பக்கங்கள்

21 மே 2010

ஐஸ்வர்யா ராய் எப்போ குட்டிபோடுவது?பார்த்தீபனின் நக்கல் பேச்சு!


ஷங்கர் தயாரிப்பில் உருவாகியுள்ள ரெட்டைச்சுழி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா ராயை புகழ்ந்து பேசுவதாகக் கூறிக் கொண்டு தத்துப் பித்தென்று உளறி வைத்தனர் மூத்த இயக்குநர்கள் முதல் நேற்றைய இயக்குநர்கள் வரை. ஐஸ்வர்யாவுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்தது சந்தோஷமாக இருந்தது. அவரது அழகை ஆராதித்தேன். இந்த கிழவனுக்கு என்ன ஆசைன்னு நினைக்காதீங்க. அழகை ஆராதிக்க வயசு ஏது? ஆனா... ஆராதிக்கிறதோட நிறுத்திக்கணும், என்றார். அதற்கு முன் பேசிய பார்த்திபன் வரம்பு மீறினார். ஐஸ்வர்யா ராய் குட்டி போடுவது எப்போது? என்றெல்லாம் பேசி முகம் சுழிக்க வைத்தார். மேலும் அவர் பேசுகையில், "சுமாரா ஒரு பொண்ணு வந்தாலே ஐஸ்வர்ய ராய் மாதிரி அழகா இருக்கான்னு சொல்லுவேன். ஐஸ்வர்யா ராயே இங்கு வந்திருக்கிறார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு சுனாமியே ஸ்டேஜ்ல வந்து உட்கார்ந்திருக்கிறது. ஐஸ்வர்யா ராய் சிரிக்கும்போது கன்னத்தில் விழுகிற கன்னக்குழியை ரெட்டைச்சுழி என்றும் சொல்லலாம் என்று கூறிய பார்த்திபன், கொஞ்சம் விவகாரமாகவும் பேசினார். "விழா அழைப்பிதழில் ஆடியோ சி.டி.,யை ஐஸ்வர்யா ராய் வெளியிட வைரமுத்து பெற்றுக் கொள்வார் என்று போட்டிருந்தார்கள். நாங்களும் அவர் எப்போ பெற்றுக் கொள்வார்... பெற்றுக் கொள்வார் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த 50 கே.ஜி. தாஜமஹால் குட்டி போட்டால் அந்த குட்டி 5 கிலோ தாஜ்மஹாலாகவாவது இருக்கும் அல்லவா? அந்த குட்டி எப்போன்னுதான் எதிர்பார்த்திட்டு இருக்கோம்..." என்று ஏடாகூடமாக பேசினார். அதற்கும் பலமாகவே கையைத் தட்டி உற்சாகம் காட்டினார்கள் ரசிப்புத் திலகங்கள். பாரதிராஜா பேசும்போது, எனக்கு சீட் கொஞ்சம் தூரமா போட்டுட்டாங்க. ஐஸ்வர்யா ராய்க்கு அற்புதமான கண்கள் இருக்கிறது. சிரிப்பில் கர்வம் இல்லை. கர்வம் இல்லாத பொண்ணு. அதுதான் அவருக்கு சொத்து, என்றார். வைரமுத்து பேசுகையில், "ஐஸ்வர்யா ராயை கண்ணியமாகப் பார்க்க வேண்டும்" என்று பேசியவர், பின்னர் பார்த்திபன் பாணிக்குப் போய்விட்டார்... "ஐஸ்வர்யா ராயின் கூந்தல் அழகா, நெற்றி அழகா, கன்னம் அழகா, இதழ் அழகா, கழுத்து அழகா (அதுக்கும் கீழே இறங்கித் தொலைப்பாரோ என்ற சங்கடம்...), இடை அழகா... என்று பார்க்கையில், அவரது கண்ணியம்தான் அழகு" என்று கூறி முடித்தார். மேடையில் ஒரு அழகான பெண்ணைப் பார்த்துவிட்டால் இப்படியா கட்டுப்பாடிழந்து போவார்கள்... கடவுளே கடவுளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக