பக்கங்கள்

11 அக்டோபர் 2010

த்ரிஷாவுக்கு ‘கெட் அவுட்’-எமிக்கு ‘வெல்கம்’!

கவுதம் மேனன் தனது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்திப் பதிப்பின் வேலைகளைத் துவங்கிவிட்டார்.
ஆரம்பத்தில் இந்தப் படத்திலும் த்ரிஷாவே நாயகி என்று கூறப்பட்டது. கவுதமும் அப்படித்தான் சொல்லி வந்தார். ஆனால் இப்போது அதில் மாற்றம்.
மதராஸப்பட்டினம் புகழ் எமி ஜாக்ஸனுக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்துள்ளார். இந்தியில் த்ரிஷாவின் முதல்படமே பப்படமாகிவிட, இனி அவரால் அந்த ரோலுக்கு எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து இந்த முடிவுக்கு வந்தாராம்.
இதற்கிடையே, சமீபத்தில் தான் தயாரிக்கும் அழகர்சாமியின் குதிரை படத்துக்கு இளையராஜா இசையில் வந்திருக்கும் பாடல்களைக் கேட்டு, சிலிர்த்துப் போனாராம் கவுதம்.
இசையில் அவரோட டச்சே தனி என்றாராம் படத்தின் இயக்குநர் சுசீந்திரனிடம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக