பக்கங்கள்

11 நவம்பர் 2010

இந்தி போய் கஷ்ரம் வேண்டாம் என்கிறார் காஜல்!

தன்னைத் தேடி வரும் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் காஜல் அகர்வால். இந்திப் பட வாய்ப்புகளை மறுத்து வருகிறாராம் அவர்.
நல்ல பெரிய கண்களுடன், செமத்தியான உயரத்துடன், பளிச்சென்று பொம்மை போல இருக்கும் காஜலுக்கு தமிழை விட தெலுங்கில் நல்ல கிராக்கி. தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர் தமிழிலும் பெரிய ரவுண்டுக்கு ஆயத்தமாகி வருகிறார்.
தெலுங்கில் அவரைத் தேடி ஏகப்பட்ட வாய்ப்புகளாம். பார்த்து, பதவிசாக படங்களைத் தேர்வு செய்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். தமிழிலும் கூட நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். கை கொள்ளாத அளவுக்கு ஆர்டர்கள் குவிவதால் படு ஹேப்பியாகியிருக்கும் அகர்வால், இந்த இரு மொழிப் படங்களில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்துவது என முடிவு செய்துள்ளார்.
இதனால் தன்னைத் தேடி வரும் இந்திப் பட வாய்ப்புகளை நிராகரித்து வருகிறாராம். இதனால் இந்திப் படத் தயாரிப்பாளர்கள் சோகமாகியுள்ளார்களாம். காஜல் சேவை தெலுங்கு, தமிழுக்கு மட்டும்தானா, எங்களுக்கு இல்லையா என்று வருத்தப்படுகிறார்களாம்.
ஆனால் காஜலோ, எனக்குத்தான் மன மகிழ்ச்சி தரும் அளவுக்கு தெலுங்கிலும், தமிழிலும் வாய்ப்புகள் வருகிறதே, பிறகு எதற்காக இந்திக்குப் போய் பிற நடிகைகளைப் போல கஷ்டப்பட வேண்டும் என்று விளக்குகிறார்.
பரவாயில்லையே, ஆசின், திரிஷா ஆகியோர் இந்திக்குப் போய் திண்டாடி வருவதைப் பார்த்து கவனமாகத்தான் காய் நகர்த்துகிறார் காஜல்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக