பக்கங்கள்

28 ஜூலை 2011

கிருஷ்ணலீலைக்கு ஏங்கும் மேக்னா.

கிருஷ்ண லீலை படத்தை சீக்கிரமா ரிலீஸ் பண்ணுங்க என்று அப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை மேக்னாராஜ் கெஞ்சிக் கேட்டுக்கொண்டுள்ளார். டைரக்டர் ஸெல்வன் இயக்கத்தில் நடிகர் ஜீவன் - புதுமுக நடிகை மேக்னா ராஜ் நடித்திருக்கும் படம் கிருஷ்ண லீலை. படத்தை முடித்து இரண்டு ஆண்டுகளாகியும் ரிலீஸ் ஆகாததால் படத்தில் பணியாற்றிய இயக்குனர், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த படம் ரிலீஸ் ஆனால்தான் என் திரையுலக வாழ்க்கையே பிரகாசமாகும். கிருஷ்ண லீலை பெட்டிக்குள்ளேயே முடங்கி கிடப்பதற்கு ஐங்கரன் நிறுவனம்தான் காரணம் என்று குற்றம் சாட்டிய டைரக்டர் ஸெல்வன், படத்தை ரிலீஸ் செய்யக் கோரி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறவித்தார். பின்னர் திரையுலக பிரமுகர்கள் சிலரின் தலையீட்டால் அந்த முடிவை இப்போதைக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.
இந்நிலையில் படத்தின் நாயகியான நடிகை மேக்னா ராஜ் அளித்துள்ள பேட்டியொன்றில், கிருஷ்ண லீலை படம் சிறப்பாக வந்துள்ளது. அப்படம் இன்னும் வெளியாகாமல் முடங்கி இருப்பது வருத்தமாக உள்ளது. இயக்குனர் நடிகர், நடிகை தொழில்நுட்ப கலைஞர்கள் உழைப்பெல்லாம் அதில் இருக்கிறது. படம் சீக்கிரம் வர வேண்டும் என்று எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள். எனக்கு அதுதான் முதல் படம், எனவே அது விரைவில் வரவேண்டும் என்று விரும்புகிறேன். இயக்குனருக்கும் அந்த படத்தை வைத்துதான் புதுப்பட வாய்ப்புகள் வரும். எனவே உடனே ரிலீஸ் செய்ய வேண்டும் என கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.
நடிகை மேக்னா ராஜ், கிருஷ்ண லீலையைத் தொடர்ந்து சினேகன் ஜோடியாக நடித்துள்ள உயர்திரு 420 படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. அதனைத்தொடர்ந்து கள்ள சிரிப்பழகா, நந்தா நந்திதா உள்ளிட்ட படங்களிலும் மேக்னா நடித்துக் கொண்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக