பக்கங்கள்

27 மே 2010

ஆதிபகவன் மூலம் மீண்டும் வருகிறார் மம்தா!


சிவப்பதிகாரம், குரு என் ஆளு படங்களுக்குப் பின் காணாமல் போயிருந்த மம்தா ஆதிபகவன் படம் மூலம் மீண்டும் வருகிறார்.அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஆதிபகவன் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, பாங்காக் நாடுகளில் சத்தமில்லாமல் ஒரு ஷெட்டியூல் முடிந்திருக்கிறது. கதாநாயகி கிடைக்காமல் தவித்த அமீர், கடைசி நேரத்தில் கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் சமீபகாலமாக கோலோச்சிவரும் மம்தா மோகந்தாஸைத் தேடிப்பிடித்து நாயகியாக்கியிருக்கிறார். இவரை பாங்காக் கூட்டிப்போய் ஒரு ஷெட்டியூலை முடித்துத் திரும்பியிருக்கிறார். பருத்தி வீரனில் நடித்த ப்ரியாமணியே மீண்டும் அமீர் இயக்கத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பு இப்போது மம்தாவுக்குப் போய்விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக