பக்கங்கள்

13 பிப்ரவரி 2011

ஒன்றையே திரும்பத் திரும்ப எத்தனை நாளைக்கு!

ஒரே கவர்ச்சியை எத்தனை நாளைக்குத்தான் ரசித்துக் கொண்டிருக்க முடியும். எல்லோருக்கும் மாறுதல் தேவைப்படும். அப்போது நான் முதலிடத்தை பிடிப்பேன், என்று ரம்யா நம்பீசன் கூறியுள்ளார். ராமன் தேடிய சீதை படத்தில் அறிமுகமான அழகுப்பெண் ரம்யா நம்பீசன், இளைஞன் படத்தின் அழகை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி நடித்திருந்தார். அவரது அழகுக்காகவே படங்கள் அணிவகுத்து நிற்கும் என்று பாமர ரசிகன் போட்ட கணக்கு பொய்த்துப் போகும் அளவுக்கு வாய்ப்புகள் வரவே இல்லை. இருந்தாலும் அம்மணிக்கு தன்னம்பிக்கை ரொம்பவே ஜாஸ்தி. இன்னமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் ரம்யாவிடம், தமிழ் சினிமாவில் முன்னணி அந்தஸ்துக்கு உங்களால் உயர முடியுமா? என்று கேட்டால், நிதானத்துடன் பதில் சொல்கிறார்.
அனுஷ்கா, அசின், நயன்தாரா, தமன்னா, ஹன்சிகா மோத்வானி, தப்சி உள்ளிட்ட ஹீரோயின்ஸ் போலவேதான் நானும் கவர்ச்சியை காட்டுறேன். ஆனால் என் முறை இன்னும் வரவில்லை. அவ்வளவுதான். ஒரே கவர்ச்சியை எத்தனை நாட்கள்தான் ரசித்துக் கொண்டிருக்க முடியும். எல்லாருக்கும் ஒரு மாறுதல் தேவைப்படும். அப்போது நானும் அவர்களின் இடத்தை பிடிப்பேன். அதுவும் கொஞ்ச நாளைக்குதான். அப்புறம் நானும் ரசிகர்களுக்கு அலுத்துப் போவேன். எனக்கு பின்னால் வேறொரு நடிகை வருவார். இதுதானே சர்க்கிள் என்கிறார், மிகத்தெளிவாக! பொண்ணு பொழச்சிக்கும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக