பக்கங்கள்

21 அக்டோபர் 2010

அது நானில்லை… ஏமாந்துடாதீங்க!- அசின்.

தன் பெயரில் இணையதளத்தில் தொடர்ந்து மோசடி நடப்பதாகவும், இதைத் தடுக்கக் கோரியும் முடியாததால், ரசிகர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் நடிகை அசின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இணைய தளத்தில் அசின் பெயரில் போலி வெப்சைட்கள் இயங்குகின்றனவாம். ஆர்குட்டிலும் அசின் பெயர் உள்ளது. அசின் பேசுவதுபோல் அவற்றில் தகவல்கள் பரப்பப்பட்டு உள்ளது. அவரது படங்களும் போடப்பட்டு உள்ளது. அதை பார்த்து ரசிகர்கள் அசின் என்று நம்பி பதில்களை அனுப்பி வருகின்றனராம்.
இதுபற்றி அசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும், உடனடியாக இவற்றை தடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும் சில ரசிகர்கள் கேட்கிறபாடில்லையாம். இதனால் அவர்களுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் அசின்.
“இணையதள வெப்சைட்களில் நான் இல்லை. ட்விட்டர், ஆர்குட், பேஷ்புக் போன்ற எதிலும் நான் கிடையாது. எனது பெயரில் போலியாக சிலர் அவற்றை நடத்துவதாக என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. என்னுடைய நண்பர்களும், ரசிகர்களும் அவற்றை உண்மை என்று நம்பி எனக்கு தகவல்கள், கடிதங்கள் அனுப்பி வருகிறார்கள். நான் அவற்றை பார்ப்பதே இல்லை. தயவு செய்து ரசிகர்கள் ஏமாற வேண்டாம். விரைவில் சைபர் கிரைம் பிரிவில் புகார் தரப் போகிறேன்” என்கிறார் அசின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக