பக்கங்கள்

28 ஜூலை 2011

கிருஷ்ணலீலைக்கு ஏங்கும் மேக்னா.

கிருஷ்ண லீலை படத்தை சீக்கிரமா ரிலீஸ் பண்ணுங்க என்று அப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை மேக்னாராஜ் கெஞ்சிக் கேட்டுக்கொண்டுள்ளார். டைரக்டர் ஸெல்வன் இயக்கத்தில் நடிகர் ஜீவன் - புதுமுக நடிகை மேக்னா ராஜ் நடித்திருக்கும் படம் கிருஷ்ண லீலை. படத்தை முடித்து இரண்டு ஆண்டுகளாகியும் ரிலீஸ் ஆகாததால் படத்தில் பணியாற்றிய இயக்குனர், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த படம் ரிலீஸ் ஆனால்தான் என் திரையுலக வாழ்க்கையே பிரகாசமாகும். கிருஷ்ண லீலை பெட்டிக்குள்ளேயே முடங்கி கிடப்பதற்கு ஐங்கரன் நிறுவனம்தான் காரணம் என்று குற்றம் சாட்டிய டைரக்டர் ஸெல்வன், படத்தை ரிலீஸ் செய்யக் கோரி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறவித்தார். பின்னர் திரையுலக பிரமுகர்கள் சிலரின் தலையீட்டால் அந்த முடிவை இப்போதைக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.
இந்நிலையில் படத்தின் நாயகியான நடிகை மேக்னா ராஜ் அளித்துள்ள பேட்டியொன்றில், கிருஷ்ண லீலை படம் சிறப்பாக வந்துள்ளது. அப்படம் இன்னும் வெளியாகாமல் முடங்கி இருப்பது வருத்தமாக உள்ளது. இயக்குனர் நடிகர், நடிகை தொழில்நுட்ப கலைஞர்கள் உழைப்பெல்லாம் அதில் இருக்கிறது. படம் சீக்கிரம் வர வேண்டும் என்று எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள். எனக்கு அதுதான் முதல் படம், எனவே அது விரைவில் வரவேண்டும் என்று விரும்புகிறேன். இயக்குனருக்கும் அந்த படத்தை வைத்துதான் புதுப்பட வாய்ப்புகள் வரும். எனவே உடனே ரிலீஸ் செய்ய வேண்டும் என கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.
நடிகை மேக்னா ராஜ், கிருஷ்ண லீலையைத் தொடர்ந்து சினேகன் ஜோடியாக நடித்துள்ள உயர்திரு 420 படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. அதனைத்தொடர்ந்து கள்ள சிரிப்பழகா, நந்தா நந்திதா உள்ளிட்ட படங்களிலும் மேக்னா நடித்துக் கொண்டிருக்கிறார்.

21 ஜூலை 2011

பிரபல நடிகர் ரவிச்சந்திரன் அவசர சிகிச்சைப்பிரிவில்.

நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடமான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
ரவிச்சந்திரன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஒரு மாதத்துக்கு முன் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக மயிலாப்பூரில் உள்ள தேவகி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ரவிச்சந்திரனுக்கு சிறு நீரகங்கள் பாதித்து இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்தனர் இதையடுத்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இரு தினங்களுக்கு முன் உடல் நிலை மோசமானது. இதனால் தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிசிச்சை அளிக்கின்றனர். செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70 களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் ரவிச்சந்திரன். திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவரை இயக்குனர் ஸ்ரீதர் 1964-ல் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.
பின்னர் அதே கண்கள்,இதய கமலம், கவுரி கல்யாணம், குமரி பெண், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு உள்பட ஏராளமான படங்களில் நடித்தார்.
ரவிச்சந்திரன் ஸடைல் அப்போதைய ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. கல்லூரி, பள்ளி மாணவிகள் ரவிச்சந்திரனின் தீவிர ரசிகைகளாய் இருந்தனர். அவர் படங்கள் 150 நாட்களை தாண்டி ஓடின.
விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு குணசித்திர வேடங்களில் வந்தார். ரஜினியுடன் அருணாசலம், கமலுடன் பம்மல் கே சம்பந்தம் படங்களிலும் நடித்தார்.
ரவிச்சந்திரன் மனைவி விமலா, மகள் லாவண்யா, மகன்கள் அம்சவர்த்தன் பாலாஜி ஆகியோர் ஆஸ்பத்திரியில் இருந்து கவனித்து வருகிறார்கள்.

18 ஜூலை 2011

அஜித்தை வெறுத்த விமலா.

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகள் பலரும், அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கையில், நடிகை ஒருவர் அஜித் படத்திற்கு நோ சொல்லியிருக்கிறார். அவர் பெயர் விமலா ராமன். தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு திரையுலகிற்கு சென்று, கவர்ச்சி புயலாக மாறி ரசிகர்களை கிறங்கடித்து வரும் விமலா ராமனிடம், அஜித்தின் பில்லா 2 படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டுள்ளனர். படத்தில் முதல் நாயகி மாடல் அழகி ஹூமா குரோஷி என்கிற போதிலும், அஜித் படம் என்பதால் விமலா நடிக்க சம்மதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அம்மணியோ அதற்கு நேர் மாறாக நோ சொல்லி விட்டாராம்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், "தெலுங்கு படவுலகில் பிஸியாக இருப்பதால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை" என்று விளக்கம் கொடுத்தாலும் உண்மை அதுவல்லவாம். படத்தில் விமலாவின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இல்லையாம். மற்றொரு நாயகியான மாடல் அழகியின் கேரக்டருக்குத்தான் முக்கியத்துவம் இருக்கிறதாம். இதனை தெரிந்து கொண்டதால்தான் அம்மணி அஜித் படத்துக்கே நோ சொல்லும் நிலைமைக்கு போய் விட்டார் என்கிறது, விவரமறிந்த கோடம்பாக்கத்து வட்டாரம்!

15 ஜூலை 2011

நிலாவிற்கும் அதுக்கும் தொடர்பில்லையாம்.

ஹரியானா மாநிலத்தில் நடந்த கொலைச் சம்பவத்தில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று நடிகை நிலா ஹரியானா மாநில டிஜிபியை நேரில் சந்தித்துத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடிகை ரஞ்சிதா போலீஸ் கமிஷனரை சந்தித்த அதே நாளில் நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா, தனது கள்ளக்காதலரின் மனைவி கொலை வழக்கு தொடர்பாக ஹரியானா டிஜிபியை சந்தித்துள்ளார்.
குர்கானைச் சேர்ந்தவர் ருச்சி (28). அவரது கணவர் சுமித் புட்டன். இருவரும் ஏஞ்சல் புரோகரேஜ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி ருச்சி தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
நடிகை நிலாவுடன் கொண்ட கள்ளத்தொடர்பால் சுமித் தான் தனது மனைவியைக் கொன்று தொங்கவிட்டுள்ளார் என்று ருச்சியின் சகோதரி ஷெபாலி தெரிவித்தார். இதையடுத்து சுமித் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நிலா கைதாகலாம் என்று கூறப்பட்டது. நிலாவைப் பிடிக்க டெல்லிக்குப் போலீஸ் படையும் விரைந்தது.
இந்நிலையில் திடீரென நிலா ஹரியானா டிஜிபியை சந்தித்து பேசியுள்ளார்.
அன்மையில் அவரைப் பற்றி ஊடகங்களில் வந்த செய்திகளைப் பார்த்து வருத்தம் அடைந்துள்ளார் நிலா. அதனால் தான் டிஜிபியை சந்தித்து பேச முடிவு செய்தார் என்று அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்தனர்.
நிலா விவகாரத்தில் இதுவரை கைது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், டிஜிபியை நிலா சந்தித்து என்ன பேசினார் என்பது தெரியவில்லை.

10 ஜூலை 2011

சிம்புவின் காதல் கதை.

திகட்ட திகட்ட காதலித்து விட்டதாக நயன்தாராவின் முன்னாள் காதலரான நடிகர் சிம்பு கூறியிருக்கிறார். நடிகர் சிம்புவும், நடிகை நயன்தாராவும் காதலித்ததும், பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து காதல் முறிவு ஏற்பட்டது நடந்து முடிந்த சங்கதி.
சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்த நயன்தாராவுக்கு நட்புடன் ஆறுதல் சொல்லி வந்தார் பிரபுதேவா. பிற்காலத்தில் அந்த ஆறுதலும், அக்கறையும் நயன்தாராவை கவர, பிரபுதேவாவை காதலிக்க ஆரம்பித்தார். பிரபுதேவாவும் தனக்கு ஒரு காதல் மனைவி இருப்பதை மறந்து நயன்தாராவிடம் மனதை பறிகொடுத்தார். இருவரும் திருமணம் செய்யாமலேயே சிறந்த தம்பதி விருது வாங்கும் அளவுக்கு நெருக்கமாக ஊர் சுற்றினார்கள். இதற்கிடையில் முறைப்படி தன் முதல் மனைவி ரமலத்தை பிரபுதேவா விவாகரத்து செய்து விட்டார்.
விரைவில் தனது இரண்டாவது காதலியான நயன்தாராவை, இரண்டாவதாக திருமணம் செய்யவிருக்கிறார் பிரபுதேவா. இந்நிலையில் நடிகர் சிம்பு அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் பற்றிய கேள்வியொன்றுக்கு பதில் அளித்திருக்கும் சிம்பு, காதல் தோல்வியால் இதுவரைக்கும் நான் எந்த தனிமையையும் உணரவில்லை. எல்லாமும் நடந்து முடிந்துவிட்டது என இந்த வாழ்வை ஈஸியாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த 25 வருஷத்தில் சில படங்களை முடித்து திரும்பி பார்த்தால், வாழ்க்கை எப்படியெல்லாம் சுழற்றி அடித்திருக்கிறது. நிறைய மாற்றங்கள். எல்லாவற்றையும் ரசிக்கிறேன். திகட்ட திகட்ட காதலிச்சாச்சு. இனி எனக்கான அடையாளமாக அந்தக் காதல் இருக்குமான்னு தெரியவில்லை. எல்லாமே மாறக் கூடியதுதானேன்னு நடை போட ஆரம்பித்துவிட்டேன். என்னை பொறுத்த வரைக்கும் தனிமையை எல்லா மனிதர்களும் உணரணும். அப்போதுதான் நல்லது, கெட்டது செய்த நாள்களை அசைபோட முடியும், என்று கூறியிருக்கிறார்.

05 ஜூலை 2011

குறைத்துக்கொண்ட இலியானா.

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பது யாருக்கு புரிந்திருக்கிறதோ இல்லையோ... சினிமா நட்சத்திரங்களுக்கு ரொம்பவே புரிந்திருக்கிறது. ஒரு கோடி ரூபாய் சம்பளம் தரத் தயார்; எங்கள் படத்தில் நடியுங்கள் என்று கோடம்பாக்கத்து பட அதிபர்கள் அழைத்தபோதெல்லாம், அதைவிட பெரிய தொகை கொடுத்த தெலுங்கு சினிமாவை விட்டு வர மனமில்லாமல் இருந்தார் நடிகை இலியானா. பின்னர் ஒருவழியாக தமிழில் "நண்பன்" என்ற பெயரில் தயாராகும் 3 இடியட்ஸ் ரீமேக் படத்தில் நடிக்க சம்மதித்த இலியானாவுக்கு சம்பளமாக ரூ.1 கோடி கொடுக்க அப்படத்தின் தயாரிப்பாளர் சம்மதித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
தமிழில் அவரை புக் செய்ஏராளமான தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தாலும், தெலுங்கு சினிமா மார்க்கெட்டில் அதீத கவனம் செலுத்தி வரும் இலியானா, வாய்ப்புகள் குறைந்து வருவதால் தனது சம்பளத்தையும் பாதியாக குறைத்திருக்கிறாராம். இலியானாவின் சமீபத்திய படங்கள் சில தோல்வியை தழுவியதால் வாய்ப்புகள் குறைந்து விட்டன. மீண்டும் ஒரு வெற்றிப்படத்தில் நடித்து மார்க்கெட்டை உயர்த்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் ரூ.50 லட்சம் சம்பளம் தந்தால் போதும்; நல்ல கதையம்சம் உடைய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன், என்று தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர்களுக்கு தூது விட்டிருக்கிறாராம் இலியானா.

02 ஜூலை 2011

எங்கேயும் எப்போதும்.

எங்கேயும் எப்போதும் படத்தில் நடிகர் விமலுக்கு பதிலாக புதுமுகம் ஷர்வானந்த் நடித்து வருகிறார். இப்படத்தில் அஞ்சலியும், அனன்யாவும் இரு நாயகிகளாக நடித்துள்ளனர்.
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் சேர்ந்து ஆர். முருகதாஸ் தயாரிக்கும் படம் எங்கேயும் எப்போதும். இதில் 2 நாயகன்கள், நாயகிகள். ஜெய், அஞ்சலி, ஷ்ர்வானந்த் மற்றும் அனன்யா நடிக்கின்றனர். ஷர்வானந்திற்கு இது தான் முதல் படம். இந்த படத்தி்ற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் முருகதாஸ் உதவியாளர் சரவணன்.
இது குறித்து சரவணன் கூறியதாவது,
இந்த படத்தில் 2 காதல் ஜோடிகள் உள்ளன. இது அவர்களின் காதல் கதை தான். கிளைமாக்ஸில் 2 ஜோடிகளும் இணைவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வில்லனும் கிடையாது, காதல் எதிரிகளும் கிடையாது. என்னடா வில்லனே இல்லை என்று நினைக்கிறீர்களா?
வில்லன் இல்லாமலேயே காதல் என்னவாகிறது என்பதை சுவாரஸ்யமாகக் கூறுகிறோம். ஹீரோயின் லிஸ்டில் சமமான இடத்தில் இருப்பவர்கள் அஞ்சலி, அனன்யா. கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் நடிக்கின்றனர். அவர்கள் சேர்ந்து வரும் காட்சிகள் இல்லை. இருப்பினும் அவர்களுக்கு சமமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஷர்வானந்த் கதாபாத்திரத்தில் விமல் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியாமல் போனது. 90 சதவீத படபிடிப்பு முடிந்துவிட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகிறேன் என்றார்.