பக்கங்கள்

03 நவம்பர் 2010

'உம்மாடா செல்லம்':சொன்னது பாக்கியாஞ்ச்சலிதான்.

நான் நடிகை பாக்யாஞ்சலியை திருமணம் செய்து கொள்ளுமாறு கோரி வற்புறுத்தவில்லை. மாறாக, நடிகை பாக்யாஞ்சலிதான் என்னைக் காதலிப்பதாக கூறி எனக்குக் கடிதம் எழுதினார், எஸ்.எம்.எஸ். அனுப்பினார் என்று கோர்ட்டில் வில்லன் நடிகர் வேலு தெரிவித்துள்ளார்.
நெல்லு, உன்னையே காதலிப்பேன், கோட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளவர் பாக்யாஞ்சலி. அதற்குள் பெரும் பிரச்சினையைக் கிளப்பியுள்ளார். வில்லன் நடிகர் வேலு தன்னை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்வதாகவும், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதாகவும், தனது வீட்டில் வைத்து அடித்து உதைத்ததாகவும், முத்தம் கொடுத்தது போல புகைப்படம் எடுத்து வைத்துள்ளதாகவும் அவர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்துப் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து துணை ஆணையர் லட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். நடிகையிடம்நேரில் விசாரணை நடந்துள்ளது.ஆனால் நடிகர் வேலு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அப்படியும் வரவில்லை. இதையடுத்து அவரைக் கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி செஷன்ஸ் கோர்ட்டை நாடியுள்ளார் வேலு.
இந்த மனு நேற்று 4வது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பரஞ்சோதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் வேலுவின் வக்கீல் ஆஜராகி, வேலுவுக்கு பாக்யாஞ்சலி காதல் கடிதம், எஸ்.எஸ்.எஸ் அனுப்பியுள்ளார்.
'உம்மாடா செல்லம்'
அந்தக் கடிதத்தில், மை டியர் வேலு, நீ எங்கே இருக்கிறாய்? நீ இல்லாமல் நான் இல்லை. நீ எனக்கு தேவை. உன்னைப் பார்க்கணும். உன்னை கட்டித் தழுவ வேண்டும். ஐ லவ் யூ சோ மச், உம்மாடா செல்லம். நான் எப்போதும் உன்னுடன் இருக்க வேண்டும். கடிதத்தின் கீழே ஐ லவ் யூ என்று 6 தடவை எழுதியுள்ளார் என்று தெரிவித்தார்.
இதையடுத்து கடிதத்தை பாக்யாஞ்சலிதான் எழுதினாரா என்பதை கண்டுபிடிக்க அவகாசம் தேவை என்பதால் விசாரணையை ஒத்திவைக்குமாறு அரசுத் தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்ற நீதிபதி,நாளை மறுநாளைக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக