பக்கங்கள்

10 செப்டம்பர் 2010

ரஜினியின் அழைப்பிதழ்…திருப்பி அனுப்பிய பாரதிராஜா.

மழை நின்ற பிறகும் குடை மடங்காது போலிருக்கிறது. சவுந்தர்யா திருமணம் முடிந்த பின்பும் ரஜினி யாருக்கெல்லாம் அழைப்பிதழ் கொடுக்கவில்லை. ஏன் கொடுக்கவில்லை? ரசிகர்களை அழைக்காதது சரியா?. இப்போதாவது அழைத்து விருந்து கொடுப்பாரா? என்றெல்லாம் பரபரப்பான விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சற்று லேட்டஸ்ட்டாக கிடைத்த ஒரு தகவல் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. 16 வயதினிலே படத்தின் மூலம் ரஜினிக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த பாரதிராஜாவுக்கே கொரியரில்தான் அழைப்பிதழ் போனதாம். அதிர்ச்சியடைந்த அவர், அதை மீண்டும் ரஜினி முகவரிக்கே திருப்பி அனுப்பிவிட்டாராம். சமீபகாலங்களில் நடந்த பல்வேறு சம்பவங்களை மையப்படுத்தி பேட்டிகளில் பேசி வந்த பாரதிராஜா ரஜினியை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் திரையுலகில் இதையெல்லாம் சகஜம் என்று எடுத்துக் கொள்வதுதான் வழக்கம்.
அப்படி எடுத்துக் கொள்ளாத ரஜினி நேரில் பாரதிராஜா வீட்டுக்கு போக சங்கடப்பட்டுதான் இப்படி கொரியரில் அனுப்பினாராம். அது போகட்டும்… நிகழ்ச்சிக்கு இளையராஜா ஏன் போகவில்லை? அவருக்கும் தபாலில்தான் போனதாம் அழைப்பிதழ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக