
கன்னடத்து ஹரிப்ரியா, அர்ஜூனுடன் இணைந்து வல்லக்கோட்டை படத்தில் நடித்துள்ளார். படத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் இன்று வரை நிற்காமல் அர்ஜூன் புராணம் பாடி புளகாங்கிதமடைந்து காணப்படுகிறாராம் ஹரிப்ரியா.
ஏன் இப்படி அர்ஜூன் புராண் என்று 'ஹரி'யிடம் கேட்டால், அர்ஜூன் சார் அப்படி ஒரு 'அமைக்கபிள்' ஆன நபர். அவருடன் நடிக்கப் போகிறேன் என்று கேட்டதுமே எனக்கு திரில்லாகி விட்டது. அர்ஜூன் சாருடன் இணைந்து நடித்தது இதுவே முதல் முறையாகும். இதற்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
எனக்கு அர்ஜூன் படங்களிலேயே மிகவும் பிடித்தது ஜென்டில்மேன்தான். படத்தின் பெயருக்கேற்ப அவரும் உண்மையில் ஒரு ஜென்டில்மேன்தான்.
மிகவும் எளிமையானவர் அர்ஜூன். இயல்பாக பழகினார். டயலாக்கை எப்படி உச்சரிப்பது என்பது குறித்து எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தார். இயல்பாக நடிக்க எனக்கு பேருதவி புரிந்தார்.
படத்தில் வரும் டூயட் பாட்டில் மகதீரா, மகதீரா என்று வரிகள் வரும். மகதீரா என்றால் தெலுங்கில் ராஜா என்று பெயர். உண்மையிலேயே அர்ஜூனும் இதயங்களை கொள்ளை கொள்ளும் ராசாதான் என்கிறார் ஹரிப்ரியா.
நமக்கே ரொம்ப புல்லரிக்குதே...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக