பக்கங்கள்

27 செப்டம்பர் 2010

முடிந்தது மன்மதன் அம்பு.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் ‘மன்மதன் அம்பு'. கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார் கமல்ஹாசன். படத்தில் அவருக்கு ஜோடி த்ரிஷா. மாதவன், சங்கீதா இன்னொரு ஜோடி. 'ரொம்ப நாளைக்கு பின் கமல் ரொமான்டிக் ஹீரோவா நடிக்கிற படம். 30 வயது இளைஞனா வர்றார். இதனையடுத்து மன்மதன் அம்பு படப்பிடிப்பு முடிந்ததாக மாதவன் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என மாதவன் கூறிப்பிட்டுள்ளார்.

24 செப்டம்பர் 2010

வில்லியாக நடிக்க விரும்புகிறேன்-பியா.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோவாÕவில் நடித்தார் பியா. அடுத்து ஜீவாவுடன் ‘கோ படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது:
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘கோவில் நடித்திருக்கிறேன். இப்பட ஷூட்டிங் முடியும் நிலையில் உள்ளது. இதில் என்ன வேடம் என்பதை இப்போதைக்கு சொல்ல மாட்டேன். இதையடுத்து தெலுங்கு, மலையாள மொழிகளில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ஹீரோயின் வேடத்தில்தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. எந்த வேடமாக இருந்தாலும் நடிப்பேன். வில்லி வேடத்தில் நடித்தால் திறமையை வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன். அப்படியொரு கதாபாத்திரம் பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில் நடிக்க முடிவான பின், போட¢டோக்களை பார்த்தாலே ‘யார் இது பியாவா?Õ என்று பலர் ஆச்சர்யப்படுவார்கள். இவ்வாறு பியா கூறினார்.

22 செப்டம்பர் 2010

பிரபுதேவா - நயன் மீது காவல்துறை நடவடிக்கை?

பிரபு தேவா - நயன்தாரா இருவர் மீதும் தமிழக காவல்துறை தானாகவே வழக்கு தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான அச்சாரத்தை நேற்று போட்டிருக்கிறார் பிரபுதேவாவின் மனைவி ரமலத்.
அண்ணாநகர் மேற்கில் 12 ஆவது பிரதான சாலையில் உள்ளது ரமலத்தின் இல்லம். இந்த இல்லம் முன்பாக அவர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நேற்றிரவு தகவல் பரவியது.இதனால் அப்பகுதிக்கு ஊடக நண்பர்கள் குவிந்தனர்.
அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் தகவல் அறிந்த திருமங்கலம் காவல் நிலைய காவலர்கள் விரைந்து வந்தனர். ஒரு மணி நேர காத்திருப்புக்குப் பின், ரமலத் உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை என்பதும், அது ஒரு வதந்தி என்பதும், ரமலத் அந்த வீட்டில் இல்லை, வெளியில் சென்றிருக்கிறார் என்பதும் தெரிய வந்ததும் காவல் துறையினரும், ஊடக நண்பர்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
பிரபுதேவா ரமலத் விவகாரம் குறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில்
'முதல் மனைவியான ரமலத்தை முறைப்படி விவாகரத்து செய்யாமல், பிரபு தேவா மற்றொரு பெண்ணுடன் சுற்றுவதும், அவரை திருமணம் செய்யப் போவதாக வெளிப்படையாக பேட்டி அளிப்பதும் குற்றமாகும். ரமலத் புகார் அளிக்கும் பட்சத்தில், அதை அடிப்படையாக வைத்து பிரபுதேவா - நயன்தாரா மீது நடவடிக்கை பாயும்!' என்கின்றன.

20 செப்டம்பர் 2010

வயகரா மாத்திரைகளை இனி டெஸ்கோ விற்பனைசெய்யும்!

உடலுறவு கொள்ளும் போது அதிக வீரியத்தை ஏற்படுத்த அல்லது உடலுறவு கொள்ள முடியாத ஆண்கள் பாவிக்கும் ஒரு வீரியம் மிக்க மாத்திரை வயகரா. பல ஆண்டுகளாக இணையமூடாக மிகவும் இரகசியமான முறையில் இது விற்கப்பட்டுவந்தது. வயகரா மாத்திரைகளை எம்மில் பலர் போதைப் பொருள் என எண்ணியிருந்தனர். இருப்பினும் சில நாடுகளில் இது விற்பது தடைசெய்யப்பட்டிருந்தது. பின்னர் படிப்படியாக பல நாடுகள் அத்தடையை நீக்கியுள்ளன. உலகில் பல்லாயிரக்கணக்கான மாத்திரைகள் இதுபோல உலாவந்தாலும் வயகரா மாத்திரைகள் ஆண்களின் உள்ளம் கவர்ந்த ஒன்றாகத் திகழ்கிறது என்பதற்கு தற்போது டெஸ்கோ சூப்பர் மார்க்கட்டே சாட்சி.
ஆம் இம் மாதம் 27ம் திகதி முதல் பிரித்தானியாவில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட சுமார் 300 டெஸ்கோ சூப்பர் மார்க்கட்டில் இனி வயகரா மாத்திரைகளை வாங்கலாம். சுமார் 8 மாத்திரைகளை 52.00 பவுன்டுகளுக்கு விற்க முடிவாகியுள்ளது. நீல நிறத்தினால் ஆன இம் மாத்திரைகள் உலகளாவிய ரீதியில் பல மில்லியன் ஆண்களால் பாவிக்கப்பட்டு, சுமார் 10 ஆண்களில் 9 ஆண்கள் திருப்தியடைந்துள்ளதாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அத்தோடு 40 வயதை தாண்டிய ஆண்கள் தமது தாம்பத்திய வாழ்வில் இன்பதை இழந்து, அல்லது நாட்டம் இல்லாமல் போவதால் அவர்கள் வயகராவை நாடுவதாக அக் குறிப்புகள் மேலும் தெரிவிக்கின்றன.
இளைஞர்களும், வயதானவர்களும் வயகராவை பாவிக்க முண்டியடிப்பதும், அவர்கள் இணையமூடாக கட்டணம் செலுத்தி அதனைப் பெற முயற்சிப்பதும் வழக்கம். இருப்பினும் பல போலியான வயகரா மாத்திரைகள் உலவுவதால், அவர்கள் ஏமாற்றம் அடைவதாகவும், டெஸ்கோ சூப்பர் ஸ்ரோர், தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் தரமான வயகரா மாத்திரைகளை விற்க இருப்பதாகவும் அதன் மேலாளர் பத்திரிகைக்கு தெரிவித்தார். ஏற்கனவே எல்லா சூப்பர் ஸ்ரோரையும் வீயாபாரத்தில் மிஞ்சி கொடிகட்டிப் பறக்கும் டெஸ்கோ காட்டில் இனி மழைதான்... இளைஞர்களும் , வயோதிபர்களும் இனி வயகரா வாங்க அங்குதான் செல்ல இருக்கிறார்கள், போதாக்குறைக்கு மருத்துவர் ஆலோசனை பற்றுச்சீட்டு இல்லாமலே அதனை வாங்கமுடியும் என டெஸ்கோ அறிவித்துள்ளது.

17 செப்டம்பர் 2010

கமல் மகள் ஸ்ருதி பார்வைக்கோளாறால் பரிதவிக்கிறாரா?

நடிகர் கமல்ஹாசன் மூத்த மகள் ஸ்ருதி, தனக்கு பார்வைக்கோளாறு இருப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது உண்மையா? இல்லை ஸ்ருதிஹாசன் பெயரில் வேறு யாரும் இப்படி செய்துள்ளனரா என்பது தெரியவில்லை.
நடிப்பு, இசை, நடனம் என பல்துறைகளில் சிறந்த விளங்கிவருகிறார் ஸ்ருதி ஹாசன். இவர் தற்போது தமிழில் ‘7ம் அறிவு’ மற்றும் இந்தியில் ‘தில் டோ பச்சா ஹை ஜி’ படங்களில் நடித்து வருகிறார்.
ஸ்ருதி, தனது டுவிட்டர் பக்கத்தில், ’என்னை பொருத்தவரை 90 சதவீதம் பார்வையற்ற பெண்ணாகவே வாழ்கிறேன். கண்ணாடி அணியாமல் 2 சென்டி மீட்டர் தூரத்தில் இருக்கும் பொருளைக்கூட பார்க்க முடியாது.
யாருக்கும் நான் வாழ்த்து சொல்வது கிடையாது. அப்படி சொல்லும் நபர் வேறு ஆளாக இருக்கும்பட்சத்தில் அவரிடம் மன்னிப்பு மற்றும் வருத்தம் தெரிவிக்க வேண்டி உள்ளது. நேற்றுகூட தவறான நபருக்கு வாழ்த்து சொல்லிவிட்டேன்.
மேலும் கண்ணாடி கதவு இருப்பது தெரியாமல் நடந்து சென்றேன். இது எனக்கு சந்தோஷத்தை தரவில்லை. எது எப்படியோ மூக்கு கண்ணாடியும், கான்டக்ட் லென்சும் பல்லாண்டு வாழ்க’’என்று எழுதியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
சமீபகாலமாக த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகளின் பெயரில் போலியான டுவிட்டர் பக்கங்கள் தொடங்கப்பட்டு அவர்களைப் பற்றியே இழிவாக எழுதுவது, ஆபாசமாக போட்டோ வெளியிடுவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.
ஸ்ருதிஹாசன் அப்படி நடந்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது.

16 செப்டம்பர் 2010

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த 6 வயது மகளுக்கு சூடு வைத்து சித்ரவதை!

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் சொந்த மகளை இரும்புக்கம்பியால் சூடுவைத்து சித்ரவதை செய்த பள்ளிக்கூட ஆசிரியை கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாச்சலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சைதன்யா. இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் இவருடைய கணவர் இறந்து விட்டார்.
இதனால் தனது 6 வயது மகளுடன் சைதன்யா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த நாகேஷ் என்பவருடன் சைதன்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
சில நேரங்களில் இவர்களின் கள்ளக்காதலுக்கு சைதன்யாவின் மகள் தடையாக இருந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 4 நாட்களாக தனது மகளை இரும்புக்கம்பியால் சூடு வைத்து சித்ரவதை செய்து உள்ளார்.
சூடு தாங்காமல் வலியால் அவள் கத்தித்துடிக்கும் போது டி.வி.யின் சத்தத்தை அதிகமாக வைத்து உள்ளார். அந்த வீட்டில் அடிக்கடி டி.வி.யின் சத்தம் அதிகமாக கேட்டதால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது, வீட்டில் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் அந்த சிறுமி இருந்தாள்.
உடனே அவளை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு இதுபற்றி அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் சைதன்யாவின் கள்ளக்காதலுக்கு தடையாக மகள் இருப்பது தெரியவந்தது.
இதனால் சைதன்யா மற்றும் அவருடைய கள்ளக்காதலன் நாகேசை போலீசார் கைது செய்தனர். படுகாயம் அடைந்த சிறுமி குணம் அடைய இன்னும் ஒரு வாரம் ஆகும் என்றும். பின்னர் அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் சிறுமி தங்கி இருப்பாள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

14 செப்டம்பர் 2010

பேஷன் என்ற பெயரில் குஷ்பு கழுத்தில் பிளாஸ்டிக் தாலி!

பேஷன் என்ற பெயரில் ருத்திராட்ச மாலையில் பிளாஸ்டிக் தாலியை கோர்த்து நடிகை குஷ்பு அணிந்திருக்கிறார். நடிகை குஷ்புவின் கணவரும், டைடக்டரும்  நடிகருமான சுந்தர் சி நடித்திருக்கும் புதிய படம் நகரம். குஷ்புவின் அவ்னி சி�னிமேக்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் �நடந்தது.
இந்த� விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஸ்டாலின், கனி�மொழி எம்.பி., அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தாலும்... அனைவரையும் கவர்ந்திழுத்தது நடிகை குஷ்புவும் அவர் அணிந்திருந்த பிளாஸ்டிக் தாலியும்தான்.
ருத்திராட்ச மா�லையில் பிளாஸ்டிக் தாலியை �கோர்த்து அணிந்திருந்தார் குஷ்பு. பேஷன் என்ற பெயரில் அவர் ருத்திராட்ச மாலையுடன், பிளாஸ்டிக் தாலியை கோர்த்து அணிந்திருந்தது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலரை முகம் சுழிக்க வைத்தது. இதற்கு முன்பு சினிமா விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த அம்மன் சிலை முன்பு நடிகை குஷ்பு செருப்பு அணிந்தபடி கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த விவகாரத்தை இந்து அமைப்புகள் கடுமையாக கண்டித்தன. பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால் மன்னிப்பு கேட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் குஷ்பு.
இப்போது பேஷன் என்ற பெயரில் அவர் அணிந்திருந்த பிளாஸ்டிக் தாலியும், ருத்ராட்ச மாலையும் புதிய சர்ச்சையை கிளம்பியிருக்கிறது. தமிழ் பெண்கள் கற்பு குறித்து பேட்டியளித்து வில்லங்கத்தில் சிக்கிய குஷ்பு சுப்ரீம்கோர்ட் வரை சென்றதும் நினைவிருக்கலாம்.

12 செப்டம்பர் 2010

ஸ்ருதி ஹாசன் செய்த அதிரடி மாற்றம்.


கமலுக்கும், ர‌ஜினிக்கும் நீண்ட காலமாக பிஆர்ஓ-வாக இருப்பவர் நிகில் முருகன். தமிழ் சினிமாவின் ஹைடெக் மக்கள் தொடர்பாளர், கண்ணியமான தொடர்பாளர் என்பதெல்லாம் இவரது அடையாளங்கள். இவர்தான் நடிகர் சூர்யாவுக்கும், ஸ்ருதி ஹாசனுக்கும் பிஆர்ஓ. இந்நிலையில் நிகில் முருகனுக்குப் பதில் ஜான்சனை தனது பிஆர்ஓ-வாக அறிவித்தார் சூர்யா. நான் மகான் அல்ல படத்தைப் பற்றி எதிர்மறை பதிவுகள் நிகிலின் இணையதளத்தில் இருந்ததாகவும், அதனால் சிவகுமார் எடுத்த கடும் முடிவுதான் இந்த நீக்கம் எனவும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்த நீக்கத்திற்கு இரண்டாவது நாளே ஸ்ருதியிடமிருந்து பரபரப்பான அறிவிப்பு வெளிவந்தது. சூர்யாவைப் போலவே அவரும் நிகிலை மாற்றிவிட்டு ஜான்சனை தனது புதிய பிஆர்ஓ ஆக்கியிருந்தார்.
சூர்யாவும், ஸ்ருதிஹாசனும் 7ஆம் அறிவு படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

11 செப்டம்பர் 2010

மாதவனுடன் காதலா? சதா பதில்.

ஜெயம் படம் மூலம் தமிழில் அறிமுகமான சதா, தற்போது புலி வேஷம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். எதிரி படத்தில் மாதவனுடன் சதா ஜோடியாக நடித்தார். இப்படம் 7 வருடங்களுக்கு முன் வெளியானது.
தற்போது இருவருக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் விருந்து நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்பதாகவும் செய்திகள் பரவியது. மாதவன் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி சதாவிடம் கேட்டபோது உடனே ஆவேசப்பட்ட அவர், பின்னர் அமைதியாகி பேச ஆரம்பித்தார். அப்போது அவர் கூறுகையில்,
மாதவனுடன் நீண்ட நாட்களாக எனக்கு தொடர்பு இல்லை. அவரை சந்தித்து பேசவும் இல்லை. அவரை காதலிப்பதாக வந்த செய்திகள் வதந்திதான். நான் படப் பிடிப்புக்கு செல்லும்போது கூடவே எனது தாய் வருவார். அவரை விட்டு தனியாக யாரிடமும் நான் பேசுவது கிடையாது. ஏன் தான் இப்படி வதந்திகளை பரப்புகிறார்களோ? என்றார்.
மாதவனும் நீங்களும் பெங்களூர் ஓட்டலில் சந்தித்து பேசியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதே என்று செய்திகள் பரவுகிறதே என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, கருத்து சொல்ல விரும்பவில்லை என்று மீண்டும் ஆவேசப்பட்டார்.

10 செப்டம்பர் 2010

ரஜினியின் அழைப்பிதழ்…திருப்பி அனுப்பிய பாரதிராஜா.

மழை நின்ற பிறகும் குடை மடங்காது போலிருக்கிறது. சவுந்தர்யா திருமணம் முடிந்த பின்பும் ரஜினி யாருக்கெல்லாம் அழைப்பிதழ் கொடுக்கவில்லை. ஏன் கொடுக்கவில்லை? ரசிகர்களை அழைக்காதது சரியா?. இப்போதாவது அழைத்து விருந்து கொடுப்பாரா? என்றெல்லாம் பரபரப்பான விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சற்று லேட்டஸ்ட்டாக கிடைத்த ஒரு தகவல் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. 16 வயதினிலே படத்தின் மூலம் ரஜினிக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த பாரதிராஜாவுக்கே கொரியரில்தான் அழைப்பிதழ் போனதாம். அதிர்ச்சியடைந்த அவர், அதை மீண்டும் ரஜினி முகவரிக்கே திருப்பி அனுப்பிவிட்டாராம். சமீபகாலங்களில் நடந்த பல்வேறு சம்பவங்களை மையப்படுத்தி பேட்டிகளில் பேசி வந்த பாரதிராஜா ரஜினியை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் திரையுலகில் இதையெல்லாம் சகஜம் என்று எடுத்துக் கொள்வதுதான் வழக்கம்.
அப்படி எடுத்துக் கொள்ளாத ரஜினி நேரில் பாரதிராஜா வீட்டுக்கு போக சங்கடப்பட்டுதான் இப்படி கொரியரில் அனுப்பினாராம். அது போகட்டும்… நிகழ்ச்சிக்கு இளையராஜா ஏன் போகவில்லை? அவருக்கும் தபாலில்தான் போனதாம் அழைப்பிதழ்!

08 செப்டம்பர் 2010

நித்தியானந்தாவின் லீலை திரைப்படமாக!

நித்தியானந்தா-ரஞ்சிதா செக்ஸ் லீலை குறித்து தெலுங்கில் சினிமாப் படம் எடுக்கவுள்ளனராம். நிஜக் கதைகளை சூட்டோடு சூடாக படமாக எடுத்து விடுவது இந்தியத் திரையுலகினரின் வழக்கம். அதுவும் செக்ஸ் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் என்றால் சட்டுப் புட்டென்று படமாக்கி விடுவார்கள்.
அந்தவகையில் தற்போது நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரத்தையும் படமாக்க கிளம்பியுள்ளனர்-தெலுங்கில். நித்தியானந்தாவுக்கு படுக்கை அறையில் பலவிதமான சேவைகளை நடிகை ரஞ்சிதா செய்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் சினிமா பாணியில் நான் அவன் இல்லை என்று கூறி விட்டார் நித்தியானந்தா.
ரஞ்சிதாவும், நான் செய்தது சேவை, வீடியோவை மார்பிங் செய்து விட்டனர் என்று கூறி விட்டார். தற்போது இந்த வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. நடந்தது குற்றமா இல்லையா, சரியா, தவறா என்றும் யாருக்கும் புரியவில்லை. நித்தியானந்தாவும் வழக்கம் போல தனது பெங்களூர் மடத்தில் போதனை செய்ய ஆரம்பித்து விட்டார்.
இந்த நிலையில், நித்தியானந்தா கதையை படமாக்கவுள்ளனர் தெலுங்கில். நித்தியானந்தா வேடத்தில் ராஜேந்திர பிரசாத் நடிக்கப் போகிறாராம். இவர் தெலுங்கில் பிரபலமான காமெடி ஹீரோ ஆவார். சிவாஜி, சாய்குமார் ஆகியோரும் உள்ளனர். ஹைதராபாத்தில் சமீபத்தில் படத்திற்கு பூஜை போட்டனர். அப்போது நித்தியானந்தா கெட்டப்பில் வந்தாராம் ராஜேந்திர பிரசாத்.
கதை என்னவோ நித்தியானந்தா கதைதான் என்றாலும் அதை இப்போதைக்கு ரகசியமாகவே வைத்துள்ளனராம். கேஸ் ஏதாவது வந்தால் சிக்கலாகி விடுமே என்பதற்காக இந்த அடக்கி வாசிப்பாம். ரஞ்சிதா கேரக்டருக்குரிய நடிகையை வலைவீசி தேடும் பணி தற்போது நடந்து வருகிறதாம்.

07 செப்டம்பர் 2010

இத்தாலியில் இலங்கையர் மூவர் கைது! குடியால் வந்த கதி.

மதுபானம் அருந்த மறுத்த இலங்கையர் ஒருவரை நேற்று மாலை அடித்துக் காயப்படுத்தியமையுடன் ,அறை ஒன்றிலும் பூட்டி வைத்தனர் என்பதற்காக அவரின் சகாக்களான இலங்கையர் மூவர் இத்தாலியின் San Pantaleon நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் நால்வரும் தொடர்மாடி ஒன்றில் உள்ள அறை ஒன்றில் ஒன்றாக இருந்து வந்துள்ளனர். இவர்களில் குடிகாரர்கள் மூவரும் சம்பவதினம் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தனர். நான்காவது நபர் இவர்களுடன் குடிக்க மறுத்து விட்டார்.
இதனால் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. குடிக்க மறுத்தவரை ஏனைய மூவரும் நையப் புடைத்தனர். அவரின் நெஞ்சுப் பகுதியில் படுகாயம் ஒன்றும் ஏற்பட்டு விட்டது. பின் அவரை தப்பி ஓட முடியாத வண்ணம் அறை ஒன்றில் பூட்டி வைத்தனர். அவரின் நெஞ்சுப் பகுதியில் இருந்து இரத்தம் பெருக்கெடுத்தது. இந்நிலையில் அவர் அறையில் இருந்த தொலைபேசி மூலம் வீட்டின் உரிமையாளருடன் தொடர்பு கொண்டு நிலைமையைக் கூறினார். வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்தார். இதையடுத்தே கைதுகள் இடம்பெற்றன. நான்கு இலங்கையர் நாற்பது வயதைத் தாண்டியவர்கள் ஆவர்.

06 செப்டம்பர் 2010

கவுரவ கொலை மிரட்டல்: காதல் ஜோடி புகார்.



காதல் திருமணம் செய்துக் கொண்டதால், பெற்றோர்களிடம் இருந்து கவுரவ கொலை மிரட்டல் வருவதாக செந்தூரி என்ற பெண், பென்னாகரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பென்னாகரத்தைச் சேர்ந்த முரளி என்பவர், செந்தூரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்துக்கு எதிர்ப்பு வந்துள்ளது. தற்போது தொடர்ந்து மிரட்டல் வருவதாக, பென்னாகரம் காவல் நிலையத்தில் செந்தூரி புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து செந்தூரி கூறியதாவது, கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் காதலித்து வந்தோம். கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி திருமணம் செய்து கொண்டோம். தொடர்ந்து மிரட்டல் வந்ததால் பென்னாகரம் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தோம். அப்போது இரு வீட்டாரிடம் இருந்து பெற்றோர்களை அழைத்து பேசினார்கள். அதில் எனது பெற்றோர்கள் சமாதானம் அடையவில்லை.
எனது பொறியியல் படிப்பையும் தொடர முடியாமல் போய்விடும் என பயமாக இருக்கிறது. எனது வீட்டில் இருந்துதான் எனக்கு மிரட்டல் வருகிறது. தற்போது எனது கணவர் வீட்டில் இருக்கிறேன். தொடர் மிரட்டல் வந்ததால் எனது கணவர் முரளியுடன் பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன் என்றார்.
செந்தூரியின் புகார் குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

03 செப்டம்பர் 2010

வளைந்து கொடுக்காத நயன்.



விளம்பரத்தில் நடிப்பதில்லை என்பது நயன்தாராவின் முடிவு. படங்களில் நடிக்காத இந்த‌ச் சூழலிலும் அவர் தனது கொள்கையை விடுவதாக இல்லை.
அமிதாப் முதல் அமீர்கான் வரை விளம்பரத்தில் தான் வூடுகட்டி அடிக்கிறார்கள். அவர்களின் வருமான வ‌ரிக்கணக்கு எகிறுவதும் இதனால்தான்.
ஆனால், நான் வாங்காத ஒரு பொருளை பிறர் வாங்கும்படி நிர்ப்பந்திக்க மாட்டேன் என்று விளம்பரத்தில் நடிக்க கறாராக மறுப்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி கறாராக மறுத்த அ‌‌ஜீத்தும்கூட ஒரு காபி விளம்பரத்தில் தலையை காட்டினார்.
இந்த விஷயத்தில் நயன்தாரா இன்னும் கெட்டி. தி.நகர். ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடிக்க ஆனானப்பட்ட அனுஷ்காவையே வளைத்துப் போட்டிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அவர்களிடம் அகப்படாத ஒருவர் உண்டென்றால் அது நயன்தாரா மட்டும்தானாம்.
தீபாவளி நெருங்கும் போது நயன்தாராவும் ஜவுளிக்கடைக்குள் மாட்டிக் கொணடால்...
ஆச்ச‌ரியப்படாதீர்கள்.

02 செப்டம்பர் 2010

இறந்த குழந்தை தாயின் அரவணைப்பில் உயிர்த்தது!



பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி கேட், ஏழுமாத கர்ப்பமாக இருந்தார். தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு ஜேமி என, பெயர் சூட்டவும் முடிவு செய்தனர். கேட்டுக்கு சமீபத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தையிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிததும் குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதைக் கேட்ட டேவிட்டும், கேட்டும் அழுது புலம்பினர். தன் பச்சிளம் குழந்தை இறந்துவிட்டதை நம்ப முடியாத கேட், குழந்தையை மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு, முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியபடி கண்ணீர் வடித்தார். டேவிட்டும் அழுது கொண்டே, குழந்தையின் தலையை மென்மையாக தடவிக் கொடுத்தார். இரண்டு மணி நேரமாக இந்த பாசப் போராட்டம் நீடித்தது.
குழந்தையை இரண்டு மணி நேரமாக மார்போடு அணைத்தபடி, அழுதுகொண்டிருந்த கேட், குழந்தையின் காதுக்கருகே சென்று மெல்லிய குரலில் விசும்பலுடன் பேசினார். அப்போது தான், யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நடந்தது. இறந்து விட்டதாக கூறப்பட்ட அந்த குழந்தையின் உடலில் சிறிய அசைவு காணப்பட்டது. அந்த பச்சிளம் குழந்தையின் கைகள் மெதுவாக நீண்டு, தன் தாயின் கரங்களை இறுக பற்றியது. இந்த ஆச்சரிய நிகழ்வை நம்ப முடியாமல் கேட், சில நிமிடங்கள் திகைத்துப் போனார். அவரது கணவர் டேவிட், உடனடியாக ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வந்தார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், "இது வழக்கமாக நடப்பது தான். இறந்து விட்ட குழந்தை, மீண்டும் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை'என, உறுதியாக தெரிவித்து விட்டனர்.
தன் குழந்தையை விட்டுக் கொடுக்க விரும்பாத கேட், மார்போடு அணைத்துக் கொண்டு, அந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். அதை குழந்தை, ஆர்வத்துடன் குடித்தது. அங்கு நின்றிருந்த டாக்டர், இதை நம்ப முடியாமல் மீண்டும் குழந்தையை பரிசோதித்தார். அப்போது அவர், குழந்தையின் இருதயத் துடிப்பு சீராக இருப்பதையும், குழந்தை சரியாக மூச்சு விடுவதையும் உறுதி செய்தார். பின்னர் அவர்,"என்னால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.குழந்தை பிழைத்து விட்டது என்பது உண்மை'என்றார்.
ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திக்கு முக்காடிப் போன கேட், இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியதை அடுத்து, அதை மார்போடு அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டேன். என் வாயில் என்ன தோன்றியதோ அதை குழந்தையின் காதருகே, அழுகையுடன் கிசு, கிசுத்தேன். "உனக்கு ஜேமி என பெயர் வைத்திருக்கிறோம்; உனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் தெரியுமா? நீ எங்களுக்கு வேண்டும்; உன்னை விட்டு எங்களால் பிரிந்து இருக்க முடியாது' என, கூறினேன். இரண்டு மணி நேரமாக, குழந்தையை மார்பில் வைத்துக் கொண்டு, அழுதபடி இருந்தேன். அப்போது திடீரென குழந்தையிடம் அசைவு தெரிந்தது. மெல்ல கண் திறந்து பார்த்தது. அதன் பிஞ்சுக் கரங்கள், என் கை விரல்களை மென்மையாக பற்றியபோது, எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நேரத்தில் இந்த உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான தாய், தந்தையர்கள் நானும், என் கணவரும் தான். இவ்வாறு கேட் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

01 செப்டம்பர் 2010

இயக்குனர் செல்வாவின் "நாங்க".



1985-ம் ஆண்டின் காலக் கட்ட பின்னணியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் "நாங்க'. இயக்குநர் செல்வாவின் 25-வது படமாக இப்படம் உருவாகிறது. சினிமாவின் பல்வேறு துறைகளில் இருப்பவர்களின் வாரிசுகள் 9 பேர் இப்படத்தில் நாயகர்களாக அறிமுகமாகிறார்கள். ÷இப்படத்தைப் பற்றி இயக்குநர் செல்வாவிடம் கேட்ட போது, ""கல்லூரியின் காதல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கி வருகிறேன். ஐந்து விதமான காதல் கதைகள் சொல்லப்பட்டு, பின்னர் அவை ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
÷ 1985-ம் ஆண்டு காலக் கட்டத்தில் கதை பயணிக்கிறது. என் முதல் படம் "தலைவாசல்' கதையும் கல்லூரி வாழ்க்கைதான். அது போல் இப்படமும் கல்லூரியின் புதிய பரிணாமத்தைச் சொல்லும். காதல், உற்சாகம் இவற்றை மட்டும் சொல்லாமல் ஏமாற்றம், வலி, ஏக்கம், நெகிழ்ச்சி ஆகியவற்றை சொல்லும் ஒரு கல்லூரிக் கதையாக இது இருக்கும்.
÷ஒரு மனிதனின் உச்சபட்ச மகிழ்ச்சியான கல்லூரி காலத்தை சினிமாவின் புதிய மொழியில் படம் பிடித்து வருகிறேன். தென்காசி, திருநெல்வேலி, குற்றாலம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் படமாகியுள்ளது. 1985-ம் ஆண்டு காலக் கட்ட கதை என்பதால் ராஜன், ஷிவா யாதவ் என்ற இரு கலை இயக்குநர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். "தலைவாசல்', "அமராவதி' படங்களுக்குப் பின் பாலபாரதி இப்படத்துக்கு இசையமைக்கிறார். மறக்க முடியாத ஜீவனுள்ள நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இந்தப் படம் இருக்கும்'' என்றார்.

31 ஆகஸ்ட் 2010

வெளிநாட்டவருக்கு தத்துக் கொடுக்கப்பட்டு 31 ஆண்டுகளின் பின் உண்மையான தாயும்-சேயும் சந்திப்பு!



சுவீடன் தம்பதிகளுக்கு 31 வருடங்களுக்கு முன் தத்துக் கொடுக்கப்பட்ட சிங்களப் பெண் ஒருவர் அவருடைய உண்மையான தாய், சகோதரர்கள் ஆகியோருடன் இன்று இலங்கையில் மீள இணைந்து கொண்டார்.
1970 களில் சுவர்ணா ஜயசிங்க என்பவருக்கு மூத்த மகளாக பிறந்த இவர் வீட்டின் வறுமை நிலை காரணமாக உடனடியாகவே தத்துக் கொடுக்கப்பட்டார்.
தத்தெடுத்த சுவீடன் தம்பதியர் இவருக்கு Suzanne Maria Chandima என்று பெயர் சூட்டினர். இந்நிலையில் Bio Parents Locate என்கிற அமைப்பின் மூலம் Suzanne Maria Chandima உண்மையான தாயையும், சகோதரர்களையும் கண்டுபிடித்தார்.
இவர் இம்மகிழ்ச்சியை ஊடகங்களுடன் பகிர்ந்துகொண்டபோது தெரிவித்தவை வருமாறு:-
”நான் மிக நீண்ட கால முயற்சிக்குப் பின் எனது உண்மையான தாயையும், சகோதரர்களையும் கண்டுபிடித்து அவர்களுடன் இணைந்து விட்டேன்.இது எனது வாழ்வின் மிகவும் மகிழ்ச்சிக்கு உரிய தருணம் ஆகும்.
நான் முதல் தடவையாக இலங்கைக்கு இப்போதுதான் வந்துள்ளேன். இனி மேல் அம்மாவையும், சகோதரர்களையும் காண அடிக்கடி வருவேன்.”
தத்துக் கொடுத்த தாயான சுவர்ணா ஜயசிங்க தெரிவித்தவை வருமாறு:-
”நான் எனது மூத்த மகளை ஒருபோதும் எவருக்கும் விட்டுக் கொடுக்க விரும்பியதே இல்லை.கடந்த 31 வருடங்களாக பெரும்துன்பத்தை மனதில் சுமந்து வந்திருக்கின்றேன்.இன்றுதான் என்னால் நிம்மதியாக மூச்சு விட முடிகின்றது.
எனது மூத்த மகள் எனக்கு மீண்டும் கிடைத்து விட்டார். தாய்-சேய் உறவை எவராலும் பிரிக்கவே முடியாது.” Bio Parents Locate அமைப்பின் தலைவர் பேராசிரியர் வைத்திய கலாநிதி ரொஹான் ரட்ணாயக்க கருத்துக் கூறுகையில் கடந்த 25 வருடங்களில் 35 ஆயிரம் இலங்கைச் சிறுவர்கள் வெளிநாட்டவர்களுக்குத் தத்துக் கொடுக்கப்பட்டுள்ளனர் என்றார்.

30 ஆகஸ்ட் 2010

சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது.



சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இது குறித்து நியூயார்க் போஸ்ட் பத்திரிகைய வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் நியூயார்க்கைச் சேர்ந்த ஜேம்ஸ் கிப்ஸன் என்பவர் தன்னுடைய அலுவலக கம்ப்யூட்டரில் ஏராளமான நிர்வாணப்படங்களை லோடு செய்து வைத்திருந்தார். ஓரு முறை அவர் 14 வயது சிறுமியின் நிர்வாணப்படத்தினை பார்த்துக்கொண்டிருந்ததாக கம்ப்யூட்டர் தடவியல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அமெரிக்க சட்டவிதிகளின் படி 17 வயதிற்குட்பட்ட இளம் பெண்களின் நிர்வாணப்படத்தினை பார்ப்பதும், இண்டர்நெட்டில் வெளியிடுவதும் குற்றமாகும். இந்நிலையில் நீதிபதியின் இந்த செயலை கண்டுபிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

28 ஆகஸ்ட் 2010

பின்புறத்தை இன்சூர் செய்யும் நடிகை.



இந்தி நடிகை மினிஷா லம்பா, தனது பின்புறத்தை இன்சூர் செய்யவுள்ளாராம்.
அழகான வாழைத் தொடை, அழகிய கால்கள், அம்சமான முகம் ஆகியவற்றை இன்சூர் செய்வது நடிகைகளுக்கு வழக்கமாகி விட்டது. ஹாலிவுட்டில் அழகான, எடுப்பான முன்னழகைக் கூட இன்சூர் செய்கிறார்கள்.
இந்த வரிசையில் படு வித்தியாசமாக, தனது பின்புறத்தை இன்சூர் செய்யவுள்ளார் இந்தி நடிகை மினிஷா லம்பா. இவர் மினி டிரஸ்களில் கவர்ச்சிகரமாக வருவதை ஒரு கொள்கையாகவே வைத்திருப்பவர். காஷ்மீரில் பிறந்த அழகு ரோஜா.
சமீபத்தில் நடிகர் ஜான் ஆப்ரகாம் கூட தனது பின்புறத்தை இன்சூர் செய்தார். அவர் வழியில் இப்போது மினிஷாவும் பின்புறத்தை இன்சூர் செய்யப் போகிறாராம்.
தனது பின்புறம் மிக அழகாக, எடுப்பாக, செக்ஸியாக இருப்பதாக பெருமையுடன் கூறுபவர் மினிஷா. பிரேசில் பெண்களுக்குத்தான் இப்படி எடுப்பாக பின்புறம் இருக்கும்.
எனது பின்புறம் எனக்குப் பொக்கிஷம் போல. அதைக் காக்க நான் விரும்புகிறேன். எனவேதான் இன்சூரன்ஸ் எடுக்க முடிவு செய்துள்ளேன் என்கிறார் பெருமிதத்துடன்.

25 ஆகஸ்ட் 2010

இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பிரபல நடிகைகள் கைது !!!(வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)



இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட பாலியல் தொந்தரவுகள் கொடுத்ததாக நடிகை சாய்ரா பானு உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
போதை மருந்து கடத்தல் , விபச்சாரம், உயர் அதிகாரிகளுக்கு பெண்களை சப்ளை செய்த விவகாரம் என தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து புயல் வீச ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பாதுகாப்பு நிறைந்த பல அடுக்கு குடியிருப்புகளில் பாலியல் தொழில் நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சிறப்பு அதிரடிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையில் நடிகைகள் சாய்ரா பானு, ஜோதி மற்றும் வெளிநாட்டு இளம்பெண்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சாய்ரா பானு, பல தெலுங்கு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
மற்றொரு நடிகை ஜோதி, ஏராளமான தெலுங்கு படங்களில் துணை வேடங்களில் நடத்துள்ளார். இதேபோல் கடந்த ஆண்டு தெலுங்கு நடிகை சீமா இதே விவகாரத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. போதை பொருள் வாங்கியதாக, நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.

24 ஆகஸ்ட் 2010

ரஞ்சிதாவில் பாசம் கொண்ட சிரிப்பு நடிகர்.



நித்யானந்தா சாமியார் ஊருக்கெல்லாம் பிரம்மச்சரியத்தை போதித்துவிட்டு ரஞ்சிதாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட கதையை நாடே தொலைக்காட்சியில் பார்த்தது. இதனை சம்பந்தப்பட்ட இருவரும் மறைமுகமாக ஒப்புக்கொள்ளவும் செய்தனர்.
சில பிழைப்புவாதிகள் நித்தியை மீண்டும் சாமியாராக்கியிருக்கிறார்கள். சாமியார்களை நம்பியிருக்கும் சிலரும் அவரை தெய்வீக‌த் தூதராக கொண்டாடும் வேலையை முடுக்கி விட்டுள்ளனர்.
சி‌ரிப்பு நடிகர் எஸ்.வி.சேகருக்கு வந்த தொண்டை வலியை திருநீறு பூசி ச‌ரி செய்தாராம் நித்தி. இதற்கு கைமாறா தெ‌ரியவில்லை, நித்யானந்தாவுடன் இருப்பது ரஞ்சிதாவே இல்லை, ஒரே நபரைப் போல் ஏழு பேர் இருப்பார்கள் என்றெல்லாம் உடுக்கடித்திருக்கிறார். ஆள் யாராக இருந்தாலும் உடன் இருந்தது நித்திதானே? இதற்கு சி‌ரிப்பு நடிக‌ரிடம் பதிலில்லை.
சங்கராச்சா‌ரியா‌ரை கைது செய்தவர்கள் கை விளங்காமல் இருப்பதாகவும், கிட்னி பழுதடைந்துவிட்டதாகவும் அவர் மேலும் கூறியிருக்கிறார். அவரை கைது செய்ய உத்தரவிட்டவர்கள் இன்றும் சேமமாக இருக்கிறார்கள். சங்கராச்சா‌ரியா‌ரின் பவர் அவர்களிடம் செல்லுபடியாகாதா என்பதைப் பற்றியும் சி‌ரிப்பு நடிகர் பதிலளிக்கவில்லை.
இவர் சின்னத்திரையில் பொறுப்பில் இருந்தபோது ஒரு நடிகை விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். ஒழுக்கத்தை காரணம் காட்டி அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவிடாமல் செய்தவர் இவர். அன்று ஒழுக்கத்தை காரணம் காட்டியவர் இன்று ரஞ்சிதாவுக்கு அடைக்கலம் கொடுப்பது,
காலத்தின் கோலமா? கடவுளின் லீலையா?

21 ஆகஸ்ட் 2010

கிசு கிசுவால் கலங்கிய தமன்னா.


புசுபுசுன்னு வளர்ற மார்க்கெட்டை கிசுகிசு எழுதியே காலி பண்ற விஷயத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது அண்மைக் காலங்களில் நயன்தாராவும், தமன்னாவும்தான் போலிருக்கிறது. எந்த ஹீரோவை எடுத்துக் கொண்டாலும் தமன்னாவை கேளுங்க. இல்லேன்னா பிறகு யாரையாவது பார்க்கலாம் என்றுதான் கூறி வந்தார்கள்.
எல்லா முன்னணி நடிகர்களுடனும் ஒரு ரவுண்டு நடித்து முடித்துவிட்ட தமன்னா, தற்போது தன்னை சுற்றி முளைத்திருக்கும் வேலியை கண்டு அதிர்ந்தே போயிருக்கிறார். ஒரு கோடி சம்பளம், கார்த்தியுடன் காதல் என்று பலரும் எழுதியதால்தான் இந்த நிலைமை என்று நினைத்தாரோ என்னவோ, இரண்டையும் குறைத்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இவரது அட்ஜஸ்ட்மென்ட் மிகப் பெரிய கதவை திறந்துவிட்டிருப்பதுதான் ஆச்சர்யம். சுறாவை அடுத்து தமன்னாவுடன் மீண்டும் ஜோடி சேரப் போகிறார் விஜய். இந்த வாய்ப்பை பெறுவதற்குள் தமன்னாவின் கெண்டை சதை இளைத்துப் போனது தனிக் கதை.
சம்பளத்தை குறைத்தாராம். கேட்கிற நாட்கள் எத்தனையோ, அத்தனைக்கும் தயார் என்றாராம். பல சுற்று பேச்சு வார்த்தைகளுக்கு பின் `த்ரி இடியட்ஸ்` படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறார். டைரக்டர் ஷங்கரும் பல மேடைகளில் தமன்னா குறித்து சிலாகித்தது இந்த இடத்தில் ரொம்பவே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

18 ஆகஸ்ட் 2010

பிரகாஷ்ராஜ் திருமணம் மும்பையில்.


பிரகாஷ் ராஜ்& போனி வர்மா திருமணம் வரும் 24ம் தேதி மும்பையில் நடக்கிறது. ஏராளமான பாலிவுட் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராகப் பணிபுரிந்தவர், போனிவர்மா. இவரும் பிரகாஷ் ராஜும் காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் வரும் 24ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. நெருக்கமானவர்கள் மட்டும் இதில் பங்கேற்கின்றனர். பிறகு தமிழ், கன்னடம், தெலுங்கு படவுலகைச் சேர்ந்தவர்களுக்கு விருந்து நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இதுகுறித்து பிரகாஷ்ராஜ் தினகரன் நிருபரிடம் கூறுகையில், ‘24ம் தேதி மும்பையில் திருமணம் நடக்கிறது. பிறகு நானும், போனிவர்மாவும் சென்னை, பெங்களூரு, ஐதராபாத்தில் நண்பர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியே விருந்து நிகழ்ச்சி நடத்த உள்ளோம். போனிவர்மா எங்கள் வீட்டு மருமகள். எங்கள் திருமணத்தை ரகசியமாக நடத்தவில்லை. அனைவரது ஆசீர்வாதத்துடனும், ரசிகர்களின் வாழ்த்துகளுடனும் நடத்த உள்ளோம்’ என்றார்.

15 ஆகஸ்ட் 2010

விருந்தாளி-திரை விமர்சனம்.



காதலியை நினைத்து அவள் நினைவுகளோடு வாழும் ஒரு இளைஞனின் கதை.
கோபத்தில் கொலை செய்து விட்டு சிறையில் கம்பி எண்ணுபவர் நாசர். அவரது மகன் ஈஸ்வர். இவர் தனது கிராமத்தில் வட்டிக்கு பணம் கொடுப்பவர். பணம் வசூலிக்கும்போது சிலரிடம் கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும், ஏழைகளிடம் இரக்க குணம் காட்டுபவர்.
ஒரு ஆட்டோக்காரன் பல நாள் டிமிக்கு கொடுத்து அவரை ஏமாற்ற, இவரோ வழியில் ஆட்டோவை மடக்கி பணத்தை கொடுத்தப் பிறகுதான் சாவி என்று முரண்டு பிடிக்க, அதில் பயணியாக வந்த கதாநாயகி தியானா, அவருடன் மோதுகிறார். கோபத்தில் அவளை எடுத்தெறிந்து பேசும் ஈஸ்வர், அவர் தனது ஊர் போஸ்ட்மேனின் மகள் என்றதும், அவள் மீது மரியாதை ஏற்பட்டு, பின்பு அவளை காதலிக்கவும் செய்கிறார்.
ஈஸ்வர் தன் காதலை வெளிப்படுத்த மேற்கொள்ளும் பைத்தியகாரத்தனச் செயல்கள் தியானாவுக்கு பிடித்துப்போகிறது. தன் மீது உயிரையே வைத்திருக்கும் ஈஸ்வரை காதலித்து, அவனுக்காக உயிரையே விடுகிறார் தியானா. அது எதற்கு? எப்படி? என்பது மீதிக் கதை.
புதுமுகமாக இருந்தாலும் ஈஸ்வர் தன்னுடைய கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். வட்டிக்கு கொடுத்த பணத்தை வசூல் செய்யும்போது, அவர் செய்யும் சேட்டைகளும், காதல் வயப்பட்டு தனக்கு தானே கடிதம் எழுதிக் கொண்டு அலைவதும் ரசிக்கக் கூடியது. நல்ல உடல் கட்டமைப்புடன் களம் இறங்கியிருக்கும் இவர் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்தால் களத்தில் நிற்கலாம்.
கதாநாயகி தியானா பட்டணத்துப் பெண்ணாக வந்து படபடத்து பேசுவது, காதல் வயப்படுவது, கொலையைப் பார்த்து, பதறி ஓடி வருவது என அசத்தியிருக்கிறார். சிங்கம் புலி சிரிக்க வைக்கிறேன் என்ற பேரில் பேசி பேசியே நம்மை நெளிய வைக்கிறார் படத்திற்கு வசனம் எழுதியிருப்பவர் இவர்தான். (ஏதாவது ஒன்றை சரியாக செய்யுங்க பாஸ்!). படத்தில் வரும் பாதி வசனங்களை தனக்காகவே எழுதியிருக்கிறார் போலும்! காதலுக்கு பச்சைக் கொடி காட்டுபவராக வரும் கதாபாத்திரத்தில் நாசர் நச்! போலீஸ்காரராக வரும் சேரன் ராஜ், சில நிஜ போலீஸ் அதிகாரிகளை ஞாபகப்படுத்தும் அளவிற்கு இயல்பான நடிப்பை வழங்கி அந்த பாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.
பாடலிலும், பின்னணி இசையிலும் "இவர் யார்?' என்று கேட்க வைக்கிறார் எஸ்.எஸ். குமரன். முருகன் மந்திரம் இயற்றியுள்ள நான்கு பாடல்களும் கவனிக்கத்தக்கது. நாகர்கோவிலின் செழிப்பையும், வனப்பையும் தனது கேமராவில் அள்ளி வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சஜன்.
நண்பனின் காதலுக்கு உதவி செய்ய போய், தன் காதலியை தவற விட்ட ஒரு காதலனையும், அவன் அந்த காதலியையே நினைத்துக் கொண்டு வாழ்வதையும் அழகாகச் சொல்ல வந்த இயக்குநர் வாட்டர்மேன், திரைக்கதையில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம்.
வரவேற்கக் கூடிய விருந்தாளி!

09 ஆகஸ்ட் 2010

இந்தியில் கலக்கப்போகும் ப்ரியாமணி.



திரிஷாவை இந்திக்குக் கூட்டிக் கொண்டு போய் அறிமுகப்படுத்தி வைத்த பிரியதர்ஷன் அடுத்து பிரியா மணியையும் இந்திக்கு அழைத்துச் செல்கிறாராம். பிரியதர்ஷனால் நடிகையானவர் திரிஷா. தமிழில் திரிஷாவை அறிமுகப்படுத்தி வைத்த பிரியதர்ஷன், அவரது இந்தி அறிமுகத்திற்கும் வழிவகுத்தார். அக்ஷ்ய் குமார் தயாரிப்பில் உருவான கட்டா மீத்தா படத்தில் நாயகியாக நடித்து இந்தியிலும் புகுந்து விட்டார் திரிஷா. படம் சிறப்பாக ஓடவே குஷியாகியுள்ளார். இதையடுத்து அடுத்தடுத்து இந்தியில் கலக்க தீர்மானித்துள்ளார். இந்த நிலையில் பிரியா மணியும் இப்போது இந்திக்குப் போகப் போகிறாராம். அவரையும் பிரியதர்ஷன்தான் அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளார். பிரியதர்ஷன் அடுத்து இயக்கும் புல்லட் டிரெய்ன் என்ற படத்தில் பிரியா மணி நடிக்கிறாராம். இதில் அஜய் தேவ்கனும், சுனில் ஷெட்டியும் நாயகர்களாக நடிக்கின்றனர். அதாவது இரட்டை ஹீரோ சப்ஜெக்ட். அதில் ஒரு நாயகிதான் பிரியா மணி. இன்னொரு நாயகியாக நடிக்கவிருப்பது சமீரா ரெட்டியாம். சமீப காலமாகவே கவர்ச்சியில் புது இலக்கணம் படைத்து வரும் பிரியா மணி, இந்தியில் இதைவிட சற்று கூடுதலான கவர்ச்சியுடன் கலக்கத் தயாராகி விட்டாராம். சமீரா வேறு இருப்பதால் அவரை மிஞ்சும் அளவுக்கு பிரியாவின் கவர்ச்சி சேவை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

28 ஜூலை 2010

தில்லாலங்கடி சிறப்பு பார்வை.


வழக்கம் போலவே தன்னுடைய 'ஈயடிச்சான் காப்பி' வேலையை ரொம்பவே சிறப்பா செய்துள்ளார் இயக்குநர் ராஜா. பணம் இருக்கிறவர்களிடம் கொள்ளையடித்து, இல்லாத ஏழைகளுக்கு கொடுக்கும் 'சிவாஜி' படத்தின் பிளாக் மணி மேட்டரை ஒட்டி வந்த தெலுங்கு படம் 'கிக்கு'. இப்படத்தை 'தில்லாலங்கடி'யாக தமிழில் ரீமேக் செய்துள்ளார்கள்.

எதுவும் ஈசியா கிடைத்துவிட்டால் அதில் கிக்கு இல்லை என்பதால் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு தில்லாலங்கடி வேலை செய்து அந்த பிரச்சனையை சமாளிப்பதில் 'கிக்கு' அனுபவிப்பவர் ஹீரோ கிருஷ்ணா(ஜெயம் ரவி).
இந்தத் தில்லாலங்கடி வேலைகள் அவர் செய்யும் இரண்டு முக்கியமான விஷயங்களிளும் தொடர்கிறது. ஒன்று மற்றவர்களுக்காக சமுதாயத்தில் அவர் செய்யும் பணி. மற்றொன்று நிஷாவுடன் (தமன்னா) அவர் செய்யும் காதல் பணி.
மலேசியாவில், நிஷாவும் போலீஸ் அதிகாரி கிருஷ்ண குமாரும் (ஷாம்) சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது. இருவரும் தங்களுக்கு நடந்த நிகழ்வுகளை மனம்விட்டு பகிர்ந்து கொள்கிறார்கள்.
தான் ஒருவனைக் காதலித்ததாகவும் அவன் பெரிய தில்லாலங்கடி என்றும் அவன் பல பொய்களை சொன்னதால் அந்த காதலை கைவிட்டதாகவும் சொல்கிறார் நிஷா.
இந்தக் கதை தெரிந்ததும் சைக்கிள் கேப்பில் தன்னுடைய காதலை நிஷாவிடம் போட்டு உடைக்கிறார் கிருஷ்ண குமார் . அதுமட்டும் இல்லாது, முக்கிய அரசியல் புள்ளிகள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை கொள்ளையடித்து தில்லாலங்கடி வேலை செய்யும் திருடனை கண்டுபிடிக்க மலேசியா வந்த அவசியத்தையும் சொல்கிறார்.
பிறகு தான் இரண்டு தில்லாலங்கடியும் ஒருவனே என தெரிகிறது.
விசாரிப்பில் ஹீரோ கொள்ளையடித்த பணத்தை எல்லாம் ஏழை குழந்தைகளின் மருத்துவ செலவிற்குத் தான் பயன்படுத்தியிருக்கிறார் என தெரியவர ஹீரோ ஜெயம் ரவி நல்லவராகிறார். தன்னொடு திருமணம் நிச்சயமான ஷாமை கழற்றி விட்டு ஜெயம் ரவியை கைப்பிடிக்கிறார் ஹீரோயின் தமன்னா.
ரசிகர்களின் விசில் சத்தங்களை அதிகம் அள்ளிக் கொள்பவர் வடிவேலு. ஜெயம் ரவியின் தில்லாலங்கடி வேலைகளில் மாட்டிக்கொண்டு ரகளை செய்கிறார். ஜாக்கி என்கிற ஜாக்ஸனாக வரும் வடிவேலு காட்சிக்கு காட்சி சிக்ஸர் அடிக்கிறார். அதுவும் தமன்னாவோடு 'என் நதியே என் கண்முன்னே வற்றிப்போனாய்...' என டூயட் பாடுவது அபாரம்.

படத்தில் அடுத்து ஸ்கோர் பண்ணியிருப்பது 'இளமை இசை' யுவன் ஷங்கர் ராஜா. படத்தை மட்டும் இல்லாது பாடல்களையும் தெலுங்கு படத்திலிருந்து போட்டோ காப்பி எடுப்பார் ரீமேக் ராஜா.
ஆனால், இந்தப் படத்தில் தான் பாடல் காட்சிகளில் கொஞ்சம் மற்றங்கள் செய்துள்ளார். அதற்கு காரணம் யுவன் ஷங்கர் ராஜா தான். சிம்பு பாடியிருக்கும் 'பட்டு பட்டு பட்டம் பூச்சி' பாடல் இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட்.
பொதுவாகவே ரீமேக் படங்களை எடுக்கும் ராஜா, ரிஸ்க் இல்லாமல் சின்ன கதாப்பாத்திரத்தில் கூட பெரிய நடிகர்களை நடிக்க வைப்பார். அது போல இந்தப் படத்திலும் பிரபு, சுஹாசினி, ராதாராவி, சந்தானம், கஞ்சா கருப்பு, மன்சூர் அலிகான், மனோபாலா என நடிகர் பட்டாளமே உள்ளது.
ஜெயம் ரவியை விட உயரம் குறைவு என்பதாலோ என்னவோ தமன்னாவை பல காட்சிகளில் தேட வேண்டியிருக்கிறது.
ஜெயம் ரவியின் துறு துறு நடிப்பு கொஞ்சம் புதுசு.
குடும்பத்தோடு கைதட்டி பார்க்க ஒரு வாய்ப்பாக தில்லாலங்கடி இருக்கும்.
தில்லாலங்கடி - செம 'கிக்கு'

25 ஜூலை 2010

கழுதையை பறக்கவிட்ட ரஷ்யர்கள்.


ரஷ்யாவின் கடற்கரை ஒன்றில் மோட்டார் மூலம் இயக்கப்படும் பாராசூட்டில் கழுதை விண்ணில் பறக்க விடப்பட்டது. இது விடுமுறையைக் கழிக்க சென்றவர்களிடையே பரபரப்பையும் பீதியையும் உண்டு பண்ணியது.

பாராசூட்டில் கழுதை கட்டித் தொங்க விடப்பட்ட நிலையில் ஒரு வேகமாக செல்லும் படகில் இணைக்கப்பட்டு பாராசூட் பறக்க விடப்பட்டதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். சுமார் 30 நிமிடங்களுக்கு கழுதை கனைத்தும் அது பறக்க விடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளது.

இந்த முரட்டு தனமான கொடூர செயலைக் கண்டு கடற்கரையில் இருந்த குழந்தைகள் பலர் அழுததாகவும் , கடுமையான சோதனைக்குப் பின்னர் கழுதை கீழே இறக்கப்பட்ட போது பாதி உயிருடன் இருந்ததாகவும் ரஷ்ய செய்தி நிறுவனங்கள் சில தெரிவித்துள்ளன.

விலங்கினங்களை சித்திரவதை செய்வது ரஷ்யாவில் அதிகம் நடக்கும் ஒன்று. சிறிதும் யோசிக்காமல் விலங்குகள் கொடுமைப் படுத்தப்படுவதாக பிரித்தானிய சேவை அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த பொழுது போக்கு நிறுவனம் ஒன்றே விளம்பரத்துக்காக இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த தீவிரமான விசாரணைகளையும் போலீசார் முடுக்கி விட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

21 ஜூலை 2010

சம்பளத்தில் முரண்டு பிடித்ததால் படவாய்ப்பை இழந்த ஓவியா.


'களவாணி' படத்தில் நடித்த ஓவியா,​​ அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு 'மாயாண்டி குடும்பத்தார்',​ 'கோரிப்பாளையம்' படங்களை இயக்கிய ராசு மதுரவனின் 'முத்துக்கு முத்தாக' படத்தில் நடிக்க ஒன்றரை லட்சம் ரூபாயை சம்பளமாகப் பேசி ஒரு தொகையை அட்வான்ஸôக வாங்கியிருந்தார்.​
'களவாணி' படம் ஹிட் ஆனவுடன்,​​ 15 லட்ச ரூபாய் சம்பளம் தந்தால்தான் நடிப்பேன் என அடம் பிடித்திருக்கிறார்.​ அதனால் அவரிடம் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி வாங்கிக்கொண்டு அவரை படத்திலிருந்து நீக்கிவிட்டார்.​
'களவாணி' படம் கதையை வைத்துதான் வெற்றி பெற்றது.​ ஓவியாவை வைத்து அல்ல என்று கூறும் இயக்குநர் தரப்பு,​​ அவர் கேட்ட தொகையில் மூன்று நாயகிகளை ஒப்பந்தம் செய்து 'முத்துக்கு முத்தாக' படத்தைத் தொடங்கிவிட்டது.

20 ஜூலை 2010

ஓய்வுக்காக இமயமலை செல்கிறார் ரஜனி.


எந்திரன் ரிலீசுக்குப் பிறகு 6 மாத கால ஓய்வை எடுக்க ரஜினி விரும்புகிறார். ரஜினியின் எந்திரன் படம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) இறுதியில் ரிலீசாகிறது. ஷங்கர் இயக்குவதாலும், ஐஸ்வர்யாராய் நாயகியாக நடித்துள்ளதாலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு வருடங்களாக இதில் நடித்ததால் ரஜினி நீண்ட ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். வழக்கமாக தனது படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் சில நாட்கள் இமயமலை சென்று ஓய்வெடுப்பது வழக்கம். இந்த முறை எந்திரன் வெளியானதும் 6 மாதம் இமயமலையில் ஓய்வெடுக்கச் செல்கிறார். அவரது பயணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இமயமலை பயணத்தின் போது ரிஷிகளை சந்திக்கிறார். ஆசிரமங்களில் தங்கி தியானத்திலும் ஈடுபடுகிறார்.
ரஜினியின் அடுத்த படம் பற்றி பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. பாட்ஷா பாகம்-2 படத்தை தயாரிக்க சத்யா மூவிஸ் நிறுவனம் விரும்புகிறது. இதில் ரஜினியை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவோர் பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார், ஹரி ஆகிய மூவரின் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன. முருகதாஸ் 7-ம் அறிவு படத்தையும், ரவிக்குமார் மன்மதன் அம்பு படத்தையும் இயக்கும் பணியில் உள்ளனர். இப்படங்கள் முடிந்ததும் மூவரில் யார் என்பது முடிவாகும்.

18 ஜூலை 2010

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நயன்தாரா.


ஆர்யாவுடன் நயன்தாரா நடிக்கும் `பாஸ் என்ற பாஸ்கரன்' படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தவேளையில் நடிகை நயன்தாரா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா அரங்கில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று ஆர்யா, நயன்தாரா இருவரும் ஜோடியாக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. மதியம் 2 மணி அளவில் சூட்டிங்கில் நயன்தாரா நடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்த அவருக்கு மயக்கம் தெளிவிக்கும் முயற்சியில் படப்பிடிப்பு குழுவினர் ஈடுபட்டார்கள். உடனடியாக டாக்டரும் வரவழைக்கப்பட்டார். நயன்தாராவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர், அவர் காலையில் இருந்தே சாப்பிடாமல் இருந்தது தெரியவந்தது. மிகவும் சோர்வாகவும், பலவீனமாகவும் இருந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரை நேரத்துக்கு சாப்பிடும்படியும், சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளும்படியும், டாக்டர்கள் அறிவுரை கூறினார்கள். சூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா மயங்கி விழுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. நயந்தாரா பிரபுதேவாவை திருமணம் செய்ததாக இணையத்தில் செய்திகள் வந்ததையடுத்து இப்போது படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நயந்தாரா கர்ப்பமாக இருக்கிறாரா என கோடம்பாக்க வட்டாரத்தில் கிசுகிசு கிளம்புகின்றதாம்.

02 ஜூலை 2010

நமீதா தற்கொலையென வதந்தி,உயிருடன் உள்ளதாக நமீதா அறிவிப்பு!


நடிகை நமீதா இன்று ஹைதராபாத் ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. இது வெறும் வதந்தி என்று நமீதாவே மறுத்துள்ளார்.
மும்பை ஆம்பிவேலியில் உள்ள தனது வீட்டில் இருந்து செய்தியாளர்களை தொடர்பு கொண்ட அவர், ‘’நான் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அதற்கு சாட்சிதான் நான் இப்போது உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்’’ என்று அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும், ‘’நான் உயிருடன் இருக்கிறேன். நலமாக இருக்கிறேன். தற்கொலை செய்துகொண்டதாக ஏன் தான் இப்படி வதந்தி பரப்புகிறார்களோ தெரியவில்லை’’என்று கூறியுள்ளார்.

28 ஜூன் 2010

குளிக்கும் போது சேலை உடுத்திக்கொண்டா குளிப்பார்கள்?-ப்ரியா மணி.



கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ப்ரியாமணி. இதையடுத்து அது ஒரு கனாக்காலம், பருத்தி வீரன், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடித்தார். அமீர் இயக்கத்தில் நடித்த பருத்தி வீரன் படம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. ஆனாலும் கடந்த ஒரு வருடமாக தமிழில் கதாநாயகி வாய்ப்பு வரவில்லை. ராவணன் படத்தில் மட்டும் சிறு வேடத்தில் தலைகாட்டி விட்டு போனார். இப்போது தமிழ் சினிமாவில் அவருக்குப் படங்களே இல்லை. இதுகுறித்து ப்ரியாமணி கூறியது: பருத்தி வீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளியிட்டேன். அதற்காக தேசிய விருதும் கிடைத்தது. ஆனாலும் எனக்கு தமிழ்ப்பட வாய்ப்புகள் வரவில்லை. தமிழ்ப் பட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் என்ன நினைத்து இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று புரியவில்லை. நான் நிறைய வெற்றிப் படங்களில் நடித்துள்ளேன். ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வருவதில்லை. மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. ராவணன் படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது. மலையாளத்தில் வெளியான திரக்கதா படத்தில் எனக்கு விருது கிடைத்திருக்க வேண்டும். சொந்த குரலில் டப்பிங் பேசாததால் அந்த வாய்ப்பை இழந்தேன். ஏதோ நான் மட்டும்தான் கவர்ச்சியாக நடிப்பது போல பேசுகிறார்கள். எல்லா நடிகைகளுமே இப்போது கவர்ச்சியாகத்தானே நடிக்கிறார்கள்... நான் ஒருத்தி மட்டும்தானா பிகினி உடையில் நடித்திருக்கிறேன்? தெலுங்கில் துரோணா படத்தில் ஒரு கனவு காட்சியில்தான் அப்படி நடித்து இருக்கிறேன். எனது உடல் அமைப்புக்கு கவர்ச்சி உடை அணிவது பொருத்தமாக இருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை. நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சியில் நீச்சல் உடையைத்தான் அணிய வேண்டும். சேலை உடுத்திக் கொண்டா குளிப்பார்கள்...? என்கிறார்.

24 ஜூன் 2010

அப்பாவை பின்பற்றி நடிக்கும் நோக்கம் இல்லை.-சுருதி ஹாசன்.


"உலக நாயகன்' என்று அழைக்கப்படும் கமல்ஹாசனின் வாரிசு ஸ்ருதி ஹாசன், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் "7ஆம் அறிவு' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் முதன் முதலாக ஹந்தியில் நடித்து அறிமுகமான "லக்' என்ற படத்தில் இவரது நடிப்பு பரவலாகப் பேசப்பட்டாலும் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இப்போது, "7ஆம் அறிவு' படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேரப் போகும் ஸ்ருதி ஹாசனை அப்படத்தின் அறிமுக விழாவில் சந்தித்தபோது அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.
தமிழ் படத்தில் நடிக்க முடிவெடுத்திருக்கிறீர்கள். அது குறித்து?
ஏ.ஆர்.முருகதாஸ் ஸார் இயக்கும் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறேன். காரணம் முருகதாஸ் ஸார் வித்தியாசமான இயக்குநர். அவரோட ஒவ்வொரு படங்களும் பேசப்பட்டிருக்கிறது. என் கேரியரில் இந்த மாதிரி ஒரு இயக்குநரோட, சூர்யா மாதிரியான ஒரு ஹீரோ கூட முதல் படம் பண்றது சந்தோஷமாக இருக்கிறது.
இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பது இப்போதே என் மனசுக்கு தோன்றுகிறது. இந்தப் படத்தில் எனது திறமையை நிரூபிக்கும் வகையிலான பாத்திரம் அமைந்திருக்கிறது. அந்த வேடத்தை சிறப்பிக்க நிறைய உழைப்பேன்.
சூர்யா மற்றும் இயக்குநர் முருகதாஸ் குறித்து?
சூர்யா படத்துக்குப் படம் மாறுபட்ட நடிப்பை, ஸ்டைலை வெளிப்படுத்தி நடித்து வரும் சிறந்த நடிகர். என்னுடைய முதல் தமிழ்ப் படம் அவருடன் அமைந்ததில் ரொம்பவும் சந்தோஷப்படுகிறேன். வெறும் பாட்டு, கிளாமர் என்றில்லாமல் அற்புதமான கதையை வைத்து படம் இயக்குபவர் ஏ.ஆர்.முருகதாஸ். அவருடைய இயக்கத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன்.
இந்தப் படத்தில் நடிப்பது குறித்து உங்கள் அப்பா என்ன சொன்னார்?
அப்பாவிடம் ஆலோசனை மட்டும் கேட்டேன். மற்றபடி இந்தப் படத்தின் கதையை கேட்டது, அதில் நடிக்க முடிவெடுத்தது எல்லாம் என்னோட சாய்ஸ்தான்.

உங்கள் நடிப்பில் அப்பாவோட சாயல் இருக்குமா?
அப்பாவோட ஸ்டைல் எனக்கு வேண்டாம். அவர், அவருக்குன்னு ஒரு ஸ்டைலை வைத்திருக்கிறார். அதை ஃபாலோ பண்ண நான் விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை இன்ஸ்பிரேஷன்னு சொன்னால் அது என்னோட வாழ்க்கையும், எமோஷன்ஸýம்தான். சுருக்கமாக சொல்வதென்றால் நான்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.
"7ஆம் அறிவு' படத்தின் கதைக்களம் என்ன?
என்ன மாதிரி கதைக்களம் என்பதை சொல்ல முடியாது. அது சீக்ரெட். ஆனால் இந்தப் படம் வித்தியாசமான, இன்ட்ரஸ்டிங்கான ஒரு படமாக இருக்கும். இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட்டை படிக்கும்போதே அதில் ரொம்பவும் இம்பரஸ் ஆகி விட்டேன். இந்தப் படம் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக இருக்கும்.
பாலிவுட், ஹாலிவுட்டிலிருந்து வாயப்புகள் வந்தால் நடிப்பீர்களா?
என்னை பொறுத்தவரை நல்ல கதைக்கும், கேரக்டருக்கும்தான் முதலில் முக்கியத்துவம் கொடுப்பேன். அது எந்த மொழியாக இருந்தாலும் பிரச்சினையில்லை. முதலில் என்னோட திறமையை வெளிப்படுத்தணும். அதற்கேற்ற மாதிரி படங்களை தேர்வு செய்து நடிப்பேன்.
வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
தினம் தினம் புது புது விஷயங்களை கற்றுக்கொண்டு, அடுத்தடுத்த இடத்துக்கு முன்னேறிக் கொண்டே இருக்கணும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கணும். எந்த பிரச்சினை வந்தாலும் அதை கண்டு கலங்காமல் எதிர்த்து நின்று போராடணும், ஜெயிக்கணும். நான் எப்பவுமே மற்றவர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருக்கணும்னு நினைப்பவள்.

13 ஜூன் 2010

வந்தான் வென்றான் படத்திற்கு நயன்தாரா கதாநாயகி?


ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை போன்ற படங்களை இயக்கிய கண்ணன் தற்போது ஜீவா வைத்து ‘வந்தான் வென்றான்’ படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். மும்பையில் நடக்கும் க்ரைம் திர்ல்லரை மையமாக எடுக்கப்படும் இந்த படத்திற்கு ஹீரோயின் தேடி வருகிறார் கண்ணன். கோலிவுட்டில் இப்ப இருக்கும் டாப் நடிகை முதல் புதுமுகம் வரை ஹீரோயின் தேடி வருகிறார் கண்ணன்.
தன்னுடைய முந்தைய படங்களில் மெல்லிய காதலை சொல்லிய கண்ணன் தற்போது க்ரைம் படத்தை இயக்குகிறார். இதனிடையே நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டு வருகிறார் கண்ணன். ஏற்கனவே ஜீவா, நயன் நடித்த ‘ஈ’ திரைப்படம் வெற்றி பெற்றது தொடர்ந்து. தற்போது சென்டிமேட்டாக ஜீவா-நயன் கூட்டணியே விரும்புகிறார் கண்ணன்.

08 ஜூன் 2010

மகனே மருமகனே,திரைப்படம்.

விவேக் நடித்த நகைச்சுவை திரைப்படம்

மகனே மருமகனே.

06 ஜூன் 2010

02 ஜூன் 2010

தீராத விளையாட்டுப்பிள்ளை.

தீராத விளையாட்டு பிள்ளை,படத்தில் இடம்பெற்ற பாடல்,

உங்கள் ரசனைக்கேற்ற பாடல்களை ரசிக்க அன்பு நண்பன் .கொம்.

30 மே 2010

29 மே 2010

தமிழ் படம் படப்பாடல்.

புதிய படப்பாடல்களை பார்த்து,கேட்டு மகிழ அன்பு நண்பனுடன்

இணைந்திருங்கள்.

தீராத விளையாட்டு பிள்ளை படப்பாடல்.

பார்த்து, கேட்டு மகிழுங்கள்.

28 மே 2010

பையா படத்தில் இடம் பெற்ற பாடல்.

இப்பாடலை சுதா விரும்பிக் கேட்டுள்ளார்.அவரின் விருப்பத்தை நிவர்த்தி செய்கிறது அன்பு நண்பன்.கொம்

27 மே 2010

ஆதிபகவன் மூலம் மீண்டும் வருகிறார் மம்தா!


சிவப்பதிகாரம், குரு என் ஆளு படங்களுக்குப் பின் காணாமல் போயிருந்த மம்தா ஆதிபகவன் படம் மூலம் மீண்டும் வருகிறார்.அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஆதிபகவன் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, பாங்காக் நாடுகளில் சத்தமில்லாமல் ஒரு ஷெட்டியூல் முடிந்திருக்கிறது. கதாநாயகி கிடைக்காமல் தவித்த அமீர், கடைசி நேரத்தில் கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் சமீபகாலமாக கோலோச்சிவரும் மம்தா மோகந்தாஸைத் தேடிப்பிடித்து நாயகியாக்கியிருக்கிறார். இவரை பாங்காக் கூட்டிப்போய் ஒரு ஷெட்டியூலை முடித்துத் திரும்பியிருக்கிறார். பருத்தி வீரனில் நடித்த ப்ரியாமணியே மீண்டும் அமீர் இயக்கத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பு இப்போது மம்தாவுக்குப் போய்விட்டது.

25 மே 2010

படிக்காதவன் படப் பாடல்.


தமன்னாவின் அழகு இப்பாடலை மீண்டும் மீண்டும்

பார்க்க தூண்டுகிறது,நடனமும் மிகவும் நன்றாக இருக்கிறது,

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.உங்களுக்கும் பிடித்திருக்கும் என

நினைக்கிறேன்.உங்கள் விருப்பப் பாடல்களையும் எழுதி அனுப்புங்கள்,நாங்கள்

உங்கள் விருப்பத்தை நிவர்த்தி செய்வோம்.

அனுப்பவேண்டிய மின்னஞ்சல்:ravies152415@yahoo.de

சுறா படப்பாடல்,தஞ்சா ஊரு ஜில்லாக்காரி.

சுறா படத்தில் இடம்பெற்ற இப்பாடலை சுபோ அவர்கள் தனது விருப்பமாக

தெரிவு செய்துள்ளார்,தனக்கு பிடித்த நடிகர்களுள் விஜயும் ஒருவர் எனக்குறிப்பிட்டுள்ள அவர்,விஜய்க்காகவே இப்பாடலை தேர்வு செய்ததாகவும்

குறிப்பிட்டுள்ளார்.

நீங்களும் விரும்பிய பாடலை மின்னஞ்சல் மூலமாக எழுதி அனுப்புங்கள்.

ravies152415@yahoo.de

வியர்வை நாற்றம் தீர ஒரு ஆலோசனை!




குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென நம் நினைவுக்கு வருவது வெயிலின் சூடும், அதனால் உண்டாகும் வியர்வையும். வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும். வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம் சுழிக்க வைக்கும். அத்தகைய நிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். இந்த நீரில் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் அறவே நீங்கிவிடும். இன்னுமொரு குறிப்பு : 2 தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக்கரண்டி வெந்தயத் தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து களி போல் தயாரிக்கவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வரவும். இரண்டே வாரத்தில் உடலில் நிரந்தமாக குடிகொண்டிருக்கும் வியர்வை நாற்றம் ஓடிவிடும். தலையும், உடலும் சுத்தமாகி மணம் வீசும்.

23 மே 2010

ஐந்து கரங்களாலும் கணக்கு எழுதினாலும் அடங்காது போலிருக்கு நஷ்டக்கணக்கு!



ஐந்து கரங்களாலும் கணக்கெழுதினாலும் அடங்காது போலிருக்கு நஷ்டக்கணக்கு! இப்படி ஐங்கரன் நிறுவனம் நமுத்துப் போயிருந்த நேரத்தில்தான் 'அங்காடி தெரு' வந்து ஆறுதல் அளித்தது.
துண்டு துக்கடா ஊர்களில் கூட இப்போதும் கலெக்ஷனை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த படத்தால் அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள். அதில் ஒருவர் சொன்ன கமென்ட்தான் திரையுலகம் கேட்டு மகிழ வேண்டிய செய்தி.
அங்குசம் சிறுசுதான். ஆனால் அதுதான் மலைய புரட்டி மல்லாக்க போட்டிருக்கு என்றாராம் அந்த தயாரிப்பாளர். கொஞ்சம் விளக்கமா பார்ப்போமோ? வில்லு படத்தை எடுத்த வகையில் கோடிக்கணக்கான நஷ்டம் ஐங்கரனுக்கு. அடுத்தடுத்த படங்களில் அந்த தொகையை இழப்பீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயம். இந்த நேரத்தில் அங்காடி தெருவின் வசூல், வில்லு கடனை அடைத்துக் கொண்டிருக்கிறதாம்.
அவ்ளோ பெரிய விஜய்யோட கடனையே நேத்து வந்த சின்னப் பையன் மகேஷ் அடைக்கிறான். என்ன ஒரு விந்தை பாருங்க என்கிறாராம் அவர். இவரு சொல்றதை பார்த்தா விஜய்யும் மகேஷ§ம் ஒண்ணு. இதை விளங்கிகிட்டா வின்னுன்னு ஒரு புதுமொழி எழுதலாம் போலிருக்கே!

22 மே 2010

பயமறியான்,திரைக் கண்ணோட்டம்.



வீட்டு வேலை செய்து பிழைக்கும் சரண்யா மகன் மகேஷ் ராஜா. குடித்து ஊதாரியாக சுற்றுகிறார். ஆனாலும் மகன்மேல் பாசம். அவரை திருத்த எவ்வளவோ முயன்றும் தோல்வி அடைகிறார்.

ரவுடிகளுக்கு உதவி கோடியாய் சம்பாதிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிஷோர் எதிரிகளை தீர்த்துகட்ட மகேஷ் ராஜாவை பயன்படுத்துகிறார். தாதா பொன்னம்பலத்தை வீழ்த்தி அவரிடம் இருந்த பல லட்சங்களை கொள்ளையடித்து வரவைக்கிறார். கடையில் இருந்து காலி செய்ய மறுக்கும் ஒருவனை மிரட்டி வெளியேற்ற ஏவுகிறார். அப்போது கடைக்காரரின் அடியாட்களுக்கும் மகேஷ்ராஜா கோஷ்டிக்கும் அடிதடி நடக்கிறது. இந்த மோதலில் ரமேஷ்ராஜா வீசும் பாட்டில் உடைந்து கண்ணாடி பறந்து போய் அவ்வழியாக வரும் சரண்யா கழுத்தை சீவுகிறது. அதே இடத்தில் பலியாகிறார். தாய் இறந்த அதிர்ச்சியில் இருக்கும் மகேஷ்ராஜாவை என் கவுண்டரில் தீர்த்துகட்ட கிஷோர் போலீஸ் படையுடன் புறப்படுகிறார். அவர் தப்பினாரா என்பது கிளைமாக்ஸ்.

ஆக்ஷன், காதல், தாய்ப்பாசத்தின் மீது கதையை நகர்த்துகிறார் இயக்குனர் பிரதீஷ்... மூன்றிலும் தாய் மகனுக்கான பாசபோராட்டமே முதல் இடம் பிடிக்கிறது. மகன் கெட்டவனாக இருந்தும் அவன் மேல் காட்டும் தாயின் அன்பும் அவளது மகத்துவத்தை சாவுக்கு பின் உணரும் மகனின் பாசமும் போட்டி போட்டு மனதை பிழிகின்றன.

மகேஷ்ராஜா ஆக்ஷன் கேரக்டரில் பொருத்தமாக பதிகிறார். பார்வை, முறைப்பு, நடை, பேச்சு எல்லாவற்றிலும் அதிரடி. உதயதாரா காதலியாக வந்து போகிறார். அவருக்கும் மகேஷ்ராஜாவுக்கும் இடையிலான காதலில் ஜீவன் இல்லை. கிளைமாக்சில் துப்பாக்கியுடன் விரட்டும் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி உதய தாராவிடம் என்னை மறந்து வேறு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள் என்று கண்ணீருடன் விடைபெறும் போது நெஞ்சு கனக்கிறது. அழுக்கு உலகம் கல்லறை, குடி என நாயகனை ஒரே களத்தில் நகர்த்துவது சலிப்பு..

ரவுடிகளை மோத விட்டு பணம் பறிக்கும் வித்தியாசமான போலீஸ் வில்லனாக கிஷோர் மிரட்டுகிறார். சரண்யா தாய் பாசத்தின் சின்னமாக நிற்கிறார். முடிவு பரிதாபம். மணிகண்டனும் ஆக்ஷன் வேஷம் கட்டியுள்ளார். கிஷோர் மனைவியை பலவந்தம் செய்வதும் அதனால் சித்ரவதை செய்து கொல்லப்படுவதும் பரபர... பொன்னம்பலம், தேவிகிருபா, அஸ்வதி, காதல் சுகுமார், கொட்டாச்சி ஆகியோரும் உள்ளனர்.

பி.சி. சிவன் இசையும் ஆர்.சரவணன் ஒளிப்பதிவும் கை கொடுக்கிறது.

21 மே 2010

ஐஸ்வர்யா ராய் எப்போ குட்டிபோடுவது?பார்த்தீபனின் நக்கல் பேச்சு!


ஷங்கர் தயாரிப்பில் உருவாகியுள்ள ரெட்டைச்சுழி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா ராயை புகழ்ந்து பேசுவதாகக் கூறிக் கொண்டு தத்துப் பித்தென்று உளறி வைத்தனர் மூத்த இயக்குநர்கள் முதல் நேற்றைய இயக்குநர்கள் வரை. ஐஸ்வர்யாவுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்தது சந்தோஷமாக இருந்தது. அவரது அழகை ஆராதித்தேன். இந்த கிழவனுக்கு என்ன ஆசைன்னு நினைக்காதீங்க. அழகை ஆராதிக்க வயசு ஏது? ஆனா... ஆராதிக்கிறதோட நிறுத்திக்கணும், என்றார். அதற்கு முன் பேசிய பார்த்திபன் வரம்பு மீறினார். ஐஸ்வர்யா ராய் குட்டி போடுவது எப்போது? என்றெல்லாம் பேசி முகம் சுழிக்க வைத்தார். மேலும் அவர் பேசுகையில், "சுமாரா ஒரு பொண்ணு வந்தாலே ஐஸ்வர்ய ராய் மாதிரி அழகா இருக்கான்னு சொல்லுவேன். ஐஸ்வர்யா ராயே இங்கு வந்திருக்கிறார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு சுனாமியே ஸ்டேஜ்ல வந்து உட்கார்ந்திருக்கிறது. ஐஸ்வர்யா ராய் சிரிக்கும்போது கன்னத்தில் விழுகிற கன்னக்குழியை ரெட்டைச்சுழி என்றும் சொல்லலாம் என்று கூறிய பார்த்திபன், கொஞ்சம் விவகாரமாகவும் பேசினார். "விழா அழைப்பிதழில் ஆடியோ சி.டி.,யை ஐஸ்வர்யா ராய் வெளியிட வைரமுத்து பெற்றுக் கொள்வார் என்று போட்டிருந்தார்கள். நாங்களும் அவர் எப்போ பெற்றுக் கொள்வார்... பெற்றுக் கொள்வார் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த 50 கே.ஜி. தாஜமஹால் குட்டி போட்டால் அந்த குட்டி 5 கிலோ தாஜ்மஹாலாகவாவது இருக்கும் அல்லவா? அந்த குட்டி எப்போன்னுதான் எதிர்பார்த்திட்டு இருக்கோம்..." என்று ஏடாகூடமாக பேசினார். அதற்கும் பலமாகவே கையைத் தட்டி உற்சாகம் காட்டினார்கள் ரசிப்புத் திலகங்கள். பாரதிராஜா பேசும்போது, எனக்கு சீட் கொஞ்சம் தூரமா போட்டுட்டாங்க. ஐஸ்வர்யா ராய்க்கு அற்புதமான கண்கள் இருக்கிறது. சிரிப்பில் கர்வம் இல்லை. கர்வம் இல்லாத பொண்ணு. அதுதான் அவருக்கு சொத்து, என்றார். வைரமுத்து பேசுகையில், "ஐஸ்வர்யா ராயை கண்ணியமாகப் பார்க்க வேண்டும்" என்று பேசியவர், பின்னர் பார்த்திபன் பாணிக்குப் போய்விட்டார்... "ஐஸ்வர்யா ராயின் கூந்தல் அழகா, நெற்றி அழகா, கன்னம் அழகா, இதழ் அழகா, கழுத்து அழகா (அதுக்கும் கீழே இறங்கித் தொலைப்பாரோ என்ற சங்கடம்...), இடை அழகா... என்று பார்க்கையில், அவரது கண்ணியம்தான் அழகு" என்று கூறி முடித்தார். மேடையில் ஒரு அழகான பெண்ணைப் பார்த்துவிட்டால் இப்படியா கட்டுப்பாடிழந்து போவார்கள்... கடவுளே கடவுளே!

பெட்டிக்குள் படுத்தது சுறா,திண்டாடுகிறது சண் குழுமம்!


வேட்டைக்காரன் வசூலில் கோட்டைவிட்டதை ஈடுகட்டத்தான் சுறாவை வாங்கியது சன் பிக்ஸர்ஸ். ஆனால் சுறாவோ முதல் வாரமே பெட்டிக்குள் போகத் தொடங்கிவிட்டது. புறநகர்ப் பகுதிகளில் பல திரையரங்குகளில் சுறா தூக்கப்பட்டுவிட்டது. கோபி போன்ற நகரங்களில் நான்கைந்து திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்ட சுறா, சரியாக 7 நாட்களில் ஒரு தியேட்டரில் மட்டுமே ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே படு தோல்வியைச் சந்தித்ததை சன் பிக்சர்ஸும் மவுனமாக ஒப்புக் கொண்டு, அதை ஈடுகட்ட சிங்கம் படத்தை விநியோகஸ்தர்களுக்குத் தர முடிவு செய்துள்ளது. இன்னொரு பக்கம் விஜய்யுடன் மல்லுக்கு நிற்பதாக, மிக நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தந்துள்ளன. இந்தப் படத்தில் நடித்த விஜய்க்கு சம்பளமாக சில கோடிகள் இன்னும் தர வேண்டுமாம் சன் பிக்சர்ஸ். இந்தத் தொகையை இன்னமும் தராமல் இழுத்தடிக்கிறதாம். விஜய்யின் தந்தையே நேரடியாகப் போய் சன் பிக்ஸர்ஸ் மேலிடத்திடம் பேசியம் ஒன்றும் பலனில்லையாம். சன் பிக்ஸர்ஸ் நேரடியாகத் தயாரிக்கும் படத்துக்கு கால்ஷீட் வேண்டுமானால் தந்துவிடுகிறோம், பேலன்ஸை செட்டில் செய்யுங்கள் என விஜய் தரப்பு கேட்டுள்ளனராம். சிங்கம் ரிலீஸாகி, எங்கள் பிரச்சினை தீர்ந்த பிறகு மற்றதைப் பேசலாம் என சன் தரப்பில் கூறியுள்ளார்களாம். இந்த நிலையில், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் நஷ்டத்துக்காக ஹீரோக்களின் சம்பளத்தைப் பிடிக்கக் கூடாது என்ற பிரச்சினையை நடிகர் சங்கம் மூலம் எழுப்பத் திட்டமிட்டுள்ளதாம் விஜய்யின் தந்தை தரப்பு...! அடடா.. தனக்கு வந்தாதான் தலைவலியும் திருகுவலியும் தெரியுது. இதுவே குசேலன் பிரச்சினையின்போது எவ்வளவு குதூகலமாக வேடிக்கைப் பார்த்தார்கள் மற்ற தமிழ் நடிகர்கள்!

இருக்கா இல்லையா?நழுவும் அசின்.




தங்களைச் சுற்றி எப்போதும் ஒரு கிசுகிசு இருக்கும்படி பார்த்துக் கொள்வதை முன்னணி நடிகைகள் ஒரு கலையாகவே கற்று வைத்திருக்கிறார்கள். அப்படி வரும் கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை அவர்கள் ஒரு போதும் விரும்புவதுமில்லை. படங்களே இல்லாவிட்டாலும் தொடர்ந்து பல கிசுகிசுக்கள், வதந்திகள் என தலைப்புச் செய்திகளில் இடம்பெறுபவர் அசின். இப்போது டோணியுடன் நெருக்கம் காட்டுகிறார். காதலா என்றால் 'இல்லையில்லை நட்பு... அதை களங்கப்படுத்தாதீர்கள்' என்கிறார். ஆனால் 'இந்த நட்பு தொடரும்... அவர் மிகச் சிறந்த ரசிகர்' என்று அந்த கிசுகிசுவுக்கு ஒரு கமாவும் போடுகிறார். இப்படித்தான் முன்பு சல்மானுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றார். ஆனால் அசின் படுக்கையறையில் சல்மான்கான் படம் மாட்டப்பட்டிருப்பதையும், இருவரும் நள்ளிரவுப் பார்ட்டிகளுக்கு ஒன்றாக வந்ததையும் பாலிவுட் பத்திரிகைகள் புகைப்படத்துடன் வெளியிட்டன. ஆனால் அசினோ, 'எனக்குப் பார்ட்டிகளே பிடிக்காது' என்று முழு ஆதாரத்தையும் பொய்க்குள் மறைத்தார்!

20 மே 2010

சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே?


சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே?

பள்ளிக்கு சென்றாளோ படிக்கச் சென்றாளோ ?

வாடா மருமகா

என் அழகு மன்மதா பள்ளிக்கு தான் சென்றாள்

படிக்கத் தான் சென்றாள்

ஐயோ மாமி அவளை அங்கே விடாதே

அவளை என்னும் படிக்கவென்று கெடாதே

ஊர்

சுழலும் பெடியளெல்லாம்

கன்னியரை கண்டவுடன் கண்ணடிக்கும் காலமல்லவோ -

( சின்ன மாமியே) ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே

அவள்

வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே

அடக்கமில்லா பெண்ணிவள் என்றாஎன்மகளை நினைத்து விட்டாய்இடுப்பொடியத் தந்திடுவேனே -( சின்ன மாமியே)

ஏநனை



மாமி மேலே மேலே துள்ளுறியேபாரணை மாமி படுகுழியில்தள்ளுறியேஏனணை மாமி அவளெனக்குதெவிட்டாதவள் எனக்குபாரணை மாமி கட்டுறன் தாலியை.

அழகியாக மாற்றி திருமணம் செய்த மருத்துவர்!



வறுமை‌யி‌ல் வாடும் பெ‌ண்‌ணி‌ற்கு வரத‌ட்சணை‌ கொடு‌த்து ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்ளு‌ம் மணமக‌ன் ‌வீ‌ட்டா‌ரை‌ப் பா‌ர்‌த்து‌ள்ளோ‌ம். இ‌ங்கு, ஒரு பெண்ணிற்கு 8 முறை ‌பிளா‌ஸ்டி‌க் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து அழ‌கியாக மா‌ற்‌றி‌க் கொ‌ண்டு அவரையே‌ ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்ட ஒரு மரு‌த்துவரை‌ப் ப‌ற்‌றி‌ப் பா‌ர்‌க்கலா‌ம். ஜெர்மனி நாட்டை சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை ‌சி‌கி‌ச்சை ‌நிபுண‌ர் ரெசா வோசவ் (48), ஒரு பெண்ணை சமீபத்தில் சந்தித்தார். அவர் பெயர் கேனி. 33 வயதான இவர் ஒரு ஓட்டலில் பணியாற்றி வந்தார். கே‌னியை‌ப் பா‌ர்‌த்ததுமே ரெசா வோச‌வ்‌க்கு ‌பிடி‌த்து ‌வி‌ட்டது. ஆனா‌ல் அவரது அழ‌கி‌ல் ஒரு ‌சில குறைபாடுக‌ள் இரு‌ப்பதாக ‌நினை‌த்த ரெசா வோச‌வ் அவரை அவரை முழு அழகியாக மா‌ற்ற ‌பிளா‌‌‌ஸ்டி‌க் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்ய ‌தி‌ட்ட‌மி‌ட்டா‌‌ர். ஒரு முறை ‌பிளா‌ஸ்டி‌க் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்ய, அதுவே தொட‌ர்‌ந்து அ‌ங்க‌ங்கே ‌சில ட‌ச் அ‌ப்க‌ள் போல சுமார் 8 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வே‌ண்டியதா‌கி‌வி‌ட்டது.அதாவது கே‌னி‌யி‌ன் மார்பகத்தையும், தொடைகளையும், கண்களையும், முகத்தையும் மாற்றி அமைக்க அவர் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்தா‌ர். இது கு‌றி‌த்து வோச‌வ் கூறுகை‌யி‌ல், நான் முதல் முறையாக கேனியை சந்தித்தபோது, அவர் உடல் அமைப்பில் சில குறைபாடுகள் இருப்பதை நான் கவனித்தேன். இருந்தபோதிலும் அவரிடம் இருந்த அழகு என்னை கவர்ந்தது. அவர் இடுப்பும் தொடைகளும் பெரிதாக இருந்தன. அதனால் சில திருத்தங்கள் செய்தேன். பிறகு மேலும் சில திருத்தங்கள் என 8 முறை அறுவை ‌சி‌கி‌ச்சை செய்தேன் என்று கூறினார்.கே‌னி‌யி‌ன் மார்பகத்தையும், உதடுகளையும் பெரிதாக மாற்றினார். கண்ணிமைகளை கொஞ்சம் உயர்த்தினார். நெற்றியை சமப்படுத்தினார். இதன் மூலம் கேனி இன்னும் அழகான பெண்ணாக மாறினார். இந்த அறுவை ‌சி‌கி‌ச்சை‌க்கு 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவு ஆனது. இந்த அறுவை ‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌பிறகு முழு அழகியான கே‌னியை வோச‌வ் ‌திருமணம் செய்து கொண்டார்.

06 மே 2010

பிடித்ததால் ரசித்தது.


குரல்: ஹரிகரன்.

கவிவரி: கலைக்குமார்.

படம்: உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்,

இசை :S.A.ராஜ்குமார்,ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்கேட்கும்போதெல்லாம்

உன் ஞாபகம் தாலாட்டும்என் கண்களின்

இமைகளிலே உன் ஞாபகம்

சிறகடிக்கும்நான் சுவாசிக்கும்

மூச்சினிலே உன் ஞாபகம்

கலந்திருக்கும்ஞாபகங்கள் மழையாகும்

ஞாபகங்கள் குடையாகும்ஞாபகங்கள்

தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்ஏதோ

ஒரு பாட்டு என் காதில்

கேட்கும்கேட்கும்போதெல்லாம்

உன் ஞாபகம் தாலாட்டும்கவிதை

என்றாலே உன் பெயரின் ஞாபகமேகேட்கும்

இசையெல்லாம் நீ பேசும்

ஞாபகமேபூக்களின் மேலே

பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமேஅதிர்ஷ்டம்

என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்அழகு

என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்ஏதோ

ஒரு பாட்டு என் காதில்

கேட்கும்கேட்கும்போதெல்லாம்

உன் ஞாபகம் தாலாட்டும்தென்றல்

என்றாலே உன் வாசல் ஞாபகமேவசந்தம்

என்றாலே உன் வருகை ஞாபகமேதொட்டால்

சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம்

ஞாபகமேஅலைகள் போலவே மோதும்

உந்தன் ஞாபகம்மறந்துபோனதே

எனக்கு எந்தன் ஞாபகம்ஏதோ

ஒரு பாட்டு என் காதில்

கேட்கும்கேட்கும்போதெல்லாம்

உன் ஞாபகம் தாலாட்டும்.

என்னை+உங்களை கவர்ந்த பாடல்.











படம்: பாண்டவர் பூமி,

பாடியவர்கள்:யுகேந்திரன்,சுஜாதா.

தோழா தோழா கனவுத் தோழா,

தோழா தோழா தோள்கொடு

கொஞ்சம் சாஞ்சிக்கணும்

நட்பைப்பற்றி பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கணும்

உன்னை நான் புரிஞ்சுக்கணும்,

ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்,

ஆணும்

பெண்ணும் பழகிக்கிட்டால் காதலாகுமா?

அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்

நட்பு மாறுமா?நட்புக்குள் பொய்கள் கிடையாது,

நட்புக்குள் தவறுகள் நடக்காது,

நட்புக்குள்



தன்னலம் இருக்காது,

நட்புக்கு ஆண் பெண் தெரியாது,

நட்பு என்னும் நூலெடுத்துபூமியில் கட்டி நீ நிறுத்து,

நட்பு நட்புதான் காதல் காதல்தான்,

காதல் மாறலாம் நட்பு மாறுமா?

காதல் ஒன்றும் தவறே இல்லை,காதல் இன்றி மனிதன் இல்லை,

நண்பர்களும் காதலராகமாறிய பின் சொல்லியதுண்டு,

இப்போ நீயும் நானும் பழகுறோமே காதலாகுமா?

இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா?

தோழா தோழா கனவுத் தோழா,

தோழா தோழா தோள்கொடு கொஞ்சம்

சாஞ்சிக்கணும்,நீயும் நானும் வெகுநேரம்

மனம்விட்டுப் பேசிச் சிரித்தாலும்,

பிரியும் பொழுதில் சில நொடிகள்

மெளனம் கொள்வது ஏன் தோழி

புரிதலில் காதல் இல்லையடி,

பிரிதலில் காதலைச் சொல்லி விடு,

காதல் காதல்தான் நட்பு நட்புதான்,

நட்பின் வழியிலே காதல் வளருமே!

பிரிந்து போன நட்பினைக் கேட்டால்,

பசுமையான கதைகளைச் சொல்லும்,

பிரியமான காதலும் கூடபிரிந்த பின்னே

ரணமாய்க் கொள்ளும்

ஆணும்

பெண்ணும் காதல் இல்லாமல்

பழகிக்கலாம்ஆ... இது correctஆயுள் முழுதும்

களங்கப்படாமல் பார்த்துக்கலாம்தோழா தோழா

கனவுத் தோழாதோழா தோழா தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்நட்பைபப் பற்றி

நாமும் பேசித் தீர்த்துக்கணும்.

உன்னை நான் புரிஞ்சுக்கணும்

ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும்ஆணும்

பெண்ணும் காதலில்லாமல் பழகிக்கலாம்

அது ஆயுள் முழுதும் களங்கப்படாமல் பார்த்துக்கலாம்.

03 மே 2010

நினைத்தேன் வலிக்கிறது!!!


எங்கள் ஊர் அழகான சிறுகிராமம்,

விவசாயக்கிராமம்

என்பதால்தோட்டங்களும்

வயல்வெளிகளும் நிறையவே உண்டு,

மாரிகாலமென்றால்

வயல்வெளி எங்கும்

வெள்ளம் நிரம்பி ஓடும்,

மீன்கள் எல்லாம் ஓடிவிளையாடும்,

பறவைகளினதும்,

பூச்சிகளினதும் ரீங்காரம்ஒலி

எழுப்பிக்கொண்டேயிருக்கும்,

சிறுவர்களாகிய நாம்

ஓடி விளையாடி

வெள்ளங்களில் வெடி அடித்து

குதூகலித்துக்கொண்டிருப்போம்,

அப்பா,அம்மா,சகோதரங்கள்உறவினர்,

ஊரவரென எமதூரே ஒரு வீடு போல்தான் இருக்கும்,

அந்தவாழ்க்கையையும் சந்தோசத்தையும் இன்று நினைக்கத்தான்முடிகிறதேதவிர

அனுபவிக்க முடிவதில்லை,

வாழ்க்கையும்எப்படி

எப்படியெல்லாமோ ஆகிவிட்டது,

ஒவ்வொருவரும்ஒவ்வொரு

திக்காய் ஆகிவிட்ட அவலம்,

எந்த இனமுமே கண்டிராதமாபெரும்

கொடூரத்தை எம்மினம் சந்தித்தது,

எம்மை தாலாட்டி சீராட்டி

கண்போலகாத்த எம் தந்தையும்

எமை விட்டு பிரிந்து விட்ட மாதுயரம்,

கொள்ளியிடக்கூட செல்ல முடியாத

பாவியானேனே எனும் ஏக்கம்,

இப்படி இன்னுமின்னும்

எத்தனையோ

துன்பங்களுள் தவிக்கும் எம்மினம்,

எங்கே செல்ல யாரிடம் சொல்ல?.

கேள்விகளுடனே எமது பயணம்.

02 மே 2010

நிலா மறக்க முடியாதவள்!


நிலா மறக்க முடியாதவள்,

வானத்திலிருந்து கொண்டே,

பூமியை சுற்றிவட்டமிடுகிறாளேஅந்த நிலா போல,
நிலா மறக்க முடியாதவள்,

தக்காளிப்பழத்திற்கு உறைஅணிந்தது போல

அவள்எழில் மேனியை மூடி நிற்கும்வர்ண ஆடைகள்,

மின்சாரத்தில் இயங்கும்மின்குமிழ்கள் போலவிட்டு விட்டு

துடிக்கும்நீல நிறக்கண்கள்,
நிலா மறக்க முடியாதவள்,

தங்கத்தில் முத்து பதித்ததுபோலகன்னங்களை

அலங்கரிக்கும்வட்டக் குழிகள்,

மொட்டு மலர்ந்தது போலேபுன்னகைக்கும் இதழ்கள்,
நிலா மறக்க முடியாதவள்,
வானத்திலிருந்து கொண்டேபூமியை சுற்றி வட்டமிடுகிறாளேஅந்த நிலா போலநிலா மறக்க முடியாதவள்.