பக்கங்கள்

24 அக்டோபர் 2010

தினமும் ஆபாச வார்த்தைகள் மாயா மீது சீதா புகார்!

நடிகைகள் சீதாவுக்கும், மாயாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கூறியுள்ளனர்.
சீதா, மாயா வீடுகள் சாலிகிராமத்தில் உள்ள புஷ்பா காலினியில் அருகருகே உள்ளது.மாயா வீட்டை தாண்டிதான் சீதா வீட்டுக்கு செல்ல வேண்டும். சீதாவை பார்க்க வருபவர்கள் தனது வீட்டு முன்கார்களை நிறுத்தி விடுவதாக மாயா புகார் கூறியுள்ளார்.
சீதா வீட்டுக்கு தினமும் இரவிலும், பகலிலும் நிறைய பேர் காரில் வந்து செல் கிறார்கள். அவர் வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
சீதா வீட்டில் வசிக்கும் சதீஷ் என்னோடு சண்டை போடுகிறார். கொலை மிரட்டலும் விடுக்கின்றார் என்றெல்லாம் மாயா புகார் கூறினார்.
சீதா சார்பில் டி.வி. நடிகர் சதீஷ் போலீஸ் கதிஷனர் அலுவலகத்தில் மாயா தரக்குறைவாக பேசி மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். மாயா குற்றச்சாட்டுகள் பற்றி சீதாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-
மாயா வீடும் என் வீடும் தள்ளித் தள்ளித்தான் இருக்கிறது. என்னுடன் கடந்த இரண்டு வருடமாகவே இவர் சண்டை போட்டு வருகிறார். ரோடு எல்லோருக்கும் பொதுவானது. அதில் யாரோ காரை நிறுத்தினால் நானா பொறுப்பு. சினிமாவில் இருப்பவர்களை பார்ப்பதற்கு ஆட்கள் வரத்தான் செய் வார்கள்.
நடிக்க ஒப்பந்தம் செய்யவும், கதை சொல்ல வும், சூட்டிங்குக்கு அழைத்து போகவும் பலர் வந்து போவது உண்டு. அதை மாயா தவறாக பேசுகிறார். தினமும் தெருவில் நின்று கொண்டு கெட்ட கெட்ட வார்த்தைகளால் என்னை திட்டுகிறார். பெண் தாதாவை போல் மிரட்டுகிறார்.
நான் நாகரீகம் கருதி பதில் பேசுவது இல்லை. ஒதுங்கி போகிறேன். அவரது அடாவடித்தனங்கள் எல்லை மீறி போய்விட்டது. நானும் மாயாவின் தரம் பற்றி பேச முடியும். அவர் எப்படிப்பட்டவர் என்று சினிமா உலகத்துக்கே தெரியும். போலீசார் மாயா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சீதா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக