பக்கங்கள்

29 மார்ச் 2014

"நான்தான் ரொம்ப லேட்"இந்தி நடிகை நிகிதா

நான் இப்போது கன்னித்தன்மை இல்லாத பெண். எனது கன்னித்தன்மையை 23 வயதிலேயே இழந்து விட்டேன். அதற்காக வருத்தப்படவில்லை என்று கூறியுள்ளார் இந்தி கவர்ச்சி நடிகை நிகிதா கோகலே.மாடலிங்கும் செய்து வரும் நிகிதா கோகலே, தனது காதல் குறித்தும், செக்ஸ் உறவுகள் குறித்தும், கன்னித்தன்மையை இழந்தது குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.இதற்காக தான் வருத்தப்படவி்ல்லை என்றும் கல்லூரிப் படிப்பை முடித்ததுமே தான் கன்னித்தன்மையை இழந்ததாகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.கல்லூரிப் படிப்பை முடித்ததுமே நான் உறவில் ஈடுபட்டு விட்டேன். வேலையிலும் சேர்ந்தேன்.என்னுடன் உறவு வைத்துக் கொண்டவன் கல்லூரியில் எனக்கு சீனியர். ஆனால் வயதில் என்னை விட 3 மாதம் சிறியவன்.எப்போதுமே நான் மற்றவர்களிடம் அதிக பாசம் வைப்பேன். ஆனால் அவர்கள்தான் என்னை விட்டு சீக்கிரமே விலகிப் போய் விடுவார்கள். எனது இதயத்தை நேசித்தவர்களை விட நொறுக்கியவர்களே அதிகம்.ஆனால் இப்படிப்பட்ட அதிர்ச்சிகள்தான் என்னை பட்டை தீட்டியது. பக்குவப்படுத்தியது. நான் போல்ட் ஆக இருக்கவும் இதுவே காரணம் என்றார் நிகிதா.நிகிதா, பிளேபாய் பத்திரிக்கைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தவர். அதன் மூலம் பிரபலமானவர்.நிகிதா இந்தக் காலத்து இளசுகள் குறித்துக் கூறுகையில், இப்பெல்லாம் பெண்கள் ரொம்ப வேகமாக இருக்கிறார்கள். 18 வயதிலேயே பலர் கன்னித்தன்மையை இழந்து விடுகிறார்கள். நான் தான் ரொம்ப லேட் என்று நினைக்கிறேன் என்றார் சிரித்தபடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக