பக்கங்கள்

28 ஜனவரி 2011

சுருதியால் உள்ளுக்குள் நடுங்கும் முருகதாஸ்!

அகநக ஓ தீரடு என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தின் ரிசல்ட்டை ரொம்பவே ஆர்வமாக எதிர்பார்த்திருந்தவருக்கு அந்த நம்பிக்கையில் விழுந்திருக்கிறது சரியான இடி!
படம் முதல் வாரத்திலேயே மூட்டை கட்டப்பட்டுவிட்டதாம்.
இவர் அறிமுகமான முதல் இந்திப்படமும் இதே மாதிரிதான் அமைந்தது. இந்த தொடர் தோல்விகளால் ஸ்ருதி கவலைப்பட்டாரோ இல்லையோ? இவரை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கும் ஏழாம் அறிவு முருகதாசுக்கு சின்ன நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
அப்பா கமல் போலவே சகல திறமைகளும் கொண்ட ஸ்ருதிக்கு நல்ல குரல் வளம், நாலு பேரை மயங்க வைக்கும் இசை என்று பல்வேறு கதவுகள் திறந்திருக்கின்றன. எனவே இப்போது வரும் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை அவர். ஏழாம் அறிவுக்கு பின்புதான் புதுப்படங்களை ஒப்புக் கொள்ளப் போகிறாராம். இது முருகதாஸ் ஸ்கிரிப்டின் மீதிருக்கும் நம்பிக்கையாக கூட இருக்கலாம்.
இதற்கிடையில் தினமும் படப்பிடிப்புக்கு லேட்டாக வந்து கொண்டிருந்தவர் இப்போது டாண் என்று குறித்த நேரத்திற்கு வந்துவிடுகிறாராம். எலி உட்கார எலந்த பழம் விழுந்திருக்கும். இதற்கும் தெலுங்கு பட தோல்விக்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக