பக்கங்கள்

05 ஜூலை 2011

குறைத்துக்கொண்ட இலியானா.

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பது யாருக்கு புரிந்திருக்கிறதோ இல்லையோ... சினிமா நட்சத்திரங்களுக்கு ரொம்பவே புரிந்திருக்கிறது. ஒரு கோடி ரூபாய் சம்பளம் தரத் தயார்; எங்கள் படத்தில் நடியுங்கள் என்று கோடம்பாக்கத்து பட அதிபர்கள் அழைத்தபோதெல்லாம், அதைவிட பெரிய தொகை கொடுத்த தெலுங்கு சினிமாவை விட்டு வர மனமில்லாமல் இருந்தார் நடிகை இலியானா. பின்னர் ஒருவழியாக தமிழில் "நண்பன்" என்ற பெயரில் தயாராகும் 3 இடியட்ஸ் ரீமேக் படத்தில் நடிக்க சம்மதித்த இலியானாவுக்கு சம்பளமாக ரூ.1 கோடி கொடுக்க அப்படத்தின் தயாரிப்பாளர் சம்மதித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
தமிழில் அவரை புக் செய்ஏராளமான தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தாலும், தெலுங்கு சினிமா மார்க்கெட்டில் அதீத கவனம் செலுத்தி வரும் இலியானா, வாய்ப்புகள் குறைந்து வருவதால் தனது சம்பளத்தையும் பாதியாக குறைத்திருக்கிறாராம். இலியானாவின் சமீபத்திய படங்கள் சில தோல்வியை தழுவியதால் வாய்ப்புகள் குறைந்து விட்டன. மீண்டும் ஒரு வெற்றிப்படத்தில் நடித்து மார்க்கெட்டை உயர்த்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் ரூ.50 லட்சம் சம்பளம் தந்தால் போதும்; நல்ல கதையம்சம் உடைய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன், என்று தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர்களுக்கு தூது விட்டிருக்கிறாராம் இலியானா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக