பக்கங்கள்

28 நவம்பர் 2013

ராஜபக்சே மகனுடன் தமிழ் நடிகை!

ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே மற்றும் ஒரு தொழிலதிபருடன் தமிழ் நடிகை ஒருவர் நெருக்கமாக இருக்கும் பலான சிடி சென்னையில் சில முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது. தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் செட்டிலாகி, இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதையும் தவிர்த்தார். ஒரு இந்திப் படத்தின் ஷூட்டிங்குக்காக இலங்கைக்குச் சென்றார். தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் திரைப்படத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை போன அந்த நடிகைன், கிட்டத்தட்ட ராஜபக்சே அன்ட் கோவின் பிஆர்ஓவாகவே மாறி, அங்கே தமிழர்கள் சுகமாக வசிப்பதாகவும், விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களைப் பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும் பிரச்சாரம் செய்தார். ஆனால் போன இடத்தில் அவர் வேறு வேலைகளில் பிஸியாக இருந்ததாகவும், அதற்கான ஆதாரம் சிடியாக சிக்கியுள்ளதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பிலுள்ள நட்சத்திர ஓட்டலில் அந்த நடிகை தங்கியிருந்தபோது அவரைச் சந்திக்க பல தொழில் அதிபர்கள் வந்திருந்ததாகவும், அப்படி வந்தவர்களில் ஒருவர் உல்லாசமாக இருக்கும் காட்சியை ரகசியமாக படம் பிடித்து சிடியாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சிடிதான் இப்போது சென்னையின் விவிஐபிகள் சிலரின் கஸ்டடியில் உள்ளதாம். அந்த சிடியில், ஓட்டலில் தங்கியிருக்கும் நடிகையை சந்திக்க வந்த தொழில் அதிபர்களில் ஒருவர் நடிகையை அணைத்து கொள்கிறார். பின்னர் நடிகையை அந்தரங்கமாக தொடும் காட்சிகளும் உள்ளனவாம். இதேபோல பல ஆயிரம் கோடி ரூபாவுடன் உலகம் சுற்றும் வாலிபனாகத் திரியும் ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சேயுடன் அந்த நடிகை உள்ள படங்களும் அவர்கள் கைவசம் சிக்கியுள்ளனவாம். இதுகுறித்து விசாரிக்க அந்த நடிகையை தொடர்பு கொண்டால், வழக்கம் போல அந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக பதில் வருகிறது. நடிகைக்கு நெருக்கமானவர்களோ, அவர் இப்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் தெரிவித்தனர்.

20 நவம்பர் 2013

ரதியின் மகனும் கமலின் மகளும் காதல்!

கமலின் இளைய மகள் அக்ஷரா நடிகை ரதியின் மகன் தனுஜ் விர்வானியை காதலிக்கிறாராம். கமலுடன் உல்லாச பறவைகள், ரஜினியுடன் முரட்டுக் காளை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரதி. பஞ்சாபி பெண்ணான ரதி தமிழ் தவிர இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். பின்னர் தொழில் அதிபர் அனில் விர்வானியை திருமணம் செய்து கொண்டு தனுஜ் என்ற மகனுக்கு தாயானார். இந்நிலையில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் தனுஜை காதலிப்பதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. அப்பா கமல் ஜோடியாக நடித்தவரின் மகனை காதலிக்கும் அக்ஷரா ஹாஸன் தனுஜ் லவ் யூ சோனியோ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். மும்பையில் தாய் சரிகாவுடன் தங்கியிருக்கும் அக்ஷரா முன்னதாக பிரபல இந்தி நடிகர் நசீருத்தின் ஷாவின் மகன் விவான் ஷாவை காதலிப்பதாக கூறப்பட்டது. பல இடங்களுக்கு அவர்கள் ஜோடியாக சென்று வந்தனர். அக்ஷரா தற்போது ஆர். பால்கியின் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

14 நவம்பர் 2013

"அஞ்சலி உயிருக்கு ஆபத்து"உயர்நீதிமன்றத்தில் மனு!

உயிருக்கு ஆபத்து உள்ளதால் உரிய பாதுகாப்பு வழங்க கோரி நடிகை அஞ்சலி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் போலீசார் பதில் அளிக்க நீதிபதி நோட்டீஸ் அனுப்பினார்.அங்காடி தெரு, சேட்டை, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் அஞ்சலி. இவர், தனது சொத்துக்களை சித்தி பாரதிதேவி, இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் அபகரிக்க முயல்வதாக புகார் கொடுத்தார். இதுபோல, இயக்குனர் களஞ்சியமும் அஞ்சலி மீது புகார் செய்தார். இதுதொடர்பான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கு விசாரணையின்போது அஞ்சலி
ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அஞ்சலி நேற்று ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:முதலில் தெலுங்கு படத்தில் நடித்தேன். 2007 முதல் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினேன். அஞ்சலி என நான் அழைக்கப்பட்டேன். சென்னைக்கு அடிக்கடி வந்து நடிக்க தொடங்கினேன். இதனால் சித்தி பாரதி தேவியை என்னுடன் எனது தாய் அனுப்பினார். வளசரவாக்கத்தில் வீடு எடுத்து சித்தியுடன் தங்கினேன்.கடந்த 2012ல் வளசரவாக்கத்தில் சொந்தமாக வீடு வாங்கினேன். நான் அடிக்கடி சூட்டிங் செல்வதால் இந்த வீட்டை சித்தியும் அவரது கணவர் சூரியபாபுவும் பராமரித்து வந்தனர்.இயக்குனர் களஞ்சியம் அவரது படத்தில் என்னை அறிமுககப்படுத்த நினைத்தார். அவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அவரால் செய்ய முடியவில்லை. இதனால் எங்களது குடும்பத்தில் புகுந்து எனக்கு எதிராக செயல்பட தொடங்கினார். இது எனக்கு பிடிக்கவில்லை. அவருடன் உள்ள தொடர்பை துண்டிக்க வேண்டும் என்று சித்தியிடம் கூறினேன். அதை அவர் ஏற்கவில்லை. அவருடன் சேர்ந்து எனது வீட்டை அபகரித்துக்கொண்டார். மேலும் என்னை மிரட்டி வருகிறார். எனவே, எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும். இதுபற்றி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.மேலும் வீட்டு செலவுக்கு எனது சித்தியிடம் பூர்த்தி செய்யாத செக்கில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளேன். அதை அவர்கள் தவறாக பயன்படுத்தி பல லட்சத்தை எனக்கு தெரியாமல் எடுத்துள்ள னர். இதுதவிர தொடர்ந்து பணம் கேட்டு சொந்தரவு செய்கிறார்கள். எனது உயிருக்கு பயந்து ஐதராபாத்தில் தங்கியுள்ளேன். எனது 50 சவரன் தங்க நகைகளையும் அவர்கள் பறித்து கொண்டனர். எனவே என்னை ஏமாற்றி மோசடி செய்த அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வழக்கில் கூறியிருந்தார்.வழக்கை நீதிபதி தேவதாஸ் விசாரித்து, இந்த வழக்கில் வளசரவாக்கம் போலீசார் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

11 நவம்பர் 2013

பிரபல எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை மரணம்!

பிரபல நாவலாசிரியர் புஷ்பா தங்கதுரை என்கிற ஸ்ரீவேணுகோபாலன் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82. கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட நாவல்களையும், சிறு கதைகளையும், தொடர்கதைகளையும் அவர் எழுதியுள்ளார். இவரது எழுத்து ஸ்டைல் வாசகர்களிடையே மிகவும் பிரபலமானது.புஷ்பா தங்கதுரைக்கு 82 வயதாகிறது. இவர் இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார்.உடல் நலப் பாதிப்பு காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் புஷ்பா தங்கதுரை அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.தனது விறுவிறுப்பான, சிலாகிப்பான எழுத்தின் மூலம் 2 தலைமுறை வாசகர்களை மகிழ்வித்தவர் புஷ்பா தங்கதுரை.புஷ்பா தங்கதுரையின் எழுத்து ஸ்டைல் பிரபலமானது. சீரியாஸாகவும் எழுதுவார். கலகலப்பான கதைகளையும் கொடுப்பார்.ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறு. நீ என் நிலா, நந்தா என் நிலா, திருவரங்கன் உலா, மதுரா விஜயம் ஆகியவை அவரது சிறந்த நாவல்களுக்கு சில எடுத்துக் காட்டுகள். காதல் அல்ல காதலி, சரிதா பிளஸ் சரிதா, சிகப்பு ரோஜா கதைகள், துள்ளுவது இளமை, தாய்ப்பூ தாமரைப்பூ ஆகியவை அவரது படைப்புகளில் சில.இவரது திருவரங்கன் உலா நாவல் மிகவும் பிரபலமானது. இந்த நூலை எழுதியதற்காக புஷ்பா தங்கதுரையை, ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து அவரை யானை மீது அமர வைத்து ஊர்வலமாகக் கொண்டு சென்று கெளவரப்படுத்தினர்.புஷ்பாவின் பூர்வீகம் நெல்லை மாவட்டம் கீழநத்தம் கிராமம் ஆகும். ஆரம்பத்தில் தபால் துறையில் பணியாற்றினார். பின்னர் வேலையை விட்டு விட்டு முழு நேர எழுத்தாளர் ஆனார்.இவரது ஊதாப்பு கண்சிமிட்டுகிறது திரைப்படமாகவும் உருவானது. இவர் எழுதிய ஆண்டவன் இல்லா உலகம் எது,நல்ல மனம் வாழ்க ஆகிய திரைப்படப் பாடல்களும் பிரபலானவை.

08 நவம்பர் 2013

நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு காலமானார்!

நடிகர் சிட்டிபாபு சிகிச்சை பலனின்றி காலமானார். சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமானதால், மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்து, அடைப்பு ஏற்பட்டதால் கோமா நிலையை அடைந்து வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தது அவரது உடல்நிலை.இன்று சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.நடிகர் சிட்டிபாபு ( வயது49). திருமணமாகி, ஜரினா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பல ஆண்டுகளாக, நீரிழிவு நோய் பாதிப்பு இருந்ததால், அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மூன்று நாட்களுக்கு முன், வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். சென்னை, முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மூளையில் அடைப்பு ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐ.சி.யூ., பிரிவில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்படவில்லை; தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (8.11.2013) சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.