பக்கங்கள்

06 ஜனவரி 2011

விஜய்யும் அஜித்தும் சந்தித்தனர்.

வெளியில் அஜீத் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் முறைத்துக் கொண்டு திரிகிறார்கள்.
ஆனால் அவர்களின் தலயும் தளபதியும் பண்டிகை - விசேஷங்களுக்கு கூடிக் குலவி நட்பு பாராட்டுகின்றனர்.
இரு நடிகர்களின் இப்போதைய மார்க்கெட் நிலவரமும் ஒன்றும் ஆரோக்கியமாக இல்லை. அரசியல் பற்றி இருவருமே பரபரப்பாக பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். இப்போது அதிமுக அனுதாபிகள் வேறு.
அதே நேரம் இருவருக்குமே ஒரு வெற்றி கட்டாயம் தேவை. அதற்காக மங்காத்தாவில் அஜீத் படுபிஸி. விஜய்யோ காவலனை முடித்து விட்டு, வேலாயுதத்தின் இறுதி ஷெட்யூலில் இருக்கிறார்.
இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளும் இப்போது சென்னை பின்னி மில்ஸில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு இடைவேளையில் திடீரென்று அஜீத்தும் விஜய்யும் நேற்று சந்தித்துக் கொண்டனர்.
இருவரும் அவரவர் படம் குறித்து விசாரித்துக் கொண்டனர். அப்போது மங்காத்தா பட இயக்குநர் வெங்கட் பிரபு உடனிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக