பக்கங்கள்

08 அக்டோபர் 2021

பிரபல கவிஞர் பிறைசூடன் காலமானார்!

திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 65.1985-ம் ஆண்டு எம்.எஸ். விஸ்வநாதன் மூலம் திரைத்துறைக்கு அழைத்து வரப்பட்ட இவரது பூர்வீகம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆகும்.சென்னையில் வசித்தாலும் சொந்த ஊரான நன்னிலம் மீது அதிகம் பாசம் வைத்திருந்தார் கவிஞர் பிறைசூடன்.இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப்பாடல்களையும் எழுதியிருக்கிறார். ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்ட இவர், காஞ்சி மஹா பெரியவரின் தீவிர பின்பற்றாளர். மஹா பெரியவா என்ற தலைப்பில் அவரை பெருமைப்படுத்தும் நோக்கில் கவிதை தொகுப்பு ஒன்றை இவர் வெளியிட்டிருக்கிறார்.திரைப்படங்களில் இன்றும் நமது செவிகளில் ரீங்காரமிடும், மீனம்மா மீனம்மா, நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான், ஆட்டமா தேரோட்டமா, சோலைப் பசுங்கிளியே, நடந்தால் இரண்டடி, என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி, இதயமே இதயமே என இன்னும் பல புகழ்பெற்ற பாடல் வரிகளுக்கு கவிஞர் பிறைசூடன் தான் சொந்தக்காரர். பாடலாசிரியர் மட்டுமல்லாமல் இவர் வசன கர்த்தாவும் கூட.ஆஸ்கர் விருதுக்கு இந்திய திரைப்படங்களை பரிந்துரைக்கும் குழுவில் சமீபத்தில் தான் கவிஞர் பிறைசூடம் இடம்பெற்றிருந்தார். இதுமட்டுமல்லாமல் ஏராளமான பட்டிமன்றங்களுக்கும் இவர் தலைமை தாங்கி வந்தார். திரையுலகோடு தனது பணியை நிறுத்திக் கொள்ளாமல் ஆன்மிகப் பணியிலும் அதிகளவில் ஈடுபட்டு வந்தார். மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்த இவர் திடீரென உயிரிழந்தது திரையுலகினரை சோகம் கொள்ளச் செய்துள்ளது. வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே மயக்கமுற்று சரிந்து உயிரிழந்திருக்கிறார்.மறைவின் போது கூட யாருக்கும் எந்த சிரமத்தையும் அளிக்காமல் சென்றுவிட்டார். சென்னை நெசப்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள கவிஞர் பிறைசூடன் உடலுக்கு திரைப்பட இயக்குநர்கள் மற்றும் திரையுலக இசை கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அண்மையில் தான் புகழ்பெற்ற கவிஞர் புலமைப்பித்தனை தமிழ் சினிமா இழந்தது. இப்போது அடுத்தபடியாக மீண்டும் ஒரு நல்ல கவிஞனை தமிழ் சினிமா இழந்திருக்கிறது.

14 மார்ச் 2021

திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்!

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் எஸ்பி ஜனநாதன். தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றவர்;ஷியாம், அருண் விஜய், குட்டி ராதிகா ஆகியோர் நடிப்பில் உருவான இயற்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.இந்த படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றது. தொடர்ந்து ஜீவா, நயன்தாரா நடிப்பில் ஈ படத்தை இயக்கினார். பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் பேராண்மை படத்தை இயக்கினார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா நடிப்பில் புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்ற படத்தை இயக்கினார். எஸ்பி ஜனநாதனின் படங்கள் அனைத்திலும் அரசியலும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளும் பேசப்பட்டிருக்கும்.தற்போது விவசாயிகள் பிரச்சனையை பேசும் வகையில் லாபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் கடந்த வியாழக்கிழமை திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். எடிட்டிங் பணியில் இருந்த அவர், அன்று பகல் வீட்டிற்கு சென்றார். நீண்ட நேரமாகியும் மீண்டும் ஸ்டுடியோவுக்கு திரும்பாததால் அவரது உதவியாளர்கள் வீட்டில் சென்று பார்த்துள்ளனர்.அப்போது சுயநினைவின்றியும், உடலில் எந்த அசைவும் இன்றியும் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியான அவரது உதவியாளர்கள் உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் மூளைச்சாவு அடைந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சற்று கவலைக்கிடமான நிலையில் இருந்த எஸ்பி ஜனநாதனுக்கு ஐசியூவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் எஸ்பி ஜனநாதன் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். எஸ்பி ஜனநாதனின் மறைவு ரசிகர்களையும் திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எஸ்பி ஜனநாதன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இயக்குநர் விருமாண்டி பதிவிட்டுள்ள டிவிட்டில் அண்ணா எப்போதும் அன்பை மட்டும் கொடுத்துக்கொண்டே இருந்தே மனித தெய்வமே தெய்வமாகிவிட்டாய் அண்ணா இயக்குநர்கள் சங்கத்தில் ஆரம்பித்த அண்ணன் ,தம்பி என்ற பாசம் கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்தது படத்தை பார்த்துவிட்டு ஆனந்தமாக பேசிய வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

03 மார்ச் 2021

தயாரிப்பாளர் தவறாக நடக்க முற்பட்டார் என ரெஜினா புகார்!

நடிகை ரெஜினா சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கும்போது தயாரிப்பாளர் ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக சொல்லியுள்ளார். தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரெஜினா அதன் பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன் மற்றும் மாநகரம் ஆகிய படங்களின் மூலம் முன்னணி நடிகையாக மாறினார். தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் ஆரம்பகாலத்தில் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகக் கூறியுள்ளார். அதில் ‘எனக்கு 20 வயது இருக்கும்போது ஒரு தயாரிப்பாளர் கதையை பற்றி சொல்லும்போது சில அட்ஜெஸ்ட்மெண்ட்கள் செய்யவேண்டி இருக்கும் என கூறினார். எனக்கு அது புரியவில்லை. அதனால் என் மேனேஜரிடம் கேட்டேன். அவர் விளக்கி சொன்னதும் எனக்கு புரிந்தது. பின்னர் அவரின் போனை எடுக்கவே இல்லை’ எனக் கூறியுள்ளார்.