பக்கங்கள்

11 நவம்பர் 2012

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ப்ரியா ராய்?

இந்தியாவின் அதிகம் விமர்சனத்துக்குள்ளாகும் டிவி ரியாலிடி ஷோ என்ற இடத்தைப் பிடித்தது "பிக் பாஸ்” நிகழ்ச்சி. இப்போது இந்த நிகழ்ச்சிக்கு கொஞ்சம் கவர்ச்சி கூட்டப்பட்டிருக்கிறது. பிரபல 'ஆபாச’ நட்சத்திரமான பிரியா ராய், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவார் என்று கூறப்படுகிறது. சென்ற வருடம் சல்மான் கான் கிளப்பிய சர்ச்சைகளுக்குப் பின்னர், இந்த நிகழ்ச்சியின் குடும்ப அங்கத்தினருக்கான ஆறாவது பாகத்தில் நிச்சயம் கலந்து கொள்வேன் என்று கூறியிருந்தார். ஆனால், அதன் பிறகான டிஆர்பி ரேட்டிங்கில் இந்த பாகம் பெரும் வரவேற்பு பெறவில்லை. இதை அடுத்து நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் மிகவும் யோசித்து, பிரியா ராயைக் கொண்டு வர தீர்மானித்தனராம். அவர்களின் தகவல் படி, பிரியா ராய் இந்த நிகழ்ச்சியில் ஒரு விருந்தினராகத் தலைகாட்டுவாராம். பிரியா ராய், அவருடைய 2 வயதில், பெற்றோரால் கைவிடப்பட்டு பின்னர் அமெரிக்க தம்பதியால் எடுத்து வளர்க்கப்பட்டவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக