பக்கங்கள்

30 அக்டோபர் 2010

மீண்டும் ஆட்டம் போடுகிறார் மாளவிகா!

கல்யாணம் பண்ணி, குழந்தை பிறந்து, ஓய்வு முடிந்து மீண்டும் கோலிவுட்டுக்குத் திரும்பிவிட்டார் மாளவிகா.
எம்.ஜி.ஆர் நம்பி தயாரித்து இயக்கும் படம் பொறுத்திரு என்ற படத்தில் ஒரு கவர்ச்சி ஆட்டம் போடுகிறார்.
எம்ஜிஆரின் 'எங்க வீட்டு பிள்ளை' படத்தில் இடம் பெற்ற 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்...' பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாளவிகா நடனமாடுகிறார். எம்ஜிஆர் நம்பியே ஹீரோவாகவும் நடிக்கிறார்.
"நான் பால்காரன் வேடத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். மாளவிகா திருமணத்துக்கு பிறகு முதன் முறையாக நடிகை மாளவிகாவாகவே நடிக்கிறார். கிராமத்துக்கு டீக்கடை திறக்க வரும் அவரை, ஊர் பெரிய மனிதர் என்ற முறையில் வரவேற்கிறேன். மாளவிகாவையும் என்னையும் இணைத்து எனது அத்தை மகள் கனவு காண்பதாக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாட்டுக்கு புதிதாக ட்யூன் போடாமல், 'எங்க வீட்டு பிள்ளை' படத்தில் இடம்பெற்றுள்ள நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்... பாடலையே ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியுள்ளோம்.
மறைந்த எஸ்.எஸ்.சந்திரன் 12 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இதுதான் அவருக்கு கடைசி படம்..." என்றார் இயக்குநர் எம்ஜிஆர் நம்பி.

27 அக்டோபர் 2010

'டைரக்டர் மட்டும் இல்லேன்னா... '-அதிர்ச்சியில் அஞ்சலி!

தம்பி வெட்டோத்தி சுந்தரம் படப்பிடிப்பில் நடந்த திடீர் தாக்குதலில் இயக்குநரால் காப்பாற்றப்பட்டார் நடிகை அஞ்சலி.
இயக்குநர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நான் தப்பித்திருக்கவே முடியாது', என்கிறார் அஞ்சலி அதிர்ச்சி விலகாமல்.
அஞ்சலியும் கரணும் ஜோடியாக நடிக்கும் 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படப்பிடிப்பு குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள மங்கலம் பகுதியில் நடந்தது. நேற்று பகல் அஞ்சலி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.
அப்போது 7 பேர் அடங்கிய கும்பல ஆட்டோவில் வந்து இறங்கி, 'குமரி மாவட்டத்துக்காரன் கதையை எப்படி சினிமாவாக எடுக்கலாம்' என கேட்டு இயக்குனர் வடிவுடையானை அடித்து உதைத்தது. சட்டை கிழிக்கப்பட்டது. கார் உடைக்கப்பட்டது. படப்பிடிப்பு சாதனங்கள் உடைக்கப்பட்டன.
ஹீரோயின் அஞ்சலியையும் தாக்க தேடினார்கள். அப்போது அஞ்சலியை போர்வையால் போர்த்தி ஒரு வீட்டுக்குள் ஒளித்து வைக்கும்படி உதவி இயக்குநர்களுக்கு உத்தரவிட்டார் இயக்குநர். இதர துணை நடிகர், நடிகைகள் அலறியடித்து ஓடினார்கள்.
"தக்க சமயத்தில் இயக்குநரும் உதவி இயக்குநர்களும் என்னைக் காப்பாற்றினார்கள். அந்த கும்பல் கையில் கிடைத்திருந்தால் நான் என்ன ஆகி இருப்பேன் என்று பயமாக இருக்கிறது.." என்றார் அஞ்சலி.

25 அக்டோபர் 2010

தமிழ்,தெலுங்கு இரண்டும்தான் எனது பலம்,களம்.

தமிழ்,தெலுங்கு சினிமாதான் எனது பலம், களம் என்று எனக்கு நன்றாக தெரியும். அதை விட்டு நான் போக மாட்டேன். இந்தியில் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறுவது சரியில்லை. வாய்ப்புகள் வருகின்றன, ஆனால் நல்ல வாய்ப்புகளை மட்டுமே நான் ஏற்பேன் என்று கூறுகிறார் 'தென்னிந்திய தேவதை' திரிஷா.
நடிகர்களுக்கு இணையாக ரசிகர் மன்றம் வைத்து, பேனர் கட்டி, பாலாபிஷேகம் செய்து அசத்தியவர்கள் திரிஷா ரசிகர்கள். தென்னிந்திய தேவதை என்றும் பட்டம் சூட்டி மகிழ்ந்தனர். இதெல்லாம் தமிழிலும், தெலுங்கிலும் திரிஷா படு பிசியாக ஓடிக் கொண்டிருந்தபோது.
இப்போது திரிஷாவின் பரபரப்பு சற்றே அடங்கினாற் போல உள்ளது. காரணம் அவர் திடீரென கட்டா மீட்டா என்று இந்தியில் நடிக்கப் போனதால். அதேசமயம், மறுபடியும் அவர் தமிழிலில் பிசியாகியுள்ளார். கமல்ஹாசனுடன் மன்மதன் அம்பில் நடித்து முடித்துள்ளார். அடுத்து அஜீத்துடன் மங்காத்தா ஆடவுள்ளார்.
இதை வைத்து இந்தியில் வாய்ப்பிழந்து விட்டார் திரிஷா. அதனால்தான் மீண்டும் செளத்துக்கே வந்து விட்டார் என்று செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. இதைக் கேட்டு திரிஷா 'டெர்ரர்ஷா'வாகியுள்ளார். ஏன்தான் இப்படியெல்லாம் வதந்திகள் பரப்புகிறார்களோ என்று அழாத குறையாக புலம்புகிறார்.
கட்டா மீட்டா அருமையான படம். இந்தியில் அதற்கு நல்ல விமர்சனங்கள்தான் வந்தன.அதன் பிறகும் கூட எனக்கு நிறையப் பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனக்கும் நடிக்க வாய்ப்பு இருக்க வேண்டுமே. அப்படிப்பட்ட படங்களைத்தானே நான் ஒப்புக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட வாய்ப்புகளுக்காக மட்டுமே நான் காத்திருக்கிறேன் என்றார் திரிஷா.
அத்தோடு நில்லாமல், எனக்கு தமிழும், தெலுங்கும்தான் உண்மையான பலம், எனக்கான களம். எனவே நான் இங்குதான் அதிக கவனம் செலுத்துவேன். அதுதான் இயல்பு. அப்படித்தான் இப்போது தமிழிலும், தெலுங்கிலும் நடித்து வருகிறேன். ஆனால் தேவையில்லாமல் எனக்கு வாய்ப்புகள் போய் விட்டது என்று வதந்தி பரப்புகிறார்களே என்று விசனப்படுகிறார்.
வதந்தியாளர்களே, பொம்பளங்க பொல்லாப்பு வேண்டாமப்பு, சொல்லிப்புட்டோம், அம்புட்டுதேன்..!

24 அக்டோபர் 2010

தினமும் ஆபாச வார்த்தைகள் மாயா மீது சீதா புகார்!

நடிகைகள் சீதாவுக்கும், மாயாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கூறியுள்ளனர்.
சீதா, மாயா வீடுகள் சாலிகிராமத்தில் உள்ள புஷ்பா காலினியில் அருகருகே உள்ளது.மாயா வீட்டை தாண்டிதான் சீதா வீட்டுக்கு செல்ல வேண்டும். சீதாவை பார்க்க வருபவர்கள் தனது வீட்டு முன்கார்களை நிறுத்தி விடுவதாக மாயா புகார் கூறியுள்ளார்.
சீதா வீட்டுக்கு தினமும் இரவிலும், பகலிலும் நிறைய பேர் காரில் வந்து செல் கிறார்கள். அவர் வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
சீதா வீட்டில் வசிக்கும் சதீஷ் என்னோடு சண்டை போடுகிறார். கொலை மிரட்டலும் விடுக்கின்றார் என்றெல்லாம் மாயா புகார் கூறினார்.
சீதா சார்பில் டி.வி. நடிகர் சதீஷ் போலீஸ் கதிஷனர் அலுவலகத்தில் மாயா தரக்குறைவாக பேசி மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். மாயா குற்றச்சாட்டுகள் பற்றி சீதாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-
மாயா வீடும் என் வீடும் தள்ளித் தள்ளித்தான் இருக்கிறது. என்னுடன் கடந்த இரண்டு வருடமாகவே இவர் சண்டை போட்டு வருகிறார். ரோடு எல்லோருக்கும் பொதுவானது. அதில் யாரோ காரை நிறுத்தினால் நானா பொறுப்பு. சினிமாவில் இருப்பவர்களை பார்ப்பதற்கு ஆட்கள் வரத்தான் செய் வார்கள்.
நடிக்க ஒப்பந்தம் செய்யவும், கதை சொல்ல வும், சூட்டிங்குக்கு அழைத்து போகவும் பலர் வந்து போவது உண்டு. அதை மாயா தவறாக பேசுகிறார். தினமும் தெருவில் நின்று கொண்டு கெட்ட கெட்ட வார்த்தைகளால் என்னை திட்டுகிறார். பெண் தாதாவை போல் மிரட்டுகிறார்.
நான் நாகரீகம் கருதி பதில் பேசுவது இல்லை. ஒதுங்கி போகிறேன். அவரது அடாவடித்தனங்கள் எல்லை மீறி போய்விட்டது. நானும் மாயாவின் தரம் பற்றி பேச முடியும். அவர் எப்படிப்பட்டவர் என்று சினிமா உலகத்துக்கே தெரியும். போலீசார் மாயா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சீதா கூறினார்.

21 அக்டோபர் 2010

அது நானில்லை… ஏமாந்துடாதீங்க!- அசின்.

தன் பெயரில் இணையதளத்தில் தொடர்ந்து மோசடி நடப்பதாகவும், இதைத் தடுக்கக் கோரியும் முடியாததால், ரசிகர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் நடிகை அசின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இணைய தளத்தில் அசின் பெயரில் போலி வெப்சைட்கள் இயங்குகின்றனவாம். ஆர்குட்டிலும் அசின் பெயர் உள்ளது. அசின் பேசுவதுபோல் அவற்றில் தகவல்கள் பரப்பப்பட்டு உள்ளது. அவரது படங்களும் போடப்பட்டு உள்ளது. அதை பார்த்து ரசிகர்கள் அசின் என்று நம்பி பதில்களை அனுப்பி வருகின்றனராம்.
இதுபற்றி அசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும், உடனடியாக இவற்றை தடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும் சில ரசிகர்கள் கேட்கிறபாடில்லையாம். இதனால் அவர்களுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் அசின்.
“இணையதள வெப்சைட்களில் நான் இல்லை. ட்விட்டர், ஆர்குட், பேஷ்புக் போன்ற எதிலும் நான் கிடையாது. எனது பெயரில் போலியாக சிலர் அவற்றை நடத்துவதாக என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. என்னுடைய நண்பர்களும், ரசிகர்களும் அவற்றை உண்மை என்று நம்பி எனக்கு தகவல்கள், கடிதங்கள் அனுப்பி வருகிறார்கள். நான் அவற்றை பார்ப்பதே இல்லை. தயவு செய்து ரசிகர்கள் ஏமாற வேண்டாம். விரைவில் சைபர் கிரைம் பிரிவில் புகார் தரப் போகிறேன்” என்கிறார் அசின்.

20 அக்டோபர் 2010

‘இந்தியாவில் நம்பர் ஒன்…’- த்ரிஷாவின் ஆசை!!

No,one நடிகை என்று பெயர் வாங்கிய பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்கிறார் நடிகை த்ரிஷா.
திரையுலகில் 1999-ல் அறிமுகமானவர் திரிஷா. சாமி, கில்லி போன்ற பல ஹிட்படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கியது.
தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் ஜோடியாக நடித்துள்ளார். காட்டா மீட்டா படம் மூலம் இந்திக்கும் போனார். தற்போது கமல் ஜோடியாக நடித்து வரும் மன்மதன் அம்பு நவம்பரில் வெளியாகிறது.
அஜீத்துடன் மங்காத்தா படத்தில் நடித்து வரும் த்ரிஷா, இந்தப் படம் முடிந்ததும் திருமணம் செய்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. காரணம் அவருக்கு இப்போது வயது 27ஐத் தாண்டிவிட்டது.
ஆனால் த்ரஷாவோ இதனைக் கடுமையாக மறுக்கிறார்.
“என் வயசெல்லாம் ஒரு வயசா… நான் சினிமாவுக்கு வந்து எட்டு வருடங்கள்தான் ஆகின்றன. ஆரம்பத்தில் சுமாரான கதையம்சம் உள்ள படங்களில் நடித்தேன். ஆனால் சமீபகாலமாக நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருகின்றன.
அபியும் நானும், விண்ணைத் தாண்டி வருவயா படங்ககள் சிறந்த கதையம்சம் உள்ளவை மன்மதன் அம்பு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
நம்பர் ஒன் நடிகை என பெயர் வாங்குவதே என் லட்சியம். எனவே திருமணத்துக்கு அவசரப்பட மாட்டேன். திரையுலகில் எனக் கென்று ஒரு அங்கீகாரம் இப்போது தான் கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது.
இந்தியில் நான் நடித்த காட்டா மீட்டா படம் ஹிட்டாக வில்லை என்று பேசுகிறார்கள். நடிப்பதுதான் என் வேலை. படம் வெற்றியா? தோல்வியா என்றெல்லாம் சிந்திக்க மாட்டேன்.
இந்திப் படம் நடித்ததன் மூலம் மும்பையில் நிறைய பேர் பழக்கமாகி இருக்கிறார்கள். மீண்டும் இந்திப் படங்களில் நடிப்பேன், இந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என்ற பெயரெடுத்த பிறகுதான் திருமணம் பற்றி யோசிப்பேன்”, என்றார்.

19 அக்டோபர் 2010

நடிக்க விருப்பம்தான்: ஆசையை போட்டு உடைத்த நயன்தாரா!

நடிக்க எனக்கு விருப்பம்தான். ஆனால் நான் நடிக்க பிரபுதேவா விடமாட்டார் என்று நடிப்பு மீது தனக்கிருந்த ஆசையை போட்டு உடைத்துள்ளார் நடிகை நயன்தாரா.
பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை கை கழுவிவிட்டு நயன்தாராவுடன் வாழத் தயாராகி விட்டார். ரமலத் சட்டப்படி பிரச்னையை அணுகப் போவதாக தெரிந்ததும் அவருடன் சமாதானப் பேச்சிலும் அவர் ஈடுபட்டார்.
இந்த நிலையில் திருமணத்துக்குப் பின் நடிக்கமாட்டேன் என்று கூறி வந்த நயன், திருமணத்துக்கு ஏற்பட்ட தடங்கல்களைப் பார்த்து மனதை மாற்றி்க கொண்டுள்ளார்.
மேலும் எனக்கு நடிக்க விருப்பமே. ஆனால் அவர்தான் விடமாட்டேன்கிறார். அவர்கிட்டயே கேட்டுக்குங்க என்று தயாரிப்பாளர்களை பிரபுதேவா பக்கம் திருப்பி விட்டும் வருகிறார்.

17 அக்டோபர் 2010

காப்பி அடித்தது ஷாருக்கா, ஷங்கரா?

ரஜினியின் எந்திரன் / ரோபோவில் வரும் காட்சியைப் போலவே ஷாரூக்கானின் படத்திலும் ரயில் சண்டைக் காட்சி இடம்பெற்றுள்ளதாம். ஆனால் தனது படத்தில் வருவது போன்ற காட்சி ரோபோவில் வந்து விட்டதால் இப்போது அந்தக் காட்சியை மாற்றத் திட்டமிட்டுள்ளாராம் ஷாருக்.
பெரும் பொருட் செலவில் ரா ஒன் என்ற விஞ்ஞானப் படத்தை எடுத்து வருகிறார் ஷாரூக்கான். இந்தப் படத்தில் ஒரு பிரமாண்டமான ரயில் சண்டைக்காட்சி இடம்பெற்றுள்ளதாம்.
எந்திரன் வெளியான பிறகு, ஷாரூக்கான் அதிர்ச்சியடைந்துவிட்டாராம். காரணம் அந்த ரயில் சண்டைக் காட்சி எந்திரனில் இடம்பெற்றது போலவே அச்சு அசலாக வந்திருந்ததுதானாம்.
இதே காட்சி ரோபோட்டில் இடம் பெற்றிருப்பதால், ரோபோட்டை பார்த்து நாம் காப்பி அடித்து விட்டதாக ரசிகர்கள் சொல்வார்களே என்று ஷாருக்கானிடம் எடுத்துக் கூறியுள்ளனர். இதையடுத்து காட்சியை மாற்றச்சொல்லி விட்டாராம் ஷாரூக்.
ஆனால் அந்த சண்டைக் காட்சிக்கு ஷாரூக் செலவிட்ட தொகை ரூ 3 கோடியாம்.
ஷங்கரை விட பிரமாண்டம்தான்!

15 அக்டோபர் 2010

கண் சிகிச்சையால் பார்வை இழப்பு: அசின் பதில் சொல்ல வேண்டும்!

சிறிலங்க அரசோடு இணைந்து யாழ்ப்பாணத்தில் நடிகை அசின் நடத்திய கண் சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்ற பலர் கண் பார்வை இழந்துள்ளனர். இதற்குப் பொறுப்பேற்று நடிகை அசின் பதில் சொல்ல வேண்டும் என்று மே 17 இயக்கம் கோரியுள்ளது.
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழா (ஐஃபா), தமிழ்த் திரைப்பட உலகம், தமிழர் இயக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிர்ப்பால் படுதோல்வியில் முடிந்தது.
அதன் பிறகு இந்தி நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடித்த ‘ரெடி’ திரைப்பட படபிடிப்பிற்காக இலங்கை சென்ற நடிகை அசின், படபிடிப்பு முடிந்ததும் இலங்கை அரசின் விருந்தினராக தங்கியிருந்தார். அப்போது சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சவின் உதவியுடன் தமிழர் பகுதிகளில் கண் சிகிச்சை முகாம் நடத்தச் சென்றார். யாழ்ப்பாணத்திலும், முல்லைத் தீவிலும் இந்த கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கண் வெண்விழிப்படலத்திற்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மேலும் 10 ஆயிரம் பேருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்போவதாகவும் நடிகை அசின் கூறியிருந்தார்.
நடிகை அசின் முன்னிலையில் நடத்தப்பட்ட அந்த கண் சிகிச்சை முகாமில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பலருக்கு கண் பார்வை போய்விட்ட அதிர்ச்சி செய்து வந்துள்ளது. கண் பார்வை இழந்தவர்கள் மீண்டும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றால், அரசு மருத்துவமனையில் ரூ.4,500 செலுத்த வேண்டும் என்றும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுதாக இருந்தால் ரூ.25,000 வரை செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையை இன்று செய்தியாளர்களிடம் விளக்கிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், சிறிலங்க அரசோடு இணைந்து நடிகை அசின் நடத்திய கண் அறுவை சிகிச்சை முகாம் அவர்களின் வாழ்வை அழித்துவிட்டது என்று குற்றம் சாற்றினார்.
போரினால் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ள மக்களை, மனிதாபிமான போர்வையில் நடத்தப்பட்ட கண் சிகிச்சை முகாமினால் நடிகை அசின் அவர்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளார் என்றும், இதற்காக அவர் ஈழத் தமிழர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.
அசின் நடத்திய கண் சிகிச்சை முகாம் இங்குள்ள நடிகர்கள் சிலருக்கு ஒரு கண் திறப்பாக இருக்கட்டும் என்று கூறிய திருமுருகன், இதற்குப் பிறகாவது சிறிலங்க அரசின் இப்படிப்பட்ட சூழ்ச்சிகளில் தமிழ்த் திரைப்பட நடிகர்களும், நடிகைகளும் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
திருமுருகனுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய இதழாளர் கா.அய்யநாதன், சிறிலங்க அரசிற்கு உண்மையிலேயே தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்துக் கொண்டிருக்கும் ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் அயல் நாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதை ஏன் சிறிலங்க அதிபரின் இளைய சகோதரர் பசில் ராஜபக்ச தடுத்து வருகிறார் என்று கேள்வி எழுப்பினார்.
வன்னி முகாமில் இருந்து தங்கள் வாழ்விடங்களுக்கு மீள் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு ரூ.25,000 நிவாரண உதவி அளித்தது சர்வதேச இடம்பெயர்வோர் அமைப்புதான் (International immigration organization) என்றும், இன்றுவரை சிறிலங்க அரசு அவர்களுக்கு எந்த உதவியையும் செய்யவில்லை என்றும் கூறிய அய்யநாதன், பிழைக்க வழியின்றி, கண்ணி வெடிகளை அகற்றுதல் போன்ற மிக ஆபத்தான வேலைகளில் தமிழ்ப் பெண்கள் ஈடுபட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் திரைப்பட உலகின் எதிர்ப்பை மீறி ஐஃபா விழாவில் கலந்து கொண்ட இந்தி நடிகர் நடித்துள்ள ரத்த சரித்திரம், அசின் நடித்து வெளிவரும் திரைப்படங்களை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று ஜனநாயக வழியில் இயக்கம் நடத்துவோம் என்று அவர்கள் கூறினர்.

12 அக்டோபர் 2010

குழந்தைகள் சிரிப்பிலே சினேகா பிறந்தநாள்!

விரும்புகிறேன்’ படத்தில் தனது சினிமா பயணத்தை தொடங்கி, சுமார் பத்தாண்டுகளாகியும் சினிமா உலகில் அனைவராலும் விரும்பி போற்றப்படுபவர் ‘புன்னகை இளவரசி’ சினேகா. இன்று (12.10.10) அவர் பிறந்த நாள்.
பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடனும், சினிமா நண்பர்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்துகளுடனும் இனிதே தொடங்கியது சினேகாவின் பிறந்தநாள் காலைப்பொழுது.
சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சிறப்பு வழிபாடு செய்தார் சினேகா. அதன் பிறகு, கீழ்பாக்கத்தில் உள்ள பால விஹார் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் தனது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார்.
அங்குள்ள குழந்தைக்களுக்கு கேக்கினை ஊட்டி மகிழ்ந்தார் சினேகா. சில மணிப்பொழுதுகளை அந்தக் குழந்தைகளுடன் ஆனந்தமாக கொண்டாடினார். பாலவிஹாஸ் இல்லத்துக்கு தேவையான உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் வாங்கித்தந்தார். குழந்தைகள் அனைவருக்கும் ஆடைகள், இனிப்புகள், எழுது பொருட்கள் வழங்கினார். அத்துடன் அந்தக் குழந்தைகளுக்கு தேவையான இன்னும் பிற உதவிகளையும் செய்தார்.
இப்படி ஆதரவற்ற குழந்தைகளின் மகிழ்ச்சிப் புன்னகையில், புன்னகை இளவரசியின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சினேகாவின் நல்ல மனம் வாழ்க! என நாமும் வாழ்த்துவோம்.

11 அக்டோபர் 2010

த்ரிஷாவுக்கு ‘கெட் அவுட்’-எமிக்கு ‘வெல்கம்’!

கவுதம் மேனன் தனது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்திப் பதிப்பின் வேலைகளைத் துவங்கிவிட்டார்.
ஆரம்பத்தில் இந்தப் படத்திலும் த்ரிஷாவே நாயகி என்று கூறப்பட்டது. கவுதமும் அப்படித்தான் சொல்லி வந்தார். ஆனால் இப்போது அதில் மாற்றம்.
மதராஸப்பட்டினம் புகழ் எமி ஜாக்ஸனுக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்துள்ளார். இந்தியில் த்ரிஷாவின் முதல்படமே பப்படமாகிவிட, இனி அவரால் அந்த ரோலுக்கு எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து இந்த முடிவுக்கு வந்தாராம்.
இதற்கிடையே, சமீபத்தில் தான் தயாரிக்கும் அழகர்சாமியின் குதிரை படத்துக்கு இளையராஜா இசையில் வந்திருக்கும் பாடல்களைக் கேட்டு, சிலிர்த்துப் போனாராம் கவுதம்.
இசையில் அவரோட டச்சே தனி என்றாராம் படத்தின் இயக்குநர் சுசீந்திரனிடம்!

09 அக்டோபர் 2010

தமிழ் பேசப்போகும் கவர்ச்சிப் பாம்பு!

மல்லிகா ஷெராவத்துக்கு அறிமுகம் தேவையில்லை. அம்மணி ஹிஸ் எனும் சர்வதேசப் படத்தில் நடித்துவருகிறார். அதென்ன ஹிஸ் என்கிறீர்களா? பாம்பு சீறும்போது எழுப்புமே சத்தம் அதே தான்.
படத்தில் மல்லிகா நாகப் பெண்மணியாக வருகிறார். ரொமாண்டிக் காமெடிப் படமாம். ரொமான்ஸ் இல்லாமல் மல்லிகாவை வைத்துப் படமெடுப்பார்களா என்ன?
இந்த சர்வதேச ரொமான்ஸ் மூவியை தமிழிலும் டப் செய்து வெளியிட்டு தமிழ் ரசிகர்களின் வயிற்றில் பால் வார்க்கத் திட்டமிட்டிருக்கின்றனர் அதன் தயாரிப்பாளர்கள்.
மல்லிகா மாதிரியான கவர்ச்சிக் கன்னிகளின் படத்துக்கு மொழியே தேவையில்லை எனும் மகத்தான விஷயம் அதன் தயாரிப்பாளருக்குத் தோன்றாமல் போனதேன்?

08 அக்டோபர் 2010

‘பாலக்காட்டுக்கு போங்க… அதான் சேஃப்!’ – அசின் அடம்!

காவலன் படத்தின் மிச்சப் பகுதியை கேரளாவிலே வச்சிக்கலாம். பாலக்காட்டுக்குப் போயிடலாம் அதான் சேஃப் சேட்டா!’
மேட்டுப் பாளையத்தில் பெரியார் திகவினர் மேற்கொண்ட கறுப்புக் கொடி போராட்டத்தைப் பார்த்து மிரண்டுபோன அசின் சொன்னது இது.
ஹீரோயினாச்சே… அதிலும் விஜய்யின் பேவரிட் ஹீரோயின் சொன்ன பிறகு அப்பீலேது?
அடுத்த நாளே பாலக்காடு பறந்தது காவலன் படக்குழு, ஹீரோ விஜய்யுடன்.
மேட்டுப் பாளையத்தில் எடுக்க வேண்டிய பல காட்சிகளை ஒத்தப்பாலம் மற்றும் பாலக்காடு பகுதியிலேயே வைத்து எடுத்துக் கொண்டார்களாம். மூன்று தினங்கள் நடந்த இந்தப் படப்பிடிப்பில் வடிவேலுவும் பங்கேற்றார். “இப்போதான் எனிக்கு ரிலீஃப்” என்று அசின் கூற, “அதெப்படி… ரிலீசாகணுமில்ல. அதையும் பாலக்காட்டிலேயே வச்சிக்கிற முடியுமா… போத்தா!” என்று நக்கலடித்தாராம் வடிவேலு.
அது!

07 அக்டோபர் 2010

டான்ஸிலும், நடிப்பிலும் கலக்கியுள்ளார் ஐஸ்வர்யா-அமிதாப் பச்சன் பாராட்டு.

எந்திரன் படத்தில் இதுவரை காணாத அளவுக்கு மிக அற்புதமாக டான்ஸ் ஆடியுள்ளார் ஐஸ்வர்யா ராய். நடிப்பு, டான்ஸ் இரண்டிலும் கலக்கி விட்டார் என்று பாராட்டியுள்ளார் மாமனார் அமிதாப் பச்சன்.
மும்பையில் நடந்த எந்திரன் இந்திப் பதிப்பின் விசேஷக் காட்சியை ரஜினிகாந்த், ஐஸ்வர்யா, ஜெயா பச்சன் உள்ளிட்டோருடன் சேர்ந்து பார்த்து ரசித்தார் அமிதாப் பச்சன்.
பின்னர் அங்கேயே ரஜினியையும், ஐஸ்வர்யாவையும் அவர் பாராட்டினார். தற்போது தனது பிளாக்கிலும் பாராட்டித் தள்ளியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஐஸ்வர்யா ராய் கலக்கி விட்டார். இதுவரை அவருடைய எந்தப் படத்திலும் இப்படி ஒரு நடனத்தை நான் பார்த்ததில்லை. படு ஸ்டைலாக இருக்கிறது டான்ஸ். அதை விட நடிப்பும். இரண்டிலும் பிரதமாதப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா.
ரஜினியைப் பற்றி என்ன சொல்வது. என்ன செய்வார் என்பதை கணிக்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு ஒவ்வொரு படத்திலும் பிரமாதப்படுத்துகிறார்.
வேடிக்கை, புதுமை, தொழில்நுட்பம் என அனைத்தும் கலந்த கலவையாக வந்துள்ளது ரோபோட்.
ரஜினி படம் பார்க்கும்போது நீங்கள் விரும்புவதெல்லாம் அதில் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் அதில் உள்ள வேடிக்கையை, ரசனையை அனுபவிக்கலாம். அந்த அனுபவத்திற்காக ரஜினி படத்தைப் பார்க்கலாம். அந்த வகையில் இந்தப் படத்தில் அந்த அனுபவம் சற்று கூடுதலாகவே உள்ளது என்று பாராட்டியுள்ளார் அமிதாப் பச்சன்.

05 அக்டோபர் 2010

காதலிக்கிறேனா…?’ – தமன்னா விளக்கம்.

நான் யாரையும் காதலிக்கவில்லை. நடிப்புதான் எனக்கு முக்கியம். தேவையில்லாத வதந்திகளைப் பரப்ப வேண்டாம், என்றார் தமன்னா.
தமன்னாவுக்கும் நடிகர் ஒருவருக்கும் தீவிர காதல் என்று தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.
ஆனால் இதனை தமன்னா தொடர்ந்து மறுத்து வருகிறார்.
தான் நட்பு ரீதியாகக் கூடப் பழகாத ஒருவருடன் காதல் என்றெல்லாம் வதந்தி பரப்பு தவறானது. அந்த மாதிரி எதிர்மறை விளம்பரம் எனக்குத் தேவையுமில்லை என்றார்.
மேலும் அவர் கூறுகையில்,
“பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்துவிட்டேன். ஷங்கர், கவுதம், பாலா போன்ற திறமையான இயக்குனர்கள் படங்களிலும் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.
நான் எந்த நடிகைக்கும் போட்டியில்லை. என்னை நம்புகிறேன். எனது வேலையை சிறப்பாக செய்கிறேன். நிறைய நடிகைகள் அறிமுகமாகிக் கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”, என்றார்.

04 அக்டோபர் 2010

துருக்கியில் துள்ளாட்டம் போட்ட ஸ்ருதி!

ஓயாத பயணத்தில் இருக்கும் எனக்கு இப்போ தேவை ஒரு professional packer…” – இதுதான் ஸ்ருதி ஹாஸனின் லேட்டஸ்ட் ட்வீட்!
எதற்காகவோ..?
அம்மணி சென்னை, மும்பை, துருக்கி, லண்டன், அடுத்து பாங்காக் என பறந்து கொண்டே இருக்கிறாராம். தனக்கு தேவையான பொருள்களை அடுக்கி பக்காவாக எடுத்துச் செல்லக் கூட நேரமில்லை என்பதால்தான், அதற்கு உதவ ஒரு தொழில்முறை பணியாளர் இருந்தால் தேவலை என்று ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் – தெலுங்கில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ஒன்றுக்காக சமீபத்தில் துருக்கி போன ஸ்ருதியை, அந்த நாட்டின் பல லொக்கேஷன்களில் வைத்து துள்ளாட்டம் போட வைத்து படமாக்கியுள்ளனர்.
“கிட்டத்தட்ட 24 மணி நேரமும் ஷூட்டிங் இருந்தது. நான் கொஞ்சம் கறுத்துப் போனேன் என்று கூடச் சொல்லலாம். ஆனால் சந்தோஷமாகத்தான் இருந்தது” என்கிறார் ஸ்ருதி.
அடுத்து 7-ம் அறிவுக்காக சூர்யாவுடன் ஆட்டம் போட பாங்காக், அங்கிருந்து சில தீவுகளுக்குப் பயணமாகிறாராம்!