பக்கங்கள்

29 டிசம்பர் 2010

தமிழில் படம் இல்லை என்கிறார் தமன்னா.

தமன்னாவுக்கு தமிழில் புதிய படம் எதுவும் இல்லையாம். படம் ஏதும் வராத நிலை இல்லை, அவர்தான் புதிய படம் எதையும் ஒப்புக் கொள்ளவில்லையாம். காரணம், தெலுங்கில் 3 புதிய படங்களில் நடிக்கப் போவதால் தமிழில் ஒப்புக் கொள்ள முடியவில்லையாம்.
கேடி மூலம் தமிழுக்கு வந்த தமன்னா கடும் முயற்சியின் விளைவாக தமிழில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர். வந்த வேகத்தில் முக்கிய நடிகர்களுடன் ஜோடி போட்டு விறுவிறுப்பான நிலைக்கு உயர்ந்தார்.
அண்ணன் சூர்யாவுடன் அயன் படத்தில் நடித்தவர் தம்பி கார்த்தியுடன் பையா படத்தில் ஜோடி சேர்ந்தார். அதையடுத்து மீண்டும் கார்த்தியுடன் சேர்ந்து சிறுத்தை படத்திலம் நடித்துள்ளார். அடுத்து தனுஷுடன் வேங்கை படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை தொடர்ந்து அவர் தெலுங்குக்குப் போகிறார். அங்கு 3 படங்களை ஏற்றுள்ளாராம். இதனால் தமிழில் படம் எதையும் ஒப்புக் கொள்ளவில்லையாம். 2011ம் ஆண்டு பிற்பகுதியில்தான் தமிழுக்கு வரத் திட்டமிட்டுள்ளாராம். அதுவரை தெலுங்கிலேயே இருப்பாராம்.
தான் நடித்த படங்கள் சில சரியாக ஓடாதது குறித்து தனக்கு வருத்தமில்லை என்று கூறும் தமன்னா, நான் நல்ல கதைகளைத் தேர்வு செய்துதான் நடிக்கிறேன். படங்கள் சரியாக போகவில்லை என்றால் அதற்கு நான் மட்டுமே பொறுப்பில்லை என்கிறார் பொறுப்புணர்ச்சியுடன்.
பையா படத்தைப் போல சிறுத்தையும் அனைவரையும் கவரும் என்று கூறும் தமன்னா, இப்படத்தை மற்றவர்களைப் போல தானும் அதிகம் எதிர்பார்த்திருப்பதாக கூறுகிறார்.

24 டிசம்பர் 2010

படம் பார்க்க ஆளில்லை... தியேட்டர்களில், காலை-இரவு காட்சிகள் ரத்து!!

சினிமா பார்க்கும் ஆர்வம் கிட்டத்தட்ட குறைந்துவிட்டதோ என்ற எண்ணம் தோன்றும் அளவுக்கு மிக மோசமான நிலை உருவாகியுள்ளது. காரணம், பெரும்பாலான திரையரங்குகள் காத்து வாங்குகின்றன, காலி இருக்கைகளுடன்.
இதற்கு தியேட்டர்களில் அதிக கட்டணம் என்று சிலர் முக்கிய காரணம் என்று கூறப்பட்டாலும், அதையும் தாண்டி, வேறு சில காரணங்களும் உள்ளன என்கிறார்கள் திரையுலகைச் சேர்ந்தவர்கள்.
முன்பெல்லாம் பொதுமக்களின் ஒரே பொழுதுபோக்கு சாதனமாக சினிமா மட்டுமே இருந்தது. இப்போது டெலிவிஷன், இண்டர்நெட், மொபைல் போனில் படம் பார்க்கும் வசதி என மாற்றுப் பொழுதுபோக்கு சாதனங்கள் வளர்ந்து விட்டன.
சென்னை, கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்களில் ஆட்டபாட்டங்களுடன் கூடிய கிளப்புகள், பப்கள், நடன மையங்கள் பெருகி வருகின்றன. புதிதாக பெண்கள் மசாஜ் கிளப்புகளும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.
நடுத்தர மக்களை பொறுத்தவரை, தியேட்டர்களில் அதிக கட்டணம் வைக்கப்பட்டிருப்பது பெரும் பாதிப்பாகவே கருதப்படுகிறது. ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்து படம் பார்ப்பதை விட, 20 அல்லது 30 ரூபாய்க்கு டி.வி.டி. வாங்கி குடும்பம் முழுவதும் படம் பார்த்துவிடலாம் என்ற மனநிலைக்கு நடுத்தர மக்கள் வந்துவிட்டார்கள்.
தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கிற கூட்டம் குறைந்து விட்டது. ஒரு காட்சிக்கு நான்கு பேர் அல்லது ஐந்து பேர் மட்டுமே வருவதால், மின்சார கட்டண செலவுக்கு கூட போதவில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் வேதனைப்படுகிறார்கள்.
காலை-இரவு காட்சிகள் ரத்து
இதனால் பெரும்பாலான தியேட்டர்களில், காலை காட்சியும், இரவு காட்சியும் ரத்து செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 1,200 தியேட்டர்கள் உள்ளன. சென்னை நகரில் மட்டும் 70 தியேட்டர்கள் உள்ளன. இதில், பெரும்பாலான தியேட்டர்களில் காலை-இரவு காட்சிகள் நடைபெறுவதில்லை என்பதுதான் உண்மை.
இந்த பாதிப்புக்கு, டிசம்பர் மாத கடும் குளிரும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. கடுமையான பனிப்பொழிவையும், குளிரையும் தாங்கிக்கொண்டு தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்க யாரும் தயாராக இல்லை.
புதிதாக வெளியாகியுள்ள படங்களில் எந்தப் படத்துக்கும் கூட்டமில்லை. இருபது பேர் கூட தேறுவது கடினமாக உள்ளதாக புலம்புகிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.
தியேட்டர்களில் வசூல் அடிவாங்கினாலும், சினிமா தொழில் ஆரோக்கியமாகவே இருக்கிறது என்கிறார்கள், சில மூத்த பட அதிபர்கள்.
"இந்த வருடம் மட்டும் மொத்தம் 125 படங்கள் தயாராகி திரைக்கு வந்துள்ளன. இதன் மூலம் சினிமாவில் குறைந்தபட்சம் ரூ.450 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணத்தில் 50 சதவீதம், நடிகர்-நடிகைகளின் சம்பளத்துக்கு போய் விடுகிறது. மீதி 50 சதவீதம், தயாரிப்பு செலவுக்கு போய் விடுகிறது. நடிகர்-நடிகைகளுக்கு போகிற சம்பளம், சினிமாவுக்கு திரும்பி வருவதில்லை. ரியல் எஸ்டேட் போன்ற வேறு தொழில்களுக்கு போய் விடுகிறது என்பதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம்,'' என்கிறார்கள் அந்த பட அதிபர்கள்.

15 டிசம்பர் 2010

யாரும் என் இடுப்பைக் கிள்ளவில்லை!

ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் எனது இடுப்பை யாரும் கிள்ளவில்லை. என்னுடன் சேர்ந்து போட்டோ எடுக்க முண்டியவரைத்தான் நான் நிறுத்தி அறிவுரை கூறினேன் என்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை சினேகா.
சமீபத்தில் நிருபர்களைச் சந்தித்த அவர் கூறியது:
ஈரோட்டில் என் இடுப்பை யாரும் கிள்ளவில்லை. என்னுடன் போட்டோ எடுக்க பலர் ஆர்வப்பட்டனர். அந்த ரசிகரும் முண்டியடித்தார். அப்போது அவசரப்படாதீர்கள் என்று அறிவுரை சொன்னேன்.
என் இடுப்பை கிள்ளியதாகவும், நான் ஆவேசப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. இடுப்பை கிள்ளி இருந்தால் அந்த ரசிகர் ஓடியிருப்பார். நானும் அறிவுரை சொல்லி இருக்கமாட்டேன். அடித்திருப்பேன்.
நான் அரசியலில் குதிப்பதாகவும், பிரச்சாரத்துக்குப் போகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனக்கு அரசியல் பற்றி தெரியாது. எனவே அரசியலுக்கு வரமாட்டேன். தேர்தலில் ஏதேனும் கட்சி பிரசாரத்துக்கு அழைத்தாலும் போகமாட்டேன்.
ஆனால் அரசியலுக்கு வருபவர்கள் நல்ல அரசியல்வாதியாக இருக்க வேண்டும்.
இப்போது ஆக்ஷன் படத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்துக்காக நிஜமாகவே சண்டை போட்டேன். நிஜத்தில் நான் அடிக்க வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் பெயர்களை சொல்ல முடியாது.
அடுத்து நான் நடித்து வரும் ஒரு படத்தில் இப்படி ஒரு பஞ்ச் டயலாக் உள்ளது: ஆம்பளையா இருந்தாலும், பொம்பளையா இருந்தாலும் போலீஸ் போலீஸ் தாண்டா... பஞ்ச் டயலாக் பேச ஹீரோவாகத்தான் இருக்கணுமா... ஹீரோயின் பேசக்கூடாதா?, என்றார்.
பேசலாமே, நல்லாப் பேசலாமே...!

10 டிசம்பர் 2010

புவனேஸ்வரியும் 'பாவத்தின் சம்பளமும்'!

கடந்த ஆண்டு தமிழ் சினிமா- பத்திரிகையுலம் கடுமையாக மோதிக்கொள்ளும் அளவுக்குப் போனதற்கு முக்கிய காரணம் நடிகை புவனேஸ்வரி.
விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி பற்றிய செய்திகள் வெளியானபோது, கூடவே, மேலும் யார் யார் இந்தத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என படத்தோடு செய்தி வெளியாக பொங்கிவிட்டனர் திரையுலகினர். குறிப்பாக நடிகர்கள் சூர்யா, விவேக், சத்யராஜ், விஜயகுமார், அவர் மகன் அருண் விஜய் போன்றவர்கள் ஆபாசமாகத் திட்டினர். அலுவலகம் புகுந்து பத்திரிகையாளர்களைக் கொல்லுவோம் என்றெல்லாம் பேசினார்கள். ரஜினிகாந்த், விசி குகநாதன் முன்னிலையில் நடந்த பெரும் கூட்டத்தில் இதெல்லாம் நடந்தது.
ஆனால் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் வழக்கு தொடர்ந்தபோது, இப்படியொரு கூட்டமே நடக்கவில்லையே என்று போலீஸே எழுதிக் கொடுத்தது.
இந்த ரகளையில், பிரச்சினைக்கு மூல காரணமான புவனேஸ்வரியை மறந்துவிட்டனர் பலரும். அவரும் கொஞ்ச காலம் கோயில், குளம் என்று பக்தி காஸ்ட்யூமில் இருந்தார். பின்னர், சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் பிரிவு செயலாளர் ஆனார். இப்போது மீண்டும் நடிப்பைத் தொடர களத்தில் இறங்கிவிட்டார்.
இவர் நடிக்கவிருக்கும் டிவி தொடருக்குப் பெயர் 'பாவத்தின் சம்பளம்'!!

07 டிசம்பர் 2010

புது நடிகைகளில் டாப் ஹீரோக்களின் சாய்ஸ் அமலா பால்!

புதிய நாயகிகளில் இப்போது அதிக படங்களை வைத்திருப்பவர் அமலா பால் என்ற அனகா. முன்னணி நடிகர்களும் முதல் சாய்ஸ் அவர்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
கேரளத்தைச் சேர்ந்த அமலா நடித்த முதல் படம் சிந்து சமவெளி. மாமனாருடன் கள்ளத் தொடர்பு கொள்ளும் விவகாரமான பாத்திரம் அது. கொஞ்சம் பேர் பாராட்டினார்கள். நிறைய பேர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
அடுத்து வந்த படம் மைனா. முதல் படத்தில் வாங்கிக் கட்டியதற்கெல்லாம் சேர்த்து இந்தப் படத்தில் நல்ல பெயர் கிடைத்தது.
இதன் விளைவு, நயன்தாரா, த்ரிஷா ரேஞ்சுக்கு பேசுகிறார்கள் அமலாவை.
விக்ரமின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடி அமலாதான். லிங்குசாமி இயக்கும் படம், ஆர்யா - மாதவன் நடிக்கும் வேட்டை என பெரிய படங்கள் அமலாவின் கைவசம். மேலும் இரு பெரிய பட்ஜெட் படங்களிலும் நடிக்க பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இப்போதே பெரிய பட வாய்ப்புகள் வந்துவிட்டது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் நிச்சயம் பேரைக் காப்பாற்றிக் கொள்வேன்", என்றார்.

05 டிசம்பர் 2010

சிக்கு புக்கு ப்ரீத்திகா.

சினிமா செய்தியாளராக இருந்து இப்போது நடிகையாக அவதாரம் எடுத்துள்ளார் ப்ரீத்தீகா.
பத்திரிக்கை ஒன்றுக்கு சினிமா செய்திகளைக் கொடுக்கும் நிருபராக இருந்தவர்தான் இந்த ப்ரீத்திகா. இப்போது இவர் சிக்கு புக்கு படம் மூலம் நடிகையாகியுள்ளார். ஷ்ரியாவுடன் இணைந்து ஆர்யாவுடன் ஜோடி போட்டுள்ளார் ப்ரீத்திகா.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆர்வமாக இரு்நதேன். அதற்கேற்ப சிக்கு புக்கு பட வாய்ப்பு வந்ததும் கப்பென்று பிடித்துக் கொண்டேன். எனது புகைப்படத்தைப் பார்த்து இயக்குநர் மணிகண்டன் இந்த வாய்ப்பைக் கொடுத்தார்.
நான் நடித்த ரோலில் முதலில் வித்யா பாலன்தான் நடிப்பதாக இருந்தது. பின்னர் அவர் நடிக்கவில்லை. இதையடுத்து என்னை தேர்வு செய்தனர். படப்பிடிப்புக்காக பத்து நாட்கள் சென்னையில் தங்கியிருந்தேன்.
ஒரு நடிகையாக என்னை இந்தப் படம் சரியாக அடையாளம் காட்டியுள்ளதாக கருதுகிறேன். மேலும், நான் ஒரு மாடல் ஆக இருந்ததும் பெரும் உதவி புரிந்தது. அனைத்து ஷாட்களையும் ஒரே ஷாட்டில் முடித்துக் கொடுத்தேன்.
முதலில் எனக்குத் தமிழ் தெரியாது. இருந்தாலும் ஆர்யாவும், இயக்குநரும் உதவி செய்தனர். இதையடுத்து என்னால் தமிழ் உச்சரிப்பை சரியாக செய்ய முடிந்தது.
முதன் முதலில் நான் கேமராவுக்கு முன்பு தோன்றியது அமிதாப் பச்சனுடன் நடித்த காட்பரீஸ் சாக்லேட் விளம்பரப் படம்தான்.
படத்தில் நானும், ஷ்ரியாவும் சேர்ந்து வருவது போல காட்சி இல்லை. எனவே எங்களுக்குள் எந்த சண்டையும் நடக்கவில்லை என்கிறார் ப்ரீத்திகா.