பக்கங்கள்

30 ஜனவரி 2012

திரிஷாவா நானா?கோபப்பட்ட தமன்னா.

இரண்டாவது நாயகியாக நடிக்கும் அளவுக்கெல்லாம் தன் மார்க்கெட் அடியாகவில்லை என்று நடிகை தமன்னா கொதித்து விட்டாராம்.
வாமனன் பட இயக்குனர் அகமது, ஜீவாவை வைத்து படம் ஒன்று எடுக்கிறார். இதில் ஜீவாவுக்கு 2 ஜோடிகள். முதல் ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஜீவா, த்ரிஷா முதல் முறையாக இந்த படத்தில் இணைகின்றனர்.
இரண்டாவது நாயகியையும் பெரிய ஆளாகப் பிடிக்க வேண்டும் என்று நினைத்த இயக்குனர் தனது மேனேஜரை தமன்னா வீட்டுக்கு அனுப்பியுள்ளர்.
மேனேஜரும் தமன்னாவை சந்தித்து கதை சொல்லியுள்ளார். கதையை கேட்ட அவர் த்ரிஷாவுக்கு பதிலாக நான் நடிக்க வேண்டுமா அல்லது அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டுமா என்று கோபத்துடன் கேட்டுள்ளார்.
அதற்கு மேனேஜர் சேர்ந்து தான் ஆக்ட் கொடுக்கோணும் என்று சொல்லியுள்ளார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்து விட்டாராம் தமன்னா.
இரண்டாவது நாயகியாக நடிக்கும் அளவுக்கெல்லாம் எனது மார்க்கெட் அடியாகவில்லை. மேலும் எனக்கு அந்த நிலையும் வராது என்று போய் உங்கள் இயக்குனரிடம் கூறுங்கள் என்று விரட்டி விட்டாராம்.
அத்..சரி...!

26 ஜனவரி 2012

வசீகர அமலா!

தமிழ் திரை உலகின் அழகு நிலா அமலா பால். ஒல்லியான தேகம், வசீகரிக்கும் தோற்றம். இன்றைய இளைய தலைமுறை நடிகைகளிலேயே இளைஞர்கள் மட்டுமல்லாது கல்லூரி மாணவிகளிடமும் அதிக மதிப்பெண் பெற்று அழகு நிலாவாக திகழ்கிறார் அமலா பால். மைனாவில் பாவடை தாவணியில் ஆகட்டும், சமீபத்திய வேட்டையில் மாடர்ன் உடையில் கலக்கியது ஆகட்டும் அவரது உடலமைப்பிற்கு அனைத்துமே கச்சிதாமாக பொருந்தியது. அவரது உடல் ஃபிட்னெஸ் ரகசியம் என்ன என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. அது குறித்து அவரே பகிர்ந்து கொண்டது.
ஜங்க் புட் கூடாது:
பசிக்கிறது என்பதற்காக ஜங்க் புட் வகைகளை எந்த சூழ்நிலையிலும் தொடவே கூடாது. அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களையும், சத்தான உணவுகளையும் உட்கொள்ள வேண்டும் இதுதான் என்னுடைய முதல் அட்வைஸ். குண்டான பெண்கள் கண்ட கண்ட ரசாயணங்கள் அடங்கிய மருந்துகளை உட்கொள்வதை விட ஆயுர்வேதா மருந்துகளை உட்கொள்ளவது அவசியம்.
நீச்சல் பயிற்சி:
மனதையும், உடலையும் லேசாக்குவது நீச்சல்தான். எத்தனை வேலை இருந்தாலும் குறைந்த பட்சம் ஒரு மணிநேரமாவது நீந்துவது மிகவும் பிடித்தமானது.
நோ டென்சன், கூல்:
சில வருடங்களுக்கு முன்வரை சரியான டென்சன் பார்ட்டி நான். அது முகத்தில் பிரதிபலித்து சுருக்கத்தை ஏற்படுத்திவிடும்.
இப்பொழுது இடியே விழுந்தாலும் டென்சன் பற்றி கவலைப்படாமல் கூலாக சுற்றிக்கொண்டிருப்பேன். அது அழகில் அப்படியே பிரதிபலிக்கிறது.
அழகும் ஆரோக்கியமும்:
எப்பவுமே சிரிச்ச முகமா இருக்கணும். அழகும் ஆரோக்கியமும் மனசு சம்பந்தப்பட்டது. நல்ல சாப்பாடு, தீவிரப் பயிற்சின்னு இருந்தாலும், மனசுல மகிழ்ச்சி இல்லைன்னா, உடம்பு கன்ட்ரோலை இழந்துடும். எனவே எப்பவுமே மகிழ்ச்சியோட இருந்தா உடலும், மனசும் ஆரோக்கியமாகும். இதுவே என்னோட அழகு ரகசியம் என்று கூறிவிட்டு புன்னகை சிந்தினார் அமலாபால்.

24 ஜனவரி 2012

வருகிறார் நயன்!

பிரபு தேவாவுடன் இப்போதைக்கு கல்யாணம் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் நடிகை நயன்தாரா.
இத்தனை நாள் எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளாமல் இருந்த அவர், இன்று புதிதாக ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்தப் படத்தில் அவர் நாகார்ஜூனாவின் காதலியாக நடிக்கிறார். தசரத் இயக்கும் இந்தப் புதிய படம் முழுக்க முழுக்க காதல் கதையாகும். நாகார்ஜுனாவுடன் ஏற்கெனவே பாஸ் ஐ லவ்யூ படத்தில் நடித்துள்ளார் நயன்.
மே மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் நடிப்புக்கு தான் குட்பை சொல்லவில்லை. தொடர்ந்து நடிப்பேன் என்று அறிவி்த்துள்ளார் நயன்தாரா. இதைத் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்கவும் அவர் தயாராகி வருகிறார்.

21 ஜனவரி 2012

ரஜனிக்கு ஜோடி சோபனா!

சிவா, தளபதி படங்களில் ரஜினியின் ஜோடியாகி ரசிகர்களைக் கவர்ந்தவர், நடிகை ஷோபனா. தேசிய விருதுபெற்ற நடிகை. பின்னாளில் பரத நாட்டியமே போதும் என சினிமாவிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்.
இப்போது மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் ஷோபனா, கோச்சடையானில்.
இந்தப் படத்தில் ஏற்கெனவே பல முக்கிய நட்சத்திரங்கள் ஒப்பந்தமாகியுள்ளனர். பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்த நிலையில் உள்ள கத்ரீனா கைஃப் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
தமிழ் நடிகை சினேகா ரஜினியின் தங்கையாக வருகிறார். ஆதியும், ப்ருத்விராஜும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மோகன்பாபுவின் மகளும், நடிகை-மற்றும் தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு ஒரு முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.
இந்த நட்சத்திரங்களுடன் புதிதாக இணைந்திருப்பவர் ஷோபனா.
படத்துக்கு ஏற்கெனவே ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ஆரம்பித்துவிட்டார். கே எஸ் ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குநர் மேற்பார்வை செய்ய, சௌந்தர்யா இயக்கும் படம் இது!

18 ஜனவரி 2012

கொலை வெறி"கேட்கிறதாம் காங்கிரஸ்!

உத்தர பிரதேசத்தில் இடம்பெற இருக்கும் தேர்தல் பிரச்சாரத்தின்போது புகழ்பெற்ற தனுஷின் 'கொல வெறி' பாடலை பயன்படுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பாடலின் உரிமையைப் பெற நடிகர் தனுஷுடன் காங்கிரஸார் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பாடல் உரிமையைக் கொடுக்க முதலில் தனுஷ் மறுத்ததாகவும் அதன் பிறகு ராஜ்பாபர் எம்.பி. அவரை சம்மதிக்க வைத்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பில் தனுஷ் கருத்து தெரிவிக்கையில் 'பாடல் உரிமையை வாங்கும் முயற்சி நடப்பது பற்றி எனக்கு தெரியாது. அந்த பாடலின் உரிமை சோனி நிறுவனத்திடம் உள்ளது.
பாடல் தொடர்பில் அந்நிறுவனத்தாரிடம் பேசினார்களா என்றும் எனக்கு தெரியாது இருப்பினும் அது அரசியல் பாடல் அல்ல என தனுஷ் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

14 ஜனவரி 2012

நான் நடித்ததில் தவறில்லை!

கன்னட நடிகை ரிஷிகா நிர்வாணமாக போஸ் கொடுத்ததைக் கண்டித்து கர்நாடகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் வில்லி வேடத்தில் நடிக்கும் கன்னட படம் ‘யாராத்ரே நானாகெனு’. எஸ்.கே.பஷித் இயக்குகிறார்.
இதில் பிரபல நடிகை நிஷா கோதாரி (ஜேஜே படத்தில் நடித்த அமோகா) போலீசாக நடிக்கிறார். ரிஷிகா சிங்தான் இந்தப் படத்தின் ஹீரோயின். இப்படத்தின் தொடக்க விழா பெங்களூரில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நேற்று நடந்தது.
விழாவை முன்னிட்டு கன்னட பத்திரிகைகளில் நேற்று விளம்பரங்களும் வெளியாயின. அதில் ரிஷிகா சிங் ஆடை எதுவும் இல்லாமல் உடல் முழுவதும் பெயின்ட் அடித்துக்கொண்டு நிர்வாண போஸ் கொடுப்பதுபோன்ற போட்டோ வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
ஆபாச போஸ் கொடுத்ததற்காக ரிஷிகாவுக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தன. பட விழா நடந்த ஸ்டுடியோ முன்பு எதிர்ப்பு கோஷங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆனால் இதற்காக ரிஷிகா கவலைப்படவில்லை. அவர் கூறுகையில், "நான் போஸ் கொடுத்ததில் எந்த தவறும் இல்லை. படத்துக்கு இக்காட்சி தேவைப்பட்டதால் போஸ் தந்தேன். பரபரப்புக்காக கொடுக்கவில்லை" என்றார். சமீபத்தில் தண்டுபால்யா என்ற படத்தில் பூஜாகாந்தி நிர்வாணமாக நடித்தற்கு கன்னட அமைப்புகள் சில கண்டனம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து தான் அப்படி நடிக்கவில்லை என அவர் மறுத்திருந்தது நினைவிருக்கலாம்!

09 ஜனவரி 2012

சம்பளம் கேட்டு நிக்கோல் முறைப்பாடு.

ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் நடித்த எனக்கு ரூ. 50,000 சம்பளப் பாக்கி வைத்துள்ளனர். அதை வசூலித்துத் தர வேண்டும் என்று அந்தப் படத்திலிருந்து பாதியிலேயே வெளியேறி விட்டதாக கூறப்பட்டவரான நடிகை நிக்கோல் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ராஜ்கிருஷ்ணா என்பவர் இயக்கும் படம் ஒரு நடிகையின் வாக்குமூலம். ஒரு நடிகையின் கதையாக இது தயாராகியுள்ளது. இப்படத்தில் நாயகியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். இதில் 2வது நாயகியாக நடித்தவர் நிக்கோல்.
ஆனால் படத்தின் பாதியிலேயே இவர் ஒத்துழைப்பு தராமல் விலகிப் போய் விட்டதாகவும், இதனால் தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் ராஜ்கிருஷ்ணா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தநிலையில் நிக்கோல் நடிகர் சங்கத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், இப்படத்தில் நடித்த எனக்கு ரூ. 50,000 சம்பளப் பாக்கி வைத்துள்ளனர். அதை வாங்கித் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
விரைவில் நடிகர் சங்க நிர்வாகிகள் பஞ்சாயத்தைக் கூட்டி பிரச்சினையைத் தீர்ப்பார்கள் என்று தெரிகிறது.

07 ஜனவரி 2012

நட்பு மட்டும்தான்..வேறொன்றுமில்லை.

தெலுங்கு நடிகர் ராணாவுடன் எனக்கு காதல் என்று வந்த செய்திகளில் உண்மையில்லை. அவரும் நானும் நல்ல நண்பர்கள். தினமும் அதிகாலை மூன்று மணிக்கு நாங்கள் பேசிக் கொள்வோம், என்று கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.
தெலுங்கில் லீடர் படம் மூலமாக நாயகனாக அறிமுகமானவர் டக்குபதி ராணா. இந்திப் படங்களிலும் நடிக்கிறார். தமிழில் 'வடசென்னை' என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்கிறார்.
இவர் பிரபல தயாரிப்பாளர் டி.ராமாநாயுடுவின் பேரன். நடிகர் நாகார்ஜுனாவின் மருமகன். பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் நிறைய நடிகைகள் இவருக்கு காதல் வலை வீசினர். இப்போதும் யாராவது ஒருவருடன் இவரை இணைத்து கிசுகிசுக்கள் வருவது சகஜமாகிவிட்டது. பிபாஷா பாசு, ஸ்ரேயா, தமன்னா என நிறைய பேருடன் கிகிசுக்கப்பட்டுவிட்டார்.
இப்போது இந்த லிஸ்டில் வந்திருப்பவர் த்ரிஷா. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவெல்லாம் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் புத்தாண்டை கோவாவில் கொண்டாடி விட்டு திரும்பியுள்ளனர். ராணாவை காதலிக்கிறீர்களா? என்று திரிஷாவிடம் கேட்டதற்கு, அவர் பதில் கூறுகையில், "சினிமாவில் அறிமுகமானதிலிருந்து என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வந்துவிட்டன.
முதலில் எனக்கு அது கஷ்டமாக இருந்தாலும் பிறகு ஈஸியாக எடுத்துக் கொண்டேன். முன்பெல்லாம் அந்த நடிகருடன் சுற்றுகிறேன். இந்த நடிகருடன் சுற்றுகிறேன் என்றுதான் செய்திகள் வந்தன. இப்போது காதல், திருமணம் என்று வருகிறது.
ராணாவுடன் காதலா?
தெலுங்கு நடிகர் ராணாவை எனக்கு பத்து வருடமாக தெரியும். எனக்கு அவர் முக்கியமான நண்பர். அதனால் அவருடன் சேர்ந்து வெளியே போகிறேன். எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் நிறைய பேர் உள்ளனர். எனக்கும் ராணாவுக்கும் காதல் என்று வதந்திகள் பரவியிருப்பது அடிப்படை இல்லாதது.
ராணா இனிமையானவர். விருந்துகளில் அதிகாலை மூன்று மணிவரை என்னுடன் இருக்கும் நண்பர் அவர். அவருடன் இருப்பது இனிமையாக இருக்கும். 10 வருஷமாக நாங்கள் பழகுகிறோம். இந்த மாதிரி எத்தனை நண்பர்களை பார்க்க முடியும்? ஒரு நண்பராக அவரை நான் 'லவ்' பண்றேன்!
சினிமாவில் சாதிக்க நிறைய இருக்கிறது. இப்போது திருமணம் எனக்கு முக்கியம் அல்ல. திருமணம் முடிவானதும் அதை பத்திரிகையாளர்களுக்கு உடனடியாக தெரிவிப்பேன். ரகசிய திருமணம் செய்து கொள்ளமாட்டேன்," என்றார்.

05 ஜனவரி 2012

நமீதாவும் காதலும்.

வக்கீல் ஒருவருடன் காதல் என பத்திரிகைகளில் என்னைப் பற்றி வந்துள்ள செய்தி இந்த ஆண்டின் மிகப் பெரிய ஜோக் என்று கூறியுள்ளார் நடிகை நமீதா.
தமிழ் சினிமாவின் கவர்ச்சிப் புயல் நடிகை நமீதா. அஜீத், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர், இப்போது நல்ல கதையுள்ள வேடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பிஸியாக உள்ளார்.
நடிப்புத் தொழிலுடன் கூடவே, ரியல் எஸ்டேட் தொழிலிலும் கால்பதித்துள்ளார். இதற்கென மும்பையில் பெரிய அலுவலகம் அமைத்துள்ளார். ஆம்பி வேலி, சென்னை உள்ளிட்ட இடங்களில் தனது ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ள நமீதா, பெரும்பாலும் தங்குவது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில்தான்.
இந்த நிலையில் நமீதா தனது நண்பர் பரத் கபூரைப் பிரிந்து, வக்கீல் ஒருவருடன் காதல் வயப்பட்டிருப்பதாக செய்தி வெளியானது.
இதுகுறித்து நமீதாவைத் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.
செய்தியைக் கேட்டு சிரித்த நமீதா, அடுத்து இப்படிச் சொன்னார்:
"சினிமாவில் இந்த ஆண்டின் மிகப் பெரிய ஜோக் இதுவாகத்தான் இருக்கும். என் அலுவலகத்தில் மூன்று வக்கீல்கள் இருக்கிறார்கள். மூவருக்கும் வயது 60க்கும் மேல்!
60 வயதுக்கு மேற்பட்ட ஒருவருடன் சுற்ற வேண்டிய அவசியம் எனக்கு ஏன் வரப்போகுது... எழுதுவதற்கு முன் கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டாங்களா?
தயவு செய்து எங்கப்பா கிட்ட இந்த சமாச்சாரத்தை சொல்லிடாதீங்க. ஏன்னா எங்க ஆபீஸ்ல இருக்கிற மூன்று வக்கீல்களின் வேலையும் போயிடும். வயசானவங்க பாவம் சும்மா விடாது!" என்றார் மாறாத சிரிப்புடன்.

02 ஜனவரி 2012

முதல்வரின் நடன ஆசிரியை மரணம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரபல நடிகர் கமல்ஹாஸன் உள்ளிட்டோருக்கு நடனம் கற்றுத் தந்த கே ஜே சரஸா இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 72.
சென்னை மந்தவெளியில் சரசாலயா என்ற பெயரில் நடனப்பள்ளி நடத்தி வந்தார் சரஸா.
நடிக்க வரும் முன்பும், நடிகையான பின்பும் இவரிடம்தான் நடனம் கற்றுக் கொண்டாராம் இன்றைய முதல்வர் ஜெயலலிதா. பிரபல நடிகர் கமல்ஹாஸனுக்கும் ஆரம்ப நாட்களில் நடன ஆசிரியை சரஸாதான்.
இவர்களைத் தவிர, பிரபல டான்ஸ் மாஸ்டர் ரகுராம், பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கும் நடிகை ஷோபனா, சொர்ணமால்யா போன்றவர்களும் நடனம் கற்றுக் கொண்டனர்.
இன்று காலை மலர் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
சரஸா கடைசி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. தனது தங்கை சீதாவின் மகள் ராஜலட்சுமியை சுவீகாரம் எடுத்துக் கொண்டார். இந்த ராஜலட்சுமி முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபுவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் அடக்கம் நடைபெறுகிறது.