நடிகை நிக்கோல், சம்பளப் பிரச்சினை காரணமாக ஒரு நடிகையின் கதை படத்தின் ஷூட்டிங்குக்கு வராமல் கம்பி நீட்டி விட்டு புனே போய் விட்டாராம்.அடடா என்ன அழகு, ஆறு மனமே, நாய்க்குட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளவர் நிக்கோல். தற்போது சோனியா அகர்வால் நாயகியாக நடிக்கும் ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்குகிறார்.
இவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் பேசி நடிக்க வைத்தனர். இது போக, சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் ரூம், அவருக்கான சாப்பாட்டுச் செலவு உள்ளிட்டவற்றையும் தயாரிப்பாளரே ஏற்று செலவழித்து வந்தாராம். இருப்பினும் படப்பிடிப்பின்போது ஒத்துழைப்பு கொடுக்காமல் சிக்கலை ஏற்படுத்தினார் நிக்கோல் என்று கூறப்படுகிறது.
நெல்லூரில் படப்பிடிப்பை வைத்தபோது அங்கு வராமல் ஜகா வாங்கினாராம். கேட்டால் தோல் அலர்ஜியாக இருக்கிறது என்றாராம். அவருக்காக பலவற்றை பார்த்துப் பார்த்து செய்தும் ஒரு லட்சம் சம்பளத்தைக் கொடுத்து விட்ட நிலையில் மீதப் பணத்தையும் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று கூறியுள்ளாராம் நிக்கோல்.
அதில் ரூ. 25,000 பணத்துக்கான செக் தருவதாகவும், மீதப் பணத்தை படப்பிடிப்பு முடிந்ததும் செட்டில் செய்வதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டதாம். இருப்பினும் அதற்கு அவர் ஒத்துக் கொள்ளவில்லையாம். இந்த நிலையில் தற்போது திடீரென கிளம்பி புனே போய் விட்டாராம்.
இதையடுத்து அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தரப்போவதாகவும், கோர்ட்டில் வழக்கு தொடரப் போவதாகவும் ராஜ்கிருஷ்ணா கூறியுள்ளார்.
ஆனால் இந்தப் புகார்களை நிக்கோல் மறுத்துள்ளார். சம்பளம் தரவில்லை என்பதற்காகத்தான் நான் ஊருக்கு திரும்பி விட்டேன். மற்றபடி நான் எந்தப் பிரச்சினையும் செய்யவில்லை. அவர்கள்தான் பல பிரச்சினைகளைக் கொடுத்தார்கள் என்று கூறியுள்ளார் அவர்.


















அஜீத் ஜோடி மற்றும் வில்லி கேரக்டரில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யுமாறு தன்னிடம் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதாக லக்ஷ்மி ராய் தெரிவித்ததால் த்ரிஷா கடுப்பாகியுள்ளார். ராயைப் போட்டுத் தாக்கியுள்ளார்.