பக்கங்கள்

24 ஜனவரி 2011

நீதுவால் எழுந்த ஆடைப்பிரச்சனை!

உள்ளாடை இல்லாமல் நிகழ்ச்சியில் நடிகை நீத்து சந்திரா பங்கேற்றார். இதையடுத்து அவருக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
நடிகர் மாதவனுடன் யாவரும் நலம் படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை நீதுசந்திரா. மும்பையைச் சேர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நீதுசந்திரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
விழாவில் கலந்து கொண்ட நீதுசந்திரா, மேடையில் கால் மேல் கால் போட்டு ஹாயாக அமர்ந்திருந்தார். அப்போது அவர் உள்ளாடை அணியாமல் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. நீதுசந்திரா பங்கேற்ற அந்த பொது நிகழ்ச்சி சம்பந்தமான படங்களை பார்த்து கேரள மாதர் சங்கம், மகளிர் கூட்டமைப்பு மற்றும் சோசலிச பெண்கள் குழுவினர் கொதிப்படைந்துள்ளனர்.
நடிகை நீதுசந்திரா, பொது நிகழ்ச்சியில் இவ்வாறு மோசமாக நடந்து கொண்டது ஒட்டுமொத்த பெண் இனத்தை அவமானப்படுத்துவதாகும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை மலையாள படங்களில் நடிக்க விட மாட்டோம் என்று கூறி போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
கேரளாவில் தனக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளதால் நீதுசந்திரா அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தெரியாமல் நடந்து விட்டது என்று அவர் கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக