பக்கங்கள்

29 செப்டம்பர் 2010

டைட்டானிக் திரைப்பட நடிகை 100 வயதில் மரணம்!

1930ஆம் ஆண்டுகளில் ஹாலிவுட்டின் அழகு நடிகையும், டைட்டானிக் திரைப்படத்தில் முக்கியத் துணை நடிகை பாத்திரமேற்று நடித்தவருமான க்ளோரியா ஸ்டூவர்ட் காலமானார். அவருக்கு வயது 100 என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் திரைப்படத்தில், அந்தக் கப்பல் நீரில் மூழ்கியபோது உயிர்பிழைத்த 101வயது மூதாட்டியின் இளவயது நாயகி கதாபாத்திரத்தில் நடித்த கேட் வின்ஸ்லெட்டுடன் இணைந்து ரோஸ் கால்வெர்ட் என்ற கதாபாத்திரத்தில் க்ளோரியா ஸ்டூவர்ட் நடித்தார்.
கேட் வின்ஸ்லெட் பெயர் சிறந்த நாயகிக்கான ஆஸ்கார் விருதுக்கும் சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு ஸ்டூவர்டும் பரிந்துரை செய்யப்பட்டனர்.
ஆனால் ஆஸ்கார் அம்முறை எல்.ஏ.கான்ஃபிடென்ஷியல் படத்தில் நடித்த கிம் பேசிஞ்சர் என்பவருக்குச் சென்றது.
இவரது மறைவு குறித்து கூறிய டைட்டானிக் அழகு நாயகி கேட் வின்ஸ்லெட் "இவரது மறைவு என்னை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடன் இணைந்து நடித்ததில் நான் பெருமை அடைகிறேன்." என்றார்.
டைட்டானிக் இளம் நாயகனாக நடித்த லியானாரோடோ டி கேப்ரியோ, ஸ்டூவர்ட் படப்பிடிப்பின் உள்ளேயும் வெளியேயும் ஒரு சக்தியாக விளங்கினார் என்று புகழாரம் சூட்டினார்.
மேலும் ஹாலிவுட் பொற்காலங்களின் மிகச்சிறந்த நடிகை என்றும் டி கேப்ரியோ புகழ்ந்துள்ளார்.
டைட்டானிக் திரைப்படம் உலக அளவில் சாதனையான 1.8பில்லியன் டாலர்கள் வசூல் படைத்தது. சமீபமாக கேமரூனின் "அவதார்" திரைப்படம் இந்த சாதனையை முறியடித்தது என்பது கூடுதல் தகவல்.

28 செப்டம்பர் 2010

சந்திரபோஸ் உயிருடன் இருக்கிறார் : மகன் வினோத்.!

பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ் காலமாகிவிட்டதாக செய்திகள் பரவியது. கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், இன்று காலை இயற்கை எய்தி விட்டதாக செய்திகள் பரவின.
ஆனால் அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று அவரது மகன் வினோத் தெரிவித்தார். அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார் அவர்.
கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவமனை நிர்வாகத்தால் வீட்டுக்கு அனுப்பப்பட்டாராம் அவர். இந்த நிலையில் அவரை வீட்டுக்கு சென்று சந்தித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன், மற்றும் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் இருவரும் கடைசி வரை முயற்சி செய்யலாமே. மீண்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று அறிவுறுத்தியதுடன் அதற்கான செலவையும் ஏற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தகவல். அவர்களது நம்பிக்கை வீண் போகவில்லை. மரணத்தின் இறுதி வாசலில் நின்ற சந்திரபோஸ் பிழைத்துக் கொண்டார்.
கலைவாணிக்கும் கவனித்துக் கொண்ட மருத்துவர்களுக்கும் சந்திரபோசின் இசை ரசிகர்கள் சார்பில் ஆரோக்கியமான நன்றி!

27 செப்டம்பர் 2010

முடிந்தது மன்மதன் அம்பு.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் ‘மன்மதன் அம்பு'. கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார் கமல்ஹாசன். படத்தில் அவருக்கு ஜோடி த்ரிஷா. மாதவன், சங்கீதா இன்னொரு ஜோடி. 'ரொம்ப நாளைக்கு பின் கமல் ரொமான்டிக் ஹீரோவா நடிக்கிற படம். 30 வயது இளைஞனா வர்றார். இதனையடுத்து மன்மதன் அம்பு படப்பிடிப்பு முடிந்ததாக மாதவன் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என மாதவன் கூறிப்பிட்டுள்ளார்.

24 செப்டம்பர் 2010

வில்லியாக நடிக்க விரும்புகிறேன்-பியா.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோவாÕவில் நடித்தார் பியா. அடுத்து ஜீவாவுடன் ‘கோ படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது:
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘கோவில் நடித்திருக்கிறேன். இப்பட ஷூட்டிங் முடியும் நிலையில் உள்ளது. இதில் என்ன வேடம் என்பதை இப்போதைக்கு சொல்ல மாட்டேன். இதையடுத்து தெலுங்கு, மலையாள மொழிகளில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ஹீரோயின் வேடத்தில்தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. எந்த வேடமாக இருந்தாலும் நடிப்பேன். வில்லி வேடத்தில் நடித்தால் திறமையை வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன். அப்படியொரு கதாபாத்திரம் பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில் நடிக்க முடிவான பின், போட¢டோக்களை பார்த்தாலே ‘யார் இது பியாவா?Õ என்று பலர் ஆச்சர்யப்படுவார்கள். இவ்வாறு பியா கூறினார்.

22 செப்டம்பர் 2010

பிரபுதேவா - நயன் மீது காவல்துறை நடவடிக்கை?

பிரபு தேவா - நயன்தாரா இருவர் மீதும் தமிழக காவல்துறை தானாகவே வழக்கு தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான அச்சாரத்தை நேற்று போட்டிருக்கிறார் பிரபுதேவாவின் மனைவி ரமலத்.
அண்ணாநகர் மேற்கில் 12 ஆவது பிரதான சாலையில் உள்ளது ரமலத்தின் இல்லம். இந்த இல்லம் முன்பாக அவர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நேற்றிரவு தகவல் பரவியது.இதனால் அப்பகுதிக்கு ஊடக நண்பர்கள் குவிந்தனர்.
அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் தகவல் அறிந்த திருமங்கலம் காவல் நிலைய காவலர்கள் விரைந்து வந்தனர். ஒரு மணி நேர காத்திருப்புக்குப் பின், ரமலத் உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை என்பதும், அது ஒரு வதந்தி என்பதும், ரமலத் அந்த வீட்டில் இல்லை, வெளியில் சென்றிருக்கிறார் என்பதும் தெரிய வந்ததும் காவல் துறையினரும், ஊடக நண்பர்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
பிரபுதேவா ரமலத் விவகாரம் குறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில்
'முதல் மனைவியான ரமலத்தை முறைப்படி விவாகரத்து செய்யாமல், பிரபு தேவா மற்றொரு பெண்ணுடன் சுற்றுவதும், அவரை திருமணம் செய்யப் போவதாக வெளிப்படையாக பேட்டி அளிப்பதும் குற்றமாகும். ரமலத் புகார் அளிக்கும் பட்சத்தில், அதை அடிப்படையாக வைத்து பிரபுதேவா - நயன்தாரா மீது நடவடிக்கை பாயும்!' என்கின்றன.

20 செப்டம்பர் 2010

வயகரா மாத்திரைகளை இனி டெஸ்கோ விற்பனைசெய்யும்!

உடலுறவு கொள்ளும் போது அதிக வீரியத்தை ஏற்படுத்த அல்லது உடலுறவு கொள்ள முடியாத ஆண்கள் பாவிக்கும் ஒரு வீரியம் மிக்க மாத்திரை வயகரா. பல ஆண்டுகளாக இணையமூடாக மிகவும் இரகசியமான முறையில் இது விற்கப்பட்டுவந்தது. வயகரா மாத்திரைகளை எம்மில் பலர் போதைப் பொருள் என எண்ணியிருந்தனர். இருப்பினும் சில நாடுகளில் இது விற்பது தடைசெய்யப்பட்டிருந்தது. பின்னர் படிப்படியாக பல நாடுகள் அத்தடையை நீக்கியுள்ளன. உலகில் பல்லாயிரக்கணக்கான மாத்திரைகள் இதுபோல உலாவந்தாலும் வயகரா மாத்திரைகள் ஆண்களின் உள்ளம் கவர்ந்த ஒன்றாகத் திகழ்கிறது என்பதற்கு தற்போது டெஸ்கோ சூப்பர் மார்க்கட்டே சாட்சி.
ஆம் இம் மாதம் 27ம் திகதி முதல் பிரித்தானியாவில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட சுமார் 300 டெஸ்கோ சூப்பர் மார்க்கட்டில் இனி வயகரா மாத்திரைகளை வாங்கலாம். சுமார் 8 மாத்திரைகளை 52.00 பவுன்டுகளுக்கு விற்க முடிவாகியுள்ளது. நீல நிறத்தினால் ஆன இம் மாத்திரைகள் உலகளாவிய ரீதியில் பல மில்லியன் ஆண்களால் பாவிக்கப்பட்டு, சுமார் 10 ஆண்களில் 9 ஆண்கள் திருப்தியடைந்துள்ளதாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அத்தோடு 40 வயதை தாண்டிய ஆண்கள் தமது தாம்பத்திய வாழ்வில் இன்பதை இழந்து, அல்லது நாட்டம் இல்லாமல் போவதால் அவர்கள் வயகராவை நாடுவதாக அக் குறிப்புகள் மேலும் தெரிவிக்கின்றன.
இளைஞர்களும், வயதானவர்களும் வயகராவை பாவிக்க முண்டியடிப்பதும், அவர்கள் இணையமூடாக கட்டணம் செலுத்தி அதனைப் பெற முயற்சிப்பதும் வழக்கம். இருப்பினும் பல போலியான வயகரா மாத்திரைகள் உலவுவதால், அவர்கள் ஏமாற்றம் அடைவதாகவும், டெஸ்கோ சூப்பர் ஸ்ரோர், தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் தரமான வயகரா மாத்திரைகளை விற்க இருப்பதாகவும் அதன் மேலாளர் பத்திரிகைக்கு தெரிவித்தார். ஏற்கனவே எல்லா சூப்பர் ஸ்ரோரையும் வீயாபாரத்தில் மிஞ்சி கொடிகட்டிப் பறக்கும் டெஸ்கோ காட்டில் இனி மழைதான்... இளைஞர்களும் , வயோதிபர்களும் இனி வயகரா வாங்க அங்குதான் செல்ல இருக்கிறார்கள், போதாக்குறைக்கு மருத்துவர் ஆலோசனை பற்றுச்சீட்டு இல்லாமலே அதனை வாங்கமுடியும் என டெஸ்கோ அறிவித்துள்ளது.

17 செப்டம்பர் 2010

கமல் மகள் ஸ்ருதி பார்வைக்கோளாறால் பரிதவிக்கிறாரா?

நடிகர் கமல்ஹாசன் மூத்த மகள் ஸ்ருதி, தனக்கு பார்வைக்கோளாறு இருப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது உண்மையா? இல்லை ஸ்ருதிஹாசன் பெயரில் வேறு யாரும் இப்படி செய்துள்ளனரா என்பது தெரியவில்லை.
நடிப்பு, இசை, நடனம் என பல்துறைகளில் சிறந்த விளங்கிவருகிறார் ஸ்ருதி ஹாசன். இவர் தற்போது தமிழில் ‘7ம் அறிவு’ மற்றும் இந்தியில் ‘தில் டோ பச்சா ஹை ஜி’ படங்களில் நடித்து வருகிறார்.
ஸ்ருதி, தனது டுவிட்டர் பக்கத்தில், ’என்னை பொருத்தவரை 90 சதவீதம் பார்வையற்ற பெண்ணாகவே வாழ்கிறேன். கண்ணாடி அணியாமல் 2 சென்டி மீட்டர் தூரத்தில் இருக்கும் பொருளைக்கூட பார்க்க முடியாது.
யாருக்கும் நான் வாழ்த்து சொல்வது கிடையாது. அப்படி சொல்லும் நபர் வேறு ஆளாக இருக்கும்பட்சத்தில் அவரிடம் மன்னிப்பு மற்றும் வருத்தம் தெரிவிக்க வேண்டி உள்ளது. நேற்றுகூட தவறான நபருக்கு வாழ்த்து சொல்லிவிட்டேன்.
மேலும் கண்ணாடி கதவு இருப்பது தெரியாமல் நடந்து சென்றேன். இது எனக்கு சந்தோஷத்தை தரவில்லை. எது எப்படியோ மூக்கு கண்ணாடியும், கான்டக்ட் லென்சும் பல்லாண்டு வாழ்க’’என்று எழுதியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
சமீபகாலமாக த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகளின் பெயரில் போலியான டுவிட்டர் பக்கங்கள் தொடங்கப்பட்டு அவர்களைப் பற்றியே இழிவாக எழுதுவது, ஆபாசமாக போட்டோ வெளியிடுவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.
ஸ்ருதிஹாசன் அப்படி நடந்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது.

16 செப்டம்பர் 2010

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த 6 வயது மகளுக்கு சூடு வைத்து சித்ரவதை!

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் சொந்த மகளை இரும்புக்கம்பியால் சூடுவைத்து சித்ரவதை செய்த பள்ளிக்கூட ஆசிரியை கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாச்சலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சைதன்யா. இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் இவருடைய கணவர் இறந்து விட்டார்.
இதனால் தனது 6 வயது மகளுடன் சைதன்யா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த நாகேஷ் என்பவருடன் சைதன்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
சில நேரங்களில் இவர்களின் கள்ளக்காதலுக்கு சைதன்யாவின் மகள் தடையாக இருந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 4 நாட்களாக தனது மகளை இரும்புக்கம்பியால் சூடு வைத்து சித்ரவதை செய்து உள்ளார்.
சூடு தாங்காமல் வலியால் அவள் கத்தித்துடிக்கும் போது டி.வி.யின் சத்தத்தை அதிகமாக வைத்து உள்ளார். அந்த வீட்டில் அடிக்கடி டி.வி.யின் சத்தம் அதிகமாக கேட்டதால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது, வீட்டில் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் அந்த சிறுமி இருந்தாள்.
உடனே அவளை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு இதுபற்றி அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் சைதன்யாவின் கள்ளக்காதலுக்கு தடையாக மகள் இருப்பது தெரியவந்தது.
இதனால் சைதன்யா மற்றும் அவருடைய கள்ளக்காதலன் நாகேசை போலீசார் கைது செய்தனர். படுகாயம் அடைந்த சிறுமி குணம் அடைய இன்னும் ஒரு வாரம் ஆகும் என்றும். பின்னர் அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் சிறுமி தங்கி இருப்பாள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

14 செப்டம்பர் 2010

பேஷன் என்ற பெயரில் குஷ்பு கழுத்தில் பிளாஸ்டிக் தாலி!

பேஷன் என்ற பெயரில் ருத்திராட்ச மாலையில் பிளாஸ்டிக் தாலியை கோர்த்து நடிகை குஷ்பு அணிந்திருக்கிறார். நடிகை குஷ்புவின் கணவரும், டைடக்டரும்  நடிகருமான சுந்தர் சி நடித்திருக்கும் புதிய படம் நகரம். குஷ்புவின் அவ்னி சி�னிமேக்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் �நடந்தது.
இந்த� விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஸ்டாலின், கனி�மொழி எம்.பி., அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தாலும்... அனைவரையும் கவர்ந்திழுத்தது நடிகை குஷ்புவும் அவர் அணிந்திருந்த பிளாஸ்டிக் தாலியும்தான்.
ருத்திராட்ச மா�லையில் பிளாஸ்டிக் தாலியை �கோர்த்து அணிந்திருந்தார் குஷ்பு. பேஷன் என்ற பெயரில் அவர் ருத்திராட்ச மாலையுடன், பிளாஸ்டிக் தாலியை கோர்த்து அணிந்திருந்தது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலரை முகம் சுழிக்க வைத்தது. இதற்கு முன்பு சினிமா விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த அம்மன் சிலை முன்பு நடிகை குஷ்பு செருப்பு அணிந்தபடி கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த விவகாரத்தை இந்து அமைப்புகள் கடுமையாக கண்டித்தன. பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால் மன்னிப்பு கேட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் குஷ்பு.
இப்போது பேஷன் என்ற பெயரில் அவர் அணிந்திருந்த பிளாஸ்டிக் தாலியும், ருத்ராட்ச மாலையும் புதிய சர்ச்சையை கிளம்பியிருக்கிறது. தமிழ் பெண்கள் கற்பு குறித்து பேட்டியளித்து வில்லங்கத்தில் சிக்கிய குஷ்பு சுப்ரீம்கோர்ட் வரை சென்றதும் நினைவிருக்கலாம்.

12 செப்டம்பர் 2010

ஸ்ருதி ஹாசன் செய்த அதிரடி மாற்றம்.


கமலுக்கும், ர‌ஜினிக்கும் நீண்ட காலமாக பிஆர்ஓ-வாக இருப்பவர் நிகில் முருகன். தமிழ் சினிமாவின் ஹைடெக் மக்கள் தொடர்பாளர், கண்ணியமான தொடர்பாளர் என்பதெல்லாம் இவரது அடையாளங்கள். இவர்தான் நடிகர் சூர்யாவுக்கும், ஸ்ருதி ஹாசனுக்கும் பிஆர்ஓ. இந்நிலையில் நிகில் முருகனுக்குப் பதில் ஜான்சனை தனது பிஆர்ஓ-வாக அறிவித்தார் சூர்யா. நான் மகான் அல்ல படத்தைப் பற்றி எதிர்மறை பதிவுகள் நிகிலின் இணையதளத்தில் இருந்ததாகவும், அதனால் சிவகுமார் எடுத்த கடும் முடிவுதான் இந்த நீக்கம் எனவும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்த நீக்கத்திற்கு இரண்டாவது நாளே ஸ்ருதியிடமிருந்து பரபரப்பான அறிவிப்பு வெளிவந்தது. சூர்யாவைப் போலவே அவரும் நிகிலை மாற்றிவிட்டு ஜான்சனை தனது புதிய பிஆர்ஓ ஆக்கியிருந்தார்.
சூர்யாவும், ஸ்ருதிஹாசனும் 7ஆம் அறிவு படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

11 செப்டம்பர் 2010

மாதவனுடன் காதலா? சதா பதில்.

ஜெயம் படம் மூலம் தமிழில் அறிமுகமான சதா, தற்போது புலி வேஷம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். எதிரி படத்தில் மாதவனுடன் சதா ஜோடியாக நடித்தார். இப்படம் 7 வருடங்களுக்கு முன் வெளியானது.
தற்போது இருவருக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் விருந்து நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்பதாகவும் செய்திகள் பரவியது. மாதவன் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி சதாவிடம் கேட்டபோது உடனே ஆவேசப்பட்ட அவர், பின்னர் அமைதியாகி பேச ஆரம்பித்தார். அப்போது அவர் கூறுகையில்,
மாதவனுடன் நீண்ட நாட்களாக எனக்கு தொடர்பு இல்லை. அவரை சந்தித்து பேசவும் இல்லை. அவரை காதலிப்பதாக வந்த செய்திகள் வதந்திதான். நான் படப் பிடிப்புக்கு செல்லும்போது கூடவே எனது தாய் வருவார். அவரை விட்டு தனியாக யாரிடமும் நான் பேசுவது கிடையாது. ஏன் தான் இப்படி வதந்திகளை பரப்புகிறார்களோ? என்றார்.
மாதவனும் நீங்களும் பெங்களூர் ஓட்டலில் சந்தித்து பேசியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதே என்று செய்திகள் பரவுகிறதே என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, கருத்து சொல்ல விரும்பவில்லை என்று மீண்டும் ஆவேசப்பட்டார்.

10 செப்டம்பர் 2010

ரஜினியின் அழைப்பிதழ்…திருப்பி அனுப்பிய பாரதிராஜா.

மழை நின்ற பிறகும் குடை மடங்காது போலிருக்கிறது. சவுந்தர்யா திருமணம் முடிந்த பின்பும் ரஜினி யாருக்கெல்லாம் அழைப்பிதழ் கொடுக்கவில்லை. ஏன் கொடுக்கவில்லை? ரசிகர்களை அழைக்காதது சரியா?. இப்போதாவது அழைத்து விருந்து கொடுப்பாரா? என்றெல்லாம் பரபரப்பான விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சற்று லேட்டஸ்ட்டாக கிடைத்த ஒரு தகவல் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. 16 வயதினிலே படத்தின் மூலம் ரஜினிக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த பாரதிராஜாவுக்கே கொரியரில்தான் அழைப்பிதழ் போனதாம். அதிர்ச்சியடைந்த அவர், அதை மீண்டும் ரஜினி முகவரிக்கே திருப்பி அனுப்பிவிட்டாராம். சமீபகாலங்களில் நடந்த பல்வேறு சம்பவங்களை மையப்படுத்தி பேட்டிகளில் பேசி வந்த பாரதிராஜா ரஜினியை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் திரையுலகில் இதையெல்லாம் சகஜம் என்று எடுத்துக் கொள்வதுதான் வழக்கம்.
அப்படி எடுத்துக் கொள்ளாத ரஜினி நேரில் பாரதிராஜா வீட்டுக்கு போக சங்கடப்பட்டுதான் இப்படி கொரியரில் அனுப்பினாராம். அது போகட்டும்… நிகழ்ச்சிக்கு இளையராஜா ஏன் போகவில்லை? அவருக்கும் தபாலில்தான் போனதாம் அழைப்பிதழ்!

08 செப்டம்பர் 2010

நித்தியானந்தாவின் லீலை திரைப்படமாக!

நித்தியானந்தா-ரஞ்சிதா செக்ஸ் லீலை குறித்து தெலுங்கில் சினிமாப் படம் எடுக்கவுள்ளனராம். நிஜக் கதைகளை சூட்டோடு சூடாக படமாக எடுத்து விடுவது இந்தியத் திரையுலகினரின் வழக்கம். அதுவும் செக்ஸ் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் என்றால் சட்டுப் புட்டென்று படமாக்கி விடுவார்கள்.
அந்தவகையில் தற்போது நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரத்தையும் படமாக்க கிளம்பியுள்ளனர்-தெலுங்கில். நித்தியானந்தாவுக்கு படுக்கை அறையில் பலவிதமான சேவைகளை நடிகை ரஞ்சிதா செய்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் சினிமா பாணியில் நான் அவன் இல்லை என்று கூறி விட்டார் நித்தியானந்தா.
ரஞ்சிதாவும், நான் செய்தது சேவை, வீடியோவை மார்பிங் செய்து விட்டனர் என்று கூறி விட்டார். தற்போது இந்த வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. நடந்தது குற்றமா இல்லையா, சரியா, தவறா என்றும் யாருக்கும் புரியவில்லை. நித்தியானந்தாவும் வழக்கம் போல தனது பெங்களூர் மடத்தில் போதனை செய்ய ஆரம்பித்து விட்டார்.
இந்த நிலையில், நித்தியானந்தா கதையை படமாக்கவுள்ளனர் தெலுங்கில். நித்தியானந்தா வேடத்தில் ராஜேந்திர பிரசாத் நடிக்கப் போகிறாராம். இவர் தெலுங்கில் பிரபலமான காமெடி ஹீரோ ஆவார். சிவாஜி, சாய்குமார் ஆகியோரும் உள்ளனர். ஹைதராபாத்தில் சமீபத்தில் படத்திற்கு பூஜை போட்டனர். அப்போது நித்தியானந்தா கெட்டப்பில் வந்தாராம் ராஜேந்திர பிரசாத்.
கதை என்னவோ நித்தியானந்தா கதைதான் என்றாலும் அதை இப்போதைக்கு ரகசியமாகவே வைத்துள்ளனராம். கேஸ் ஏதாவது வந்தால் சிக்கலாகி விடுமே என்பதற்காக இந்த அடக்கி வாசிப்பாம். ரஞ்சிதா கேரக்டருக்குரிய நடிகையை வலைவீசி தேடும் பணி தற்போது நடந்து வருகிறதாம்.

07 செப்டம்பர் 2010

இத்தாலியில் இலங்கையர் மூவர் கைது! குடியால் வந்த கதி.

மதுபானம் அருந்த மறுத்த இலங்கையர் ஒருவரை நேற்று மாலை அடித்துக் காயப்படுத்தியமையுடன் ,அறை ஒன்றிலும் பூட்டி வைத்தனர் என்பதற்காக அவரின் சகாக்களான இலங்கையர் மூவர் இத்தாலியின் San Pantaleon நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் நால்வரும் தொடர்மாடி ஒன்றில் உள்ள அறை ஒன்றில் ஒன்றாக இருந்து வந்துள்ளனர். இவர்களில் குடிகாரர்கள் மூவரும் சம்பவதினம் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தனர். நான்காவது நபர் இவர்களுடன் குடிக்க மறுத்து விட்டார்.
இதனால் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. குடிக்க மறுத்தவரை ஏனைய மூவரும் நையப் புடைத்தனர். அவரின் நெஞ்சுப் பகுதியில் படுகாயம் ஒன்றும் ஏற்பட்டு விட்டது. பின் அவரை தப்பி ஓட முடியாத வண்ணம் அறை ஒன்றில் பூட்டி வைத்தனர். அவரின் நெஞ்சுப் பகுதியில் இருந்து இரத்தம் பெருக்கெடுத்தது. இந்நிலையில் அவர் அறையில் இருந்த தொலைபேசி மூலம் வீட்டின் உரிமையாளருடன் தொடர்பு கொண்டு நிலைமையைக் கூறினார். வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்தார். இதையடுத்தே கைதுகள் இடம்பெற்றன. நான்கு இலங்கையர் நாற்பது வயதைத் தாண்டியவர்கள் ஆவர்.

06 செப்டம்பர் 2010

கவுரவ கொலை மிரட்டல்: காதல் ஜோடி புகார்.



காதல் திருமணம் செய்துக் கொண்டதால், பெற்றோர்களிடம் இருந்து கவுரவ கொலை மிரட்டல் வருவதாக செந்தூரி என்ற பெண், பென்னாகரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பென்னாகரத்தைச் சேர்ந்த முரளி என்பவர், செந்தூரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்துக்கு எதிர்ப்பு வந்துள்ளது. தற்போது தொடர்ந்து மிரட்டல் வருவதாக, பென்னாகரம் காவல் நிலையத்தில் செந்தூரி புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து செந்தூரி கூறியதாவது, கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் காதலித்து வந்தோம். கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி திருமணம் செய்து கொண்டோம். தொடர்ந்து மிரட்டல் வந்ததால் பென்னாகரம் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தோம். அப்போது இரு வீட்டாரிடம் இருந்து பெற்றோர்களை அழைத்து பேசினார்கள். அதில் எனது பெற்றோர்கள் சமாதானம் அடையவில்லை.
எனது பொறியியல் படிப்பையும் தொடர முடியாமல் போய்விடும் என பயமாக இருக்கிறது. எனது வீட்டில் இருந்துதான் எனக்கு மிரட்டல் வருகிறது. தற்போது எனது கணவர் வீட்டில் இருக்கிறேன். தொடர் மிரட்டல் வந்ததால் எனது கணவர் முரளியுடன் பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன் என்றார்.
செந்தூரியின் புகார் குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

03 செப்டம்பர் 2010

வளைந்து கொடுக்காத நயன்.



விளம்பரத்தில் நடிப்பதில்லை என்பது நயன்தாராவின் முடிவு. படங்களில் நடிக்காத இந்த‌ச் சூழலிலும் அவர் தனது கொள்கையை விடுவதாக இல்லை.
அமிதாப் முதல் அமீர்கான் வரை விளம்பரத்தில் தான் வூடுகட்டி அடிக்கிறார்கள். அவர்களின் வருமான வ‌ரிக்கணக்கு எகிறுவதும் இதனால்தான்.
ஆனால், நான் வாங்காத ஒரு பொருளை பிறர் வாங்கும்படி நிர்ப்பந்திக்க மாட்டேன் என்று விளம்பரத்தில் நடிக்க கறாராக மறுப்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி கறாராக மறுத்த அ‌‌ஜீத்தும்கூட ஒரு காபி விளம்பரத்தில் தலையை காட்டினார்.
இந்த விஷயத்தில் நயன்தாரா இன்னும் கெட்டி. தி.நகர். ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடிக்க ஆனானப்பட்ட அனுஷ்காவையே வளைத்துப் போட்டிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அவர்களிடம் அகப்படாத ஒருவர் உண்டென்றால் அது நயன்தாரா மட்டும்தானாம்.
தீபாவளி நெருங்கும் போது நயன்தாராவும் ஜவுளிக்கடைக்குள் மாட்டிக் கொணடால்...
ஆச்ச‌ரியப்படாதீர்கள்.

02 செப்டம்பர் 2010

இறந்த குழந்தை தாயின் அரவணைப்பில் உயிர்த்தது!



பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி கேட், ஏழுமாத கர்ப்பமாக இருந்தார். தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு ஜேமி என, பெயர் சூட்டவும் முடிவு செய்தனர். கேட்டுக்கு சமீபத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தையிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிததும் குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதைக் கேட்ட டேவிட்டும், கேட்டும் அழுது புலம்பினர். தன் பச்சிளம் குழந்தை இறந்துவிட்டதை நம்ப முடியாத கேட், குழந்தையை மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு, முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியபடி கண்ணீர் வடித்தார். டேவிட்டும் அழுது கொண்டே, குழந்தையின் தலையை மென்மையாக தடவிக் கொடுத்தார். இரண்டு மணி நேரமாக இந்த பாசப் போராட்டம் நீடித்தது.
குழந்தையை இரண்டு மணி நேரமாக மார்போடு அணைத்தபடி, அழுதுகொண்டிருந்த கேட், குழந்தையின் காதுக்கருகே சென்று மெல்லிய குரலில் விசும்பலுடன் பேசினார். அப்போது தான், யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நடந்தது. இறந்து விட்டதாக கூறப்பட்ட அந்த குழந்தையின் உடலில் சிறிய அசைவு காணப்பட்டது. அந்த பச்சிளம் குழந்தையின் கைகள் மெதுவாக நீண்டு, தன் தாயின் கரங்களை இறுக பற்றியது. இந்த ஆச்சரிய நிகழ்வை நம்ப முடியாமல் கேட், சில நிமிடங்கள் திகைத்துப் போனார். அவரது கணவர் டேவிட், உடனடியாக ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வந்தார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், "இது வழக்கமாக நடப்பது தான். இறந்து விட்ட குழந்தை, மீண்டும் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை'என, உறுதியாக தெரிவித்து விட்டனர்.
தன் குழந்தையை விட்டுக் கொடுக்க விரும்பாத கேட், மார்போடு அணைத்துக் கொண்டு, அந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். அதை குழந்தை, ஆர்வத்துடன் குடித்தது. அங்கு நின்றிருந்த டாக்டர், இதை நம்ப முடியாமல் மீண்டும் குழந்தையை பரிசோதித்தார். அப்போது அவர், குழந்தையின் இருதயத் துடிப்பு சீராக இருப்பதையும், குழந்தை சரியாக மூச்சு விடுவதையும் உறுதி செய்தார். பின்னர் அவர்,"என்னால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.குழந்தை பிழைத்து விட்டது என்பது உண்மை'என்றார்.
ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திக்கு முக்காடிப் போன கேட், இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியதை அடுத்து, அதை மார்போடு அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டேன். என் வாயில் என்ன தோன்றியதோ அதை குழந்தையின் காதருகே, அழுகையுடன் கிசு, கிசுத்தேன். "உனக்கு ஜேமி என பெயர் வைத்திருக்கிறோம்; உனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் தெரியுமா? நீ எங்களுக்கு வேண்டும்; உன்னை விட்டு எங்களால் பிரிந்து இருக்க முடியாது' என, கூறினேன். இரண்டு மணி நேரமாக, குழந்தையை மார்பில் வைத்துக் கொண்டு, அழுதபடி இருந்தேன். அப்போது திடீரென குழந்தையிடம் அசைவு தெரிந்தது. மெல்ல கண் திறந்து பார்த்தது. அதன் பிஞ்சுக் கரங்கள், என் கை விரல்களை மென்மையாக பற்றியபோது, எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நேரத்தில் இந்த உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான தாய், தந்தையர்கள் நானும், என் கணவரும் தான். இவ்வாறு கேட் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

01 செப்டம்பர் 2010

இயக்குனர் செல்வாவின் "நாங்க".



1985-ம் ஆண்டின் காலக் கட்ட பின்னணியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் "நாங்க'. இயக்குநர் செல்வாவின் 25-வது படமாக இப்படம் உருவாகிறது. சினிமாவின் பல்வேறு துறைகளில் இருப்பவர்களின் வாரிசுகள் 9 பேர் இப்படத்தில் நாயகர்களாக அறிமுகமாகிறார்கள். ÷இப்படத்தைப் பற்றி இயக்குநர் செல்வாவிடம் கேட்ட போது, ""கல்லூரியின் காதல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கி வருகிறேன். ஐந்து விதமான காதல் கதைகள் சொல்லப்பட்டு, பின்னர் அவை ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
÷ 1985-ம் ஆண்டு காலக் கட்டத்தில் கதை பயணிக்கிறது. என் முதல் படம் "தலைவாசல்' கதையும் கல்லூரி வாழ்க்கைதான். அது போல் இப்படமும் கல்லூரியின் புதிய பரிணாமத்தைச் சொல்லும். காதல், உற்சாகம் இவற்றை மட்டும் சொல்லாமல் ஏமாற்றம், வலி, ஏக்கம், நெகிழ்ச்சி ஆகியவற்றை சொல்லும் ஒரு கல்லூரிக் கதையாக இது இருக்கும்.
÷ஒரு மனிதனின் உச்சபட்ச மகிழ்ச்சியான கல்லூரி காலத்தை சினிமாவின் புதிய மொழியில் படம் பிடித்து வருகிறேன். தென்காசி, திருநெல்வேலி, குற்றாலம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் படமாகியுள்ளது. 1985-ம் ஆண்டு காலக் கட்ட கதை என்பதால் ராஜன், ஷிவா யாதவ் என்ற இரு கலை இயக்குநர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். "தலைவாசல்', "அமராவதி' படங்களுக்குப் பின் பாலபாரதி இப்படத்துக்கு இசையமைக்கிறார். மறக்க முடியாத ஜீவனுள்ள நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இந்தப் படம் இருக்கும்'' என்றார்.