ஈழத் தமிழர்களின் எதிர்ப்பு, ஆளும் அதிகாரத்தின் ஓர வஞ்சனை, திரையரங்கு உரிமையாளர்களின் கோபம் என பல்முனை தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது விஜய்யின் காவலன்.
பொங்கலுக்கு எப்படியும் படத்தை வெளியிடுவது என உறுதியாக உள்ளது தயாரிப்பாளர் தரப்பு. அம்மாவின் ஆசிர்வாதத்தையும் விஜய்யின் தந்தை நேரில் சென்று பெற்றிருக்கிறார்.
ஆனாலும் காவலனின் நிலை இன்னும் தள்ளாட்டத்தில்தான் உள்ளது. பொங்கலுக்கு வெளிவரும் ஆடுகளம், சிறுத்தைப் படங்களின் மீதுதான் திரையரங்கு உரிமையாளர்களின் கவனம் உள்ளது. இதன் காரணமாக விஜய் படங்களை விரும்பி திரையிடும் திரையரங்குகளும் காவலனுக்கு முகத்தை திருப்பிக் கொண்டுள்ளன.
பொதுவாக விஜய் படங்கள் 300 திரையரங்குகளுக்கு மேல் திரையிடப்படும். காவலன் 100 திரையரங்குகளை எட்டினாலே அதிசயம் என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக