பக்கங்கள்

24 செப்டம்பர் 2010

வில்லியாக நடிக்க விரும்புகிறேன்-பியா.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோவாÕவில் நடித்தார் பியா. அடுத்து ஜீவாவுடன் ‘கோ படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது:
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘கோவில் நடித்திருக்கிறேன். இப்பட ஷூட்டிங் முடியும் நிலையில் உள்ளது. இதில் என்ன வேடம் என்பதை இப்போதைக்கு சொல்ல மாட்டேன். இதையடுத்து தெலுங்கு, மலையாள மொழிகளில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ஹீரோயின் வேடத்தில்தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. எந்த வேடமாக இருந்தாலும் நடிப்பேன். வில்லி வேடத்தில் நடித்தால் திறமையை வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன். அப்படியொரு கதாபாத்திரம் பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில் நடிக்க முடிவான பின், போட¢டோக்களை பார்த்தாலே ‘யார் இது பியாவா?Õ என்று பலர் ஆச்சர்யப்படுவார்கள். இவ்வாறு பியா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக