அது என்னமோ தெரியவில்லை… இந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மகன் நாமல் ராஜபக்சவுக்கு இந்திய நடிகைகள், குறிப்பாக தமிழ் நடிகைகள் மீது அப்படி ஒரு ஆசை…
நினைத்தால் டெல்லிக்கோ மும்பைக்கோ (இதுவரை சென்னைக்கு வரமுடியாத நிலை.. ஆனால் இனி அப்படியெல்லாம் சொல்வதற்கில்லை… ஓஎம்ஆரில் ஆடம்பர ஹோட்டலும் கோடம்பாக்கத்தில் அவருக்கான ஏஜென்டுகளும் தயார்!) சரி மேட்டருக்கு வருவோம்… இந்த நாமல் ராஜபக்சவும் பிரபல தமிழ் நடிகை ஒருவரும் ரொம்ப ரொம்ப நெருக்கமாக இருந்து டிஸ்கஸ் பண்ணிய சமாச்சாரத்தை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.
அந்த நடிகையும் இந்த நாமலும் அந்தரங்கமாக உள்ள வீடியோ வேறு முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இன்னொரு பிரபல நடிகையுடன் நமல் ரொம்ப நெருக்கமாக, அணைத்தபடி உள்ள படம் ஒன்று இணையத்தில் வெளியானது.
அந்த நடிகை சமீரா ரெட்டி. தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரபலமானவர். தமிழில் வாரணம் ஆயிரம், வேட்டை, வெடி போன்ற படங்களில் நடித்தவர். இந்தப் படம் எடுக்கப்பட்ட இடம் தெரியவரவில்லை.
21 ஆகஸ்ட் 2014
08 ஆகஸ்ட் 2014
நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்!
பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் நேற்று சென்னையில் மரணமடைந்தார். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தவர் சுருளி மனோகர். கடந்த ஆண்டு ' இயக்குனர்' என்ற திரைப்படத்தை இயக்கினார்.கிங்காங், போண்டாமணி, ஜாஸ்பர், மனோபாலா, பாலு ஆனந்த், குண்டு கல்யாணம், பாண்டு, அல்வா வாசு, குள்ளமணி, பாவா லட்சுமணன், தேவதர்ஷினி, ஜெய்கணேஷ், ஜெயமணி என தமிழ் சினிமாவில் உள்ள நகைச்சுவை பட்டாளத்தையே இந்தப் படத்தில் நடிக்க வைத்தார் சுருளி. இவர்களுடன் சுருளி மனோகர் ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்கவும் செய்தார். இந்நிலையில், சென்னையில் அவர் நேற்று மரணமடைந்தார். வெகு நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சுருளி மனோகர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துவிட்டார். மறைந்த சுருளி மனோகருக்கு, மூன்று மகள்கள் உள்ளனர். சுருளி மனோகர் மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு தரப்பினரும், மற்றும் தொலைக்காட்சி நடிகர், நடிகைகளும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
20 ஜூலை 2014
பிரபல நடிகர் "காதல் தண்டபாணி"மாரடைப்பால் மரணம்!
காதல் படத்தில் நடிகை சந்தியாவின் தந்தையாக நடித்து பிரபலமான தண்டபாணி மாரடைப்பால் மரணம் அடைந்தார். கடந்த 2004ம் ஆண்டு பரத், சந்தியா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் காதல். அந்த படத்தில் சந்தியாவின் அப்பாவாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் தண்டபாணி. அந்த படத்தை அடுத்து அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன.காதல் படத்தை அடுத்து வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 160 படங்களில் நடித்துள்ளார் தண்டபாணி.காதல் படம் மூலம் பிரபலமானதால் அவர் காதல் தண்டபாணி என்று அழைக்கப்பட்டார். முதல் படத்திலேயே நடிப்பில் மிரட்டியிருப்பார்.இன்று அதிகாலை உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.தண்டபாணி சரத்குமார் ஹீரோவாக நடித்து வரும் சண்டமாருதம் படத்தில் நடித்து வந்தார். நேற்று கூட அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.தண்டபாணிக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார், நடிகர்கள் சமுத்திரகனி, டெல்லி கணேஷ், இயக்குனர் வெங்கடேஷ், நடிகர் சங்க மேலாளர் நடேசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.தண்டபாணியின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான திண்டுக்கல்லில் நாளை நடைபெறுகிறது.71 வயதான தண்டபாணிக்கு 3 மகன்கள் மற்றும் 1 மகள் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
20 ஜூன் 2014
உலகிலேயே கவர்ச்சியில் முதலிடத்தில் பிறேசில் பெண்கள்!
உலகிலேயே கவர்ச்சியான உடலமைப்பு கொண்ட பெண்கள் பிரேசில் நாட்டில்தான் வசிக்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேபோல கவர்ச்சிகரமான கம்பீரமான ஆண்கள் ஆஸ்திரேலியாவில்தான் இருக்கின்றனர் என்று பெண்கள் கூறியுள்ளனர். கோடை காலம் வந்தாலே மிஸ் டிராவல் என்ற இணையதளம் இதுபோன்ற கருத்துக்கணிப்பை தொடங்கிவிடும். இந்த ஆண்டு அமெரிக்கா முழுவதும் 44,000 ஆடவர்கள், பெண்களிடம் நடத்தப்பட்டது. அனைவருமே இளையர்கள், திருமணம் ஆகாதவர்கள்.இந்த உலகில் கவர்ச்சியான உடலமைப்புக் கொண்ட பெண்கள் யார் என்று கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலான ஆண்கள், பிரேசில் பெண்கள்தான் உலகிலேயே கவர்ச்சியானவர்கள் என்று தெரிவித்துள்ளனர். உலக கால்பந்து போட்டி தற்போது பிரேசில் நாட்டில் நடைபெறுகிறது. இந்த தகவலைக் கேட்டு அவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கப் போகிறார்கள்.இவர்களுக்கு அடுத்தபடியாக ரஷ்யா, கொலம்பியா நாட்டுப் பெண்கள் இரண்டாவது, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.இங்கிலாந்து, பிலிப்பினா, ஸ்பானிஸ் பெண்களும் இந்த பட்டியலில் 4 வது, 5வது, 6வது இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த படியாக, ஆஸ்திரேலியா, பல்கேரியன், தென்ஆப்ரிக்கா பெண்கள் உள்ளனர். கனடாவைச் சேர்ந்த பெண்கள் கவர்ச்சிப் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளனர்.இதேபோல கட்டழகான ஆண்கள் என்று பெண்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆஸ்திரேலியா ஆண்கள்தான் கட்டழகும், கவர்ச்சி, கம்பீரமும் கொண்டவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.இத்தாலி, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆண்கள் கம்பீர பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.இவர்களுக்கு அடுத்த படியாக ஸ்பானிஷ் ஆண்களும், அமெரிக்க ஆண்களும் உள்ளனர். ஐரீஷ், பிரேசில், கனடா, டச்சு நாட்டைச் சேர்ந்த ஆண்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.இந்தியாவைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் இந்தப்பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு கொலம்பியா பெண்களும், இங்கிலாந்து ஆண்களும் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ரசனை மாறிவிட்டது.
14 ஜூன் 2014
வில்லி நடிகை சகுந்தலா மாரடைப்பில் மரணம்!
தூள் படத்தில் வில்லி சொர்ணாக்காவாக நடித்த சகுந்தலா, மாரடைப்பால் நேற்று காலமானார் தமிழில் விக்ரமின் தூள் படத்தில் சொர்ணாக்காவாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை சகுந்தலா ,நடிகர் விஜயின் சிவகாசி படத்தில் பிரகாஷ்ராஜ் மாமியாராக நடித்துள்ளார். 1981-ல் மா பூமி என்ற படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்துள்ளார் சகுந்தலா. தெலுங்கில் முன்னணி வில்லி நடிகையா இருந்தார். அங்கு இவரை தெலுங்கானா சகுந்தலா என்று அழைத்தனர். 2003-ல் வெளியான ஒக்கடு தெலுங்கு படம் சகுந்தலாவை பிரபல நடிகையாக்கியது. தொடர்ந்து முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் வில்லி, காமெடி, மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். ஹைதராபாத்தில் உள்ள கொம்பள்ளி பகுதியில் உள்ள தனது வீட்டில் சகுந்தலா வசித்து வந்தார். நேற்று நள்ளிரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார். சகுந்தலா உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப் பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். தெலுங்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
08 ஜூன் 2014
விஜய் - அமலாபால் நிச்சயதார்த்தம்!
இயக்குநர் விஜய்க்கும், நடிகை அமலாபாலுக்கும் நேற்று கொச்சியில் உள்ள சர்ச் ஒன்றில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திரைத்துறையில் உள்ளவர்கள் வீட்டு திருமணம் எப்போதுமே மக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது சகஜமான ஒன்றுதான். அதிலும் நடிகைகள் திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம். அந்தவகையில், இயக்குநர் விஜய்க்கும், நடிகை அமலாபாலுக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததையடுத்து வரும் 12ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது.மதராசபட்டணம், தெய்வமகள், தலைவா உள்ளிட்ட வெற்றிப்படங்களைத் தந்தவர் இயக்குநர் விஜய். இவரது தெய்வமகள் மற்றும் தலைவா படத்தில் நாயகியாக நடித்தார் அமலாபால்.முதலில் நட்பாக ஆரம்பித்த இவர்களது பழக்கம், ஊடகங்களின் கிசுகிசுவால் நாளடைவில் காதலாக கனிந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும் ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி, நேற்று கொச்சியில் உள்ள செயிண்ட் ஜூட் சர்ச்சில் விஜய் - அமலாபால் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கிறிஸ்தவ முறைப்படி இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள்.அதனைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி சென்னையில் மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது.விஜய் - அமலாபால் என இருவருமே திரைத்துறையில் முன்னணியில் உள்ளவர்களாதலால் இத்திருமணத்திற்கு பிரபலங்கள் பலர் நிச்சயம் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறதது.ஏற்கனவே, தங்களது திருமணத்திற்கு வருகை தருபவர்கள் அன்பளிப்பு எதுவும் தர வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு அப்பணத்தை அளித்து விடும்படி விஜய், அமலாபால் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
03 ஜூன் 2014
அமர்க்களப்படுத்திய ரிஹானா!
அமெரிக்காவில் நடந்த விருது விழா ஒன்றில் பிரபல பாப் பாடகி ரிஹானா அங்கமெல்லாம் பளிச்சென்று தெரியும்படி ஆடை அணிந்து வந்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திங்கட்கிழமை நடந்த விருது வழங்கும் விழாவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு பிரபல பாப் பாடகி ரிஹானாவும் வந்திருந்தார். அவர் வந்திருந்ததை நிச்சயம் தனியாக குறிப்பிட வேண்டும். அதற்கு காரணம் அவரின் ஆடை.ரிஹானா தரையை தொடும் அளவுக்கு ஒரு ஆடை அணிந்திருந்தார். ஆனால் அந்த ஆடை கண்ணாடியாக இருந்ததால் அவரது அங்கம் எல்லாம் பளிச்சென்று தெரிந்தது.ஆடை தான் லேசான துணி என்றால் ரிஹானா உள்ளாடை அணியாமல் மூடி மறைக்க வேண்டிய மேல் அழகை இப்படி பளிச்சென்று காட்டியுள்ளார்.ரிஹானா இப்படி ஆபாசமாக ஆடை அணிந்து வந்ததை பலரும் வாயை பிளந்து பார்த்தனர் அதிர்ச்சியில்.ஹாலிவுட் பிரபலங்கள் மேல் அழகையும், கீழ் அழகையும் மட்டுமாவது மறைத்துவிட்டு பிற பகுதிகள் பளிச்சென்று தெரியும் வகையில் ஆடை அணிந்தனர். ரிஹானா அதிலும் ஒருபடி மேலே சென்றுவிட்டார்.26 ஏப்ரல் 2014
இப்போதைக்கு திருமணமில்லை-விஜய்
நடிகை அமலா பாலும், நானும் சில பொறுப்புகளை முடிக்க வேண்டி இருப்பதால் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என்று இயக்குனர் விஜய் தெரிவித்துள்ளார்.இயக்குனர் விஜய்யும், நடிகை அமலாபாலும் காதலித்து வருவதாகவும், இருவருக்கும் அடுத்தமாதம் 7ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.இந்நிலையில், இயக்குனர் விஜய் காதல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் கூறியிருப்பதாவது;"ஒருவராக இருந்து இருவராக மாற உள்ள எனது நிலையைப் பற்றி சொல்வதற்கு இதை ஒரு சிறந்த சந்தர்ப்பமாகக் கருதுகிறேன். எனது வாழ்க்கைத் துணையை தேடியது முடிவடைந்து, எனது மனம் கவர்ந்த காதலை அமலாவிடம் கண்டேன். அவர் ஒரு நல்ல மனம் கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். அவர் உண்மையாகவே ஒரு பொக்கிஷம். அதை கண்ணும் கருத்துமாக காதலுடன் பாதுகாப்பேன்.எங்களது திருமண திட்டத்தை கண்ணியமாகவும், முறையாகவும் நாங்களே அறிவிக்க வேண்டும் என்று இருந்தோம். ஆனால், எங்களுக்குத் தெரியாமலே அந்த செய்தி வெளியில் வந்து விட்டது. மீடியாக்களிடமும், நண்பர்களிடமும், எங்களுக்கு வேண்டப்பட்டவர்களிடமும் எங்களது திருமண திட்டத்தைப் பற்றி நாங்கள் மூடி மறைக்க வேண்டும் என்று நினைத்ததேயில்லை. மீடியாக்களையும், நண்பர்களையும் தனிப்பட்ட அழைப்புடன் எங்களது மரியாதையை வெளிப்படுத்தும் விதத்தில் சந்திப்போம்.அமலா பால் சில பொறுப்புக்களை முடிக்க வேண்டும். நானும் எனது மனதுக்கு நெருக்கமான ‘சைவம்' படத்தின் வெளியீட்டை விரைவில் எதிர்நோக்கியுள்ளேன். அதன் பின்தான் எங்களது வாழ்க்கையின் மிக முக்கியமான கொண்டாட்டத்திற்கு நேரம் ஒதுக்க முடியும். அதுவரை என்றென்றும் உங்களது வாழ்த்துகளையும், ஆசீர்வாதங்களையும், ஆதரவையும் வேண்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.விஜயை, கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி அமலாபால் வலியுறுத்தி வருவதால் திருமணம் தாமதமாகலாம் என்று செய்தி வெளியாகியிருந்தது.அதற்கேற்ப இந்த அறிக்கை வந்துள்ளது.
29 மார்ச் 2014
"நான்தான் ரொம்ப லேட்"இந்தி நடிகை நிகிதா
நான் இப்போது கன்னித்தன்மை இல்லாத பெண். எனது கன்னித்தன்மையை 23 வயதிலேயே இழந்து விட்டேன். அதற்காக வருத்தப்படவில்லை என்று கூறியுள்ளார் இந்தி கவர்ச்சி நடிகை நிகிதா கோகலே.மாடலிங்கும் செய்து வரும் நிகிதா கோகலே, தனது காதல் குறித்தும், செக்ஸ் உறவுகள் குறித்தும், கன்னித்தன்மையை இழந்தது குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.இதற்காக தான் வருத்தப்படவி்ல்லை என்றும் கல்லூரிப் படிப்பை முடித்ததுமே தான் கன்னித்தன்மையை இழந்ததாகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.கல்லூரிப் படிப்பை முடித்ததுமே நான் உறவில் ஈடுபட்டு விட்டேன். வேலையிலும் சேர்ந்தேன்.என்னுடன் உறவு வைத்துக் கொண்டவன் கல்லூரியில் எனக்கு சீனியர். ஆனால் வயதில் என்னை விட 3 மாதம் சிறியவன்.எப்போதுமே நான் மற்றவர்களிடம் அதிக பாசம் வைப்பேன். ஆனால் அவர்கள்தான் என்னை விட்டு சீக்கிரமே விலகிப் போய் விடுவார்கள். எனது இதயத்தை நேசித்தவர்களை விட நொறுக்கியவர்களே அதிகம்.ஆனால் இப்படிப்பட்ட அதிர்ச்சிகள்தான் என்னை பட்டை தீட்டியது. பக்குவப்படுத்தியது. நான் போல்ட் ஆக இருக்கவும் இதுவே காரணம் என்றார் நிகிதா.நிகிதா, பிளேபாய் பத்திரிக்கைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தவர். அதன் மூலம் பிரபலமானவர்.நிகிதா இந்தக் காலத்து இளசுகள் குறித்துக் கூறுகையில், இப்பெல்லாம் பெண்கள் ரொம்ப வேகமாக இருக்கிறார்கள். 18 வயதிலேயே பலர் கன்னித்தன்மையை இழந்து விடுகிறார்கள். நான் தான் ரொம்ப லேட் என்று நினைக்கிறேன் என்றார் சிரித்தபடி.
06 மார்ச் 2014
ஷகீலாவாக நடிக்கும் அவசியம் இல்லை!
ஷகிலா வேடத்தில் ஆபாசமாக நடித்து டாப் இடம் பிடிக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை என்றார் அஞ்சலி. அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு என தமிழில் வேகமாக முன்னேறிய நடிகை அஞ்சலி. சித்தியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். சீதம்மா வாகிட்லே சிறுமல்லே சிட்டு என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அப்படம் ஹிட் ஆனது. ஆனாலும் எதிர்பார்த்தளவுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தார். இந்நிலையில் கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை படத்தில் அஞ்சலி நடிக்க உள்ளதாக தகவல் பரவியது. இதுபற்றி அஞ்சலி கூறும்போது, ஷகிலா வாழ்க்கை படத்தில் நான் நடிப்பதாக கிசுகிசு வருகிறது. நிச்சயம் அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன். சினிமாவில் முன்னணி இடத்துக்கு வருவது எப்படி என்பது தெரியும். அதற்காக ஆபாசமாக நடித்து முன்னணி இடத்தைபிடிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என அவர் கோபமாக கூறியுள்ளார்.
06 பிப்ரவரி 2014
விஜயின் ஜோடிக்கு காலில் காயம்!
நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.நடிகை பிரியங்கா சோப்ரா குண்டே இந்தி படத்தில் தன்னுடன் நடித்த ரன்வீர் சிங் மற்றும் அர்ஜுன் கபூர் ஆகியோருடன் காமெடி நைட்ஸ் வித் கபில் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது தான் அவருக்கு காயம் ஏற்பட்டிருந்து தெரிய வந்தது.காமெடி நைட்ஸ் வித் கபில் நிகழ்ச்சிக்கு வந்த பிரியங்காவின் வலது காலில் பேன்டேஜ் இருந்தது. அவர் காயத்தை பொருட்படுத்தாமல் குண்டே விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.காலில் அடிபட்டிருந்தபோதிலும் அவர் அந்த நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடினார். அதுவும் ஹை ஹீல்ஸ் அணிந்து ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.காயமடைந்த முழங்கால், காயமடைந்த மனம், ம்ம்ம்ம்ம்ம் என்று பிரியங்கா சோப்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.காயம் ஏற்பட்டதால் ஓய்வு எடுக்காமல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பிரியங்கா டெல்லி சென்றார். ஐஸ் பையை முழங்காலில் வைத்துக் கொண்டே டெல்லி செல்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.விஜய் தான் என் முதல் ஹீரோ. அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன் என்று அண்மையில் ஒரு பேட்டியில் பிரியங்கா சோப்ரா தெரிவித்திருந்தார். அதன்படி மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.விஜய்யும் சரி, பிரியங்காவும் சரி நன்றாக பாடுவார்கள். சிம்புதேவன் படத்தில் அவர்கள் சொந்தக் குரலில் டூயட் பாடி ஆடுவார்களா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
13 ஜனவரி 2014
நடிகை அஞ்சலிதேவி காலமானார்!

பழம் பெரும் தமிழ்த் திரைப்பட நடிகை அஞ்சலிதேவி இன்று திங்கள் சென்னையில் காலமானார். அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு வயது 86.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன், என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து அவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள பெத்தாபுரம். நடன நாடகங்களில் புகழ் பெற்ற அஞ்சலிதேவி நாற்பதுகளில் முதலில் தெலுங்கிலும் பின்னர் தமிழ்த் திரைப் படங்களிலும் நடிக்கத் துவங்கினார். பி.யூ.சின்னப்பா, டி.ஆர்,மகாலிங்கம் போன்றவர்களுடன் தோன்றிய அஞ்சலிதேவிக்கு 1955-ல் ஜெமினி கணேசனுடன் இணைந்து நடித்த கணவனே கண்கண்ட தெய்வம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. சிவாஜி கணேசனுடன் ‘முதல் தேதி’, ‘நான் சொல்லும் ரகசியம்’ படங்களிலும், எம்.ஜி.ஆருடன் ‘சக்ரவர்த்தி திருமகள்‘, ‘மன்னாதி மன்னன்’ ஆகிய படங்களிலும் நடித்தார் அவர். ஆனால் தமிழில், ஜெமினி கணேசனுடன்தான் அதிக படங்களில் நடித்தார் அஞ்சலிதேவி. அவருடன் நடித்த ‘காலம் மாறிப்போச்சு’ குறிப்பிடத்தக்க ஒரு வெற்றிப்படமாகும். அஞ்சலிதேவி, சொந்தப்படங்களைத் தயாரிப்பதிலும் வெற்றி பெற்றார். ஜெமினி கணேசனுடன் ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ படத்திலும், நாகேஸ்வரராவுடன் ‘அனார்கலி‘யிலும் நடித்தார். இந்தப் படங்களில் இடம் பெற்ற பாடல்கள், மிகவும் பிரபலமாயின. இசை அமைத்தவர் அவரது கணவர் ஆதிநாராயணராவ். அஞ்சலிதேவி தயாரித்து இன்னமும் இரசிகர்களை ஈர்க்கும் நகைச்சுவைப் படம் ‘அடுத்த வீட்டுப் பெண்’. தெலுங்கில், என்.டி.ராமராவுடன் பல படங்களில் அஞ்சலி தேவி நடித்துள்ளார். அவற்றில் முக்கியமானது ‘லவகுசா’. இப்படம் தமிழிலும் வெளிவந்தது. அஞ்சலிதேவியின் மறைவுக்கு பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
01 டிசம்பர் 2013
மிரட்டலால் தயாரிப்பாளர் ஓட்டம்!
![]() |
| மஞ்சு வாரியர் |
28 நவம்பர் 2013
ராஜபக்சே மகனுடன் தமிழ் நடிகை!
ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே மற்றும் ஒரு தொழிலதிபருடன் தமிழ் நடிகை ஒருவர் நெருக்கமாக இருக்கும் பலான சிடி சென்னையில் சில முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது.
தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் செட்டிலாகி, இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதையும் தவிர்த்தார்.
ஒரு இந்திப் படத்தின் ஷூட்டிங்குக்காக இலங்கைக்குச் சென்றார். தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் திரைப்படத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை போன அந்த நடிகைன், கிட்டத்தட்ட ராஜபக்சே அன்ட் கோவின் பிஆர்ஓவாகவே மாறி, அங்கே தமிழர்கள் சுகமாக வசிப்பதாகவும், விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களைப் பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் போன இடத்தில் அவர் வேறு வேலைகளில் பிஸியாக இருந்ததாகவும், அதற்கான ஆதாரம் சிடியாக சிக்கியுள்ளதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பிலுள்ள நட்சத்திர ஓட்டலில் அந்த நடிகை தங்கியிருந்தபோது அவரைச் சந்திக்க பல தொழில் அதிபர்கள் வந்திருந்ததாகவும், அப்படி வந்தவர்களில் ஒருவர் உல்லாசமாக இருக்கும் காட்சியை ரகசியமாக படம் பிடித்து சிடியாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சிடிதான் இப்போது சென்னையின் விவிஐபிகள் சிலரின் கஸ்டடியில் உள்ளதாம்.
அந்த சிடியில், ஓட்டலில் தங்கியிருக்கும் நடிகையை சந்திக்க வந்த தொழில் அதிபர்களில் ஒருவர் நடிகையை அணைத்து கொள்கிறார். பின்னர் நடிகையை அந்தரங்கமாக தொடும் காட்சிகளும் உள்ளனவாம்.
இதேபோல பல ஆயிரம் கோடி ரூபாவுடன் உலகம் சுற்றும் வாலிபனாகத் திரியும் ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சேயுடன் அந்த நடிகை உள்ள படங்களும் அவர்கள் கைவசம் சிக்கியுள்ளனவாம்.
இதுகுறித்து விசாரிக்க அந்த நடிகையை தொடர்பு கொண்டால், வழக்கம் போல அந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக பதில் வருகிறது. நடிகைக்கு நெருக்கமானவர்களோ, அவர் இப்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் தெரிவித்தனர்.20 நவம்பர் 2013
ரதியின் மகனும் கமலின் மகளும் காதல்!
14 நவம்பர் 2013
"அஞ்சலி உயிருக்கு ஆபத்து"உயர்நீதிமன்றத்தில் மனு!
உயிருக்கு ஆபத்து உள்ளதால் உரிய பாதுகாப்பு வழங்க கோரி நடிகை அஞ்சலி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் போலீசார் பதில் அளிக்க நீதிபதி நோட்டீஸ் அனுப்பினார்.அங்காடி தெரு, சேட்டை, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் அஞ்சலி. இவர், தனது சொத்துக்களை சித்தி பாரதிதேவி, இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் அபகரிக்க முயல்வதாக புகார் கொடுத்தார். இதுபோல, இயக்குனர் களஞ்சியமும் அஞ்சலி மீது புகார் செய்தார். இதுதொடர்பான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கு விசாரணையின்போது அஞ்சலி
ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அஞ்சலி நேற்று ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:முதலில் தெலுங்கு படத்தில் நடித்தேன். 2007 முதல் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினேன். அஞ்சலி என நான் அழைக்கப்பட்டேன். சென்னைக்கு அடிக்கடி வந்து நடிக்க தொடங்கினேன். இதனால் சித்தி பாரதி தேவியை என்னுடன் எனது தாய் அனுப்பினார். வளசரவாக்கத்தில் வீடு எடுத்து சித்தியுடன் தங்கினேன்.கடந்த 2012ல் வளசரவாக்கத்தில் சொந்தமாக வீடு வாங்கினேன். நான் அடிக்கடி சூட்டிங் செல்வதால் இந்த வீட்டை சித்தியும் அவரது கணவர் சூரியபாபுவும் பராமரித்து வந்தனர்.இயக்குனர் களஞ்சியம் அவரது படத்தில் என்னை அறிமுககப்படுத்த நினைத்தார். அவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அவரால் செய்ய முடியவில்லை. இதனால் எங்களது குடும்பத்தில் புகுந்து எனக்கு எதிராக செயல்பட தொடங்கினார். இது எனக்கு பிடிக்கவில்லை. அவருடன் உள்ள தொடர்பை துண்டிக்க வேண்டும் என்று சித்தியிடம் கூறினேன். அதை அவர் ஏற்கவில்லை. அவருடன் சேர்ந்து எனது வீட்டை அபகரித்துக்கொண்டார். மேலும் என்னை மிரட்டி வருகிறார். எனவே, எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும். இதுபற்றி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.மேலும் வீட்டு செலவுக்கு எனது சித்தியிடம் பூர்த்தி செய்யாத செக்கில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளேன். அதை அவர்கள் தவறாக பயன்படுத்தி பல லட்சத்தை எனக்கு தெரியாமல் எடுத்துள்ள னர். இதுதவிர தொடர்ந்து பணம் கேட்டு சொந்தரவு செய்கிறார்கள். எனது உயிருக்கு பயந்து ஐதராபாத்தில் தங்கியுள்ளேன். எனது 50 சவரன் தங்க நகைகளையும் அவர்கள் பறித்து கொண்டனர். எனவே என்னை ஏமாற்றி மோசடி செய்த அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வழக்கில் கூறியிருந்தார்.வழக்கை நீதிபதி தேவதாஸ் விசாரித்து, இந்த வழக்கில் வளசரவாக்கம் போலீசார் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அஞ்சலி நேற்று ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:முதலில் தெலுங்கு படத்தில் நடித்தேன். 2007 முதல் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினேன். அஞ்சலி என நான் அழைக்கப்பட்டேன். சென்னைக்கு அடிக்கடி வந்து நடிக்க தொடங்கினேன். இதனால் சித்தி பாரதி தேவியை என்னுடன் எனது தாய் அனுப்பினார். வளசரவாக்கத்தில் வீடு எடுத்து சித்தியுடன் தங்கினேன்.கடந்த 2012ல் வளசரவாக்கத்தில் சொந்தமாக வீடு வாங்கினேன். நான் அடிக்கடி சூட்டிங் செல்வதால் இந்த வீட்டை சித்தியும் அவரது கணவர் சூரியபாபுவும் பராமரித்து வந்தனர்.இயக்குனர் களஞ்சியம் அவரது படத்தில் என்னை அறிமுககப்படுத்த நினைத்தார். அவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அவரால் செய்ய முடியவில்லை. இதனால் எங்களது குடும்பத்தில் புகுந்து எனக்கு எதிராக செயல்பட தொடங்கினார். இது எனக்கு பிடிக்கவில்லை. அவருடன் உள்ள தொடர்பை துண்டிக்க வேண்டும் என்று சித்தியிடம் கூறினேன். அதை அவர் ஏற்கவில்லை. அவருடன் சேர்ந்து எனது வீட்டை அபகரித்துக்கொண்டார். மேலும் என்னை மிரட்டி வருகிறார். எனவே, எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும். இதுபற்றி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.மேலும் வீட்டு செலவுக்கு எனது சித்தியிடம் பூர்த்தி செய்யாத செக்கில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளேன். அதை அவர்கள் தவறாக பயன்படுத்தி பல லட்சத்தை எனக்கு தெரியாமல் எடுத்துள்ள னர். இதுதவிர தொடர்ந்து பணம் கேட்டு சொந்தரவு செய்கிறார்கள். எனது உயிருக்கு பயந்து ஐதராபாத்தில் தங்கியுள்ளேன். எனது 50 சவரன் தங்க நகைகளையும் அவர்கள் பறித்து கொண்டனர். எனவே என்னை ஏமாற்றி மோசடி செய்த அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வழக்கில் கூறியிருந்தார்.வழக்கை நீதிபதி தேவதாஸ் விசாரித்து, இந்த வழக்கில் வளசரவாக்கம் போலீசார் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
11 நவம்பர் 2013
பிரபல எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை மரணம்!
பிரபல நாவலாசிரியர் புஷ்பா தங்கதுரை என்கிற ஸ்ரீவேணுகோபாலன் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82. கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட நாவல்களையும், சிறு கதைகளையும், தொடர்கதைகளையும் அவர் எழுதியுள்ளார். இவரது எழுத்து ஸ்டைல் வாசகர்களிடையே மிகவும் பிரபலமானது.புஷ்பா தங்கதுரைக்கு 82 வயதாகிறது. இவர் இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார்.உடல் நலப் பாதிப்பு காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் புஷ்பா தங்கதுரை அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.தனது விறுவிறுப்பான, சிலாகிப்பான எழுத்தின் மூலம் 2 தலைமுறை வாசகர்களை மகிழ்வித்தவர் புஷ்பா தங்கதுரை.புஷ்பா தங்கதுரையின் எழுத்து ஸ்டைல் பிரபலமானது. சீரியாஸாகவும் எழுதுவார். கலகலப்பான கதைகளையும் கொடுப்பார்.ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறு. நீ என் நிலா, நந்தா என் நிலா, திருவரங்கன் உலா, மதுரா விஜயம் ஆகியவை அவரது சிறந்த நாவல்களுக்கு சில எடுத்துக் காட்டுகள். காதல் அல்ல காதலி, சரிதா பிளஸ் சரிதா, சிகப்பு ரோஜா கதைகள், துள்ளுவது இளமை, தாய்ப்பூ தாமரைப்பூ ஆகியவை அவரது படைப்புகளில் சில.இவரது திருவரங்கன் உலா நாவல் மிகவும் பிரபலமானது. இந்த நூலை எழுதியதற்காக புஷ்பா தங்கதுரையை, ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து அவரை யானை மீது அமர வைத்து ஊர்வலமாகக் கொண்டு சென்று கெளவரப்படுத்தினர்.புஷ்பாவின் பூர்வீகம் நெல்லை மாவட்டம் கீழநத்தம் கிராமம் ஆகும். ஆரம்பத்தில் தபால் துறையில் பணியாற்றினார். பின்னர் வேலையை விட்டு விட்டு முழு நேர எழுத்தாளர் ஆனார்.இவரது ஊதாப்பு கண்சிமிட்டுகிறது திரைப்படமாகவும் உருவானது. இவர் எழுதிய ஆண்டவன் இல்லா உலகம் எது,நல்ல மனம் வாழ்க ஆகிய திரைப்படப் பாடல்களும் பிரபலானவை.
08 நவம்பர் 2013
நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு காலமானார்!
நடிகர் சிட்டிபாபு சிகிச்சை பலனின்றி காலமானார். சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமானதால், மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்து, அடைப்பு ஏற்பட்டதால் கோமா நிலையை அடைந்து வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தது அவரது உடல்நிலை.இன்று சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.நடிகர் சிட்டிபாபு ( வயது49). திருமணமாகி, ஜரினா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பல ஆண்டுகளாக, நீரிழிவு நோய் பாதிப்பு இருந்ததால், அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மூன்று நாட்களுக்கு முன், வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். சென்னை, முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மூளையில் அடைப்பு ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐ.சி.யூ., பிரிவில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்படவில்லை; தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று (8.11.2013) சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
27 அக்டோபர் 2013
நடிகைகளிடம் மட்டும் ஏன் இவ்வளவு கெடுபிடி?
நடிகைகள் பட விழாக்களுக்கு வரலேன்னா மட்டும் இவ்வளவு கெடுபிடி காட்டும் நீங்கள், பட விழாக்கள் பக்கமே வராத நடிகர் அஜீத் மற்றும் சந்தானத்துக்கு மட்டும் பொருந்தாதா என கேள்வி எழுப்பியுள்ளனர் முன்னணி நடிகைகள். தமிழ் சினிமாவில் தாங்கள் நடித்த படங்களின் இசை வெளியீடு மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட நாயகிகள் கலந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பிரதானமாக எழுந்துள்ளது. நாயகிகள் இல்லாததால் போதிய விளம்பரம் கிடைக்காமல் போவதால், அவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் படத்தில் நடிக்கத்தான் சம்பளமே தவிர, இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கல்ல. அந்த கால்ஷீட்டை நாங்கள் வேறு படத்துக்கு தரவேண்டியிருக்கிறது என நடிகைகள் தரப்பில் கூறிவந்தனர். இந்த நிலையில், விழாக்களில் கலந்து கொள்ளாத நடிகைகளின் சம்பளத்தில் 20 சதவீதத்தை பிடித்தம் செய்து கொள்வதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனி சம்பளம் மற்றும் வந்து போக, தங்க ஆகும் செலவுகளை தயாரிப்பாளர்தான் ஏற்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் எங்களால் வரமுடியாது என்று கூறியுள்ளனர். இல்லாவிட்டால் தயாரிப்பாளர் பிடித்தம் செய்வதாகக் கூறும் 20 சதவீதத்தை தங்கள் சம்பளத்தில் ஏற்ற வேண்டிய நிலையை தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத முன்னணி நடிகை ஒருவர் தெரிவித்தார். 'ஒரு கோடி சம்பளம் கேட்டதற்கு பதில் 1 கோடியே இருபது லட்சம் என சம்பளம் பேச வேண்டியதுதான்,' என சக நடிகைகள் கமெண்ட் அடித்ததாக அவர் தெரிவித்தார். அஜீத், சந்தானத்தையும் கூப்பிட வேண்டியதுதானே... "நடிகைகளிடம் மட்டும் இவ்வளவு கெடுபிடி காட்டும் தயாரிப்பாளர் சங்கம், பட விழாக்கள், பிரஸ் மீட்டுகள், விளம்பர நிகழ்ச்சிகள் என எதற்குமே எட்டிப் பார்க்காத அஜீத், சந்தானம் போன்றவர்களை மட்டும் விட்டுவிடுவது ஏன்? அவர்கள் மட்டும் விதிவிலக்கா... அவர்கள் சம்பளத்தில் 20 சதவீதம் குறைக்கத் தயாரா? இவர்களைப் போலத்தான் ஒரு நடிகை கலந்து கொள்ளாமல் போக ஆயிரம் காரணங்கள் உள்ளன", என்றும் குமுறியுள்ளனர் நடிகைகள். படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும்போதே, படத்தின் விழாக்கள், விளம்பர நிகழ்ச்சிகள் எதற்கும் தன்னை அழைக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்து, அதை எழுத்துப்பூர்வமாகவும் எழுதி வாங்கிக் கொண்டுதான் நடிக்கிறார் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதெல்லாம் சந்தானமும் அஜீத் வழியைத்தான் பின்பற்றுகிறாராம்.
19 அக்டோபர் 2013
இனி நடிக்கமாட்டாரம் திரிஷா!
தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேல் தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாகத் திகழும் த்ரிஷா, இனி புதிய படங்களில் நடிக்க மாட்டேன் என மறுப்பு தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திருமணம் செய்து கொண்டு செட்டிலாகத் திட்டமிட்டுள்ளதாலேயே இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக 'ஆயிரத்தோராவது முறையாக' கொளுத்திப் போட்டுள்ளனர் கோடம்பாக்கத்தில். 30 வயதைத் தாண்டிவிட்ட த்ரிஷா இப்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஒரு படம். கிட்டத்தட்ட இந்தப் படங்களின் ஷூட்டிங்குகள் முடியும் கட்டத்தில் உள்ளன. திரிஷாவுடன் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் இப்போது வெளிப்படையாகவே நெருக்கம் காட்ட ஆரம்பித்துளளனர். இருவரும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதால், த்ரிஷா புதுப்படங்களில் நடிக்க மறுத்து வருவதாகக் கூறுகிறார்கள். சமீபத்தில் அவரை ஒப்பந்தம் செய்யச் சென்ற தயாரிப்பாளருக்கு, 'இனி படம் நடிக்கிறதா இல்ல' என்று கூறிவிட்டாராம் த்ரிஷா.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















