பக்கங்கள்

01 டிசம்பர் 2013

மிரட்டலால் தயாரிப்பாளர் ஓட்டம்!

மஞ்சு வாரியர்
மஞ்சுவாரியர் ஜோடியாக மம்மூட்டி நடிக்க மறுத்ததையடுத்து மஞ்சு நடிக்கும் படத்தை தயாரிக்கவில்லை என்று ஓட்டமெடுக்கிறார் கீது மோகன்தாஸ். இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பது மஞ்சுவின் கணவர் திலீப்தான் என கூறப்படுகிறது. மல்லுவுட் ஹீரோ திலீப்பின் மனைவி மஞ்சுவாரியர். இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. மஞ்சுவாரியர் மீண்டும் நடிக்க உள்ளார். ஆனால் இதை திலீப் ஏற்கவில்லை. திலீப்பும், மல்லுவுட் ஹீரோ மம்மூட்டியும் நெருங்கிய நண்பர்கள். மம்மூட்டி நடிக்கும் தெய்வத்தின்டே சுவாதம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக மஞ்சு நடிப்பதாக இருந்தது. ஆனால் திலீப் கேட்டுக்கொண்டதையடுத்து மஞ்சுவுடன் ஜோடியாக நடிக்க மம்மூட்டி மறுத்துவிட்டார். தற்போது மோகன்லால் ஜோடியாக ரஞ்சித் இயக்கும் மேன் ஃப்ரை டே படத்தில் மஞ்சு நடிக்கிறார். இந்த படத்திலிருந்தும் மஞ்சுவை நீக்க திலீப் முயற்சித்து வருகிறாராம். இந்நிலையில் மஞ்சுவாரியர் நடிக்கும் புதிய படத்தை கமல் தயாரிப்பில் நள தமயந்தி, பாலசந்தரின் பொய் படங்களில் ஹீரோயினாக நடித்த கீது மோகன்தாஸ் தயாரிக்கிறார் என்று தகவல் பரவியது.இதையறிந்து ஷாக் ஆன கீது அவசர அவசரமாக அந்த தகவலை மறுத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, சம்யுக்த வர்மா, மஞ்சுவாரியர் நடிக்கும் படத்தை நான் தயாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அப்படி எந்த படத்தையும் நான் தயாரிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். திலீப் விடுத்த மிரட்டல் காரணமாகவே கீது பின்வாங்கியதாக கூறப்படுகிறது.

28 நவம்பர் 2013

ராஜபக்சே மகனுடன் தமிழ் நடிகை!

ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே மற்றும் ஒரு தொழிலதிபருடன் தமிழ் நடிகை ஒருவர் நெருக்கமாக இருக்கும் பலான சிடி சென்னையில் சில முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது. தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் செட்டிலாகி, இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதையும் தவிர்த்தார். ஒரு இந்திப் படத்தின் ஷூட்டிங்குக்காக இலங்கைக்குச் சென்றார். தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் திரைப்படத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை போன அந்த நடிகைன், கிட்டத்தட்ட ராஜபக்சே அன்ட் கோவின் பிஆர்ஓவாகவே மாறி, அங்கே தமிழர்கள் சுகமாக வசிப்பதாகவும், விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களைப் பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும் பிரச்சாரம் செய்தார். ஆனால் போன இடத்தில் அவர் வேறு வேலைகளில் பிஸியாக இருந்ததாகவும், அதற்கான ஆதாரம் சிடியாக சிக்கியுள்ளதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பிலுள்ள நட்சத்திர ஓட்டலில் அந்த நடிகை தங்கியிருந்தபோது அவரைச் சந்திக்க பல தொழில் அதிபர்கள் வந்திருந்ததாகவும், அப்படி வந்தவர்களில் ஒருவர் உல்லாசமாக இருக்கும் காட்சியை ரகசியமாக படம் பிடித்து சிடியாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சிடிதான் இப்போது சென்னையின் விவிஐபிகள் சிலரின் கஸ்டடியில் உள்ளதாம். அந்த சிடியில், ஓட்டலில் தங்கியிருக்கும் நடிகையை சந்திக்க வந்த தொழில் அதிபர்களில் ஒருவர் நடிகையை அணைத்து கொள்கிறார். பின்னர் நடிகையை அந்தரங்கமாக தொடும் காட்சிகளும் உள்ளனவாம். இதேபோல பல ஆயிரம் கோடி ரூபாவுடன் உலகம் சுற்றும் வாலிபனாகத் திரியும் ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சேயுடன் அந்த நடிகை உள்ள படங்களும் அவர்கள் கைவசம் சிக்கியுள்ளனவாம். இதுகுறித்து விசாரிக்க அந்த நடிகையை தொடர்பு கொண்டால், வழக்கம் போல அந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக பதில் வருகிறது. நடிகைக்கு நெருக்கமானவர்களோ, அவர் இப்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் தெரிவித்தனர்.

20 நவம்பர் 2013

ரதியின் மகனும் கமலின் மகளும் காதல்!

கமலின் இளைய மகள் அக்ஷரா நடிகை ரதியின் மகன் தனுஜ் விர்வானியை காதலிக்கிறாராம். கமலுடன் உல்லாச பறவைகள், ரஜினியுடன் முரட்டுக் காளை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரதி. பஞ்சாபி பெண்ணான ரதி தமிழ் தவிர இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். பின்னர் தொழில் அதிபர் அனில் விர்வானியை திருமணம் செய்து கொண்டு தனுஜ் என்ற மகனுக்கு தாயானார். இந்நிலையில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் தனுஜை காதலிப்பதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. அப்பா கமல் ஜோடியாக நடித்தவரின் மகனை காதலிக்கும் அக்ஷரா ஹாஸன் தனுஜ் லவ் யூ சோனியோ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். மும்பையில் தாய் சரிகாவுடன் தங்கியிருக்கும் அக்ஷரா முன்னதாக பிரபல இந்தி நடிகர் நசீருத்தின் ஷாவின் மகன் விவான் ஷாவை காதலிப்பதாக கூறப்பட்டது. பல இடங்களுக்கு அவர்கள் ஜோடியாக சென்று வந்தனர். அக்ஷரா தற்போது ஆர். பால்கியின் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

14 நவம்பர் 2013

"அஞ்சலி உயிருக்கு ஆபத்து"உயர்நீதிமன்றத்தில் மனு!

உயிருக்கு ஆபத்து உள்ளதால் உரிய பாதுகாப்பு வழங்க கோரி நடிகை அஞ்சலி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் போலீசார் பதில் அளிக்க நீதிபதி நோட்டீஸ் அனுப்பினார்.அங்காடி தெரு, சேட்டை, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் அஞ்சலி. இவர், தனது சொத்துக்களை சித்தி பாரதிதேவி, இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் அபகரிக்க முயல்வதாக புகார் கொடுத்தார். இதுபோல, இயக்குனர் களஞ்சியமும் அஞ்சலி மீது புகார் செய்தார். இதுதொடர்பான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கு விசாரணையின்போது அஞ்சலி
ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அஞ்சலி நேற்று ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:முதலில் தெலுங்கு படத்தில் நடித்தேன். 2007 முதல் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினேன். அஞ்சலி என நான் அழைக்கப்பட்டேன். சென்னைக்கு அடிக்கடி வந்து நடிக்க தொடங்கினேன். இதனால் சித்தி பாரதி தேவியை என்னுடன் எனது தாய் அனுப்பினார். வளசரவாக்கத்தில் வீடு எடுத்து சித்தியுடன் தங்கினேன்.கடந்த 2012ல் வளசரவாக்கத்தில் சொந்தமாக வீடு வாங்கினேன். நான் அடிக்கடி சூட்டிங் செல்வதால் இந்த வீட்டை சித்தியும் அவரது கணவர் சூரியபாபுவும் பராமரித்து வந்தனர்.இயக்குனர் களஞ்சியம் அவரது படத்தில் என்னை அறிமுககப்படுத்த நினைத்தார். அவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அவரால் செய்ய முடியவில்லை. இதனால் எங்களது குடும்பத்தில் புகுந்து எனக்கு எதிராக செயல்பட தொடங்கினார். இது எனக்கு பிடிக்கவில்லை. அவருடன் உள்ள தொடர்பை துண்டிக்க வேண்டும் என்று சித்தியிடம் கூறினேன். அதை அவர் ஏற்கவில்லை. அவருடன் சேர்ந்து எனது வீட்டை அபகரித்துக்கொண்டார். மேலும் என்னை மிரட்டி வருகிறார். எனவே, எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும். இதுபற்றி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.மேலும் வீட்டு செலவுக்கு எனது சித்தியிடம் பூர்த்தி செய்யாத செக்கில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளேன். அதை அவர்கள் தவறாக பயன்படுத்தி பல லட்சத்தை எனக்கு தெரியாமல் எடுத்துள்ள னர். இதுதவிர தொடர்ந்து பணம் கேட்டு சொந்தரவு செய்கிறார்கள். எனது உயிருக்கு பயந்து ஐதராபாத்தில் தங்கியுள்ளேன். எனது 50 சவரன் தங்க நகைகளையும் அவர்கள் பறித்து கொண்டனர். எனவே என்னை ஏமாற்றி மோசடி செய்த அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வழக்கில் கூறியிருந்தார்.வழக்கை நீதிபதி தேவதாஸ் விசாரித்து, இந்த வழக்கில் வளசரவாக்கம் போலீசார் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

11 நவம்பர் 2013

பிரபல எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை மரணம்!

பிரபல நாவலாசிரியர் புஷ்பா தங்கதுரை என்கிற ஸ்ரீவேணுகோபாலன் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82. கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட நாவல்களையும், சிறு கதைகளையும், தொடர்கதைகளையும் அவர் எழுதியுள்ளார். இவரது எழுத்து ஸ்டைல் வாசகர்களிடையே மிகவும் பிரபலமானது.புஷ்பா தங்கதுரைக்கு 82 வயதாகிறது. இவர் இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார்.உடல் நலப் பாதிப்பு காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் புஷ்பா தங்கதுரை அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.தனது விறுவிறுப்பான, சிலாகிப்பான எழுத்தின் மூலம் 2 தலைமுறை வாசகர்களை மகிழ்வித்தவர் புஷ்பா தங்கதுரை.புஷ்பா தங்கதுரையின் எழுத்து ஸ்டைல் பிரபலமானது. சீரியாஸாகவும் எழுதுவார். கலகலப்பான கதைகளையும் கொடுப்பார்.ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறு. நீ என் நிலா, நந்தா என் நிலா, திருவரங்கன் உலா, மதுரா விஜயம் ஆகியவை அவரது சிறந்த நாவல்களுக்கு சில எடுத்துக் காட்டுகள். காதல் அல்ல காதலி, சரிதா பிளஸ் சரிதா, சிகப்பு ரோஜா கதைகள், துள்ளுவது இளமை, தாய்ப்பூ தாமரைப்பூ ஆகியவை அவரது படைப்புகளில் சில.இவரது திருவரங்கன் உலா நாவல் மிகவும் பிரபலமானது. இந்த நூலை எழுதியதற்காக புஷ்பா தங்கதுரையை, ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து அவரை யானை மீது அமர வைத்து ஊர்வலமாகக் கொண்டு சென்று கெளவரப்படுத்தினர்.புஷ்பாவின் பூர்வீகம் நெல்லை மாவட்டம் கீழநத்தம் கிராமம் ஆகும். ஆரம்பத்தில் தபால் துறையில் பணியாற்றினார். பின்னர் வேலையை விட்டு விட்டு முழு நேர எழுத்தாளர் ஆனார்.இவரது ஊதாப்பு கண்சிமிட்டுகிறது திரைப்படமாகவும் உருவானது. இவர் எழுதிய ஆண்டவன் இல்லா உலகம் எது,நல்ல மனம் வாழ்க ஆகிய திரைப்படப் பாடல்களும் பிரபலானவை.

08 நவம்பர் 2013

நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு காலமானார்!

நடிகர் சிட்டிபாபு சிகிச்சை பலனின்றி காலமானார். சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமானதால், மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்து, அடைப்பு ஏற்பட்டதால் கோமா நிலையை அடைந்து வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தது அவரது உடல்நிலை.இன்று சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.நடிகர் சிட்டிபாபு ( வயது49). திருமணமாகி, ஜரினா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பல ஆண்டுகளாக, நீரிழிவு நோய் பாதிப்பு இருந்ததால், அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மூன்று நாட்களுக்கு முன், வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். சென்னை, முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மூளையில் அடைப்பு ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐ.சி.யூ., பிரிவில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்படவில்லை; தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (8.11.2013) சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

27 அக்டோபர் 2013

நடிகைகளிடம் மட்டும் ஏன் இவ்வளவு கெடுபிடி?

நடிகைகள் பட விழாக்களுக்கு வரலேன்னா மட்டும் இவ்வளவு கெடுபிடி காட்டும் நீங்கள், பட விழாக்கள் பக்கமே வராத நடிகர் அஜீத் மற்றும் சந்தானத்துக்கு மட்டும் பொருந்தாதா என கேள்வி எழுப்பியுள்ளனர் முன்னணி நடிகைகள். தமிழ் சினிமாவில் தாங்கள் நடித்த படங்களின் இசை வெளியீடு மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட நாயகிகள் கலந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பிரதானமாக எழுந்துள்ளது. நாயகிகள் இல்லாததால் போதிய விளம்பரம் கிடைக்காமல் போவதால், அவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் படத்தில் நடிக்கத்தான் சம்பளமே தவிர, இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கல்ல. அந்த கால்ஷீட்டை நாங்கள் வேறு படத்துக்கு தரவேண்டியிருக்கிறது என நடிகைகள் தரப்பில் கூறிவந்தனர். இந்த நிலையில், விழாக்களில் கலந்து கொள்ளாத நடிகைகளின் சம்பளத்தில் 20 சதவீதத்தை பிடித்தம் செய்து கொள்வதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனி சம்பளம் மற்றும் வந்து போக, தங்க ஆகும் செலவுகளை தயாரிப்பாளர்தான் ஏற்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் எங்களால் வரமுடியாது என்று கூறியுள்ளனர். இல்லாவிட்டால் தயாரிப்பாளர் பிடித்தம் செய்வதாகக் கூறும் 20 சதவீதத்தை தங்கள் சம்பளத்தில் ஏற்ற வேண்டிய நிலையை தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத முன்னணி நடிகை ஒருவர் தெரிவித்தார். 'ஒரு கோடி சம்பளம் கேட்டதற்கு பதில் 1 கோடியே இருபது லட்சம் என சம்பளம் பேச வேண்டியதுதான்,' என சக நடிகைகள் கமெண்ட் அடித்ததாக அவர் தெரிவித்தார். அஜீத், சந்தானத்தையும் கூப்பிட வேண்டியதுதானே... "நடிகைகளிடம் மட்டும் இவ்வளவு கெடுபிடி காட்டும் தயாரிப்பாளர் சங்கம், பட விழாக்கள், பிரஸ் மீட்டுகள், விளம்பர நிகழ்ச்சிகள் என எதற்குமே எட்டிப் பார்க்காத அஜீத், சந்தானம் போன்றவர்களை மட்டும் விட்டுவிடுவது ஏன்? அவர்கள் மட்டும் விதிவிலக்கா... அவர்கள் சம்பளத்தில் 20 சதவீதம் குறைக்கத் தயாரா? இவர்களைப் போலத்தான் ஒரு நடிகை கலந்து கொள்ளாமல் போக ஆயிரம் காரணங்கள் உள்ளன", என்றும் குமுறியுள்ளனர் நடிகைகள். படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும்போதே, படத்தின் விழாக்கள், விளம்பர நிகழ்ச்சிகள் எதற்கும் தன்னை அழைக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்து, அதை எழுத்துப்பூர்வமாகவும் எழுதி வாங்கிக் கொண்டுதான் நடிக்கிறார் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதெல்லாம் சந்தானமும் அஜீத் வழியைத்தான் பின்பற்றுகிறாராம்.

19 அக்டோபர் 2013

இனி நடிக்கமாட்டாரம் திரிஷா!

தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேல் தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாகத் திகழும் த்ரிஷா, இனி புதிய படங்களில் நடிக்க மாட்டேன் என மறுப்பு தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திருமணம் செய்து கொண்டு செட்டிலாகத் திட்டமிட்டுள்ளதாலேயே இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக 'ஆயிரத்தோராவது முறையாக' கொளுத்திப் போட்டுள்ளனர் கோடம்பாக்கத்தில். 30 வயதைத் தாண்டிவிட்ட த்ரிஷா இப்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஒரு படம். கிட்டத்தட்ட இந்தப் படங்களின் ஷூட்டிங்குகள் முடியும் கட்டத்தில் உள்ளன. திரிஷாவுடன் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் இப்போது வெளிப்படையாகவே நெருக்கம் காட்ட ஆரம்பித்துளளனர். இருவரும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதால், த்ரிஷா புதுப்படங்களில் நடிக்க மறுத்து வருவதாகக் கூறுகிறார்கள். சமீபத்தில் அவரை ஒப்பந்தம் செய்யச் சென்ற தயாரிப்பாளருக்கு, 'இனி படம் நடிக்கிறதா இல்ல' என்று கூறிவிட்டாராம் த்ரிஷா.

16 அக்டோபர் 2013

எனக்கு இதுவெல்லாம் செய்தார் அஷ்மித்-வீணா

வீணா&அஷ்மித் 
தனது முன்னாள் காதலர் அஷ்மித் படேல், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தனது உள்ளாடையைத் துவைத்துப் போட்டதாகவும், தான் கோபத்தில் செருப்புக் காலால் உதைத்தபோது அதைப் பொறுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார் வீணா மாலிக். வீணா மாலிக் வாயைத் திறந்தாலே ஏதாவது சர்ச்சையில்தான் முடிப்பார். அதேபோல இப்போதும் தனது முன்னாள் காதலர் குறித்து அவர் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் மீது முன்னாள் காதலர் அஷ்மித் படேல், அதிகப் பிரியமாக இருந்ததாகவும், தனது உள்ளாடையைக் கூட அவர் துவைத்துப் போட்டார் என்றும் கூறியுள்ளார் வீணா. மேலும் தான் செருப்புக் காலால் உதைத்தபோது அதைக் கூட அவர் பொறுத்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.பாகிஸ்தானிலிருந்து கவர்ச்சிகரமாக வந்து இறங்கியவர்தான் வீணா மாலிக்.பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில்தான் இவர் முதலில் புயல் கிளப்பினார்.பிக் பாஸ் ஷோவின்போது அதில் இவருடன் பங்கேற்ற அஷ்மித் படேலுடன் படு நெருக்கமாக பழகினார். முத்தம் கொடுத்தார், கட்டி அணைத்தார்,நிறைய ஏடாகூடங்களை இருவரும் அரங்கேற்றினர்.ஆனால் தற்போது இருவரும் பிரிந்து விட்டனர். சரியாக பேசிக் கொள்வது கூட கிடையாதாம்.ஆனாலும், தனக்கும் அஷ்மித்துக்கும் இடையிலான அன்பு அப்படியேதான் இருப்பதாக கூறியுள்ளார் வீணா மாலிக். இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களுக்குள் நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது. அது சரியாக இருந்தால் அன்பும் எப்போதும் இருக்கும்.அஷ்மித் மற்றவர்களைப் போலவே என் மீது அதிகம் பாசம் காட்டினார். எனது உள்ளாடையைக் கூட துவைத்துப் போட்டார். நான் கோபமாக இருக்கும்போதெல்லாம் அமைதி காத்தார். நான் எனது ஹைஹீல்ஸ் போட்ட காலால் அவரை உதைத்தபோது கூட அமைதி காத்தார்.அவர் ஜட்டியை நான் துவைத்ததை மட்டும்ஷோவில் காட்டினார்கள். உண்மையில் எனது உள்ளாடையை அவர் துவைத்தார்...எங்களுடையது எல்லாமே பரஸ்பரமாக இருந்தது என்று கூறியுள்ளார் வீணா.

09 அக்டோபர் 2013

நஸ்ரியா பகிரங்க மன்னிப்பு!

உண்மை தெரியாமல் இயக்குநர் சற்குணம் மீது புகார் கொடுத்துவிட்டேன். நான் ஆட்சேபித்த காட்சி எதுவுமே நய்யாண்டி படத்தில் இல்லாததால் சற்குணத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார் நஸ்ரியா. 'நய்யாண்டி' படத்தில் நஸ்ரியாவுக்கு பதிலாக பெண்ணை வைத்து அவரது தொப்புளை தனுஷ் தடவுவது மாதிரி காட்சி வைத்து விட்டதாக இயக்குநர் சற்குணம், தயாரிப்பாளர் கதிரேசன் மீது நஸ்ரியா புகார் கூறி வந்தார். முதலில் நடிகர் சங்கத்திலும் பின்னர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அவர் புகார் கூறி பரபரப்பு கிளப்பினார். எனக்கு காட்டாமல் படத்தை வெளியிடக் கூடாது என்றும் அவர் கோரியிருந்தார். இந்த நிலையில் இன்று போர்பிரேம்ஸ் திரையரங்கில் நஸ்ரியா, அவரது அப்பா நசீம் , நஸ்ரியாவின் வழக்கறிஞர், தயாரிப்பாளர், சைபர் க்ரைம் அதிகாரிகள் 'நய்யாண்டி' படத்தை பார்த்திருக்கிறார்கள். சர்ச்சைக்குரியதாக சொல்லப்பட்ட அந்தக் காட்சி ஆபாசமாக, கவர்ச்சியாக இல்லை என்பதோடு, டூப் யாரையும் சற்குணம் பயன்படுத்தவில்லை என்பதும் தெளிவானதாம். அந்த தொப்புள் காட்சி ட்ரைலரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாம். இதனால், நஸ்ரியா தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து சற்குணத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்டாராம். அவசரப்பட்டு சற்குணத்தை அவமானப்படுத்திய குற்றத்துக்காக தானே முன்வந்து பத்திரிகையாளர்கள் முன் தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோருவதாக நஸ்ரியா கூறியுள்ளாராம். நாளை மறுநாள் ரிலீசாகும் படத்துக்கு இதை விட ஹெவி பப்ளிசிட்டி வேறு கிடைக்குமா என்ன!!

23 செப்டம்பர் 2013

உலக அழகிப்போட்டி!

'மிஸ் வேர்ல்ட்' உலக அழகிப்போட்டி, இந்தோனேஷியா நாட்டில் உள்ள பாலி தீவில் 28-ந் தேதி நடக்கிறது. இதில் கலந்துகொள்கிற அழகிகள், கெர்டலாங்கு கலாச்சார கிராமத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் ஒய்யாரமாக போட்டோவுக்கு 'போஸ்' கொடுத்த காட்சிதான் இது.

18 செப்டம்பர் 2013

அஞ்சலி ஜெர்மனியில் தலைமறைவு வாழ்க்கை?

நடிகை அஞ்சலி ஜெர்மனியில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் நடிகை அஞ்சலி திடீர் என்று தலைமறைவாகிவிட்டு பின்னர் அவராகவே வந்து காவல் நிலையத்தில் ஆஜரானார். அதன் பிறகு அவரை தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை. தெலுங்கு படங்களில் நடித்து வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் அப்படி நடிப்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லையாம். அஞ்சலி இந்நிலையில் அஞ்சலிக்கு திருமணமாகிவிட்டது என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை அஞ்சலி மறுத்தார். இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. அஞ்சலியை தங்கள் படங்களில் நடிக்க வைக்க தமிழ் இயக்குனர்கள் விரும்புகிறார்களாம். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். இந்நிலையில் அவர் ஜெர்மனியில் தலைமறைவாக இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

14 செப்டம்பர் 2013

பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம்!

இன்னும் இரு ஆண்டுகளில் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக நடிகை ப்ரியாமணி கூறியுள்ளார். பருத்தி வீரன் மூலம் பரபரப்பானவர் ப்ரியாமணி. அடுத்து ஓரிரு படங்களில் நடித்த அவர் படிப்படியாக தமிழ் சினிமாவில் காணாமல் போனார். சென்னை எக்ஸ்பிரஸ் இந்திப் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடினார். கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். ப்ரியாமணி தமிழில் நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருந்ததாகவும், ஆனால் எதுவும் திருப்தியாக அமையவில்லை என்றும் தெரிவித்த ப்ரியாமணி, இப்போது தனது திருமணம் குறித்து சீரியசா
க சிந்திக்க ஆரம்பித்துள்ளாராம். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "இன்னும் இரண்டு ஆண்டுகளில் எனக்குத் திருமணம் நடக்கலாம் . ஆனால் நிச்சயம் பெற்றோர்களின் சம்மதத்துடன் கூடிய காதல் திருமணமாக இருக்கும். முன்பின் தெரியாத ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டு பின்னர் வருத்தப்படுவதை விட அவரைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு திருமணத்தைப் பற்றி முடிவு செய்வதே பொருத்தமாக இருக்கும்," என்றார்.

08 செப்டம்பர் 2013

நடிகை சிந்து தற்கொலை முயற்சி!

அங்காடித்தெரு, போக்கிரி உள்ளிட்ட படங்களில் நடித்த சிந்து தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தார். கடன் தொல்லை காரணமாக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. காமெடி, குணச்சித்திரம் என அனைத்து வேடங்களிலும் நடிப்பவர் சிந்து. இவர் தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார். நேற்று அவர் அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மயங்கி விழுந்தார். உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின் சிந்துவுக்கு நினைவு திரும்பியது. விருகம்பாக்கம் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை சிந்து கடந்த ஓராண்டாக கணவரிடமிருந்து பிரிந்து தனது மகளுடன் தனது அப்பா வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

14 ஆகஸ்ட் 2013

என் பையன் தங்கமானவன்யா-ராஜேந்தர்

என் பையன் தங்கமானவன்யா... அவன் யாரை காதலிச்சாலும் ஏத்துக்குவேன்னுதான் சொன்னேனே தவிர ஹன்சிகாங்கிற பேரை நான் சொல்லவே இல்லை. இப்படிதான் நயன்தாரா கூடவும் என் பையனை இணைச்சி எழுதிட்டாங்க... சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் டி.ஆர். புலம்பியதை கேட்டு அதிர்ந்தது கூட்டம். சிம்புவும், நயன்தாராவும் டைட்டா உதட்டை கடிச்சுகிட்ட போட்டோவை உலகமே பார்த்தது. அதுக்கப்புறமுமா இப்படியொரு பேசசு..? சிம்பு ஹன்சிகாவை இளவரசி என்று இணையத்தில் கொஞ்சிக் கொண்டிருக்கிறார். ஹன்சிகா ஒருபடி மேலே போய் இருவரும் பார்ட்டியில் கட்டிப் பிடித்து நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்டு தமிழகத்தின் காதில் புகை வர வைக்கிறார். டி.ஆர். பேப்பரே படிக்கிறதில்லையா. இல்லை தாடி வச்ச பச்சக் குழந்தையா...? விசேஷத்துக்கு நாள் பார்க்கிறதை விட்டுட்டு இது என்ன பொய் புலம்பல் டி.ஆர். சார்...?

07 ஆகஸ்ட் 2013

பள்ளி தாளாளர் வீட்டில் இயக்குனர் சேரன் மகள்!

காதல் விவகாரத்தில் சிக்கியுள்ள சேரனின் மகள் தாமினி தந்தையுடன் செல்ல விருப்பமிலை என்று கூறியதையடுத்து இரண்டு வாரங்களுக்கு பள்ளி தாளாளர் வீட்டில் தங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் சேரன் மகள் தாமினி, சினிமா டான்சர் சந்துருவை காதலித்தார். மகளின் காதலை மறுத்தார் சேரன். இதனால் சந்துருவின் வீட்டுக்கு தாமினி சென்றுவிட்டார். பின்னர் இந்த விஷயம் வெளி உலகுக்கு தெரிய வந்தது. சந்துருவின் நடவடிக்கைகள் சரியல்ல என்பதால் மகளின் காதலை மறுப்பதாக சேரன் அறிவித்தார். ஆனால், சந்துருவுடன்தான் வாழ்வேன் என்று தாமினி பிடிவாதமாக இருக்கிறார். இந்த காதல் விவகாரம் போலீஸ் வரை சென்றதால், தாமினியை அரசு இல்லத்தில் போலீசார் தங்க வைத்தனர். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் சந்துருவின் தாயார் ஈஸ்வரி அம்மாள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது தாமினியை, நீதிபதிகள் மேடைக்கு அழைத்து பேசினர். சந்துருவுடன் செல்வதில் அவர் உறுதியாக இருந்தார். ஆனால் சேரனும், அவரது மனைவி செல்வராணியும் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். எனவே ஒருநாள் மட்டும் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத்தின் பாதுகாப்பில் தாமினியை அனுமதித்து நீதிபதிகள் நேற்று முன்தினம் உத்தரவிட்டனர். நேற்று பிற்பகல் நீதிபதி வி.தனபாலனின் அறையில் விசாரணை நடத்தப்பட்டது. சேரன், செல்வராணி, உறவினர்கள் மற்றும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் ஏராளமாக வந்திருந்தனர். சந்துருவின் தாயார் ஈஸ்வரி, சகோதரிகள் மற்றும் உறவினர்கள், வக்கீல் ஏ.ரமேசின் உதவியுடன் நீதிபதி அறைக்கு முன்பு வந்தனர். சந்துருவின் தாயார் மற்றும் சகோதரிகள் தாங்கள் கடுமையாக மிரட்டப்படுவதாகவும், கோர்ட்டுக்கு வரும் வரை தொடர்ந்து மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்தனர். முதலில் தாமினியை நீதிபதிகள் அழைத்து பேசினர். சுமார் 20 நிமிடங்கள் விசாரணை நடந்தது. அதன் பின்னர் மனுதாரர் ஈஸ்வரி அம்மாள் அழைக்கப்பட்டார். அவர் தெலுங்கு பேசுபவர், தமிழ் சரிவர தெரியாது என்பதால், மகள் பத்மாகவுரியை உடன் அழைத்து சென்றார். அவர்களிடம் 20 நிமிடங்கள் விசாரணை நடந்தது. பின்னர் சேரன் தனியாக அழைக்கப்பட்டார். ஒரு மணி நேரம் அவர், நீதிபதிகளுடன் பேசினார். பின்னர் அனைத்து தரப்பினரின் வக்கீல்களையும் நீதிபதிகள் அழைத்து பேசினர். அதன் பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: இரண்டு தரப்பினரிடமும் நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டோம். இப்படிப்பட்ட சூழ்நிலை வந்ததை ஒவ்வொருவரும் விவரித்தனர். தாமினியின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை இரண்டு தரப்பினரும் தெரிவித்தனர். அவர்கள் சொன்ன சில விஷயங்கள், இந்த வழக்கின் பிற்பகுதியில் விசாரிக்கப்படும். சமுதாயத்தில் பிரபலமானவர்கள் என்பதால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் பாதுகாப்பு கவனிக்கப்பட வேண்டும். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வேறு யாரும் புகுந்து தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளக் கூடாது. இரண்டு தரப்பினரும் கொடுத்துள்ள கருத்துகளை பரிசீலித்தோம். இரண்டு தரப்பினர் வீட்டிலும் எழுந்துள்ள தற்போதைய சூழ்நிலையின்படி, தாமினி நல்ல பாதுகாப்புடன் கூடிய வீட்டில் தங்குவதுதான் சிறந்தது என்று கருத்து தெரிவித்தனர். அதன்படி, தியாகராயநகரில் உள்ள ஸ்ரீ ஷெரைன் வேளாங்கண்ணி மேல் நிலைப்பள்ளியின் (தாமினி படித்த பள்ளி) தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் பி.கே.கே.பிள்ளையின் வீட்டில் இரண்டு வாரங்களுக்கு தங்குவதற்கு உத்தரவிடப்படுகிறது. இதற்கு தாமினியும், மற்ற தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர். 21-ந் தேதி கோர்ட்டில் தாமினி ஆஜராக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தாமினியை பி.கே.கே.பிள்ளை அழைத்துச் சென்றார்.

26 ஜூலை 2013

வாள் சண்டையில் அனுஷ்கா காயம்!

அனுஷ்கா
அனுஷ்கா குதிரையில் அமர்ந்தபடி வாள் சண்டை போடும் காட்சியில் எதிர்பாராமல் வாள் அவர் உடம்பில் பட்டு காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.ஒக்கடு (தமிழில் கில்லி)படத்தை இயக்கிய குணசேகர் பிரமாண்டமாக தயாரித்து இயக்கும் சரித்திரப் படம் ருத்ரம்மாதேவி.அனுஷ்கா ருத்ரம்மாதேவியாக நடிக்கிறார்.இந்தப் படத்துக்காக வாள் சண்டை, குதிரையேற்றம் என பல வித்தைகளில் பயிற்சி எடுத்தார் அனுஷ்கா. 150 நாட்கள் இந்தப் படத்துக்கு மட்டும் கால்ஷீட் தந்துள்ளார். ராணா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் மகேஷ்பாபு சின்ன கெஸ்ட் ரோல் ஒன்றில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.வாள் சண்டை போடும் காட்சியில் எதிர்பாராமல் வாள் அவர் உடம்பில் பட்டு காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.டம்மி வாள் என்பதால் சின்ன காயத்துடன் தப்பியிருக்கிறhர்.உடனே படப்பிடிப்பை நிறுத்தி காயத்துக்கு சிகிச்சையளித்திருக்கிறார்கள். அனுஷ்கா தற்போது நடித்து வரும் பாகுபலியும் சரித்திரப் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஜூன் 2013

வருந்துகிறார் கவிதா வர்மா!

கவிதா வர்மா 
போலிஸ்கிரி படத்தில் படு ஆபாசமாகவும், உடலில் சிலுவையை தொங்க விட்டும் போஸ் கொடுத்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் அப்படத்தில் குத்துப் பாட்டுக்கு நடித்திருந்த கவிதா வர்மா.விரைவில் வெளியாகவுள்ளது போலிஸ்கிரி படம்.மெகா பட்ஜெட் படமான இதில் கவிதா வர்மா கொடுத்திருந்த ஒரு போஸ் கிறிஸ்தவர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.இதற்காக கிறிஸ்தவ சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் கவிதா.அப்படி தான் தோன்றியது தவறுதான்,மன்னித்து விடுங்கள் என்று அவர் கோரியுள்ளார்.இந்தக் காட்சியில் ரோஸ் கலர் பிராவுடன், கழுத்தில் நீண்ட சங்கிலியில் சிலுவையைத் தொங்க விட்டும் காட்சி தந்திருந்தார் கவிதா.இந்த போஸைப் பார்த்து கிறிஸ்தவ சமுதாய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தி விட்டார் கவிதா என்று குரல்கள் எழுந்தன.இதுதொடர்பாக கிறிஸ்தவ மதச்சார்பற்ற இயக்கம் என்ற அமைப்பு படத் தயாரிப்பாளர்களான அகர்வால், ராகுல் அகர்வால் ஆகியோரிடம் புகார் அளித்தது.சென்சார் வாரியத்திடமும் புகார் போனது. இதையடுத்து அந்த அமைப்பின் பிரதிநிதிகளை நேரில் வரவழைத்த தயாரிப்பாளர்கள்,நடிகை கவிதாவையும் உடன் வைத்துக் கொண்டு சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது கிறிஸ்தவ அமைப்பிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டாராம் கவிதா.நான் தெரியாமல்தான் நடித்து விட்டேன். எனக்கு இப்படி ஒரு பிரச்சினை வரும் என்று தெரியாது.மனதைப் புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு்க கொள்கிறேன் என்றார் கவிதா.

25 மே 2013

டி.எம்.செளந்தரராஜன் காலமானார்!

Tms Hospitalised
டி.எம்.செளந்தரராஜன் 
இந்தியாவின் மிகச் சிறந்த பின்னணிப் பாடகரும் இசைக் கலைஞருமான டிஎம் சவுந்திரராஜன் இன்று பிற்பகல் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 91. உடல் நலக் குறைவு காரணமாக இன்று அவர் உயிர் பிரிந்தது. மூச்சுக் கோளாறு காரணமாக கடந்த 12-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சில தினங்களுக்கு முன் வீடு திரும்பினார். பேரன் திருமணத்திலும் கலந்து கொண்டார். வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 1923ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மீனாட்சி அய்யங்காரின் மகனாக மதுரையில் பிறந்தார் டி.எம். சவுந்தரராஜன். அவரது இயற்பெயர் துகுலுவ மீனாட்சி அய்யங்கார் சவுந்திரராஜன். பிரபல இசை வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்காரிடம் இசைப் பயிற்சி பெற்று பல ஆண்டுகளாக மேடை கச்சேரி செய்து வந்தார். 1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமானார் டி.எம். சவுந்தரராஜன். அதன் பிறகு பல்லாயிரம் பாடல்களை பாடி தனது கணீர் கம்பீர குரலால் இசை ரசிகர்களின் இதயங்களில் குடி கொண்டார். 2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ஏராளமான மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ரஜினிகாந்த், கமல்ஹாஸன் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார். 2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த டி.எம்.சவுந்தரராஜனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். டி.எம்.சவுந்திரராஜன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

07 மே 2013

திரிஷாவிற்கு ஒன்று அம்மாவுக்கு ஒன்று!

திரிஷா 
நட்சத்திர ஓட்டலில் தன் அம்மாவுக்கு தனி ரூம் போடாததால் ஆத்திரமடைந்த நடிகை த்ரிஷா, படப்பிடிப்புக்கு வர மறுத்து ரகளை செய்தார். 'என்றென்றும் புன்னகை' படப்பிடிப்புக்காக சமீபத்தில் சுவிட்சர்லாந்துக்கு சென்றார் த்ரிஷா. உடன் அவர் அம்மாவும் சென்றிருந்தார். இப்படத்தில் ஜீவா ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அகமது இயக்குகிறார். திரிஷாவுக்கும் உமாவுக்கும் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் ரூம் ஒதுக்கி இருந்தனர். சுவிட்சர்லாந்தில் ஒரு அறைக்கு ஒரு நாள் வாடகை ரூ 20 ஆயிரத்துக்கும் மேல். மேலும் வழக்கமாக த்ரிஷாவுடன் ஒரே அறையில்தான் உமாவும் தங்குவார். எனவே ஒரு ரூம் மட்டும் போட்டார்களாம். ஆனால் இதை அறிந்த த்ரிஷா ஆத்திரத்தின் உச்சிக்கே போய்விட்டார். அம்மாவுக்கு ஏன் தனி ரூம் போடவில்லை என கேட்டு சண்டை போட்டுள்ளார். படக்குழுவினர் ஒரு ரூம்தான் ஒதுக்க முடியும் என பிடிவாதம் பிடித்ததால் படப்பிடிப்புக்கு செல்ல மறுத்துவிட்டாராம் த்ரிஷா. பின்னர் இயக்குநர் அகமது அங்கு விரைந்து த்ரிஷாவை சமாதானப்படுத்தியுள்ளார். த்ரிஷா விருப்பப்படி அம்மாவுக்கு தனி ரூம் ஒதுக்கிய பிறகே, த்ரிஷா படப்பிடிப்புக்கு வந்தாராம்.

03 மே 2013

மீண்டும் வருகிறார் சிம்ரன்!

சிம்ரன் 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சூர்யா படத்தில் நடிக்க வருகிறார் சிம்ரன். கௌதம் மேனன் - சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக கைகோர்த்திருக்கும் திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்திற்கான பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. பட பூஜையை தொடர்ந்து சூர்யா சம்மந்தப்பட்ட ஒருசில காட்சிகளை கௌதம் படமாக்கினார். 'துருவ நட்சத்திரம்' படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிம்ரன், பார்த்திபன் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். சூர்யா அறிமுகமான ‘நேருக்கு நேர்’ படத்தில் அவருடைய ஜோடியாக நடித்த சிம்ரன் , கௌதம் மேனன் இயக்கிய ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் அப்பா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்நிலையில் சிம்ரன் மீண்டும் சூர்யா படத்தில் இணைகிறார். இதனிடையே படத்தில் சூர்யாவின் ஜோடியாக நடிக்க வைக்க நன்கு தமிழ் பேசத் தெரிந்த ஒரு நாயகியை தேடி வருகிறார்களாம். கெளதமே இயக்கி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

27 ஏப்ரல் 2013

இனியாவின் முத்தக் கோபம்!

இனியா 
‘முத்தக்காட்சியில் நடித்தால் சர்ச்சை கிளப்புவது ஏன்?‘ என்றார் இனியா. வாகை சூடவா, அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள் போன்ற படங்களில் நடித்திருப்பவர் இனியா. அவர் கூறியதாவது: மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான டிராபிக் படம் தமிழில் ‘சென்னையில் ஒரு நாள்‘ என்ற பெயரில் ரீமேக் ஆனது. ‘டிராபிக்‘ல் ரம்யா நம்பீசன் ஏற்று நடித்த வேடத்தை தமிழில் நான் நடித்தேன். இதைத் தொடர்ந்து ரம்யா நம்பீசன் நடித்த ‘சாப்பா குரிஷு‘ என்ற படம் தமிழ் ரீமேக்காக புலிவால் என்ற பெயரில் உருவாக உள்ளது. கிராமத்து வேடங்களில் என்னை பார்த்தவர்கள் மாடர்னாக துணிச்சலான வேடங்களில் நடிக்கும்போது அதை சர்ச்சையாக்குகிறார்கள். ‘அம்மாவின் கைப்பேசி‘ படத்தில் ஹீரோவுடன் நடித்த முத்தக்காட்சி விமர்சிக்கப்பட்டது. ‘புலிவால்‘ படத்திலும் முத்தக்காட்சி இருக்குமா என்கிறார்கள். மலையாளத்தில் இப்படம் வெளியானபோது ஹீரோ பஹத் பாசலுடன் ரம்யா நம்பீசன் நடித்த முத்தக்காட்சி இடம்பெற்றது. தமிழில் அப்படியே ரீமேக் செய்வார்களோ என்ற சந்தேகம் இருந்தது. ‘புலிவால்‘ படம் சீன் பை சீன் அப்படியே காப்பி அடித்து எடுக்கப்போவதில்லை. இவ்வாறு இனியா கூறினார்.

24 ஏப்ரல் 2013

தமிழில் நடிக்காமல் ஒதுங்கும் பிரணிதா!

பிரணிதா 
‘சகுனி‘ படத்தில் நடித்தவர் பிரணிதா. இப்படத்துக்கு பிறகு புதிய படங்களில் நடிக்காமல் பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் பட வாய்ப்புகள் வந்தும் ஏற்காமல் ஒதுங்குவதாக கூறப்படுகிறது. இது பற்றி பிரணிதா கூறியதாவது: தமிழில் உருவான ‘சகுனி‘ தெலுங்கில் ‘ஷக்குனி‘ என்ற பெயரில் வெளியானது. ‘தமிழ் படங்களைவிட்டு ஒதுங்கி இருப்பது ஏன்?‘ என்கிறார்கள். கன்னடத்தில் ‘மிஸ்டர் 420‘ படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். மேலும் 2 கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். தமிழில் வாய்ப்புகள் வருகிறது. தற்போது நடித்து வரும் படங்களை முடித்தபின் அதை ஏற்பேன். எனது தாய்மொழி கன்னடம். கன்னட படங்களில் நடிப்பது சவுகரியம். தெலுங்கு படங்களில் ரீ என்ட்ரி ஆகிறேன் என்று தகவல் வெளியானதும் நிறைய படங்கள் வருகிறது. தெலுங்கில் ‘பாவா‘ படம் ரிலீஸ் ஆகி நல்ல பெயர் கிடைத்துள்ளது. ‘இணைய தள டுவிட்டர் பக்கத்தில் அதிக ஆர்வம் காட்டுவது ஏன்?‘ என்கிறார்கள். அந்த பக்கத்துக்கு நான் அடிமையாகிவிட்டேன். இதன் மூலம் ரசிகர்களிடமும், திரையுலகினருடனும் நேரடியாக தொடர்புகொள்ள முடிகிறது. அவர்களின் கருத்துக்கள் உடனுக்குடன் கிடைக்கிறது என்றார்.

23 ஏப்ரல் 2013

லால்குடி ஜெயராமன் மறைந்தார்!

பிரபல வயலின் இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமன் நேற்று  திங்கட்கிழமை சென்னையில் தமது 82 வது வயதில் காலமானார். பக்கவாத பாதிப்பு ஏற்பட்ட பிறகு சில காலம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்த அவர் பல இசை மேதைகளுக்கு பக்கவாத்தியம் வாசித்தும், தனியாகவும் சுமார் 70 ஆண்டுகள் இசை உலகில் பிரகாசித்து வந்தார். வயலின் வாசிப்பில் 'லால்குடி பாணி' எனும் முறையை ஏற்படுத்தியவர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு. அவரது வயலின் வாசிப்பு ஏறத்தாழ பாடுவது போலவே இருக்கும் என்று இசை விமர்சகர்கள் கூறுவார்கள். அனைத்துவித இசைக்கருவிகளின் தனித்தன்மைகளையும் நன்குணர்ந்திருந்தவர் லால்குடி ஜெயராமன் என்று அவருடன் நெருக்கமாக இணைந்து இசையுலகில் பயணித்தவர்கள் சொல்வார்கள். கர்நாடக இசையில் பெரும் ஆளுமை செலுத்தி வந்த மதுரை மணி ஐயர், எம் எம் தண்டபாணி தேசிகர், முசிறி சுப்ரமணிய ஐயர், மதுரை சோமு, மகாராஜபுரம் சந்தானம் உட்பட புகழ்பெற்ற பல கலைஞர்களுடன் லால்குடி ஜெயராமன் இணைந்து பணியாற்றியுள்ளார். 70 ஆண்டுகள் இசை வாழ்க்கை எனினும் அவரது தந்தை கோபால ஐயரைப் போலவே எந்த ஒரு பெண் பாடகருக்கும் அவர் பக்கவாத்தியம் வாசித்தது இல்லை என்கிற விமர்சனமும் அவர் மீது இருந்தது. லால்குடி ஜெயராமன் தனது 12 வது வயதில் ஒரு பக்கவாத்தியக்காரராக தனது இசைப் பயணத்தை தொடங்கினார். தனது 70 ஆண்டு கால இசை வாழ்க்கையில் ஒரு வயலின் கலைஞராக மட்டுமல்லாமால் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் திகழ்ந்த அவர் பல வர்ணங்கள், பாடல்கள் மற்றும் தில்லானாக்களை அவர் இயற்றியுள்ளார். தனி வாசிப்பு, பக்கவாத்தியம் என்பதற்கு அப்பாற்பட்டு வயலின், வீணை, புல்லா
ங்குழல் ஆகிய வாத்தியங்களை ஒரே நேரத்தில் வாசிக்கும் வீனா-வேணு-வயலின் எனும் ஒரு புதிய கச்சேரி வகையையும் அவர் அறிமுகப்படுத்தினார். எடின்பரோ நகரில் நடைபெற்ற ஓர் இசை விழாவில் லால்குடி ஜெயராமன் வயலின் வாசிப்பை மிகவும் வியந்து புகழ்ந்த பிரபல மேற்கத்திய வயலின் கலைஞர் யஹூதி மெனுயின் தனது இத்தாலிய வயலினை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்திய அரசின் பத்மவிபூஷன் விருது உட்பட பல உயரிய விருதுகளையும் கௌரவ டாக்டர் பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார். லால்குடி ஜெயராமன் இசை அமைத்த ஒரே தமிழ்த் திரைப்படமான சிருங்காரம் படத்திற்கு தேசிய விருது பெற்றார். அவரது மறைவுக்கு பல்தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நன்றி:பி.பி.சி 

21 ஏப்ரல் 2013

பிரபுதேவா படத்தில் சிங்கள நடிகை!

கோடம்பாக்கத்தில் இருந்து எந்தவொரு நடிகரோ, நடிகையோ படப்பிடிப்புக்காககூட இலங்கைக்கு செல்லக்கூடாது என்றொரு கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழில் பிசியாகி இந்திக்கு சென்ற அசின்கூட ஒரு பாலிவுட் படத்துக்காக இலங்கை சென்று வந்த ஒரே காரணத்துக்காக அவரை தமிழ்ப்படத்தில் நடிக்க வைக்கக்கூடாது என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தெலுங்கில் தான் இயக்கியுள்ள ராமைய்யா வாஸ்தவைய்யா என்ற படத்தில் ஒரு நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க வைத்துள்ள பிரபுதேவா, இன்னொரு வேடத்தில் நடிக்க ஜாக்குலின் பெர்ணான்டஸ் என்றொரு சிங்கள நடிகையை நடிக்க வைத்துள்ளாராம். இந்த விசயத்தை இதுவரை சீக்ரெட்டாகத்தான் வைத்திருந்தார். ஆனால் இப்போது படம் திரைக்கு வருவதால் வெளியில் கசிந்து விட்டது. அதோடு, மேற்படி நடிகையும் ஆந்திர மீடியாக்களுக்கு தான் கொடுக்கும் பேட்டிகளில் தனது மொத்த புராணத்தையும் வாசித்து விட்டதால், இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கோலிவுட் கலைஞர்கள் கடும் ஆவேசமடைந்துள்ளனர். தமிழ் சினிமா நடிகரான பிரபுதேவா, எப்படி ஒரு சிங்கள நடிகையை தனது படத்தில் நடிக்க வைக்கலாம் என்று சொல்லிக்கொண்டு, அவர் அடுத்து தமிழ்நாட்டுப்பக்கம் வரட்டும் என்று போர்க்கொடி பிடிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

17 ஏப்ரல் 2013

டி.கே.ராமமூர்த்தி காலமானார்!

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது (92). மூச்சுத்திணறல் காரணமாக டி.கே.ராமமூர்த்தி நேற்று தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் காலமானார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். திரையிசையில் மகத்தான சாதனை படைத்தவர்கள் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் -டிகே.ராமமூர்த்தி. இருவரும் இணைந்து 700க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளனர். ராமமூர்த்தி, தனியாகவும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

15 ஏப்ரல் 2013

திரையுலகம் கண்ணீர் அஞ்சலி!

தமிழ் சினிமாவில் இசையில் தனக்கென ஒரு இடம் வகித்த பி.பி. ஸ்ரீனிவாஸ் நேற்று மரணமடைந்தார். அவர் உடல் இன்று சென்னையில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி விடை கொடுத்தனர். 83 வயதான பி.பி.ஸ்ரீனிவாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், ரவிச்சந்திரன், என்.டி.ராமாராவ், ராஜ்குமார் படங்களில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். பி.பி.ஸ்ரீனிவாஸ் உடல் சி.ஐ.டி. நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. பி.பி.ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். முதல்வர் சார்பில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேயர் சைதை துரைசாமி, இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், சங்கர் கணேஷ், தேவா, கவிஞர்கள் வாலி, வைரமுத்து, பின்னணி பாடகிகள் பி.சுசிலா, எஸ். ஜானகி, வாணிஜெயராம், மாலதி, எஸ்.பி.சைலஜா உள்பட திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திர சேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில், "பி.பி.ஸ்ரீனிவாஸ் தேனிசை குரலாக ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி ரசிகர்கள் உள்ளங்களில் நிறைந்தார். தமிழக அரசு அவருக்கு இயல் இசை நாடக மன்றத்தில் பதவி அளித்து கவுரவித்தது. பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். பி.பி.ஸ்ரீனிவாஸ் உடல் இன்று பிற்பகல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

13 ஏப்ரல் 2013

ஆஜரானார் அஞ்சலி!

காணாமல் போய்விட்டதாக கடந்த ஒரு வார காலம் பரபரப்பாக பேசப்பட்ட அஞ்சலி, நேற்று இரவு ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஆஜரானார். தன் சித்தி பாரதி தேவியும் இயக்குநர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்துவதாக பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்த அஞ்சலி, ஹைதராபாத் ஓட்டலிலிருந்து கடந்த திங்கள் கிழமை மாயமானார். இதுகுறித்து அவரது சகோதரர் ஹைதராபாத் போலீசில் புகார் செய்தார். அவரது சித்தி பாரதி தேவி சென்னை போலீசில் புகார் செய்தார். சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார். அஞ்சலி படங்கள் இந்நிலையில், 12.04.2013 வெள்ளிக்கிழமை இரவு நடிகை அஞ்சலி ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் போலீஸ் முன் ஆஜரானார். கடந்த 5 நாட்களாக அஞ்சலி எங்கு தங்கியிருந்தார்? அவருக்கு அடைக்கலம் தந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். ஹைதராபாத் வடக்கு பகுதி துணை கமிஷனர் சுதீர் பாபு கூறுகையில், "மன உளைச்சல், தொடர்ச்சியான ஷூட்டிங் காரணமாக மும்பை சென்றிருந்ததாக அஞ்சலி கூறினார். அவரது வாக்குமூலத்தை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்," என்றார். ஹைதராபாத் போலீசாரின் விசாரணைக்குப் பிறகு நடிகை அஞ்சலி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் ஆஜராகி விளக்கமளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

10 ஏப்ரல் 2013

நயன்தாரா நடித்துள்ள லவ் ஸ்டோரி!

நாகார்ஜூனாவுடன் நயன்தாரா நடித்துள்ள லவ் ஸ்டோரி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தாசரி நாராயண ராவ் தயாரிப்பில், தெலுங்கு இயக்குநர் தசரத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில்தான் இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. தமாம் இசையில் உருவான இப்படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் அமெரிக்காவில் முடிந்து விட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. அமெரிக்காவில் நாசா மையத்துக்கு அருகே இப்படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது படத்தின் சிறப்பாகக் கூறப்படுகிறது. நயன்தாராவின் மறுப்பிரவேசத்தை அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயமாக நல்ல விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் பெயரிடப்படாத இப்படத்தை ஏப்ரல் 19ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

09 ஏப்ரல் 2013

அஞ்சலி ஹோட்டலில் இருந்து மாயம்!

ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நடிகை அஞ்சலி மாயமாகியுள்ளார். சித்தியுடன் ஏற்பட்ட தகராறுக்கு பிறகு நடிகை அஞ்சலி தனது சித்தப்பாவுடன் ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.
ஹோட்டலில் தங்கி அவர் ஷூட்டிங்கிற்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் இருந்து அவரைக் காணவில்லை. அவரது சித்தப்பா வெளியே சென்றபோது அஞ்சலி மாயமாகியுள்ளார். அவரது செல்போனுக்கு அழைத்தாலும் சுவிட்ச் ஆப் என்று வருகிறது. அஞ்சலி இந்தி படமான போல் பச்சன் தெலுங்கு ரீமேக்கில் அசின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த பட ஷூட்டிங்கிற்காக தான் அவர் ஹைதராபாத்தில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் மாயமாகியுள்ளதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. தனது சித்தியும், இயக்குனர் களஞ்சியமும் பணத்துக்காக தன்னை கொடுமைப்படுத்துவதாக அஞ்சலி புகார் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

08 ஏப்ரல் 2013

அவுஸ்திரேலியாவில் சூதாடிய அமலா!

ஆஸ்திரேலியாவில் நடிகர் சுரேஷுடன் இணைந்து சூதாடி வெற்றி பெற்றிருக்கிறார் நடிகை அமலாபால். விஜய் நடிக்கும் 'தலைவா' படத்தின் படப்பிடிப்பு இப்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார் நடிகை அமலாபால். படப்படிப்பு முடிந்ததும் அமலாபாலுக்கு ரொம்பவே போரடித்து விட்டதாம். இதனால் வெளியே சுற்றிப் பார்க்க கிளம்பிய அவர் அன்றைய பொழுதை கழிக்க சூதாட்ட விடுதிக்குள் புகுந்து ஒரு ஆட்டம் ஆடினாராம். முதலில் தோல்வியை சந்தித்த அமலாபால் பின்னர் சுரேஷுடன் இணைந்து ஆடியிருக்கிறார். அதில் அமலாபாலுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இதனை பெருமையாக சொன்ன அமலா பால், சூதாட்டத்தில் தனக்கு மிகவும் ராசியான ஜோடி சுரேஷ்தான். நானும் அவரும் ஒரு ஆட்டத்தில் வென்றோம் என்று கூறியுள்ளார்.

31 மார்ச் 2013

சில்க்காக சனா கான்!

சில்க் ஸ்மிதா கதையை தழுவி உருவாகியுள்ள நடிகையின் டைரி படம் விரைவில் திரைக்கு வருகிறது.இதில் சில்க் வேடத்தில் சனா கான் நடித்துள்ளார். மலையாளத்தில் சில்க் கதையை கிளைமாக்ஸ் என்ற பெயரில் அனில் இயக்குகிறார்.இதில் சனா கான் நடிக்கிறார்.அதே படம் தமிழில் Ôநடிகையின் டைரிÕ பெயரில் ரிலீசாக உள்ளது. டிஜிட்டல் என்டர்டெய்னர் ஹெச்.ஏ.கே. தயாரித்துள்ளார். இப்படத்தில் பாடல்களை எழுதி, நிர்வாக தயாரிப்பு பொறுப்பை Ôசிலந்தி¤Õஇயக்குனர் ஆதிராம் ஏற்றுள்ளார். அவர் கூறியதாவது, சில்க் கதை என்ற பெயரில் பலர் படம் எடுக்கிறார்கள். ஆனால் அவையெல்லாம் அவரது வாழ்க்கை கதை படங்கள் அல்ல. சில்க் ஸ்மிதா முதலில் மலையாளத்தில்தான் நடித்தார்.அவரை மலையாளத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் ஈஸ்ட்மென் ஆண்டனி.சில்க் பற்றி அறிந்தவர்.அவரே இப்படத்துக்கு கதை எழுதியுள்ளார்.கேரளா,ஆந்திரா தவிர மற்ற இடங்களில் தமிழில் இப்படத்தை வெளியிடும் பொறுப்பை ஏற்றுள்ளேன்.வெறும் கவர்ச்சியை நம்பி இப்படம் எடுக்கப்படவில்லை.கனமான திரைக்கதை இதில் இருக்கும்.

28 மார்ச் 2013

நயன்தாராவுடனான என் நட்பு உண்மைதான்!

சினிமாவில் எந்த நடிகையுடனும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக நயன்தாராவுடன் பழகி வருவது உண்மைதான். ஆனால் அது திருமணமாக மாறுமா என்றெல்லாம் சொல்ல முடியாது என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார். கடந்த சில வாரங்களாக சினிமா உலகில் அதிகம் கிசுகிசுக்கப்படுவது நயன்தாரா - ஆர்யா நெருக்கம்தான். நயன்தாரா ஏற்கெனவே சிம்பு, தனுஷ், பிரபுதேவா ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். சிம்பு - நயன் காதல் மற்றும் மோதல் ரொம்ப பிரபலம். அதேபோல, நயன்தாராவை திருமணம் செய்ய தன் மனைவியை விவாகரத்து செய்தவர் பிரபு தேவா. ஆனால் அந்தக் காதலும் முறிந்துவிட்டது. இப்போது நயன்தாராவின் புதிய காதலன், அதையும் தாண்டி திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் என ஆர்யாவைக் குறிப்பிடுகிறார்கள். இதுகுறித்து ஆர்யாவே இப்போது மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், "நானும் நயன்தாராவும் நெருங்கிப் பழகுவது உண்மைதான். இந்த இன்டஸ்ட்ரியில் எனக்கு ஏகப்பட்ட நடிகைகளுடன் நல்ல பழக்கம் உள்ளது. ஆனால் அதையெல்லாம் தாண்டி, நெருக்கமான உறவு நயன்தாராவுடன் உள்ளது. அவருடன் பல தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. எங்கள் உறவு பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு எல்லாம் பதில் சொல்வது கஷ்டம்.எங்கள் நட்பின் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்தெல்லாம் இப்போது சொல்ல முடியாது,"என்றார்.

26 மார்ச் 2013

நடிகை சுகுமாரி மரணம்!

பிரபல திரைப்பட நடிகை சுகுமாரி சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. நாகர்கோவிலில் கடந்த 1940 ஆம் ஆண்டு பிறந்த சுகுமாரி, தமிழில் ஓரிரவு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் ஏ பீம்சிங்கை திருமணம் செய்து கொண்ட சுகுமாரிக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார். பாசமலர், பட்டிக்காடா பட்டணமா உள்ளிட்ட 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். இதில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்கள் அடங்கும். நடிப்பில் தனி முத்திரை பதித்துள்ள சுகுமாரிக்கு, கடந்த 2003 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இது தவிர தேசிய திரைப்பட விருது, கேரள மாநில அரசின் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். திரையுலகில் புகழுடன் வலம்வந்த லலிதா,பத்மினி, ராகினி சகோதரிகளின் உறவினராவார் சுகுமாரி. தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்.மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். சுகுமாரியின் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பொன்னான இதழ்கள் புண்ணாகலாமா?

முத்தக் காட்சியில் அஞ்சலியின் உதட்டை காயப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஆர்யா. ஜெயம் கொண்டான் திரைப்பட இயக்குனர் கண்ணனின் அடுத்தப் படைப்பாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சேட்டை'. இதில் ஆர்யா நாயகனாகவும், ஹன்சிகா, அஞ்சலி நாயகிகளாகவும் நடிக்கின்றனர். படத்தில் இரண்டு லிப் லாக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. காட்சிப்படி ஆர்யா, ஹன்சிகாவுக்கும், அஞ்சலிக்கும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுக்க வேண்டும். இந்நிலையில் ஹன்சிகாவுடனான லிப் லாக் காட்சியில் 6 முறை டேக் எடுத்த ஆர்யா அஞ்சலியுடனான லிப் லாக் காட்சியில் 15 முறை டேக் எடுத்திருக்கிறார். இதனால் சற்று கோபமடைந்த அஞ்சலி, உதடு புண்ணாகிவிட்டது என நேரடியாக இயக்குனரிடம் கூறியுள்ளார். ஒரு வழியாக இக்காட்சியை எடுத்து முடித்ததும் அடுத்த இரண்டு நாட்கள் படப்பிடிப்பிற்கு வராமல் விடுமுறை எடுத்துக்கொண்டார் அஞ்சலி.

05 மார்ச் 2013

மூத்த நடிகை ராஜசுலோசனா மரணம்!

Veteran Actress Raja Sulochana Passes Away தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளுள் ஒருவரான ராஜசுலோசனா இன்று சென்னை மடிப்பாக்கத்தில் காலமானார். அவருக்கு வயது 77. தமிழகத்தின் பெருமைமிக்க கலைஞர்களான மறைந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசன், தெலுங்கில் என்டிஆர், கன்னடத்தில் ராஜ்குமார் என சாதனையாளர்களுடன் நடித்தவர் ராஜசுலோசனா. 1935-ம் ஆண்டு, அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்த பெஜவாடாவில் பிறந்தவர் ராஜசுலோசனா. அவரது இயற்பெயர் ராஜீவலோசனா. அதைத்தான் பின்னர் சினிமாவுக்காக ராஜசுலோசனா என மாற்றிக் கொண்டார். 1953-ல் அவர் நடித்த முதல் படம் குணசாகரி வெளியானது. தொடர்ந்து அவர் நடித்த ரங்கோன் ராதா, அம்பிகாபதி, சாரங்கதாரா தாய் மகளுக்குக் கட்டிய தாலி, கவலை இல்லாத மனிதன், அரசிளங்குமரி, நல்லவன் வாழ்வான் போன்ற படங்கள் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. எழுபதுகளில் அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். எம்ஜிஆரின் இதயக்கனியில் அவரது வேடம் பெரிதும் பேசப்பட்டது. ரஜினி நடித்த காயத்ரி, கமல் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்கள் வரை நடித்த ராஜ சுலோசனா, சென்னை மடிப்பாக்கத்தில் சதாசிவ நகரில் வசித்து வந்தார். புஷ்பாஞ்சலி நிருத்ய கலா கேந்திரம் என்ற பெயரில் நடனப் பள்ளி ஒன்றை நடத்திய ராஜ சுலோச்சனா, ஏராளமானோருக்கு நடனமும் கற்றுத் தந்துள்ளார். உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை அவரது இல்லத்தில் மரணமடைந்தார் ராஜசுலோசனா. நாளை மார்ச் 6-ம் தேதி அவரது இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. மூத்த நடிகையான ராஜசுலோசனா மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

26 பிப்ரவரி 2013

கார்த்திக்காக காத்திருக்கும் பிரியாணி!

புதுச்சேரியில் மும்முரமாக நடந்து வந்த பிரியாணி படத்துக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் அவரது படக்குழுவினர் தற்போது சற்று ஓய்வு எடுத்து வருகின்றனர். புதுச்சேரியில் சில கார் மோதல் சண்டைக் காட்சிகளும், ஒரு பாடலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதில் கார்த்தி இடம்பெறும் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதால் கார்த்தியின் வருகைக்காக படக்குழுவினர் காத்திருக்கின்றனர். பிரியாணி படத்தில் பிரேம்ஜி அமரன் கார்த்தியின் பள்ளிக் காலத்தில் இருந்து உடன் இருக்கும் நண்பனாக வருகிறார். அது பற்றி பிரேம்ஜி கூறுகையில், உண்மையிலேயே நானும் கார்த்தியும் பள்ளிக் கால நண்பர்கள்தான். அவரும் நானும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். ஆனால் அவர் வெளிநாடு சென்றுவிட்ட பிறகு, அவ்வளவாக எங்களுக்குள் தொடர்பில்லை. ஆனால் இந்தப் படம் மூலமாக எங்கள் நட்பு வளர்ந்துள்ளது. எங்களது நட்பு வளர்வது, படத்துக்கும் உதவிகரகமாக இருக்கிறது. நாங்கள் இருவரும் வரும் காட்சிகள் நன்றாக வந்துள்ளன என்கிறார் மகிழ்ச்சியோடு. பிரியாணி படத்தில் கார்த்திக்கு ஹன்சிகா ஜோடியாக நடிக்கிறார்.

17 பிப்ரவரி 2013

கைக்குழந்தையுடன் வந்த கோபிகா!

Gopika Starts Her Post Marriage Innings குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் முழு வேகத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் கோபிகா. சமீபத்தில் தொடங்கிய மலையாளப் பட ஷூட்டிங்குக்கு தனது கைக்குழந்தையுடன் வந்து கலந்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார் கோபிகா. ஆனாலும் அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்தன. குழந்தை பெற்ற பிறகு, மலையாளத்தில் ஜெயராம் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்கு ‘பரயா அத்ரா போரா' என தலைப்பிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் கொச்சியில் துவங்கியது. இதில் பங்கேற்க வந்த கோபிகா, தனது 2 வயது மகளையும் அழைத்துக் கொண்டு படப்பிடிப்புக்கு வந்தார். குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஒரு பெண் உடன் இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் தானே குழந்தையை கவனித்துக் கொண்டார். மீண்டும் படங்களில் நடிப்பதை தன் கணவரே ஆதரிப்பதால், நடிக்க ஆரம்பித்துவிட்டதாக கோபிகா தெரிவித்தார்.

05 பிப்ரவரி 2013

குணச்சித்திர நடிகை பானுமதி மரணம்!

Actress Bhanumathi Is No More குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த பழம்பெரும் நடிகை பானுமதி தன்னுடைய 67வயது வயதில் மரணம் அடைந்தார். காதல் ஜோதி என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பானுமதி. அவர் வியட்நாம் வீடு, திருநீலகண்டர், தில்லானா மோகனாம்பாள், கலாட்டா கல்யாணம் உள்பட 75க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவர் சின்னத்திரையில் மெகா தொடர்களில் நடித்து வந்தார். சென்னை தேனாம்பேட்டை போயஸ் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்த அவரை மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. இதனால் அவர் கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவரது உடல் நிலை மோசமானது. உடனே அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 2.50 மணிக்கு காலமானார். அவருக்கு லட்சுமி என்ற மகள் உள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடக்கிறது.

30 ஜனவரி 2013

இஸ்லாமிய சகோதரர்கள் பகடைக்காய் ஆகிவிட்டனர்!

'அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்கள் பகடைக்காய் ஆக்கி விட்டனர். இந்த அரசியல் விளையாட்டை ஆடுவது யார் என்பது எனக்குத் தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான சர்ச்சை குறித்து இன்று தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் கமல்ஹாசன் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியுள்ளதாவது, 'இந்த ஒரு திரைப்படம் எப்படி ஒட்டுமொத்த தேசத்தின் ஒற்றுமையையும் பாதிக்கும் என்று எனக்குப் புரியவில்லை. இப்போது நடந்து வருவது அரசியல் விளையாட்டு. இந்த அரசியல் விளையாட்டை நடத்துவது யார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்களை பகடைக்காய் ஆக்கிவிட்டனர். யாருக்கும் நான் கடன் வைக்கவும் இல்லை, வரி ஏய்ப்பும் செய்யவில்லை, வரி பாக்கியும் இல்லை. கடன்காரர்களை நான் தவிக்க விட மாட்டேன். இந்த எனது வீட்டை அடமானம் வைத்துள்ளேன். வட்டிக்கடைக்காரர் 2 மாதமாக அமைதியாக உள்ளார். சென்னையில் உள்ள எல்லா சொத்துக்களையும் அடமானம் வைத்துள்ளேன். திரைப்படம் வெளியாகாவிட்டால் எல்லா சொத்துக்கும் என்னை விட்டு போய்விடும். நான் இடதுசாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல. நடுநிலையானவன். எனது எல்லா சொத்துக்களையும் வைத்து படம் எடுத்தேன். படம் வெளியாகாவிட்டால் வீடு உட்பட எல்லா சொத்துக்களையும் இழக்கும் நிலை வரும். எனது விஸ்வரூபத்துக்கு எதற்கு தடை என்றே தெரியவில்லை' என்றார்.

12 ஜனவரி 2013

விஜய் புராணம் பாடும் காஜல்!

காஜல்(நண்பன்.கொம்)
இந்தியில் பிரபுதேவா இயக்கிய ரவுடி ரத்தோர் படத்திலேயே ஒரு பாடலில் பம்பரமாய் சுழன்று நடனமாடி அப்படத்தில் நாயகனாக நடித்த அக்ஷ்ய்குமாரை தலைசுற்ற வைத்தவர் விஜய். அதைப்பார்த்து இவர் என்ன டீன்ஏஜ் பாய் மாதிரி இத்தனை வேகமாக ஆடுகிறார் என்று தனது ஆச்சர்யத்தை ஸ்பாட்டிலேயே வெளிப்படுத்தியிருக்கிறார் அவர். அதனால் கோலிவுட் ஹீரோவான விஜய்யின் பெயர் பாலிவுட்டில் நன்றாக பரிட்சயமாகி விட்டது. இந்நிலையில், துப்பாக்கியில் விஜய்யுடன் ஜோடி போட்டு விட்டு மும்பை சென்ற காஜல் அகர்வாலும் அங்குள்ள சினிமா நண்பர்களிடம் சதா விஜய் புராணமே பாடிக்கொண்டிருக்கிறாராம். அதாவது, கோலிவுட்டில் முன்னணி ஹீரோ அவர். ஆனால் எந்தவித பந்தாவும் பண்ண மாட்டார். ஸ்பாட்டுக்கு வந்தால் அவர் இருக்கிற இடமே தெரியாது. அந்த அளவுக்கு தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். ஆனால் கேமரா முன்பு வந்து விட்டால் காட்சிக்கேற்ப பரபரப்பாகி விடுவார். அவருடன் நடிக்கும்போது நமக்கே எனர்ஜி வரும். அதோடு, துப்பர்க்கி படத்தில் நான அவருடன் நடித்த பிறகு சிம்ரனுக்குப்பிறகு அவருக்கு பொருத்தமான ஜோடியாக என்னைதான் சொல்கிறார்கள். இது எனக்கு ரொம்ப சந்தோசமாக உள்ளது. அதனால் தொடர்ந்து விஜ்யயுடன் அதிகப்படியான படங்களில் நடிப்பதற்கான முயற்சி எடுக்கப்போகிறேன் என்று மூச்சு விடாமல் சொல்லி புல்லரிக்க வைக்கிறாராம் காஜல்.

10 ஜனவரி 2013

தமிழர்களை கடுப்பேற்றும் மணிரத்தினம்!

Manirathnam Introduces Kadal Hero Heroines First Telugu கடல் படத்தின் டீஸர் என்ற பெயரில் சமீப காலமாக மணிரத்னம் அண்ட் கோ செய்து வந்த அழிச்சாட்டியத்தைப் பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் காட்டமாகிவிட்டிருக்கும் நேரத்தில், அவர் செய்துள்ள இன்னொரு வேலை, தமிழ் சினிமாவை அவரைப் போன்றவர்கள் எந்த அளவு கிள்ளுக் கீரையாக மதிக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு. மணிரத்னம் எடுத்துவரும் கடல் படத்தில் ஹீரோவாக கார்த்திக் மகனும், ஹீரோயினாக ராதாவின் இளையமகளும் அறிமுகமாகிறார்கள். தான் அறிமுகப்படுத்தும் இந்த இரு புதுமுகங்களின் படங்களைக் கூட யாருக்கும் காட்டாமல் ரகசியம் காத்த மணிரத்னம், ஒரு நாள் ஹீரோவின் தலைமுடி, அடுத்த நாள் ஹீரோவின் முதுகு, இன்னொரு நாள் ஹீரோவின் கால் என்று பிட் பிட்டாக டீஸர் காட்டி வெறுப்பேற்றி வந்தார். தண்ணீரில் ஒரு படகு சொய்ங் என்று நுழையும். அவ்வளவுதான்.. அதற்குப் பெயர் 'வீடியோ டீஸராம்'. கிட்டத்தட்ட மெரினாவைக் காட்டி இதான் கடல் என்று சொல்வது போலிருந்தது. ஹீரோயின் முகத்தையும் இதே லட்சணத்தில் 'பிட்' காட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று ஹைதராபாதில் வைத்து தெலுங்கு ரசிகர்களுக்கு ஹீரோவையும் ஹீரோயினையும் அறிமுகம் செய்து வைத்து, தெலுங்கில் இவர்களை முதல் முறையாக அறிமுகம் செய்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்று அறிவித்துள்ளார். இதையே ஹீரோயினின் அம்மா ராதாவும் கூறியுள்ளார். அப்படியெனில் தமிழில் முதலில் அவர்கள் முகங்களைக் காட்டுவது அத்தனை கேவலமான விஷயமா? பணம் பார்ப்பது இங்கே... படம் காட்டுவது இங்கே... ஆனால் பெருமையும் மகிழ்ச்சியும் ஹைதராபாதில் வைத்து அறிமுகம் செய்தால்தான் வருமா? என கடுப்பாகக் கேட்கிறார்கள் தமிழ் சினிமா பத்திரிகையாளர்கள். இதே ராதா, தன் மூத்த மகள் கார்த்திகாவை இதே மாதிரிதான் தெலுங்கில் முதலில் அறிமுகம் செய்தார். அங்கே சூப்பர் டூப்பர் ப்ளாப் நாயகியாகி வெளியேறினார். அவருக்கு கடைசியில் கைகொடுத்தது தமிழ் சினிமாதான் என்பது மறந்துவிட்டது போலிருக்கிறது!