
இந்நிலையில் படத்தின் நாயகியான நடிகை மேக்னா ராஜ் அளித்துள்ள பேட்டியொன்றில், கிருஷ்ண லீலை படம் சிறப்பாக வந்துள்ளது. அப்படம் இன்னும் வெளியாகாமல் முடங்கி இருப்பது வருத்தமாக உள்ளது. இயக்குனர் நடிகர், நடிகை தொழில்நுட்ப கலைஞர்கள் உழைப்பெல்லாம் அதில் இருக்கிறது. படம் சீக்கிரம் வர வேண்டும் என்று எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள். எனக்கு அதுதான் முதல் படம், எனவே அது விரைவில் வரவேண்டும் என்று விரும்புகிறேன். இயக்குனருக்கும் அந்த படத்தை வைத்துதான் புதுப்பட வாய்ப்புகள் வரும். எனவே உடனே ரிலீஸ் செய்ய வேண்டும் என கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.
நடிகை மேக்னா ராஜ், கிருஷ்ண லீலையைத் தொடர்ந்து சினேகன் ஜோடியாக நடித்துள்ள உயர்திரு 420 படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. அதனைத்தொடர்ந்து கள்ள சிரிப்பழகா, நந்தா நந்திதா உள்ளிட்ட படங்களிலும் மேக்னா நடித்துக் கொண்டிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக