பக்கங்கள்

20 ஜூன் 2012

பாண்டியராஜனின் மகன் படுகாயம்!

Pandiyarajan S Son Injured பைக் விபத்தில் நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரேம் ராஜன் (19) படுகாயமடைந்தார். பிரேம்ராஜன் பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் படித்து வருகிறார். தனது நண்பர் பாரத் (18) என்பவடன் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்குப் புறப்பட்டனர். மத்திய கைலாஷ் பகுதியில் சென்றபோது அவரது பைக்கின் முன் பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விழுந்தது. இதில் பிரேம்ராஜன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பாரத்தின் கால் உடைந்தது. இருவரும் பெருங்குடி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பிரேம்ராஜன் தலையில் 18 தையல் போடப்பட்டது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக