பக்கங்கள்

09 ஆகஸ்ட் 2010

இந்தியில் கலக்கப்போகும் ப்ரியாமணி.



திரிஷாவை இந்திக்குக் கூட்டிக் கொண்டு போய் அறிமுகப்படுத்தி வைத்த பிரியதர்ஷன் அடுத்து பிரியா மணியையும் இந்திக்கு அழைத்துச் செல்கிறாராம். பிரியதர்ஷனால் நடிகையானவர் திரிஷா. தமிழில் திரிஷாவை அறிமுகப்படுத்தி வைத்த பிரியதர்ஷன், அவரது இந்தி அறிமுகத்திற்கும் வழிவகுத்தார். அக்ஷ்ய் குமார் தயாரிப்பில் உருவான கட்டா மீத்தா படத்தில் நாயகியாக நடித்து இந்தியிலும் புகுந்து விட்டார் திரிஷா. படம் சிறப்பாக ஓடவே குஷியாகியுள்ளார். இதையடுத்து அடுத்தடுத்து இந்தியில் கலக்க தீர்மானித்துள்ளார். இந்த நிலையில் பிரியா மணியும் இப்போது இந்திக்குப் போகப் போகிறாராம். அவரையும் பிரியதர்ஷன்தான் அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளார். பிரியதர்ஷன் அடுத்து இயக்கும் புல்லட் டிரெய்ன் என்ற படத்தில் பிரியா மணி நடிக்கிறாராம். இதில் அஜய் தேவ்கனும், சுனில் ஷெட்டியும் நாயகர்களாக நடிக்கின்றனர். அதாவது இரட்டை ஹீரோ சப்ஜெக்ட். அதில் ஒரு நாயகிதான் பிரியா மணி. இன்னொரு நாயகியாக நடிக்கவிருப்பது சமீரா ரெட்டியாம். சமீப காலமாகவே கவர்ச்சியில் புது இலக்கணம் படைத்து வரும் பிரியா மணி, இந்தியில் இதைவிட சற்று கூடுதலான கவர்ச்சியுடன் கலக்கத் தயாராகி விட்டாராம். சமீரா வேறு இருப்பதால் அவரை மிஞ்சும் அளவுக்கு பிரியாவின் கவர்ச்சி சேவை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக