பக்கங்கள்

07 மே 2013

திரிஷாவிற்கு ஒன்று அம்மாவுக்கு ஒன்று!

திரிஷா 
நட்சத்திர ஓட்டலில் தன் அம்மாவுக்கு தனி ரூம் போடாததால் ஆத்திரமடைந்த நடிகை த்ரிஷா, படப்பிடிப்புக்கு வர மறுத்து ரகளை செய்தார். 'என்றென்றும் புன்னகை' படப்பிடிப்புக்காக சமீபத்தில் சுவிட்சர்லாந்துக்கு சென்றார் த்ரிஷா. உடன் அவர் அம்மாவும் சென்றிருந்தார். இப்படத்தில் ஜீவா ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அகமது இயக்குகிறார். திரிஷாவுக்கும் உமாவுக்கும் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் ரூம் ஒதுக்கி இருந்தனர். சுவிட்சர்லாந்தில் ஒரு அறைக்கு ஒரு நாள் வாடகை ரூ 20 ஆயிரத்துக்கும் மேல். மேலும் வழக்கமாக த்ரிஷாவுடன் ஒரே அறையில்தான் உமாவும் தங்குவார். எனவே ஒரு ரூம் மட்டும் போட்டார்களாம். ஆனால் இதை அறிந்த த்ரிஷா ஆத்திரத்தின் உச்சிக்கே போய்விட்டார். அம்மாவுக்கு ஏன் தனி ரூம் போடவில்லை என கேட்டு சண்டை போட்டுள்ளார். படக்குழுவினர் ஒரு ரூம்தான் ஒதுக்க முடியும் என பிடிவாதம் பிடித்ததால் படப்பிடிப்புக்கு செல்ல மறுத்துவிட்டாராம் த்ரிஷா. பின்னர் இயக்குநர் அகமது அங்கு விரைந்து த்ரிஷாவை சமாதானப்படுத்தியுள்ளார். த்ரிஷா விருப்பப்படி அம்மாவுக்கு தனி ரூம் ஒதுக்கிய பிறகே, த்ரிஷா படப்பிடிப்புக்கு வந்தாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக