பக்கங்கள்

16 ஜூன் 2012

காசு வாங்கினேனா...?தமன்னா

சமீபத்தில் நடந்த ராம்சரண் தேஜா - உபாசனா திருமணத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு விஷயம், தமன்னாவின் சூப்பர் ஆட்டம்! ராம் சரண் - உபாசனாவுக்கு திருமணத்துக்கு முன் நடந்த சங்கீத் நிகழ்ச்சியில்தான் அவர் அசத்தல் ஆட்டம் போட்டார். அவருடன் சேர்ந்து ஸ்ரேயாவும் ஆடினார். இப்படி நடனமாட அவர்களுக்கு பெரிய தொகை விலையாகத் தரப்பட்டது என ஆந்திரத் திரையுலகில் செய்தி பரவ கொதித்துப் போயுள்ளார் தமன்னா. "திருமண நிகழ்ச்சிகளில் காசு வாங்கிக் கொண்டு ஆடினேன் என்பது எத்தனை கேவலமான பிரச்சாரம்... நான் அந்த மாதிரி பொண்ணா? எங்க வீட்டில் இப்படி ஒரு விசேஷம் நடந்தா எப்படி சந்தோஷமா ஆடிப் பாடுவோமோ அப்படித்தான் ராம் சரண் திருமணத்திலும் ஆடினோம். இப்படியெல்லாம் அதை கொச்சைப்படுத்துவார்கள் என எதிர்ப்பார்க்கவில்லை," என்றார். அடுத்து பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பவன் கல்யாண் ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. தமிழில்? "கடவுள் அருள் இருந்தால் அது நடக்கும்?" என்றார். என்னடா இது... கடவுள் அருள் தமன்னாவுக்கு கிடைப்பதில் பெரிய சிக்கலா இருக்கும் போலிருக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக