உல்லாசமாக இருக்க என்னிடம் ரூ 5000 கேட்டார் நடிகை புவனேஸ்வரி என்று சாட்சியம் அளித்துள்ளார் விபச்சார தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் தனஞ்சயன். கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாஸ்திரி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து விபசாரம் செய்ததாக நடிகை புவனேஸ்வரியை சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு திரையுலகையே பெரும் புயலாக தாக்கியது. சினிமா உலகம் புவனேஸ்வரிக்கு ஆதரவாகத் திரண்டது. இத்துடன் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளியான செய்தி காரணமாக பத்திரிகையுலகுடன் கடுமையாக மோதினர் சினிமாக்காரர்கள். அன்றைய முதல்வர் கருணாநிதி, வெளிப்படையாகவே சினிமாக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். செய்தி வெளியிட்ட பத்திரிகை ஆசிரியரை கைது செய்தார். ஆனால் அதூறாகப் பேசிய சினிமாக்காரர்களை கண்டு கொள்ளவே இல்லை. அதன் பிறகு ஆண்டுகள் ஓட, அப்படியே மறந்துபோய்விட்டனர் அனைத்துத் தரப்பினரும். இந்த வழக்கு தூசு தட்டப்பட்டு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விபசார வழக்கில் போலீசார் 25 பக்க குற்றப் பத்திரிகையை கடந்த 2010-ம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டை பெருநகர 4-வது கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வந்த நடிகை புவனேஸ்வரி ஒருமுறை கூட கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அந்த குற்றப் பத்திரிகை நகல் அவருக்கு வழங்கப்படவே இல்லை. இந்த நிலையில் ஈஞ்சம்பாக்கம் தியேட்டரில் ரகளை செய்த வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நடிகை புவனேஸ்வரி மீது நிலுவையில் இருந்த கார் மோசடி வழக்கு, டி.வி.தொடர் தயாரிப்பதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி வழக்கு என மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டார். பழைய விபசார வழக்கில் குற்றப்பத்திரிகை வழங்க நடிகை புவனேஸ்வரியை சைதை பெருநகர 4 வது கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி அரசு தரப்பு வக்கீல் வேலுச்சாமி மனு தாக்கல் செய்தார். இதைதொடர்ந்து கடந்த 10-ந்தேதி நடிகை புவனேஸ்வரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றப் பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார். ஆனால் தான் குற்றவாளி இல்லை என மறுத்தார் அவர். அதற்கடுத்த 3 வழக்குகள் தொடர்பான சாட்சிகள் விசாரணை அதே கோர்ட்டில் நடந்தது. அப்போது விபசார தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தனசெயன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். 'நடிகை புவனேஸ்வரி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்ததாகவும் அவரை சந்தித்தபோது உல்லாசமாக இருக்க ரூ.5 ஆயிரம் கேட்டார்', என அவர் தன் சாட்சியத்தில் தெரிவித்தார். மற்ற சாட்சிகளிடம் வரும் ஜனவரி 9-ம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது.
29 டிசம்பர் 2012
26 டிசம்பர் 2012
மறுக்காத ரியா சென்!
![]() |
ரியா சென் |
23 டிசம்பர் 2012
லக்ஷ்மி ராயின் மேலாடை கிழிந்தது!
புதுச்சேரியில் ஒன்பதுல குரு படப்பிடிப்பில் இருந்த நடிகை லக்ஷ்மி ராயிடம் ரசிகர்கள் சில்மிஷம் செய்ததில் அவரது மேலாடை கிழிந்தது. பி.டி. செல்வகுமார் இயக்கத்தில் வினய், லஷ்மி ராய் நடித்து வரும் படம் ஒன்பதுல குரு. இந்த படத்தில் ஒரு டூயட் பாடலை புதுச்சேரியில் படமாக்கினர். ஷூடிட்ங் இடைவேளையில் லக்ஷ்மி ராயிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்கினர். அப்போது கூட்டம் கூடியதுடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ரசிகர்கள் லக்ஷமி ராயிடம் சில்மிஷம் செய்தனர். இதில் அவரது மேலாடை கிழிந்தது. நிலைமை கையை மீறிச் செல்வதை உணர்ந்த படக்குழுவினர் ஓடிவந்து லக்ஷ்மி ராயை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதையடுத்து ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டு லக்ஷ்மி ராய் அவரது ஹோட்டல் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படப்பிடிப்பில் நடிகைகளிடம் ரசிகர்கள் சில்மிஷம் செய்வது இது முதல் முறையன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பதுல குரு படத்தில் பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஞ்சலி, ச்தயன், மந்த்ரா மற்றும் ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
15 டிசம்பர் 2012
அசின் மீது பைத்தியமாக உள்ள ரசிகர்!
தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் சென்ற நடிகை அசினுக்கு ஒரு தீவிர ரசிகர் உள்ளார். அந்த நபர் அசின் மீது பைத்தியமாகவே உள்ளார். மேலும் அசினையே மணக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காதல் பைத்தியம் முற்றவே அந்த நபர் பெங்களூரில் அசினுக்காக ஒரு பங்களாவை வாங்கிப் போட்டுள்ளார். மேலும் அசின் எப்பொழுது பெங்களூர் வந்தாலும் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இந்த தீவிர ரசிகர் தவறாமல் ஆஜராகிவிடுகிறார். தனது பிரிய நடிகைக்கு அந்த நபர் பூக்கள், சாக்லேட் மற்றும் பேஷன் ஐட்டங்களை அனுப்பி வைத்துள்ளார். அவர் அசின் மேல் பைத்தியமாக இருக்கலாம். ஆனால் அசினோ பாலிவுட் மீதல்லவா பைத்தியமாக இருக்கிறார். எப்படியாவது அங்கு பெரிய ஆளாகிவிட வேண்டும் என்று போராடி வரும் அவர் இந்த ரசிகரின் அன்புக்கு அடங்குவாரா என்ன? இதற்கு முன்பு பாலிவுட் தயாரிப்பாளர் சாஜித் நாதியாத்வாலாவின் மகன் சுபான் அசினுக்கு லாலிபப், சாக்லேட், கரடி பொம்மை மற்றும் ரோஜாப் பூக்கள் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
13 டிசம்பர் 2012
இயக்குநர் கர்ணன் மரணம்!

09 டிசம்பர் 2012
உன் சமையல் அறையில்!
நடிகை சினேகா பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் உன் சமையல் அறையில் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகர், இயக்குனர் பிரகாஷ் ராஜ் மலையாளத்தில் வெளியான சால்ட் அன்ட் பெப்பர் படத்தை தமிழில் உன் சமையல் அறையில் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார். இந்த படத்தில் நடிகை சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை தபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
பிரகாஷ் ராஜ் இதற்கு முன்பு கன்னடத்தில் அபியும், நானும் மற்றும் தோணி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சினேகா பிரகாஷ் ராஜ் நிச்சயம் நல்ல படங்களை இயக்குவார் என்ற நம்பிக்கையில் அவரது படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். தனக்கு இந்த படத்தில் கிடைத்துள்ள கதாபாத்திரத்தை நினைத்து சினேகா குஷியாக உள்ளார் என்று கூறப்படுகிறது.
திருமணத்திற்கு முன்பு சமையல் தெரியாத நான் தற்போது கற்றுக் கொண்டிருக்கிறேன். கடவுள் அருளால் எனது திருமண வாழ்க்கை அருமையாகப் போய்க் கொண்டிருக்கிறது என்றார் சினேகா.
03 டிசம்பர் 2012
சிம்புவுடன் அப்படி எதுவுமில்லை"லேகா மறுப்பு!

30 நவம்பர் 2012
நண்பர்கள் கவனத்திற்கு!

11 நவம்பர் 2012
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ப்ரியா ராய்?
07 நவம்பர் 2012
கவலையில்லாத சமீரா!
படங்களில் வாய்ப்பு குறைவதால் கவலை இல்லை என்றார் சமீரா ரெட்டி. ‘வாரணம் ஆயிரம்’, ‘வெடி’ உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகை சமீரா ரெட்டி. அவர் கூறியதாவது: ராணா, நயன்தாரா நடிக்கும் தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறேன். இந்த வாய்ப்பை ஏற்றது ஏன் என்கிறார்கள். குத்து பாடலுக்கு மட்டும் ஆட வேண்டுமென்றால் ஆடி இருக்க மாட்டேன். கதையோடு சேர்ந்து வரும் பாடலாக இது அமைந்திருக்கிறது. என்னுடன் வெங்கடேஷும் ஆட உள்ளார். இதுவொரு கவுரவ தோற்றம் என்பதால் ஏற்றேன். இந்தி படங்களில் கரீனா கபூர், கேத்ரினா, வித்யா பாலன் ஆகியோரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்கள்.
அதெல்லாம் ஹிட்டாகி இருக்கிறது. இந்தியில் எனக்கும் நிறைய வாய்ப்புகள் வந்தன. அவைகளில் தேசிய விருது இயக்குனர் பிரகாஷ் ஜா படத்தில் வந்த வாய்ப்பை மட்டும் ஏற்றேன். ‘டோலிவுட் படங்களில் ஹீரோயின்கள் கிளாமருக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்களே?’ என்கிறார்கள். ஹீரோக்கள் ஆதிக்கம் உள்ள படவுலகில் அப்படித்தான் இருக்கும். இதை மாற்றுவதற்காக நான் வரவில்லை. கிளாமர் வேடங்களை நான் தவிர்ப்பதில்லை. படங்களில் வாய்ப்பு குறைந்துவிட்டதுபற்றி கவலைப்படுவதில்லை. சொல்லப்போனால் நிறைய வாய்ப்புகள் வருகிறது. அதில் பிடித்ததை மட்டுமே ஏற்கிறேன். விரைவில் குடும்பத்தினருடன் கிரிஸுக்கு செல்ல உள்ளேன். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.
29 அக்டோபர் 2012
அனுஷ்கா, கிரிஷ் உறவு டமால்..!

19 அக்டோபர் 2012
த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன் மரணம்!

18 அக்டோபர் 2012
எங்கிருந்தாலும் வாழ்க!

14 அக்டோபர் 2012
குத்துப் பாட்டுக்கு ஆடினால் தனி கெளரவம்!

12 அக்டோபர் 2012
தன்மானம் இருந்தால்....?

08 அக்டோபர் 2012
மயங்கிவிழுந்த நடிகை!

05 அக்டோபர் 2012
சிவகார்த்திகேயன் ஜோடி நந்திதா!

27 செப்டம்பர் 2012
கவர்ச்சிக் கடலில் குதித்த ராணி முகர்ஜி!

18 செப்டம்பர் 2012
இனி ஓவியா கூட நடிக்கமாட்டேன்!
![]() |
ஓவியா-விமல் |
16 செப்டம்பர் 2012
டூயட் பாட தூது!
![]() |
தமன்னா |
15 செப்டம்பர் 2012
ஜப்பான் செல்கிறார் ஸ்ரேயா.

12 செப்டம்பர் 2012
மணிக்கணக்கில் கட்டிப்பிடித்த த்ரிஷா- ராணா!


06 செப்டம்பர் 2012
சல்மான் கானுடன் ரொமான்ஸ் செய்ய மறுத்த இலியானா!

04 செப்டம்பர் 2012
உச்சத்திற்குப் போனார் ஷெர்லின்!
02 செப்டம்பர் 2012
ஒரு வழியாக 'கிளைமேக்ஸை' எட்டினார் சிம்பு!
சரத்குமார் மகள் வரலட்சுமியுடன் இணைந்து ரொம்ப நாளாக நடித்து வரும் போடா போடி படத்தை ஒரு வழியாக முடிவுக்குக் கொண்டு வருகிறார் சிம்பு. படம் கிளைமேக்ஸ் காட்சியை எட்டி விட்டதாம். சீக்கிரம் முடித்து விடுவார்கள் என்று நம்பப்படுகிறது.
சரத்குமாரின் மகள் வரலட்சுமி நாயகியாக அறிமுகமாகும் படம்தான் இந்த போடா போடி. ரொம்பகாலமாக இந்தப் படம் இழுத்துக் கிடக்கிறது. வரலட்சுமியே நொந்து போய் விட்டார். அந்த அளவுக்கு ஜவ்வாக படத்தை இழுத்து விட்டார் சிம்பு.
வருடக் கணக்கில் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது வேகம் பிடித்துள்ளதாம். படத்தின் கிளைமேக்ஸ் காட்சி வரை முடித்து விட்டார்களாம். எனவே எப்படியும் இந்தப் படம் வெளியாகி விடும் என்று நம்புகிறார்கள்.
படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ஒரு நடனத்துடன் கூடிய பின்னணியில் படமாக்கியுள்ளனராம். இந்த நடனத்தில் சிம்பு, வரலட்சுமியுடன், பழைய நடிகை ஷோபனாவும் கால்களை ஆட்டியுள்ளாராம்.
செப்டம்பர் 6ம் தேதி டிரெய்லரை வெளியிட்டு விட்டு படத்தை சீக்கிரமாக கொண்டு வரும் திட்டம் உள்ளதாம்.!
31 ஆகஸ்ட் 2012
சேச்சே...ராணாவுடன் எதுவும் நடக்கலே... திரிஷா
எனக்கும், ராணாவுக்கும் நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார் திரிஷா.
திரிஷாவும், அவரது திருமண செய்திகளும் என்று தனியாக ஒரு புக்கே போடலாம். அந்த அளவுக்கு அவருடைய திருமணம் குறித்து ஏகப்பட்ட செய்திகள் வந்து விட்டன.
கட்டக் கடைசியாக தெலுங்கு நடிகர் ராணா டகுபதியுடன் திரிஷா நெருக்கமாக பழகி வருகிறார். அவர்கள் திருமணம் செய்து கொள்வது உறுதி என்று செய்தி வந்தது.
இந்த நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும், அதில் இரு வீட்டாரும் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதுதொடர்பான புகைப்படங்களும் கூட வெளியாகியுள்ளன. நிச்சயதார்த்தத்தையொட்டி திரிஷாவுக்கு, ராணா, பிளாட்டினம் மோதிரமும், நகைகளையும் கொடுத்தார் என்றும் செய்திகள் கூறுகின்றன. ஆனால் இதை அப்படியே மறுத்துள்ளார் திரிஷா.
இதுகுறித்து திரிஷா சொல்லும்போது, இது அடிப்படையே இல்லாத செய்தி. நானும், ராணாவும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம். எங்களைப் போய் சேர்த்து வைத்துப் பேசுவது... சேச்சே... நல்லாவே இல்லை.
மேலும் எங்களுக்கு நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. நான் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறேன். திருமணத்தைப் பற்றி நினைத்துக் கூட பார்க்கவில்லை. இப்போது 3 தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
25 ஆகஸ்ட் 2012
அருந்ததி, நந்தகியுடன் ஏழு ஹீரோக்கள்!

21 ஆகஸ்ட் 2012
தமன்னாவை மிரட்டும் தயாரிப்பாளர்!

16 ஆகஸ்ட் 2012
'இப்படிக்கு தோழர் செங்கொடி'
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி உயிர் நீத்த செங்கொடியின் நினைவாக 'இப்படிக்கு தோழர் செங்கொடி' ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் உணர்வாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த ஆவணப்படம் ஆகஸ்ட் 19 அன்று வெளியிடப்படுகின்றது.
ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் எனக்கோரி கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைத் சேர்ந்த செங்கொடி என்ற இளம் பெண் மூவரின் தண்டனை செய்ய வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த பெண்ணின் வாழ்க்கை வரலாறு "இப்படிக்கு தோழர் செங்கொடி" என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ஏஸ் சினிமாஸ் என்ற நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் "பொன்னுசாமி" என்ற புனை பெயரில் எழுதி வரும் வெற்றிவேல் சந்திரசேகர் என்பவர் இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் "பாலை" ம.செந்தமிழனிடம் துணை இயக்குநராக பணியாற்றிவருகிறார்.
இப்படத்தின் வெளியீட்டு விழா, வரும் 19 அன்று சென்னை கீழ்ப்பாகத்தில் அமைந்துள்ள டான் போஸ்கோ அரங்கில், மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவில் திரைப்பட நடிகர் சத்யராஜ் படத்தை வெளியிட, பேரறிவாளின் தாயார் அற்புதம் அம்மையார் முதல் சிடியினை பெற்றுக் கொள்கிறார். விழாவின் போது, படம் திரையிடப்பட உள்ளது.
08 ஆகஸ்ட் 2012
என்னத்தே கண்ணையா மரணம்!

05 ஆகஸ்ட் 2012
விஜயுடன் சேரத் துடிக்கும் ஆன்ட்ரியா!

01 ஆகஸ்ட் 2012
அடடா!கதை அப்படிப்போகுதோ!!!

25 ஜூலை 2012
நான் கவர்ச்சியா நடிக்கப் போறேன்!'
சுனேனா... காதலில் விழுந்தேனில் அசத்தாலாக அறிமுகமானார். வம்சம் படத்தில் அட, பரவாயில்லையே.. பாப்பா நல்லா நடிக்குது என பாராட்டும் பெற்றார்.
அத்தோடு காணாமல் போனவர்தான். யாரோ ஒரு நடிகரின் கஸ்டடியில் இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசு வேறு.
கொஞ்சநாள் கழித்து, இப்போது நீர்ப்பறவை, கதிர்வேல், பாண்டி ஒலிபெருக்கி நிலையம் போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் சுனேனா.
தன் உடல் அமைப்புக்கு கவர்ச்சி ட்ரெஸ், பிகினி போன்றவை செட் ஆகாது என்று இதுவரை கூறி வந்தவர், இப்போது 'நான்தான் சின்னப் பொண்ணு, ஏதோ சொல்லிட்டேன். அதுக்காக அப்படியே விட்டுடுவீங்களா... கொண்டாங்க அந்த பிகினியையெல்லாம்.. ஒரு கை பாத்துடறேன்," எனும் அளவுக்கு இறங்கிவிட்டாராம்!
நிசமாவா? என்றால், "ஆமா.. " என்றவர், தமிழ் நடிகைகள் எப்போதும் வைத்திருக்கும் அந்த ரெடிமேட் வாக்கியத்தை ஒப்பித்தார்.
"கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நான் நடிக்கத் தயார்!"
ஹப்பாடா... தமிழ் சினிமா ரசிகன் கட்ட வேகாம போயிடுமோங்கிற கவலை தீர்ந்ததம்மிணி!!
22 ஜூலை 2012
கமல் மகள் அக்ஷரா காதல்?

15 ஜூலை 2012
ரீமா சென் மீது கணவர் கோபம்!
![]() |
ரீமா சென் |
10 ஜூலை 2012
நயன்,த்ரிஷா கட்டிப்பிடி நட்பு!

04 ஜூலை 2012
சூர்யாவுடன் டூயட் பாடும் பிரணீதா!
![]() |
பிரணீதா |
30 ஜூன் 2012
வதந்திகளை நம்பவேண்டாம் என்கிறார் ஓவியா!

29 ஜூன் 2012
நாயகிகள் 6தேவையாம் சிம்புவுக்கு!

20 ஜூன் 2012
பாண்டியராஜனின் மகன் படுகாயம்!

16 ஜூன் 2012
காசு வாங்கினேனா...?தமன்னா
சமீபத்தில் நடந்த ராம்சரண் தேஜா - உபாசனா திருமணத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு விஷயம், தமன்னாவின் சூப்பர் ஆட்டம்!
ராம் சரண் - உபாசனாவுக்கு திருமணத்துக்கு முன் நடந்த சங்கீத் நிகழ்ச்சியில்தான் அவர் அசத்தல் ஆட்டம் போட்டார்.
அவருடன் சேர்ந்து ஸ்ரேயாவும் ஆடினார்.
இப்படி நடனமாட அவர்களுக்கு பெரிய தொகை விலையாகத் தரப்பட்டது என ஆந்திரத் திரையுலகில் செய்தி பரவ கொதித்துப் போயுள்ளார் தமன்னா.
"திருமண நிகழ்ச்சிகளில் காசு வாங்கிக் கொண்டு ஆடினேன் என்பது எத்தனை கேவலமான பிரச்சாரம்... நான் அந்த மாதிரி பொண்ணா? எங்க வீட்டில் இப்படி ஒரு விசேஷம் நடந்தா எப்படி சந்தோஷமா ஆடிப் பாடுவோமோ அப்படித்தான் ராம் சரண் திருமணத்திலும் ஆடினோம். இப்படியெல்லாம் அதை கொச்சைப்படுத்துவார்கள் என எதிர்ப்பார்க்கவில்லை," என்றார்.
அடுத்து பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பவன் கல்யாண் ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. தமிழில்?
"கடவுள் அருள் இருந்தால் அது நடக்கும்?" என்றார்.
என்னடா இது... கடவுள் அருள் தமன்னாவுக்கு கிடைப்பதில் பெரிய சிக்கலா இருக்கும் போலிருக்கே!
15 ஜூன் 2012
காகா ராதாகிருஷ்ணன் மரணம்!

13 ஜூன் 2012
சிம்புவுக்கு விரைவில் திருமணம்!

10 ஜூன் 2012
அஞ்சலியின் உதடுகள்....!!!

டெல்லி பெல்லி இந்திப் படத்தை சேட்டை என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். கண்ணன் இயக்குகிறார். ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். பிரேம்ஜி, சந்தானம் காமெடியைக் கவனிக்கிறார்கள். நாயகியாக மசாலா கபே அஞ்சலி.
டெல்லி பெல்லியில் சூடான, சுவையான லிப்லாக் உண்டு. அதே போல சேட்டையிலும் இருக்கிறதாம். அஞ்சலி உதடுகளை ஆர்யா கவ்விக் கொள்வது போல காட்சி வைத்துள்ளனராம். இந்த லிப்லாக்கின் அவசியம், முக்கியத்துவம், கட்டாயம் குறித்து ஆர்யாவிடமும், அஞ்சலியிடமும் கண்ணன் விளக்கினாராம். இதை ஏற்று இருவரும் முத்தமிட்டுக் கொள்ள சம்மதித்து விட்டனராம்.
இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து காட்சியை வடிவமைத்து விட்ட கண்ணன், அக்காட்சியை மும்பையில் போய் ஷூட் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.
இதையடுத்து ஆர்யாவும், அஞ்சலியும் தங்களது உதடுகளுடன் மும்பை செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார்களாம். அதேசமயம், டெல்லி பெல்லியில் வருவது போன்ற படுக்கை அறைக் காட்சி சேட்டையில் இருக்காதாம்...
ஏற்கனவே அமலா பாலின் உதட்டில் விளையாடியுள்ளார் ஆர்யா. இப்போது அஞ்சலியிடம் வருகிறார்....!
09 ஜூன் 2012
ஓட்டலில் லட்சுமிராய் ரகளை!

07 ஜூன் 2012
நடிகரின் பின்புறத்தில் கடித்த ரசிகை!

03 ஜூன் 2012
நட்சத்திரங்களை பச்சைகுத்திய நமீதா!

01 ஜூன் 2012
சகுனியில் ரஜனி,கமல்!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)