பக்கங்கள்

25 பிப்ரவரி 2018

நடிகை சிறீதேவி மாரடைப்பால் மரணம்!

இரங்கல் நடிகை ஸ்ரீதேவி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் மரண செய்தி அறிந்து திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஸ்ரீதேவி ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்தவர்.துபாயில் திருமண நிகழ்ச்சியின்போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் ஸ்ரீதேவி. அது தான் அவர் பகிர்ந்த கடைசி புகைப்படங்கள்.ஸ்ரீதேவி இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தானும், அமிதாபும் சேர்ந்து நடித்த ஹுதா கவா படத்தில் வந்த விளையாட்டு பற்றிய ட்வீட்டை ரீ ட்வீட் செய்துள்ளார்.தன்ஷிகா நடித்துள்ள காத்தாடி படக்குழுவை வாழ்த்தி போட்ட ட்வீட் தான் ஸ்ரீதேவி கடைசியாக போட்ட ட்வீட் ஆகும். அதன் பிறகு அவர் இரண்டு ட்வீட்டுகளை ரீட்வீட் மட்டுமே செய்துள்ளார்.ஸ்ரீதேவியின் மரண செய்தி அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். #sridevi என்ற ஹேஷ்டேக்குடன் பலர் ட்வீட்டுகிறார்கள்.புகைப்படங்கள்