாக பேட்டி அளிப்பதும் குற்றமாகும். ரமலத் புகார் அளிக்கும் பட்சத்தில், அதை அடிப்படையாக வைத்து பிரபுதேவா - நயன்தாரா மீது நடவடிக்கை பாயும்!' என்கின்றன.

20 செப்டம்பர் 2010

வயகரா மாத்திரைகளை இனி டெஸ்கோ விற்பனைசெய்யும்!

உடலுறவு கொள்ளும் போது அதிக வீரியத்தை ஏற்படுத்த அல்லது உடலுறவு கொள்ள முடியாத ஆண்கள் பாவிக்கும் ஒரு வீரியம் மிக்க மாத்திரை வயகரா. பல ஆண்டுகளாக இணையமூடாக மிகவும் இரகசியமான முறையில் இது விற்கப்பட்டுவந்தது. வயகரா மாத்திரைகளை எம்மில் பலர் போதைப் பொருள் என எண்ணியிருந்தனர். இருப்பினும் சில நாடுகளில் இது விற்பது தடைசெய்யப்பட்டிருந்தது. பின்னர் படிப்படியாக பல நாடுகள் அத்தடையை நீக்கியுள்ளன. உலகில் பல்லாயிரக்கணக்கான மாத்திரைகள் இதுபோல உலாவந்தாலும் வயகரா மாத்திரைகள் ஆண்களின் உள்ளம் கவர்ந்த ஒன்றாகத் திகழ்கிறது என்பதற்கு தற்போது டெஸ்கோ சூப்பர் மார்க்கட்டே சாட்சி.
ஆம் இம் மாதம் 27ம் திகதி முதல் பிரித்தானியாவில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட சுமார் 300 டெஸ்கோ சூப்பர் மார்க்கட்டில் இனி வயகரா மாத்திரைகளை வாங்கலாம். சுமார் 8 மாத்திரைகளை 52.00 பவுன்டுகளுக்கு விற்க முடிவாகியுள்ளது. நீல நிறத்தினால் ஆன இம் மாத்திரைகள் உலகளாவிய ரீதியில் பல மில்லியன் ஆண்களால் பாவிக்கப்பட்டு, சுமார் 10 ஆண்களில் 9 ஆண்கள் திருப்தியடைந்துள்ளதாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அத்தோடு 40 வயதை தாண்டிய ஆண்கள் தமது தாம்பத்திய வாழ்வில் இன்பதை இழந்து, அல்லது நாட்டம் இல்லாமல் போவதால் அவர்கள் வயகராவை நாடுவதாக அக் குறிப்புகள் மேலும் தெரிவிக்கின்றன.
இளைஞர்களும், வயதானவர்களும் வயகராவை பாவிக்க முண்டியடிப்பதும், அவர்கள் இணையமூடாக கட்டணம் செலுத்தி அதனைப் பெற முயற்சிப்பதும் வழக்கம். இருப்பினும் பல போலியான வயகரா மாத்திரைகள் உலவுவதால், அவர்கள் ஏமாற்றம் அடைவதாகவும், டெஸ்கோ சூப்பர் ஸ்ரோர், தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் தரமான வயகரா மாத்திரைகளை விற்க இருப்பதாகவும் அதன் மேலாளர் பத்திரிகைக்கு தெரிவித்தார். ஏற்கனவே எல்லா சூப்பர் ஸ்ரோரையும் வீயாபாரத்தில் மிஞ்சி கொடிகட்டிப் பறக்கும் டெஸ்கோ காட்டில் இனி மழைதான்... இளைஞர்களும் , வயோதிபர்களும் இனி வயகரா வாங்க அங்குதான் செல்ல இருக்கிறார்கள், போதாக்குறைக்கு மருத்துவர் ஆலோசனை பற்றுச்சீட்டு இல்லாமலே அதனை வாங்கமுடியும் என டெஸ்கோ அறிவித்துள்ளது.

17 செப்டம்பர் 2010

கமல் மகள் ஸ்ருதி பார்வைக்கோளாறால் பரிதவிக்கிறாரா?

நடிகர் கமல்ஹாசன் மூத்த மகள் ஸ்ருதி, தனக்கு பார்வைக்கோளாறு இருப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது உண்மையா? இல்லை ஸ்ருதிஹாசன் பெயரில் வேறு யாரும் இப்படி செய்துள்ளனரா என்பது தெரியவில்லை.
நடிப்பு, இசை, நடனம் என பல்துறைகளில் சிறந்த விளங்கிவருகிறார் ஸ்ருதி ஹாசன். இவர் தற்போது தமிழில் ‘7ம் அறிவு’ மற்றும் இந்தியில் ‘தில் டோ பச்சா ஹை ஜி’ படங்களில் நடித்து வருகிறார்.
ஸ்ருதி, தனது டுவிட்டர் பக்கத்தில், ’என்னை பொருத்தவரை 90 சதவீதம் பார்வையற்ற பெண்ணாகவே வாழ்கிறேன். கண்ணாடி அணியாமல் 2 சென்டி மீட்டர் தூரத்தில் இருக்கும் பொருளைக்கூட பார்க்க முடியாது.
யாருக்கும் நான் வாழ்த்து சொல்வது கிடையாது. அப்படி சொல்லும் நபர் வேறு ஆளாக இருக்கும்பட்சத்தில் அவரிடம் மன்னிப்பு மற்றும் வருத்தம் தெரிவிக்க வேண்டி உள்ளது. நேற்றுகூட தவறான நபருக்கு வாழ்த்து சொல்லிவிட்டேன்.
மேலும் கண்ணாடி கதவு இருப்பது தெரியாமல் நடந்து சென்றேன். இது எனக்கு சந்தோஷத்தை தரவில்லை. எது எப்படியோ மூக்கு கண்ணாடியும், கான்டக்ட் லென்சும் பல்லாண்டு வாழ்க’’என்று எழுதியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
சமீபகாலமாக த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகளின் பெயரில் போலியான டுவிட்டர் பக்கங்கள் தொடங்கப்பட்டு அவர்களைப் பற்றியே இழிவாக எழுதுவது, ஆபாசமாக போட்டோ வெளியிடுவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.
ஸ்ருதிஹாசன் அப்படி நடந்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது.

16 செப்டம்பர் 2010

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த 6 வயது மகளுக்கு சூடு வைத்து சித்ரவதை!

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் சொந்த மகளை இரும்புக்கம்பியால் சூடுவைத்து சித்ரவதை செய்த பள்ளிக்கூட ஆசிரியை கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாச்சலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சைதன்யா. இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் இவருடைய கணவர் இறந்து விட்டார்.
இதனால் தனது 6 வயது மகளுடன் சைதன்யா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த நாகேஷ் என்பவருடன் சைதன்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
சில நேரங்களில் இவர்களின் கள்ளக்காதலுக்கு சைதன்யாவின் மகள் தடையாக இருந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 4 நாட்களாக தனது மகளை இரும்புக்கம்பியால் சூடு வைத்து சித்ரவதை செய்து உள்ளார்.
சூடு தாங்காமல் வலியால் அவள் கத்தித்துடிக்கும் போது டி.வி.யின் சத்தத்தை அதிகமாக வைத்து உள்ளார். அந்த வீட்டில் அடிக்கடி டி.வி.யின் சத்தம் அதிகமாக கேட்டதால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது, வீட்டில் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் அந்த சிறுமி இருந்தாள்.
உடனே அவளை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு இதுபற்றி அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் சைதன்யாவின் கள்ளக்காதலுக்கு தடையாக மகள் இருப்பது தெரியவந்தது.
இதனால் சைதன்யா மற்றும் அவருடைய கள்ளக்காதலன் நாகேசை போலீசார் கைது செய்தனர். படுகாயம் அடைந்த சிறுமி குணம் அடைய இன்னும் ஒரு வாரம் ஆகும் என்றும். பின்னர் அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் சிறுமி தங்கி இருப்பாள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

14 செப்டம்பர் 2010

பேஷன் என்ற பெயரில் குஷ்பு கழுத்தில் பிளாஸ்டிக் தாலி!

