பக்கங்கள்

21 ஜூலை 2010

சம்பளத்தில் முரண்டு பிடித்ததால் படவாய்ப்பை இழந்த ஓவியா.


'களவாணி' படத்தில் நடித்த ஓவியா,​​ அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு 'மாயாண்டி குடும்பத்தார்',​ 'கோரிப்பாளையம்' படங்களை இயக்கிய ராசு மதுரவனின் 'முத்துக்கு முத்தாக' படத்தில் நடிக்க ஒன்றரை லட்சம் ரூபாயை சம்பளமாகப் பேசி ஒரு தொகையை அட்வான்ஸôக வாங்கியிருந்தார்.​
'களவாணி' படம் ஹிட் ஆனவுடன்,​​ 15 லட்ச ரூபாய் சம்பளம் தந்தால்தான் நடிப்பேன் என அடம் பிடித்திருக்கிறார்.​ அதனால் அவரிடம் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி வாங்கிக்கொண்டு அவரை படத்திலிருந்து நீக்கிவிட்டார்.​
'களவாணி' படம் கதையை வைத்துதான் வெற்றி பெற்றது.​ ஓவியாவை வைத்து அல்ல என்று கூறும் இயக்குநர் தரப்பு,​​ அவர் கேட்ட தொகையில் மூன்று நாயகிகளை ஒப்பந்தம் செய்து 'முத்துக்கு முத்தாக' படத்தைத் தொடங்கிவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக