பக்கங்கள்

31 ஆகஸ்ட் 2010

வெளிநாட்டவருக்கு தத்துக் கொடுக்கப்பட்டு 31 ஆண்டுகளின் பின் உண்மையான தாயும்-சேயும் சந்திப்பு!



சுவீடன் தம்பதிகளுக்கு 31 வருடங்களுக்கு முன் தத்துக் கொடுக்கப்பட்ட சிங்களப் பெண் ஒருவர் அவருடைய உண்மையான தாய், சகோதரர்கள் ஆகியோருடன் இன்று இலங்கையில் மீள இணைந்து கொண்டார்.
1970 களில் சுவர்ணா ஜயசிங்க என்பவருக்கு மூத்த மகளாக பிறந்த இவர் வீட்டின் வறுமை நிலை காரணமாக உடனடியாகவே தத்துக் கொடுக்கப்பட்டார்.
தத்தெடுத்த சுவீடன் தம்பதியர் இவருக்கு Suzanne Maria Chandima என்று பெயர் சூட்டினர். இந்நிலையில் Bio Parents Locate என்கிற அமைப்பின் மூலம் Suzanne Maria Chandima உண்மையான தாயையும், சகோதரர்களையும் கண்டுபிடித்தார்.
இவர் இம்மகிழ்ச்சியை ஊடகங்களுடன் பகிர்ந்துகொண்டபோது தெரிவித்தவை வருமாறு:-
”நான் மிக நீண்ட கால முயற்சிக்குப் பின் எனது உண்மையான தாயையும், சகோதரர்களையும் கண்டுபிடித்து அவர்களுடன் இணைந்து விட்டேன்.இது எனது வாழ்வின் மிகவும் மகிழ்ச்சிக்கு உரிய தருணம் ஆகும்.
நான் முதல் தடவையாக இலங்கைக்கு இப்போதுதான் வந்துள்ளேன். இனி மேல் அம்மாவையும், சகோதரர்களையும் காண அடிக்கடி வருவேன்.”
தத்துக் கொடுத்த தாயான சுவர்ணா ஜயசிங்க தெரிவித்தவை வருமாறு:-
”நான் எனது மூத்த மகளை ஒருபோதும் எவருக்கும் விட்டுக் கொடுக்க விரும்பியதே இல்லை.கடந்த 31 வருடங்களாக பெரும்துன்பத்தை மனதில் சுமந்து வந்திருக்கின்றேன்.இன்றுதான் என்னால் நிம்மதியாக மூச்சு விட முடிகின்றது.
எனது மூத்த மகள் எனக்கு மீண்டும் கிடைத்து விட்டார். தாய்-சேய் உறவை எவராலும் பிரிக்கவே முடியாது.” Bio Parents Locate அமைப்பின் தலைவர் பேராசிரியர் வைத்திய கலாநிதி ரொஹான் ரட்ணாயக்க கருத்துக் கூறுகையில் கடந்த 25 வருடங்களில் 35 ஆயிரம் இலங்கைச் சிறுவர்கள் வெளிநாட்டவர்களுக்குத் தத்துக் கொடுக்கப்பட்டுள்ளனர் என்றார்.

30 ஆகஸ்ட் 2010

சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது.



சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இது குறித்து நியூயார்க் போஸ்ட் பத்திரிகைய வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் நியூயார்க்கைச் சேர்ந்த ஜேம்ஸ் கிப்ஸன் என்பவர் தன்னுடைய அலுவலக கம்ப்யூட்டரில் ஏராளமான நிர்வாணப்படங்களை லோடு செய்து வைத்திருந்தார். ஓரு முறை அவர் 14 வயது சிறுமியின் நிர்வாணப்படத்தினை பார்த்துக்கொண்டிருந்ததாக கம்ப்யூட்டர் தடவியல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அமெரிக்க சட்டவிதிகளின் படி 17 வயதிற்குட்பட்ட இளம் பெண்களின் நிர்வாணப்படத்தினை பார்ப்பதும், இண்டர்நெட்டில் வெளியிடுவதும் குற்றமாகும். இந்நிலையில் நீதிபதியின் இந்த செயலை கண்டுபிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

28 ஆகஸ்ட் 2010

பின்புறத்தை இன்சூர் செய்யும் நடிகை.



இந்தி நடிகை மினிஷா லம்பா, தனது பின்புறத்தை இன்சூர் செய்யவுள்ளாராம்.
அழகான வாழைத் தொடை, அழகிய கால்கள், அம்சமான முகம் ஆகியவற்றை இன்சூர் செய்வது நடிகைகளுக்கு வழக்கமாகி விட்டது. ஹாலிவுட்டில் அழகான, எடுப்பான முன்னழகைக் கூட இன்சூர் செய்கிறார்கள்.
இந்த வரிசையில் படு வித்தியாசமாக, தனது பின்புறத்தை இன்சூர் செய்யவுள்ளார் இந்தி நடிகை மினிஷா லம்பா. இவர் மினி டிரஸ்களில் கவர்ச்சிகரமாக வருவதை ஒரு கொள்கையாகவே வைத்திருப்பவர். காஷ்மீரில் பிறந்த அழகு ரோஜா.
சமீபத்தில் நடிகர் ஜான் ஆப்ரகாம் கூட தனது பின்புறத்தை இன்சூர் செய்தார். அவர் வழியில் இப்போது மினிஷாவும் பின்புறத்தை இன்சூர் செய்யப் போகிறாராம்.
தனது பின்புறம் மிக அழகாக, எடுப்பாக, செக்ஸியாக இருப்பதாக பெருமையுடன் கூறுபவர் மினிஷா. பிரேசில் பெண்களுக்குத்தான் இப்படி எடுப்பாக பின்புறம் இருக்கும்.
எனது பின்புறம் எனக்குப் பொக்கிஷம் போல. அதைக் காக்க நான் விரும்புகிறேன். எனவேதான் இன்சூரன்ஸ் எடுக்க முடிவு செய்துள்ளேன் என்கிறார் பெருமிதத்துடன்.

25 ஆகஸ்ட் 2010

இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பிரபல நடிகைகள் கைது !!!(வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)



இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட பாலியல் தொந்தரவுகள் கொடுத்ததாக நடிகை சாய்ரா பானு உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
போதை மருந்து கடத்தல் , விபச்சாரம், உயர் அதிகாரிகளுக்கு பெண்களை சப்ளை செய்த விவகாரம் என தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து புயல் வீச ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பாதுகாப்பு நிறைந்த பல அடுக்கு குடியிருப்புகளில் பாலியல் தொழில் நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சிறப்பு அதிரடிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையில் நடிகைகள் சாய்ரா பானு, ஜோதி மற்றும் வெளிநாட்டு இளம்பெண்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சாய்ரா பானு, பல தெலுங்கு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
மற்றொரு நடிகை ஜோதி, ஏராளமான தெலுங்கு படங்களில் துணை வேடங்களில் நடத்துள்ளார். இதேபோல் கடந்த ஆண்டு தெலுங்கு நடிகை சீமா இதே விவகாரத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. போதை பொருள் வாங்கியதாக, நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.

24 ஆகஸ்ட் 2010

ரஞ்சிதாவில் பாசம் கொண்ட சிரிப்பு நடிகர்.



நித்யானந்தா சாமியார் ஊருக்கெல்லாம் பிரம்மச்சரியத்தை போதித்துவிட்டு ரஞ்சிதாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட கதையை நாடே தொலைக்காட்சியில் பார்த்தது. இதனை சம்பந்தப்பட்ட இருவரும் மறைமுகமாக ஒப்புக்கொள்ளவும் செய்தனர்.
சில பிழைப்புவாதிகள் நித்தியை மீண்டும் சாமியாராக்கியிருக்கிறார்கள். சாமியார்களை நம்பியிருக்கும் சிலரும் அவரை தெய்வீக‌த் தூதராக கொண்டாடும் வேலையை முடுக்கி விட்டுள்ளனர்.
சி‌ரிப்பு நடிகர் எஸ்.வி.சேகருக்கு வந்த தொண்டை வலியை திருநீறு பூசி ச‌ரி செய்தாராம் நித்தி. இதற்கு கைமாறா தெ‌ரியவில்லை, நித்யானந்தாவுடன் இருப்பது ரஞ்சிதாவே இல்லை, ஒரே நபரைப் போல் ஏழு பேர் இருப்பார்கள் என்றெல்லாம் உடுக்கடித்திருக்கிறார். ஆள் யாராக இருந்தாலும் உடன் இருந்தது நித்திதானே? இதற்கு சி‌ரிப்பு நடிக‌ரிடம் பதிலில்லை.
சங்கராச்சா‌ரியா‌ரை கைது செய்தவர்கள் கை விளங்காமல் இருப்பதாகவும், கிட்னி பழுதடைந்துவிட்டதாகவும் அவர் மேலும் கூறியிருக்கிறார். அவரை கைது செய்ய உத்தரவிட்டவர்கள் இன்றும் சேமமாக இருக்கிறார்கள். சங்கராச்சா‌ரியா‌ரின் பவர் அவர்களிடம் செல்லுபடியாகாதா என்பதைப் பற்றியும் சி‌ரிப்பு நடிகர் பதிலளிக்கவில்லை.
இவர் சின்னத்திரையில் பொறுப்பில் இருந்தபோது ஒரு நடிகை விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். ஒழுக்கத்தை காரணம் காட்டி அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவிடாமல் செய்தவர் இவர். அன்று ஒழுக்கத்தை காரணம் காட்டியவர் இன்று ரஞ்சிதாவுக்கு அடைக்கலம் கொடுப்பது,
காலத்தின் கோலமா? கடவுளின் லீலையா?

21 ஆகஸ்ட் 2010

கிசு கிசுவால் கலங்கிய தமன்னா.


புசுபுசுன்னு வளர்ற மார்க்கெட்டை கிசுகிசு எழுதியே காலி பண்ற விஷயத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது அண்மைக் காலங்களில் நயன்தாராவும், தமன்னாவும்தான் போலிருக்கிறது. எந்த ஹீரோவை எடுத்துக் கொண்டாலும் தமன்னாவை கேளுங்க. இல்லேன்னா பிறகு யாரையாவது பார்க்கலாம் என்றுதான் கூறி வந்தார்கள்.
எல்லா முன்னணி நடிகர்களுடனும் ஒரு ரவுண்டு நடித்து முடித்துவிட்ட தமன்னா, தற்போது தன்னை சுற்றி முளைத்திருக்கும் வேலியை கண்டு அதிர்ந்தே போயிருக்கிறார். ஒரு கோடி சம்பளம், கார்த்தியுடன் காதல் என்று பலரும் எழுதியதால்தான் இந்த நிலைமை என்று நினைத்தாரோ என்னவோ, இரண்டையும் குறைத்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இவரது அட்ஜஸ்ட்மென்ட் மிகப் பெரிய கதவை திறந்துவிட்டிருப்பதுதான் ஆச்சர்யம். சுறாவை அடுத்து தமன்னாவுடன் மீண்டும் ஜோடி சேரப் போகிறார் விஜய். இந்த வாய்ப்பை பெறுவதற்குள் தமன்னாவின் கெண்டை சதை இளைத்துப் போனது தனிக் கதை.
சம்பளத்தை குறைத்தாராம். கேட்கிற நாட்கள் எத்தனையோ, அத்தனைக்கும் தயார் என்றாராம். பல சுற்று பேச்சு வார்த்தைகளுக்கு பின் `த்ரி இடியட்ஸ்` படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறார். டைரக்டர் ஷங்கரும் பல மேடைகளில் தமன்னா குறித்து சிலாகித்தது இந்த இடத்தில் ரொம்பவே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

18 ஆகஸ்ட் 2010

பிரகாஷ்ராஜ் திருமணம் மும்பையில்.


பிரகாஷ் ராஜ்& போனி வர்மா திருமணம் வரும் 24ம் தேதி மும்பையில் நடக்கிறது. ஏராளமான பாலிவுட் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராகப் பணிபுரிந்தவர், போனிவர்மா. இவரும் பிரகாஷ் ராஜும் காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் வரும் 24ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. நெருக்கமானவர்கள் மட்டும் இதில் பங்கேற்கின்றனர். பிறகு தமிழ், கன்னடம், தெலுங்கு படவுலகைச் சேர்ந்தவர்களுக்கு விருந்து நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இதுகுறித்து பிரகாஷ்ராஜ் தினகரன் நிருபரிடம் கூறுகையில், ‘24ம் தேதி மும்பையில் திருமணம் நடக்கிறது. பிறகு நானும், போனிவர்மாவும் சென்னை, பெங்களூரு, ஐதராபாத்தில் நண்பர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியே விருந்து நிகழ்ச்சி நடத்த உள்ளோம். போனிவர்மா எங்கள் வீட்டு மருமகள். எங்கள் திருமணத்தை ரகசியமாக நடத்தவில்லை. அனைவரது ஆசீர்வாதத்துடனும், ரசிகர்களின் வாழ்த்துகளுடனும் நடத்த உள்ளோம்’ என்றார்.

15 ஆகஸ்ட் 2010

விருந்தாளி-திரை விமர்சனம்.



காதலியை நினைத்து அவள் நினைவுகளோடு வாழும் ஒரு இளைஞனின் கதை.
கோபத்தில் கொலை செய்து விட்டு சிறையில் கம்பி எண்ணுபவர் நாசர். அவரது மகன் ஈஸ்வர். இவர் தனது கிராமத்தில் வட்டிக்கு பணம் கொடுப்பவர். பணம் வசூலிக்கும்போது சிலரிடம் கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும், ஏழைகளிடம் இரக்க குணம் காட்டுபவர்.
ஒரு ஆட்டோக்காரன் பல நாள் டிமிக்கு கொடுத்து அவரை ஏமாற்ற, இவரோ வழியில் ஆட்டோவை மடக்கி பணத்தை கொடுத்தப் பிறகுதான் சாவி என்று முரண்டு பிடிக்க, அதில் பயணியாக வந்த கதாநாயகி தியானா, அவருடன் மோதுகிறார். கோபத்தில் அவளை எடுத்தெறிந்து பேசும் ஈஸ்வர், அவர் தனது ஊர் போஸ்ட்மேனின் மகள் என்றதும், அவள் மீது மரியாதை ஏற்பட்டு, பின்பு அவளை காதலிக்கவும் செய்கிறார்.
ஈஸ்வர் தன் காதலை வெளிப்படுத்த மேற்கொள்ளும் பைத்தியகாரத்தனச் செயல்கள் தியானாவுக்கு பிடித்துப்போகிறது. தன் மீது உயிரையே வைத்திருக்கும் ஈஸ்வரை காதலித்து, அவனுக்காக உயிரையே விடுகிறார் தியானா. அது எதற்கு? எப்படி? என்பது மீதிக் கதை.
புதுமுகமாக இருந்தாலும் ஈஸ்வர் தன்னுடைய கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். வட்டிக்கு கொடுத்த பணத்தை வசூல் செய்யும்போது, அவர் செய்யும் சேட்டைகளும், காதல் வயப்பட்டு தனக்கு தானே கடிதம் எழுதிக் கொண்டு அலைவதும் ரசிக்கக் கூடியது. நல்ல உடல் கட்டமைப்புடன் களம் இறங்கியிருக்கும் இவர் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்தால் களத்தில் நிற்கலாம்.
கதாநாயகி தியானா பட்டணத்துப் பெண்ணாக வந்து படபடத்து பேசுவது, காதல் வயப்படுவது, கொலையைப் பார்த்து, பதறி ஓடி வருவது என அசத்தியிருக்கிறார். சிங்கம் புலி சிரிக்க வைக்கிறேன் என்ற பேரில் பேசி பேசியே நம்மை நெளிய வைக்கிறார் படத்திற்கு வசனம் எழுதியிருப்பவர் இவர்தான். (ஏதாவது ஒன்றை சரியாக செய்யுங்க பாஸ்!). படத்தில் வரும் பாதி வசனங்களை தனக்காகவே எழுதியிருக்கிறார் போலும்! காதலுக்கு பச்சைக் கொடி காட்டுபவராக வரும் கதாபாத்திரத்தில் நாசர் நச்! போலீஸ்காரராக வரும் சேரன் ராஜ், சில நிஜ போலீஸ் அதிகாரிகளை ஞாபகப்படுத்தும் அளவிற்கு இயல்பான நடிப்பை வழங்கி அந்த பாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.
பாடலிலும், பின்னணி இசையிலும் "இவர் யார்?' என்று கேட்க வைக்கிறார் எஸ்.எஸ். குமரன். முருகன் மந்திரம் இயற்றியுள்ள நான்கு பாடல்களும் கவனிக்கத்தக்கது. நாகர்கோவிலின் செழிப்பையும், வனப்பையும் தனது கேமராவில் அள்ளி வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சஜன்.
நண்பனின் காதலுக்கு உதவி செய்ய போய், தன் காதலியை தவற விட்ட ஒரு காதலனையும், அவன் அந்த காதலியையே நினைத்துக் கொண்டு வாழ்வதையும் அழகாகச் சொல்ல வந்த இயக்குநர் வாட்டர்மேன், திரைக்கதையில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம்.
வரவேற்கக் கூடிய விருந்தாளி!

09 ஆகஸ்ட் 2010

இந்தியில் கலக்கப்போகும் ப்ரியாமணி.



திரிஷாவை இந்திக்குக் கூட்டிக் கொண்டு போய் அறிமுகப்படுத்தி வைத்த பிரியதர்ஷன் அடுத்து பிரியா மணியையும் இந்திக்கு அழைத்துச் செல்கிறாராம். பிரியதர்ஷனால் நடிகையானவர் திரிஷா. தமிழில் திரிஷாவை அறிமுகப்படுத்தி வைத்த பிரியதர்ஷன், அவரது இந்தி அறிமுகத்திற்கும் வழிவகுத்தார். அக்ஷ்ய் குமார் தயாரிப்பில் உருவான கட்டா மீத்தா படத்தில் நாயகியாக நடித்து இந்தியிலும் புகுந்து விட்டார் திரிஷா. படம் சிறப்பாக ஓடவே குஷியாகியுள்ளார். இதையடுத்து அடுத்தடுத்து இந்தியில் கலக்க தீர்மானித்துள்ளார். இந்த நிலையில் பிரியா மணியும் இப்போது இந்திக்குப் போகப் போகிறாராம். அவரையும் பிரியதர்ஷன்தான் அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளார். பிரியதர்ஷன் அடுத்து இயக்கும் புல்லட் டிரெய்ன் என்ற படத்தில் பிரியா மணி நடிக்கிறாராம். இதில் அஜய் தேவ்கனும், சுனில் ஷெட்டியும் நாயகர்களாக நடிக்கின்றனர். அதாவது இரட்டை ஹீரோ சப்ஜெக்ட். அதில் ஒரு நாயகிதான் பிரியா மணி. இன்னொரு நாயகியாக நடிக்கவிருப்பது சமீரா ரெட்டியாம். சமீப காலமாகவே கவர்ச்சியில் புது இலக்கணம் படைத்து வரும் பிரியா மணி, இந்தியில் இதைவிட சற்று கூடுதலான கவர்ச்சியுடன் கலக்கத் தயாராகி விட்டாராம். சமீரா வேறு இருப்பதால் அவரை மிஞ்சும் அளவுக்கு பிரியாவின் கவர்ச்சி சேவை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.