பக்கங்கள்

08 செப்டம்பர் 2010

நித்தியானந்தாவின் லீலை திரைப்படமாக!

நித்தியானந்தா-ரஞ்சிதா செக்ஸ் லீலை குறித்து தெலுங்கில் சினிமாப் படம் எடுக்கவுள்ளனராம். நிஜக் கதைகளை சூட்டோடு சூடாக படமாக எடுத்து விடுவது இந்தியத் திரையுலகினரின் வழக்கம். அதுவும் செக்ஸ் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் என்றால் சட்டுப் புட்டென்று படமாக்கி விடுவார்கள்.
அந்தவகையில் தற்போது நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரத்தையும் படமாக்க கிளம்பியுள்ளனர்-தெலுங்கில். நித்தியானந்தாவுக்கு படுக்கை அறையில் பலவிதமான சேவைகளை நடிகை ரஞ்சிதா செய்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் சினிமா பாணியில் நான் அவன் இல்லை என்று கூறி விட்டார் நித்தியானந்தா.
ரஞ்சிதாவும், நான் செய்தது சேவை, வீடியோவை மார்பிங் செய்து விட்டனர் என்று கூறி விட்டார். தற்போது இந்த வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. நடந்தது குற்றமா இல்லையா, சரியா, தவறா என்றும் யாருக்கும் புரியவில்லை. நித்தியானந்தாவும் வழக்கம் போல தனது பெங்களூர் மடத்தில் போதனை செய்ய ஆரம்பித்து விட்டார்.
இந்த நிலையில், நித்தியானந்தா கதையை படமாக்கவுள்ளனர் தெலுங்கில். நித்தியானந்தா வேடத்தில் ராஜேந்திர பிரசாத் நடிக்கப் போகிறாராம். இவர் தெலுங்கில் பிரபலமான காமெடி ஹீரோ ஆவார். சிவாஜி, சாய்குமார் ஆகியோரும் உள்ளனர். ஹைதராபாத்தில் சமீபத்தில் படத்திற்கு பூஜை போட்டனர். அப்போது நித்தியானந்தா கெட்டப்பில் வந்தாராம் ராஜேந்திர பிரசாத்.
கதை என்னவோ நித்தியானந்தா கதைதான் என்றாலும் அதை இப்போதைக்கு ரகசியமாகவே வைத்துள்ளனராம். கேஸ் ஏதாவது வந்தால் சிக்கலாகி விடுமே என்பதற்காக இந்த அடக்கி வாசிப்பாம். ரஞ்சிதா கேரக்டருக்குரிய நடிகையை வலைவீசி தேடும் பணி தற்போது நடந்து வருகிறதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக