பக்கங்கள்

31 ஜனவரி 2011

ரசிகர்கள் தொல்லையால் தேர்வு எழுதாமல் திரும்பிய செளந்தர்யா!

ரஜினி மகள் சவுந்தர்யா ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள கே.கே.சி. என்ற தனியார் சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்கான தேர்வு நேற்று புத்தூரில் உள்ள அரசு கல்லூரியில் நடந்தது. சவுந்தர்யா தேர்வு எழுதுவதற்காக புத்தூர் அரசு கல்லூரிக்கு சென்றார்.
சவுந்தர்யா தேர்வு எழுத வருவதை அறிந்ததும் அங்கு ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ரஜினி மகளை பார்க்க முண்டியடித்தனர்.பின்னர் ஒருவழியாக ரசிகர்களிடம் இருந்து தப்பித்து தேர்வுக் கூடத்துக்கு சென்றார்.
அவர் தேர்வு எழுதும் போது அந்த ஹாலில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த அனைவரும் சவுந்தர்யாவையே பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் சவுந்தர்யா அதிருப்தி அடைந்து தேர்வு எழுத முடியாமல் தவித்தார்.
பின்னர் அவர் அந்த கல்லூரி முதல்வரிடம் தேர்வு எழுத தனக்கு தனி அறை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு கல்லூரி முதல்வர் மறுத்தார். பிரபலங்களின் வாரிசுகளுக்கு தேர்வு எழுத ஏற்கனவே தனி அறை ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து சவுந்தர்யா அவரிடம் வாதாடினார்.
ஆனால் அதை ஏற்க கல்லூரி முதல்வர் மறுத்து விட்டார். இதனால் அதிருப்தியுடன் சவுந்தர்யா தேர்வு எழுதாமல் கல்லூரியை விட்டு வெளியேறினார்.

28 ஜனவரி 2011

சுருதியால் உள்ளுக்குள் நடுங்கும் முருகதாஸ்!

அகநக ஓ தீரடு என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தின் ரிசல்ட்டை ரொம்பவே ஆர்வமாக எதிர்பார்த்திருந்தவருக்கு அந்த நம்பிக்கையில் விழுந்திருக்கிறது சரியான இடி!
படம் முதல் வாரத்திலேயே மூட்டை கட்டப்பட்டுவிட்டதாம்.
இவர் அறிமுகமான முதல் இந்திப்படமும் இதே மாதிரிதான் அமைந்தது. இந்த தொடர் தோல்விகளால் ஸ்ருதி கவலைப்பட்டாரோ இல்லையோ? இவரை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கும் ஏழாம் அறிவு முருகதாசுக்கு சின்ன நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
அப்பா கமல் போலவே சகல திறமைகளும் கொண்ட ஸ்ருதிக்கு நல்ல குரல் வளம், நாலு பேரை மயங்க வைக்கும் இசை என்று பல்வேறு கதவுகள் திறந்திருக்கின்றன. எனவே இப்போது வரும் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை அவர். ஏழாம் அறிவுக்கு பின்புதான் புதுப்படங்களை ஒப்புக் கொள்ளப் போகிறாராம். இது முருகதாஸ் ஸ்கிரிப்டின் மீதிருக்கும் நம்பிக்கையாக கூட இருக்கலாம்.
இதற்கிடையில் தினமும் படப்பிடிப்புக்கு லேட்டாக வந்து கொண்டிருந்தவர் இப்போது டாண் என்று குறித்த நேரத்திற்கு வந்துவிடுகிறாராம். எலி உட்கார எலந்த பழம் விழுந்திருக்கும். இதற்கும் தெலுங்கு பட தோல்விக்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது?

24 ஜனவரி 2011

நீதுவால் எழுந்த ஆடைப்பிரச்சனை!

உள்ளாடை இல்லாமல் நிகழ்ச்சியில் நடிகை நீத்து சந்திரா பங்கேற்றார். இதையடுத்து அவருக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
நடிகர் மாதவனுடன் யாவரும் நலம் படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை நீதுசந்திரா. மும்பையைச் சேர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நீதுசந்திரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
விழாவில் கலந்து கொண்ட நீதுசந்திரா, மேடையில் கால் மேல் கால் போட்டு ஹாயாக அமர்ந்திருந்தார். அப்போது அவர் உள்ளாடை அணியாமல் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. நீதுசந்திரா பங்கேற்ற அந்த பொது நிகழ்ச்சி சம்பந்தமான படங்களை பார்த்து கேரள மாதர் சங்கம், மகளிர் கூட்டமைப்பு மற்றும் சோசலிச பெண்கள் குழுவினர் கொதிப்படைந்துள்ளனர்.
நடிகை நீதுசந்திரா, பொது நிகழ்ச்சியில் இவ்வாறு மோசமாக நடந்து கொண்டது ஒட்டுமொத்த பெண் இனத்தை அவமானப்படுத்துவதாகும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை மலையாள படங்களில் நடிக்க விட மாட்டோம் என்று கூறி போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
கேரளாவில் தனக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளதால் நீதுசந்திரா அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தெரியாமல் நடந்து விட்டது என்று அவர் கூறி உள்ளார்.

21 ஜனவரி 2011

புதுப் பொலிவுடன் நமீதா!


விரைவில் புத்தம் புதிய பொலிவுடன் என்னைப் பார்ப்பீர்கள் என்று குதூகலமாக கூறுகிறார் நடிகை நமீதா. எல்லாம் எடைக் குறைப்பு நடவடிக்கை காரணமாகவாம்.
நமீதா என்றவுடன் அந்த பெருத்த உடலும், பிரமாண்ட கவர்ச்சியும்தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். ஆனால் அதை அப்படியே மாற்றியமைக்கப் போகிறாராம் நமீதா.
இடையில் கன்னடப் படத்தில் நடிக்கப் போன நமீதா அப்படத்துக்காக எடையை வெகுவாகக் குறைத்திருந்தாராம். ஆனால் இளைஞன் படத்தில் நடிக்க வந்தபோது மீண்டும் எடையைக் கூட்டிக் கொண்டாராம். ஆனால் தற்போது மீண்டும் எடையைக் குறைக்க ஆரம்பித்துள்ளார். இதனால் கணிசமான அளவில் எடை குறைந்து சிக்கென மாறி வருகிறாராம். இன்னும் சில நாட்களில் மேலும் சில கிலோவைக் குறைத்து புது மாதிரியான தோற்றத்திற்கு வரப்போகிறேன் என்கிறார் நமீதா.
கரீனாவின் சிக் உடம்புக்குக் காரணமான பிரபலமான டயட்டிஷியன் ருஜுதா திவேகரின் ஆலோசனைப்படி இப்போடு டயட்டைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளாராம் நமீதா. இதுதான் அவரது உடல் மெலிவுக்கு காரணமாம். கூடவே யோகாவையும் துணைக்கு அழைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இன்னும் சில வாரங்கள் பொறுத்திருங்கள். பிறகு என்னைப் பார்த்தால் யாருமே நான்தான் நமீதா என்றால் நம்ப மாட்டார்கள்.
ரசிகர்களுக்கு எனது புதிய பொலிவு ஆச்சரியத்தை அளிக்கும். இப்போதே என்னைப் பார்க்கும் பலரும் நம்ப மறுக்கிறார்கள். நீங்களா என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள். இன்னும் முழுமையாக எடைக் குறைப்பு முடியவில்லை. அதற்குள்ளேயே இவ்வளவு ஆச்சரியம் என்றால் நான் முழுமையாக மெலிந்து அழகானால் எப்படியெல்லாம் ஆச்சரியப்படப் போகிறார்களோ என்று கூறிச் சிரிக்கிறார் நமீதா.
தனது உடல் எடை மிகவும் அதிகமாக இருப்பதாக பலரும் கூறி வந்தபோதிலும் அதில் அதிக அக்கறை காட்டாமல்தான் இரு்நது வந்தார் நமீதா. ஆனால் யோகா செய்யத் தொடங்கிய பின்னர் அவருக்கே எடையைக் குறைக்கும் ஆசை வந்து விட்டதாம். இதனால்தான் தற்போது தீவிரமாக எடைக் குறைப்பில் இறங்கியிருக்கிறாராம்.
இளைஞன் படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக நடித்தது மிகவும் சவாலானதாக இருந்ததாக கூறும் நமீதா, இருப்பினும் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான படத்தில் நடித்தது பெருமை தருவதாக கூறிப் பூரிப்படைகிறார்.

18 ஜனவரி 2011

ஐயோ!என்னை அதுக்கு கூப்பிடுறாங்களே....!!!

‘ஐயோ என்னை ‘அதுக்கு’ கூப்பிடறாங்களே…? ஷாக்கான கவர்ச்சி நடிகை நீது. எந்த மொழி படமாக இருந்தாலும் கவர்ச்சி முத்திரை காட்டி நடிக்க தயங்காதவர்தான் பாலிவுட் நடிகை நீது சந்திரா.
எனக்கு ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, போஜ்பூரி, தெலுங்கு ஆகியவற்றுடன் வட மாநில மொழிகள், வெளிநாட்டு மொழிகளையும் தெரிந்து வைத்துள்ளேன். யாவரும் நலம் படத்தில் நடித்ததிலிருந்து தமிழ் மொழியை கற்க ஆர்வம் காட்டியுள்ளேன்.
ஆதிபகவன் படத்தில் நடிக்க துவங்கியபோதே சரளமாக தமிழோடு விளையாடி பார்ப்பது என முடிவு செய்தேன்.
ஆர்வமாக தமிழைக் கற்று வருகிறேன். டைரக்டர் அமீரும் என்னை உற்சாகப்படுத்தியுள்ளார்.
பட யூனிட்டில் உள்ளவர்களிடம் பேசி, தப்பிருந்தால் திருத்திக்கொள்கிறேன். ஆதிபகவன் பட சூட்டிங் முடிவதற்குள் தமிழை நன்றாக கற்றுக்கொள்வேன்\’ என்கிறாராம்.
பாலிவுட் டைரக்டர் பிரியதர்சன் சினிமாவுக்கு வந்து முப்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி துபாயில் விழா கொண்டாடினார்கள்.
அதில் கலந்து கொண்ட நீது, பாடல்களுக்கு வளைந்தும் நெளிந்தும் நளினமாக ஆட்டம் போட, கூடி ரசித்தவர்களுக்கு ஒரே கிளுகிளுப்பு ஆட்டம் முடிந்து, நடந்து வந்த நீதுவை சுற்றி நெருக்கி தள்ளியதாம் ரசிகர் கும்பல்.
அதில் தமிழ், மலையாளம் மொழிகளில் பேசியவர்கள், ‘கல்யாணம் கட்டிக்கலாமா…?! அதுக்கு சம்மதமா?! என்று முணுமுணுத்தார்களாம். ‘அதுக்கு ரெடின்னு சொல்லு, உன்னை நல்லா வெச்சுக்கிறேன்’ என்றும் கூட்டத்திலிருந்து குரல் வர, நீதுக்கு ஷாக்.
கொஞ்சமும் அதிர்ச்சி அடங்காமல், ‘ஆங்.. நான் அதுக்கு ஒத்து வர மாட்டேன்\’ என்று லேசாக கதறியவர், கமுக்கமாக இடத்தை காலி பண்ணினாராம்.

17 ஜனவரி 2011

முன்னணி நடிகை பட்டியலில் அஞ்சலி!

தமிழ் சினிமாவின் அடுத்த முன்னணி நடிகைகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுபவர்களில் முக்கியமானவர் என்றால் அது அஞ்சலிதான் என்று கோடம்பாக்கத்தில் யாரைக் கேட்டாலும் டக்கென சொல்லிவிடுவார்கள்.
சிறந்த நடிகை என்ற அங்கீகாரத்தை அங்காடித்தெரு படத்தில் பெற்ற அஞ்சலிதான் முன்னணி இயக்குனர்கள், நடிகர்களின் இப்போதைய ஏகோபித்த தேர்வாக இருக்கிறார். மகிழ்ச்சி படத்தில் கொஞ்சம் கவர்ச்சியாகவே நடித்த அஞ்சலி, விமல் நடிக்கும் தூங்கா நகரத்தில் துடுக்குத்தனமான மதுரைக்காரப் பெண்ணாக நடித்துவருகிறார்.
அதோடு அஜீத்தின் மங்காத்தா ஆட்டத்திலும் ஒருகை போடுகிறார் அஞ்சலி. மங்காத்தாவில் அஞ்சலிக்கு ஜோடி வைபவ்தான் என்றாலும், தல படம் என்பதால் டபுள் சந்தோஷத்தோடு தலையாட்டிவிட்டாராம். அஜீத்தின் படத்தில் நடிக்கும் குஷியில் இருக்கும் அஞ்சலிக்கு அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகளும் குவிகின்றன.
விக்ரமின் அடுத்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கவிருக்கிறார். ‘மைனா’ புகழ் அமலா பாலுக்கு கிடைக்கவிருந்த இந்த வாய்ப்பு அஞ்சலிக்கு கைமாறி இருப்பதுதான் இதில் ஸ்பெஷல். விக்ரம், அனுஷ்கா நடித்துவரும் 'தெய்வமகன்' படத்தில் அமலா பாலும் இன்னொரு கதாநாயகி. தெய்வமகனுக்கு அடுத்து சுசீந்திரனின் இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் அடுத்தப் படத்திலும் அமலா பாலையே நாயகியாக்குவதாக அவருக்கு உறுதியளித்திருந்தாராம் விக்ரம்.
ஆனால் அந்த வாய்ப்புதான் இப்போது அஞ்சலிக்கு கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தில் அமலா பாலையே நாயகியாக்கலாம் என்பது விக்ரமின் விருப்பமாக இருந்தாலும், இந்தக் கதைக்கு அஞ்சலிதான் மிகவும் பொருத்தமானவர் என்று கூறிவிட்டாராம் இயக்குனர் சுசீந்திரன். இரண்டு கதாநாயகிகள் நடிக்கும் இந்தப் படத்திற்கான மற்றொரு நாயகிக்காக மும்பை பக்கம் வலைவிரித்திருக்கிறார்கள்.

14 ஜனவரி 2011

சிலோன் சின்னையா காலமானார்!

பிரபல திரைப்பட நடிகர் சிலோன் சின்னையா லண்டனில் காலமானார். அவருக்கு வயது 70. பைலட் பிரேம்நாத், பொண்ணு ஊருக்கு புதுசு, அகல்விளக்கு, ஆணிவேர், கரைகடந்த ஒருத்தி, நீயின்றி நானில்லை உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். இதுதவிர இலங்கையில் புதியகாற்று உள்பட ஏராளமான தமிழ்ப்படங்களில் நடித்தவர்.
தீவிர சிவாஜி ரசிகரான சிலோன் சின்னையா, எனக்குள் ஒரு சிவாஜி என்ற படத்தை தயாரிக்க தீவிர முயற்சியில் இறங்கி இருந்தார். இந்நிலையில் திடீரென இறந்தார்.
சிலோன் சின்னையாவிற்கு மனைவி இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

12 ஜனவரி 2011

பெண்களை குளிர்விக்க இந்த வழிகளை பின்பற்றினால் போதுமாம்!

“பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர். “அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் மீது வெறுப்படைகின்றனர்!’ என்கிறார் பிரபல மனோ தத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர்.
அமெரிக்காவைச் சேர்ந்த இவர், “வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார். இதோ அந்த விஷயங்கள்:
1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.
2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?
3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.
4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.
5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.
6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.
7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.
8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது
9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.
10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்
11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்
12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.
13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.
14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.
17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண் களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.
18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.
19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.
20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.
21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.
22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.
23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ÷ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.
25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக் கிறது, “டிவி’யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.
பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.

09 ஜனவரி 2011

அழகே என மயங்கும் ஆண்கள்!பணமே என ஏங்கும் பெண்கள்!

திருமணத் தகவல் தொடர்பு இணையதளம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், அழகான பெண்ணே மனைவியாக வரவேண்டும் என ஆண்களும்; நல்ல வேலையில் உள்ள ஆண் தான் கணவனாக வரவேண்டும் என பெண்களும் விரும்புகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
டில்லியைச் சேர்ந்த திருமணத் தகவல் தொடர்பு இணையதளம் ஒன்று, தன் இணையதளத்தில் திருமணத்துக்காகப் பதிவு செய்திருந்த ஆண், பெண் உட்பட ஐயாயிரம் பேரிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. தன் வருங்கால கணவன் அல்லது மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.அந்த ஆய்வில், பெண் குடும்பத்தாரின் பின்னணிக்கு, 49 சதவீத ஆண்கள் முன்னுரிமை அளித்துள்ளனர். பெண்ணின் அழகான தோற்றத்துக்கு, 48 சதவீதம் பேர் முக்கியத்துவம் அளித்துள்ளனர். 39 சதவீதம் பேர், தனக்கு வரும் மனைவியின் கல்வி குறித்து கவலை தெரிவித்துள்ளனர். 47 சதவீதம் பேர், வருங்கால மனைவியின் வேலைவாய்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். 45 சதவீதம் பேர், பெண்ணின் ஜாதி மற்றும் இனம் குறித்து அக்கறை தெரிவித்துள்ளனர். மாறாக, 54 சதவீதம் பெண்கள், தங்களுக்கு கணவனாக அமையப் போகிறவரின் வேலை குறித்து அக்கறை தெரிவித்துள்ளனர்.
53 சதவீதம் பேர், கல்வி குறித்தும், 52 சதவீதம் பேர், கணவரின் குடும்பப் பின்னணி குறித்தும் கருத்து தெரிவித்துள்ளனர். 46 சதவீதம் பேர், ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 65 சதவீதம் பெண்கள், ஆண்களின் தோற்றத்தை முக்கியமானதாகக் கருதவில்லை.இதுகுறித்து அந்த இணையதளத்தின் தலைவர் கூறுகையில், “பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் போக்கு இக்காலத்தில் மாறிவருகிறது. அப்படிப்பட்ட நிலையில் கூட, ஜாதி மற்றும் குடும்பப் பின்னணி முக்கிய காரணிகளாகவே கருதப்படுகின்றன. இதற்கு, மணமகன் தன் பெற்றோரின் கருத்துக்கு இணங்கிச் செல்வதே முக்கிய காரணம். பெண்கள் தங்களின் பாதுகாப்பான வாழ்க்கை குறித்து கவலைப்படுவதால், கணவனின் கல்வி மற்றும் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்’ என்று தெரிவித்தார்.இருப்பினும், அழகான பெண்ணே தனக்கு மனைவியாக வரவேண்டும் என்ற ஆண்களின் எதிர்பார்ப்பே ஒருவகையில் சட்டவிரோதமான கள்ளத் தொடர்புகளுக்கும் வழிவகுத்து விடுகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

06 ஜனவரி 2011

விஜய்யும் அஜித்தும் சந்தித்தனர்.

வெளியில் அஜீத் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் முறைத்துக் கொண்டு திரிகிறார்கள்.
ஆனால் அவர்களின் தலயும் தளபதியும் பண்டிகை - விசேஷங்களுக்கு கூடிக் குலவி நட்பு பாராட்டுகின்றனர்.
இரு நடிகர்களின் இப்போதைய மார்க்கெட் நிலவரமும் ஒன்றும் ஆரோக்கியமாக இல்லை. அரசியல் பற்றி இருவருமே பரபரப்பாக பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். இப்போது அதிமுக அனுதாபிகள் வேறு.
அதே நேரம் இருவருக்குமே ஒரு வெற்றி கட்டாயம் தேவை. அதற்காக மங்காத்தாவில் அஜீத் படுபிஸி. விஜய்யோ காவலனை முடித்து விட்டு, வேலாயுதத்தின் இறுதி ஷெட்யூலில் இருக்கிறார்.
இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளும் இப்போது சென்னை பின்னி மில்ஸில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு இடைவேளையில் திடீரென்று அஜீத்தும் விஜய்யும் நேற்று சந்தித்துக் கொண்டனர்.
இருவரும் அவரவர் படம் குறித்து விசாரித்துக் கொண்டனர். அப்போது மங்காத்தா பட இயக்குநர் வெங்கட் பிரபு உடனிருந்தார்.

02 ஜனவரி 2011

தள்ளாடுகிறார் காவலன்!

ஈழத் தமிழர்களின் எதிர்ப்பு, ஆளும் அதிகாரத்தின் ஓர வஞ்சனை, திரையரங்கு உ‌ரிமையாளர்களின் கோபம் என பல்முனை தாக்குதல்களு‌க்கு உள்ளாகியுள்ளது விஜய்யின் காவலன்.
பொங்கலுக்கு எப்படியும் படத்தை வெளியிடுவது என உறுதியாக உள்ளது தயா‌ரிப்பாளர் தரப்பு. அம்மாவின் ஆசிர்வாதத்தையும் விஜய்யின் தந்தை நே‌ரில் சென்று பெற்றிருக்கிறார்.
ஆனாலும் காவலனின் நிலை இன்னும் தள்ளாட்டத்தில்தான் உள்ளது. பொங்கலுக்கு வெளிவரும் ஆடுகளம், சிறுத்தைப் படங்களின் மீதுதான் திரையரங்கு உ‌ரிமையாளர்களின் கவனம் உள்ளது. இதன் காரணமாக விஜய் படங்களை விரும்பி திரையிடும் திரையரங்குகளும் காவலனுக்கு முகத்தை திருப்பிக் கொண்டுள்ளன.
பொதுவாக விஜய் படங்கள் 300 திரையரங்குகளுக்கு மேல் திரையிடப்படும். காவலன் 100 திரையரங்குகளை எட்டினாலே அதிசயம் என்கிறார்கள்.