பேஷன் என்ற பெயரில் ருத்திராட்ச மாலையில் பிளாஸ்டிக் தாலியை கோர்த்து நடிகை குஷ்பு அணிந்திருக்கிறார். நடிகை குஷ்புவின் கணவரும், டைடக்டரும்  நடிகருமான சுந்தர் சி நடித்திருக்கும் புதிய படம் நகரம். குஷ்புவின் அவ்னி சி�னிமேக்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் �நடந்தது.
இந்த� விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஸ்டாலின், கனி�மொழி எம்.பி., அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தாலும்... அனைவரையும் கவர்ந்திழுத்தது நடிகை குஷ்புவும் அவர் அணிந்திருந்த பிளாஸ்டிக் தாலியும்தான்.
ருத்திராட்ச மா�லையில் பிளாஸ்டிக் தாலியை �கோர்த்து அணிந்திருந்தார் குஷ்பு. பேஷன் என்ற பெயரில் அவர் ருத்திராட்ச மாலையுடன், பிளாஸ்டிக் தாலியை கோர்த்து அணிந்திருந்தது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலரை முகம் சுழிக்க வைத்தது. இதற்கு முன்பு சினிமா விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த அம்மன் சிலை முன்பு நடிகை குஷ்பு செருப்பு அணிந்தபடி கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த விவகாரத்தை இந்து அமைப்புகள் கடுமையாக கண்டித்தன. பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால் மன்னிப்பு கேட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் குஷ்பு.
இப்போது பேஷன் என்ற பெயரில் அவர் அணிந்திருந்த பிளாஸ்டிக் தாலியும், ருத்ராட்ச மாலையும் புதிய சர்ச்சையை கிளம்பியிருக்கிறது. தமிழ் பெண்கள் கற்பு குறித்து பேட்டியளித்து வில்லங்கத்தில் சிக்கிய குஷ்பு சுப்ரீம்கோர்ட் வரை சென்றதும் நினைவிருக்கலாம்.

12 செப்டம்பர் 2010

ஸ்ருதி ஹாசன் செய்த அதிரடி மாற்றம்.


கமலுக்கும், ர‌ஜினிக்கும் நீண்ட காலமாக பிஆர்ஓ-வாக இருப்பவர் நிகில் முருகன். தமிழ் சினிமாவின் ஹைடெக் மக்கள் தொடர்பாளர், கண்ணியமான தொடர்பாளர் என்பதெல்லாம் இவரது அடையாளங்கள். இவர்தான் நடிகர் சூர்யாவுக்கும், ஸ்ருதி ஹாசனுக்கும் பிஆர்ஓ. இந்நிலையில் நிகில் முருகனுக்குப் பதில் ஜான்சனை தனது பிஆர்ஓ-வாக அறிவித்தார் சூர்யா. நான் மகான் அல்ல படத்தைப் பற்றி எதிர்மறை பதிவுகள் நிகிலின் இணையதளத்தில் இருந்ததாகவும், அதனால் சிவகுமார் எடுத்த கடும் முடிவுதான் இந்த நீக்கம் எனவும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்த நீக்கத்திற்கு இரண்டாவது நாளே ஸ்ருதியிடமிருந்து பரபரப்பான அறிவிப்பு வெளிவந்தது. சூர்யாவைப் போலவே அவரும் நிகிலை மாற்றிவிட்டு ஜான்சனை தனது புதிய பிஆர்ஓ ஆக்கியிருந்தார்.
சூர்யாவும், ஸ்ருதிஹாசனும் 7ஆம் அறிவு படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

11 செப்டம்பர் 2010

மாதவனுடன் காதலா? சதா பதில்.

ஜெயம் படம் மூலம் தமிழில் அறிமுகமான சதா, தற்போது புலி வேஷம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். எதிரி படத்தில் மாதவனுடன் சதா ஜோடியாக நடித்தார். இப்படம் 7 வருடங்களுக்கு முன் வெளியானது.
தற்போது இருவருக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் விருந்து நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்பதாகவும் செய்திகள் பரவியது. மாதவன் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி சதாவிடம் கேட்டபோது உடனே ஆவேசப்பட்ட அவர், பின்னர் அமைதியாகி பேச ஆரம்பித்தார். அப்போது அவர் கூறுகையில்,
மாதவனுடன் நீண்ட நாட்களாக எனக்கு தொடர்பு இல்லை. அவரை சந்தித்து பேசவும் இல்லை. அவரை காதலிப்பதாக வந்த செய்திகள் வதந்திதான். நான் படப் பிடிப்புக்கு செல்லும்போது கூடவே எனது தாய் வருவார். அவரை விட்டு தனியாக யாரிடமும் நான் பேசுவது கிடையாது. ஏன் தான் இப்படி வதந்திகளை பரப்புகிறார்களோ? என்றார்.
மாதவனும் நீங்களும் பெங்களூர் ஓட்டலில் சந்தித்து பேசியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதே என்று செய்திகள் பரவுகிறதே என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, கருத்து சொல்ல விரும்பவில்லை என்று மீண்டும் ஆவேசப்பட்டார்.

10 செப்டம்பர் 2010

ரஜினியின் அழைப்பிதழ்…திருப்பி அனுப்பிய பாரதிராஜா.

மழை நின்ற பிறகும் குடை மடங்காது போலிருக்கிறது. சவுந்தர்யா திருமணம் முடிந்த பின்பும் ரஜினி யாருக்கெல்லாம் அழைப்பிதழ் கொடுக்கவில்லை. ஏன் கொடுக்கவில்லை? ரசிகர்களை அழைக்காதது சரியா?. இப்போதாவது அழைத்து விருந்து கொடுப்பாரா? என்றெல்லாம் பரபரப்பான விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சற்று லேட்டஸ்ட்டாக கிடைத்த ஒரு தகவல் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. 16 வயதினிலே படத்தின் மூலம் ரஜினிக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த பாரதிராஜாவுக்கே கொரியரில்தான் அழைப்பிதழ் போனதாம். அதிர்ச்சியடைந்த அவர், அதை மீண்டும் ரஜினி முகவரிக்கே திருப்பி அனுப்பிவிட்டாராம். சமீபகாலங்களில் நடந்த பல்வேறு சம்பவங்களை மையப்படுத்தி பேட்டிகளில் பேசி வந்த பாரதிராஜா ரஜினியை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் திரையுலகில் இதையெல்லாம் சகஜம் என்று எடுத்துக் கொள்வதுதான் வழக்கம்.
அப்படி எடுத்துக் கொள்ளாத ரஜினி நேரில் பாரதிராஜா வீட்டுக்கு போக சங்கடப்பட்டுதான் இப்படி கொரியரில் அனுப்பினாராம். அது போகட்டும்… நிகழ்ச்சிக்கு இளையராஜா ஏன் போகவில்லை? அவருக்கும் தபாலில்தான் போனதாம் அழைப்பிதழ்!

08 செப்டம்பர் 2010

நித்தியானந்தாவின் லீலை திரைப்படமாக!

நித்தியானந்தா-ரஞ்சிதா செக்ஸ் லீலை குறித்து தெலுங்கில் சினிமாப் படம் எடுக்கவுள்ளனராம். நிஜக் கதைகளை சூட்டோடு சூடாக படமாக எடுத்து விடுவது இந்தியத் திரையுலகினரின் வழக்கம். அதுவும் செக்ஸ் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் என்றால் சட்டுப் புட்டென்று படமாக்கி விடுவார்கள்.
அந்தவகையில் தற்போது நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரத்தையும் படமாக்க கிளம்பியுள்ளனர்-தெலுங்கில். நித்தியானந்தாவுக்கு படுக்கை அறையில் பலவிதமான சேவைகளை நடிகை ரஞ்சிதா செய்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் சினிமா பாணியில் நான் அவன் இல்லை என்று கூறி விட்டார் நித்தியானந்தா.
ரஞ்சிதாவும், நான் செய்தது சேவை, வீடியோவை மார்பிங் செய்து விட்டனர் என்று கூறி விட்டார். தற்போது இந்த வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. நடந்தது குற்றமா இல்லையா, சரியா, தவறா என்றும் யாருக்கும் புரியவில்லை. நித்தியானந்தாவும் வழக்கம் போல தனது பெங்களூர் மடத்தில் போதனை செய்ய ஆரம்பித்து விட்டார்.
இந்த நிலையில், நித்தியானந்தா கதையை படமாக்கவுள்ளனர் தெலுங்கில். நித்தியானந்தா வேடத்தில் ராஜேந்திர பிரசாத் நடிக்கப் போகிறாராம். இவர் தெலுங்கில் பிரபலமான காமெடி ஹீரோ ஆவார். சிவாஜி, சாய்குமார் ஆகியோரும் உள்ளனர். ஹைதராபாத்தில் சமீபத்தில் படத்திற்கு பூஜை போட்டனர். அப்போது நித்தியானந்தா கெட்டப்பில் வந்தாராம் ராஜேந்திர பிரசாத்.
கதை என்னவோ நித்தியானந்தா கதைதான் என்றாலும் அதை இப்போதைக்கு ரகசியமாகவே வைத்துள்ளனராம். கேஸ் ஏதாவது வந்தால் சிக்கலாகி விடுமே என்பதற்காக இந்த அடக்கி வாசிப்பாம். ரஞ்சிதா கேரக்டருக்குரிய நடிகையை வலைவீசி தேடும் பணி தற்போது நடந்து வருகிறதாம்.