பக்கங்கள்

28 பிப்ரவரி 2011

சேவை செய்யும் ஜெனிலியா!

வேலாயுதம், உருமி, தெலுங்கு-இந்திப் படங்கள் என பிஸியாக இருந்தாலும், நேரம் கிடைக்கும்போது தன்னால் முடிந்த சேவையையும் செய்கிறாராம் ஜெனிலியா.
தற்போது நைட் கிளப் பார் ஒன்றில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அபலை பெண்களுக்காக நிதி திரட்ட முடிவு செய்துள்ளாராம் ஜெனிலியா.
இதுகுறித்து ஜெனிலியா கூறுகையில், "ஆதரவற்ற பெண்களுக்கும், கஷ்டப்படுகிற பெண்களுக்கும் உதவி செய்கிற அமைப்பு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக நைட் கிளப்பில் ஒரு நாள் முழுவதும் இருக்க முடிவு செய்துள்ளேன். அங்கு வருபவர்களை வரவேற்பேன், கலந்துரையாடவும் செய்வேன். இது போன்ற சமூக சேவை பணிகளில் எனக்கு ஈடுபாடு உண்டு.
கொடுமைகள், கஷ்டங்களை எதிர்த்து போராடும் பலம் பெண்களிடம் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு கல்வி அறிவு கொடுத்தால் அந்த பெண்ணின் குடும்பமே நன்றாக இருக்கும், அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். அதனால்தான் என்னால் முடிந்த இந்த உதவியைச் செய்கிறேன்", என்றார்.

25 பிப்ரவரி 2011

தணிக்கைக்குழு கத்தரித்த வசனம்!

சிவசிவா’ படத்தில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதனின் செக்ஸ் லீலை தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதற்கு சென்சார் குழு ஆட்சேபம் தெரிவித்தது.
சிவாஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நாயகர்களாக குமரன் கார்த்திக், சிவாஷ் ஆகியோரும் நாயகிகளாக சுகானி, நட்சத்திராவும் நடித்துள்ளனர்.
இந்த படம் நேற்று தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. படத்தில் காஞ்சீபுரம் கோவில் செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் காட்சிகள் இடம் பெற்றிருந்ததற்கு தணிக்கைக் குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே அந்த வசனங்களை நீக்கிவிட்டு யு சான்றிதழ் அளித்துள்ளனர்.
இதுபற்றி இயக்குனர் சிவாஷ் கூறுகையில், “நாம் சாமி என்று கடவுளையும் கோவில் குருக்களையும்தான் ஒப்பிடுகிறோம். அந்த குருக்களே தப்பாக நடந்து கொள்ளும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. காதல் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதுவே குருக்களுக்கு வந்தால் சமுதாயம் எப்படி பாதிக்கப்படும் என்பதைத்தான் இந்தப் படத்தில் காட்சிபடுத்தியுள்ளோம்.
இப்படத்தில் அர்ச்சகர் தேவநாதனின் செக்ஸ் லீலைகள் பற்றி இடம் பெற்றுள்ள வசனங்களுக்கு தணிக்கை குழுவினர் ஆட்சேபம் தெரிவித்து நீக்கிவிட்டனர். வேறு என்ன சொல்வது?” என்றார்.

24 பிப்ரவரி 2011

ஸ்ருதிக்கு சிபார்சு செய்த சித்தார்த்!

தெலுங்கு படத்தில் ஸ்ருதி அறிமுகமானதிலிருந்து வாய்ப்புகள் வந்தாலும், தனக்கு பொருத்தமான ரோலை எதிர்பார்த்தாராம்.
இதற்கிடையில் தெலுங்கு படங்களில் நடித்து வந்த 'பாய்ஸ்' சித்தார்த், ஸ்ருதி இருவரையும் இணைத்து கிசுகிசு பரவியது.
தெலுங்கில் அறிமுக டைரக்டர் வேணு ஸ்ரீ ராம் இயக்க உள்ள படத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்கிறாராம். இவருக்கு ஜோடியாக நடிக்க நித்யா மேனனிடம் பேசியிருந்தார்களாம்.
சித்து படத்தின் டைரக்டர் மற்றும் புரொட்யூசரிடம் பேசி நித்யாவை கழட்டி விட்டாராம். படத்தில் ஸ்ருதியை இணைத்து கொள்ள ஏற்பாடும் செய்தாராம் சித்தார்த்.
இந்த கூத்தெல்லாம் நடப்பதற்கு முன்பு அம்ரிதா ராவை நாயகியாக நடிக்க வைக்கும் யோசனையில் இருந்தார்களாம்.
சில கருத்து வேறுபாடுகளால் அம்ரிதாவையும் கடைசியில் தூக்கி கடாசி விட்டார்களாம்.

23 பிப்ரவரி 2011

த்ரிஷா நடிக்கும் மொழிமாற்றுப் படம்.

மதுர் பண்டார்கர் இந்தியில் இயக்கிய ஃபேஷன் படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதன் இந்திப் பதிப்பில் பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை ப்ரியங்கா சோப்ரா நடித்திருந்தார். இன்னொரு நாயகியாக கங்னா ரனவத் நடித்திருந்தார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பை யுடிவி நிறுவனம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. ஒரு நாயகியாக த்ரிஷா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னொரு நாயகி வேடத்தில் ப்ரியாமணி நடிக்கிறாராம்.
தெலுங்கிலும் இந்தப் படம் தயாராகிறது. முன்னணி இயக்குநர் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என்கிறார்கள்.
மாடல் உலக அழகிகளைப் பற்றிய படம் என்பதால், மிகுந்த பொருட்செலவில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கிறார்கள்.
திருமணம், புதுப்படங்களில் நடிக்க மறுப்பு என்று த்ரிஷா பற்றி செய்திகள் வந்த நிலையில், இப்போது பெரிய பட வாய்ப்பை அவர் ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

21 பிப்ரவரி 2011

ரஜனிகாந்த் ஜோடி சினேகா!

ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சினேகாவிடம் பேசி வருகிறார்கள். நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு மேலானாலும் ரஜினிக்கு மட்டும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை சினேகாவுக்கு. குசேலன் படத்தில் ரஜினியுடன் ஒரு காட்சியில் மட்டும் தோன்றினார். இப்போது ராணாவில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ரஜினி மூன்று வேடங்களில் தோன்றும் இப்படத்தில் தீபிகா படுகோன் மட்டுமே ஹீரோயினாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளார். இன்னும் இரு நாயகிகளாக அனுஷ்கா மற்றும் அசின் நடிக்கக் கூடும் என்றார்கள். ஆனால் அசின் நடிக்க ரசிகர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே நிச்சயம் அசின் நடிக்கமாட்டார் என்கிறார்கள். இப்போது அந்த வேடத்துக்குதான் சினேகாவிடம் பேசியுள்ளனர் ராணா தரப்பிலிருந்து. ஏற்கெனவே ரஜினி மகள் சௌந்தர்யாவின் ஆக்கர்ஸ் ஸ்டுடியோ தயாரித்த கோவா படத்தில் நாயகியாக நடித்தவர் சினேகா. எனவேதான் மீண்டும் சினேகாவையே அணுகியுள்ளனராம்.

18 பிப்ரவரி 2011

த்ரிஷாவிற்கு முத்தம் கொடுத்த அஜித்!

முத்தக் காட்சி மட்டுமல்ல மத்தக் காட்சி எதிலும் ஆர்வம் காட்டாதவர் அ‌‌ஜீத். அவரையே மல்லுக்கட்டி முத்தம் கொடுக்க வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு.
மங்காத்தாவில் அ‌‌ஜீத், த்‌ரிஷா காதல் எபிசோட் அவ்வளவு க்யூட்டாக வந்திருக்கிறது என ஆனந்தப்படுகிறார்கள். முத்தம் இல்லாத காதல் முந்தி‌ரி இல்லாத பாயாசம்தானே? அதனால் ஒரு முத்தக் காட்சி அவசியம் என அ‌‌ஜீத்தையும், த்‌ரிஷாவையும் முத்தமிட வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு.
முதலில் தயங்கினாலும் அ‌‌ஜீத் நன்றாகவே கொடுத்திருக்கிறாராம் முத்தம்.

17 பிப்ரவரி 2011

விக்ரம் நடிக்கும் பிதா!

இயக்குநர் விஜய் டைரக்ஷனில் விக்ரம் அடுத்து நடிக்கும் படத்துக்கு தெய்வமகன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் இப்போது இந்தப் படத்தின் தலைப்பு பிதா என மாற்றப்பட்டுள்ளது.
தெய்வமகன், சிவாஜி கணேசன் நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம். இந்தப் பெயரில் மீண்டும் படமெடுக்க சிவாஜி பிலிம்ஸ் முடிவு செய்துள்ளதால், அந்த தலைப்பு விக்ரம் படத்துக்குக் கிடைக்கவில்லையாம்.
எனவே பிதா என்ற பெயரைப் பதிவு செய்துள்ளனர். இந்தப் படத்தில் அனுஷ்காவும் அமலா பாலும் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள்.
முழுக்க முழுக்க காதல் மற்றும் குடும்ப சென்டிமெண்ட் அடிப்படையில் உருவாகும் படம் இது. முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

15 பிப்ரவரி 2011

ரஜனியுடன் நடிப்பதில் பெருமை என்கிறார் தீபிகா!

ரஜினியின் ராணா படத்தி்ல் அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் எனது திரையுலக வாழ்க்கைக்கு தனி மரியாதை கிடைத்துள்ளது, என்கிறார் பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன்.
ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தில் அவருக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இதில் இளைஞராக வரும் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தீபிகா படுகோன் கூறுகையில், "ரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. அது இத்தனை சீக்கிரம் நிறைவேறும் என்று நினைக்கவில்லை. அடுத்தடுத்த படங்களில் நான் பிஸாயாக இருந்தேன். ஆனாலும், யாருக்கு நான் விசிறியாக இருந்தேனோ, அவருடன் ஜோடியாகவே நடிக்க வாய்ப்பு வந்ததால், இந்தப் படத்துக்கே முன்னுரிமை தந்தேன்.
என்னைப் பொறுத்தவரை, எனது கேரியருக்குப் பெருமையும் அங்கீகாரமும் ரஜினி சாருடன் நடிப்பதால் கிடைத்துள்ளது என நம்புகிறேன்", என்றார்.
ரஜினியின் மற்ற இரு ஹீரோயின்கள் குறித்து இன்னும் மவுனம் காக்கிறது ராணா தரப்பு.

13 பிப்ரவரி 2011

ஒன்றையே திரும்பத் திரும்ப எத்தனை நாளைக்கு!

ஒரே கவர்ச்சியை எத்தனை நாளைக்குத்தான் ரசித்துக் கொண்டிருக்க முடியும். எல்லோருக்கும் மாறுதல் தேவைப்படும். அப்போது நான் முதலிடத்தை பிடிப்பேன், என்று ரம்யா நம்பீசன் கூறியுள்ளார். ராமன் தேடிய சீதை படத்தில் அறிமுகமான அழகுப்பெண் ரம்யா நம்பீசன், இளைஞன் படத்தின் அழகை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி நடித்திருந்தார். அவரது அழகுக்காகவே படங்கள் அணிவகுத்து நிற்கும் என்று பாமர ரசிகன் போட்ட கணக்கு பொய்த்துப் போகும் அளவுக்கு வாய்ப்புகள் வரவே இல்லை. இருந்தாலும் அம்மணிக்கு தன்னம்பிக்கை ரொம்பவே ஜாஸ்தி. இன்னமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் ரம்யாவிடம், தமிழ் சினிமாவில் முன்னணி அந்தஸ்துக்கு உங்களால் உயர முடியுமா? என்று கேட்டால், நிதானத்துடன் பதில் சொல்கிறார்.
அனுஷ்கா, அசின், நயன்தாரா, தமன்னா, ஹன்சிகா மோத்வானி, தப்சி உள்ளிட்ட ஹீரோயின்ஸ் போலவேதான் நானும் கவர்ச்சியை காட்டுறேன். ஆனால் என் முறை இன்னும் வரவில்லை. அவ்வளவுதான். ஒரே கவர்ச்சியை எத்தனை நாட்கள்தான் ரசித்துக் கொண்டிருக்க முடியும். எல்லாருக்கும் ஒரு மாறுதல் தேவைப்படும். அப்போது நானும் அவர்களின் இடத்தை பிடிப்பேன். அதுவும் கொஞ்ச நாளைக்குதான். அப்புறம் நானும் ரசிகர்களுக்கு அலுத்துப் போவேன். எனக்கு பின்னால் வேறொரு நடிகை வருவார். இதுதானே சர்க்கிள் என்கிறார், மிகத்தெளிவாக! பொண்ணு பொழச்சிக்கும்!!

10 பிப்ரவரி 2011

காதல் வலையில் தமன்........?

ஆந்திராவின் பெரிய நடிகரும், அரசியல்வாதியுமான ஒருவரது வாரிசுக்கு தமன நடிகை காதல் வலை வீசி, அதில் வெற்றியும் கண்டிருப்பதுதான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு தகவல்.
தமிழில் முன்னணி இடத்தில் இருந்து கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் தமன நடிகை, தமிழ் சினிமா வாரிசு நடிகர் ஒருவரை காதலிப்பதாக ஆரம்பத்தில் தகவல் கசிந்தது. அதனை மறுத்து வந்த நிலையில் அம்மணியின் பார்வை ஆந்திரதேசம் பக்கம் வீசியிருக்கிறது.
ஆந்திராவின் பிரபல நடிகரும், அரசியல் கட்சி ஆரம்பித்து, அதனை சமீபத்தில் ஆளும் மத்திய கட்சியுடன் இணைத்துக் கொண்டிருக்கும் சீவி நடிகரின் மகன்தான் தமனத்தின் வலையில் விழுந்தது.
இப்போது இரண்டு பேரும் போனில் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பதாக சொல்கிறது ஆந்திர பத்திரிகைகளின் கிசுகிசு பகுதி.

07 பிப்ரவரி 2011

திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்!

ஸ்ரேயா இன்றைக்கு வெறும் நடிகை மட்டுமல்ல, பல கல்வி மையங்களில் கவுரவ விரிவுரையாளர் ரேஞ்சுக்கு சினிமா பற்றி பாடங்கள் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் அவர் அகமதாபாத் ஐஐஎம்மில் கூட உரையாற்றினார். சென்னை ஐஐடியில் கூட பேசியிருக்கிறார்.
சினிமாவின் வெற்றி தோல்வி, மார்க்கெட்டிங் முறைகள் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்கிறார், நுனி நாக்கு ஆங்கிலத்தில்.
சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார். அப்போது அவர் கூறுகையில்,
"தீபா மேத்தா இயக்கும் விண்ட்ஸ் ஆப் சேஞ்ச் என்ற ஆங்கில படத்தில் இப்போது நடித்து வருகிறேன். இது எனக்கு மூன்றாவது ஆங்கில படம். தமிழ், ஹாலிவுட் படங்களில் பெரிய வித்தியாசம் இல்லை.
இயக்குனர்கள், கதைகள் மற்றும் படங்களை எடுக்கும் முறைகள் போன்றவைகளே படத்தின் தரத்தை நிர்ணயிக்கின்றன. வெற்றி-தோல்வி கடவுள் கையில் உள்ளது. சில நேரம் திறமையான நடிகர்கள் கூட பிரபலமாக முடியாமல் உள்ளனர்.
கலைஞர்களுக்கு தன்னம்பிக்கை அவசியம். எவ்வளவு கஷ்டத்திலும் எழுந்து நிற்பேன் என்று நம்ப வேண்டும். வாரிசு நடிகர்களால் மட்டுமே நிலைக்க முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை. இந்தியாவில் உள்ள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் யாரும் வாரீசு நடிகர்கள் இல்லை. திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்", என்றார்.

04 பிப்ரவரி 2011

திரிஷாவிற்கு திருமணம்!

இந்த ஆண்டு இரு முன்னணி நடிகைகளின் திருமணத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள். ஒன்று நயன்தாரா. அடுத்து? த்ரிஷா! ஆம்... த்ரிஷாவுக்கு போரடித்து விட்டதாம் சினிமா.
ரசிகர்களும் கிட்டத்தட்ட அதே மனநிலைக்கு வந்துவிட்டதை அவரும் உணர்ந்து விட்டதால், திருமணம் பற்றி தீவிரமாக யோசித்து வருகிறாராம்.
இந்திப் படங்களில் பெரிதாகக் கலக்கலாம் என்ற ஆசையில் மும்பையில் ஃப்ளாட் எடுத்துக் கூட தங்கிப் பார்த்தார். ஆனால் நடித்த ஒரே படமும் தோல்வியடைந்து விட்டதால் வேறு வாய்ப்புகள் இல்லாத நிலை. சில பாலிவுட் உப்புமா கம்பெனிகள் தான் அவரைத் தேடி வந்தார்களாம். இனி மும்பை வேலைக்காகாது என்று உணர்ந்து ஃப்ளாட்டைக் காலி செய்து விட்டு சென்னைக்கு வந்தார்.
அப்போதே த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் மகளுக்கு மாப்பிள்ளை தேடும் படலத்தில் இறங்கி விட்டாராம். மாப்பிள்ளை சரியாக அமையும் பட்சத்தில் இந்த ஆண்டே திருமணம் என்கிறார்கள் த்ரிஷா குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்.
இப்போதைக்கு தெலுங்கில் இரு படங்கள், தமிழில் அஜீத்துடன் மங்காத்தா என மூன்று படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா. வேறு புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் படங்கள் முடிந்ததும், திருமண அறிவிப்பை வெளியிடக் கூடும் என்கிறார்கள்.