பக்கங்கள்

19 அக்டோபர் 2010

நடிக்க விருப்பம்தான்: ஆசையை போட்டு உடைத்த நயன்தாரா!

நடிக்க எனக்கு விருப்பம்தான். ஆனால் நான் நடிக்க பிரபுதேவா விடமாட்டார் என்று நடிப்பு மீது தனக்கிருந்த ஆசையை போட்டு உடைத்துள்ளார் நடிகை நயன்தாரா.
பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை கை கழுவிவிட்டு நயன்தாராவுடன் வாழத் தயாராகி விட்டார். ரமலத் சட்டப்படி பிரச்னையை அணுகப் போவதாக தெரிந்ததும் அவருடன் சமாதானப் பேச்சிலும் அவர் ஈடுபட்டார்.
இந்த நிலையில் திருமணத்துக்குப் பின் நடிக்கமாட்டேன் என்று கூறி வந்த நயன், திருமணத்துக்கு ஏற்பட்ட தடங்கல்களைப் பார்த்து மனதை மாற்றி்க கொண்டுள்ளார்.
மேலும் எனக்கு நடிக்க விருப்பமே. ஆனால் அவர்தான் விடமாட்டேன்கிறார். அவர்கிட்டயே கேட்டுக்குங்க என்று தயாரிப்பாளர்களை பிரபுதேவா பக்கம் திருப்பி விட்டும் வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக