பக்கங்கள்

25 ஜூலை 2012

நான் கவர்ச்சியா நடிக்கப் போறேன்!'

sunaina yathumaagi sexy 15 Sunaina hot sexy photo gallery
சுனேனா... காதலில் விழுந்தேனில் அசத்தாலாக அறிமுகமானார். வம்சம் படத்தில் அட, பரவாயில்லையே.. பாப்பா நல்லா நடிக்குது என பாராட்டும் பெற்றார். அத்தோடு காணாமல் போனவர்தான். யாரோ ஒரு நடிகரின் கஸ்டடியில் இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசு வேறு. கொஞ்சநாள் கழித்து, இப்போது நீர்ப்பறவை, கதிர்வேல், பாண்டி ஒலிபெருக்கி நிலையம் போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் சுனேனா. தன் உடல் அமைப்புக்கு கவர்ச்சி ட்ரெஸ், பிகினி போன்றவை செட் ஆகாது என்று இதுவரை கூறி வந்தவர், இப்போது 'நான்தான் சின்னப் பொண்ணு, ஏதோ சொல்லிட்டேன். அதுக்காக அப்படியே விட்டுடுவீங்களா... கொண்டாங்க அந்த பிகினியையெல்லாம்.. ஒரு கை பாத்துடறேன்," எனும் அளவுக்கு இறங்கிவிட்டாராம்! நிசமாவா? என்றால், "ஆமா.. " என்றவர், தமிழ் நடிகைகள் எப்போதும் வைத்திருக்கும் அந்த ரெடிமேட் வாக்கியத்தை ஒப்பித்தார். "கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நான் நடிக்கத் தயார்!" ஹப்பாடா... தமிழ் சினிமா ரசிகன் கட்ட வேகாம போயிடுமோங்கிற கவலை தீர்ந்ததம்மிணி!!

22 ஜூலை 2012

கமல் மகள் அக்ஷரா காதல்?

kamal-aksara3இந்தி நடிகர் நசிருதீன் ஷாவின் இளைய மகன் விவானுக்கும், கமல்ஹாசனின் மகள் அக்ஷராவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக இந்தி மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருவரும் நீண்ட காலமாக நட்புடன் இருந்து வருவதாகவும், இது காதலாக உருவெடுத்திருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. அக்ஷராவுடன் விவான் அதிக நேரம் செலவிடுவதாகவும் இத்தகவல்கள் கூறுகின்றன. இவர்கள் நட்புடன் இருப்பது அனைவருக்கும் தெரிந்தாலும், காதல் புரிந்து வருவது வெகு சிலருக்கே தெரியுமாம். இருப்பினும் இதை விவான் மறுத்துள்ளார். இதுகுறித்து மிட்டேவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நிச்சயம் இது காதல் அல்ல. நாங்கள் இருவருமே சிறு வயது முதல் பழகி வருகிறோம். எங்களது வாழ்க்கையில், ரொமான்ஸ் இல்லை என்று கூறியுள்ளார்.

15 ஜூலை 2012

ரீமா சென் மீது கணவர் கோபம்!

ரீமா சென்

திருமணமான பிறகும் படுக்கையறைக் காட்சியில் நடித்ததால் நடிகை ரீமா சென் மீது செம கடுப்பில் இருக்கிறார் அவரது கணவர் ஷிவ் கரண். நடிகை ரீமாசென்னுக்கும், டெல்லியைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் ஷிவ்கரன் சிங்குக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் ரீமாசென் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கணவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்தார். இதை தொடர்ந்து கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற இந்திப் படத்தில் நடித்தார். தொடர்ந்து சொசைட்டி என்ற இந்தி படத்திலும் சட்டம் ஒரு இருட்டறை என்ற தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கேங்க்ஸ் ஆப் வசேபூர் படம் சமீபத்தில் ரிலீசானது. இந்த படத்தில் ரீமாசென் படுக்கை அறை காட்சியொன்றில் மிகவும் ஆபாசமாக நடித்துள்ளார். இந்த படத்தை ரீமாசென் கணவர் ஷிவ் கரண் சிங் பார்த்து 'அட கண்றாவியே' என தலையிலடித்துக் கொண்டாராம். அவரது குடும்பத்தினரும் உறவினர்களோடு போய் மருமகளின் 'சீனைப்' பார்த்து அவமானப்பட்டுள்ளனர். இதனால் ரீமாசென்-ஷிவ்கரண்சிங் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. கவர்ச்சியாக இனி மேல் நடிக்கக் கூடாது என்று ரீமாசென்னுக்கு கணவர் தடை விதித்துள்ளாராம். இதனை ரீமாவும் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் இதுகுறித்துக் கூறும்போது, "கேங்க்ஸ் ஆப் வசேபூர் 2 படத்தை எனது கணவர் பார்த்தார். அப்படத்தில் நான் படுக்கையறை காட்சியில் நடித்திருந்தது அவருக்கு பிடிக்கவில்லை. அவர் மனம் புண்பட்டுள்ளார். ஆனாலும் நடிப்பைத் தொடரப் போகிறேன்," என்றார். அதானே.. வீட்டுக்காரருக்காகவெல்லாம் படுக்கையறைக் காட்சியில் நடிக்காமல் இருக்க முடியுமா என்ன!!

10 ஜூலை 2012

நயன்,த்ரிஷா கட்டிப்பிடி நட்பு!

Nayan Trisha Patch Up With Hug Lots அவர் வாய்ப்பை இவர் பறித்தார்... இவர் வாய்ப்பை அவர் தட்டிவிட்டார்... அவருடைய ஆளை இவர் கரெக்ட் பண்ணிட்டார்.... இவருடைய லவ்வரை அவர் லவட்டிக் கொண்டார்.... -நயன்தாரா மற்றும் த்ரிஷா பற்றி மீடியாவில் தொடர்ந்து வந்த செய்தி மற்றும் கிசுகிசுக்கள் இவை. அதற்கேற்ற மாதிரிதான் இருவரும் நடந்து கொண்டனர். தத்தமக்கு வேண்டப்பட்ட நிருபர் & நிருபிகளை ரகசியமாக அழைத்து இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் போட்டுக் கொடுத்ததெல்லாம் நடந்தது! அட ஏதாவது விழாக்களில் கூட இருவரும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்ப்பதையே தவிர்த்தார்கள். ஆனால் நேற்று முன்தினம் நடந்த தனியார் அவார்ட் ஷோவில் இருவரும் அப்படி இழைந்தார்கள். திடீரென்று இருவரும் 'நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க' என்ற ரேஞ்சுக்கு கட்டிப் பிடித்து கூடிக் குலாவினார்கள். விழா முடிந்ததும் வழக்கமாக நடக்கும் சரக்கு பார்ட்டியில் வழிந்த சரக்குகளை விட 'செம ஹாட் மச்சி' எனும் அளவுக்கு இவர்களின் ஷோ நடந்ததாம். இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் முத்தமழை பொழிய, 'த பார்றா கூத்தை' என்று வேடிக்கைப் பார்த்தார்களாம் சக கலைஞர்கள். நயன்தாரா - த்ரிஷா சண்டை முட்டிக் கொண்டது விஜய் நடித்து சிறகொடிந்து போன குருவியிலிருந்துதான் என்பது கோலிவுட்டை அக்குவேறாகப் பிரித்து மேயும் வாசகர்களுக்கு தெரியும்தானே!

04 ஜூலை 2012

சூர்யாவுடன் டூயட் பாடும் பிரணீதா!

பிரணீதா
சூர்யாவை வைத்து கௌதம் மேனன் எடுக்கும் துப்பறியும் ஆனந்தன் படத்தின் கதாநாயகி பிரணீதா என்று தெரிய வந்துள்ளது. கௌதம் மேனன் சூர்யாவை வைத்து துப்புறியும் ஆனந்தன் என்ற ஆக்ஷன் படத்தை எடுக்கவிருக்கிறார். இதில் சூர்யா 40களில் உள்ள கெட்டப்பில் ரொமான்ட்டிக் டிடெடக்டிவாக வருகிறார். அவருக்கு ஜோடியாக சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த பிரணீதா தான் நடிக்கவிருக்கிறாராம். விஜயை வைத்து கௌதம் மேனன் எடுக்கும் யோஹான் முடிந்த பிறகு துப்பறியும் ஆனந்தன் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த படம் வரும் 2013ம் ஆண்டு துவக்கத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. சகுனி படத்தை அடுத்து நடித்தால் பெரிய ஹீரோக்களுடன் மட்டும் தான் நடிப்பேன் என்று பிரணீதா கன்டிஷன் போட்டதாக கோலிவுட்டில் பேச்சாகக் கிடந்தது. அவர் கன்டிஷன் போட்ட மாதிரி பெரிய ஹீரோவான சூர்யாவுடன் தான் ஜோடி சேர்ந்துள்ளார். பிரணீதாவுக்கு வாழ்வு தான்...