பக்கங்கள்

31 அக்டோபர் 2011

நிக்கோல் வைத்த ஆப்பு!

நடிகை நிக்கோல், சம்பளப் பிரச்சினை காரணமாக ஒரு நடிகையின் கதை படத்தின் ஷூட்டிங்குக்கு வராமல் கம்பி நீட்டி விட்டு புனே போய் விட்டாராம்.
அடடா என்ன அழகு, ஆறு மனமே, நாய்க்குட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளவர் நிக்கோல். தற்போது சோனியா அகர்வால் நாயகியாக நடிக்கும் ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்குகிறார்.
இவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் பேசி நடிக்க வைத்தனர். இது போக, சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் ரூம், அவருக்கான சாப்பாட்டுச் செலவு உள்ளிட்டவற்றையும் தயாரிப்பாளரே ஏற்று செலவழித்து வந்தாராம். இருப்பினும் படப்பிடிப்பின்போது ஒத்துழைப்பு கொடுக்காமல் சிக்கலை ஏற்படுத்தினார் நிக்கோல் என்று கூறப்படுகிறது.
நெல்லூரில் படப்பிடிப்பை வைத்தபோது அங்கு வராமல் ஜகா வாங்கினாராம். கேட்டால் தோல் அலர்ஜியாக இருக்கிறது என்றாராம். அவருக்காக பலவற்றை பார்த்துப் பார்த்து செய்தும் ஒரு லட்சம் சம்பளத்தைக் கொடுத்து விட்ட நிலையில் மீதப் பணத்தையும் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று கூறியுள்ளாராம் நிக்கோல்.
அதில் ரூ. 25,000 பணத்துக்கான செக் தருவதாகவும், மீதப் பணத்தை படப்பிடிப்பு முடிந்ததும் செட்டில் செய்வதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டதாம். இருப்பினும் அதற்கு அவர் ஒத்துக் கொள்ளவில்லையாம். இந்த நிலையில் தற்போது திடீரென கிளம்பி புனே போய் விட்டாராம்.
இதையடுத்து அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தரப்போவதாகவும், கோர்ட்டில் வழக்கு தொடரப் போவதாகவும் ராஜ்கிருஷ்ணா கூறியுள்ளார்.
ஆனால் இந்தப் புகார்களை நிக்கோல் மறுத்துள்ளார். சம்பளம் தரவில்லை என்பதற்காகத்தான் நான் ஊருக்கு திரும்பி விட்டேன். மற்றபடி நான் எந்தப் பிரச்சினையும் செய்யவில்லை. அவர்கள்தான் பல பிரச்சினைகளைக் கொடுத்தார்கள் என்று கூறியுள்ளார் அவர்.

28 அக்டோபர் 2011

நானாக உயர்த்துவதில்லை!

பிரபல நடிகைகளுக்கு ஒரு படம் நன்றாக ஓடினால் போதும், சம்பளம் கோடிகளில் உயர்த்தப்பட்டுவிடும்.
பல நேரங்களில் தயாரிப்பாளரே விரும்பி தலையில் துண்டு போட்டுக் கொள்ளும் சமாச்சாரம் இது.
சில நேரங்களில் நடிகைகள் எப்படா நேரம் வரும் என்று காத்திருந்து உயர்த்திவிடுவார்கள்.
நடிகை இலியானா இந்த இரண்டு வகையிலுமே சேர்த்திதான்!
தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக உள்ள அவர், இப்போது தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்பட்டது.
ஆனால் சமீபத்தில் பெரிய ஹிட் எதுவும் கொடுக்காத இலியானாவுக்கு இவ்வளவு சம்பளமா என்றும் பேசப்பட்டது.
இதுகுறித்து இலியானாவிடம் கேட்டபோது, "தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடிக்கிறேன். நான் ரூ.1 கோடி சம்பளம் கேட்பதாகக் கூறுகிறார்கள். நானாகப் போய் எனக்கு சம்பளம் உயர்த்த வேண்டும் என்று யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை.
எனது மார்க்கெட் நிலவரம் பார்த்து சம்பளத்தை அவர்கள் முடிவு செய்கிறார்கள். என் படங்கள் நன்றாக ஓடும்போது அதற்கேற்றவாறு சம்பளம் வாங்குவதில் தவறு இல்லை.
தெலுங்கில் படங்கள் நன்றாக ஓடினால் நிறைய சம்பளம் கேட்கிறேன் என்கிறார்கள். சம்பளத்தை குறைத்தால், படங்கள் தோற்றதால் குறைத்து விட்டார் என்கிறார்கள்.
சினிமாவில் யாரும் சம்பளத்தை சும்மா தருவதில்லை. மார்க்கெட் இருந்தால் இங்கே சம்பளம் கோடிகளில் இருக்கும். ஓடாவிட்டால் கடைகோடியில் நிறுத்துவார்கள் என்பது எனக்குத் தெரியும்!", என்றார்.

25 அக்டோபர் 2011

என்னை அண்ணி என்பதா.....?த்ரிஷா பாய்ச்சல்!

மகேஷ் பாபுவுக்கு அண்ணியாக ஒரு படத்தில் தான் நடிக்கப்போவதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை த்ரிஷா.
மங்காத்தாவுக்குப் பின் த்ரிஷா நடித்து வரும் தெலுங்குப் படம் கங்கா. ஏற்கெனவே பாடிகார்ட் படத்தை முடித்துவிட்டார்.
இந்தப் படங்களுக்குப் பிறகு தெலுங்கில் அவருக்கு வாய்ப்புகளில்லை. தமிழில் விஷாலுக்கு ஜெடியாக சமரன் படத்தில் நடித்து வருகிறார். அதற்குப் பிறகு வேறு படம் இல்லை.
இந்த நிலையில் திரிஷாவை தெலுங்கு படமொன்றில் அண்ணி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருப்பதாக வதந்தி பரவியது. பட வாய்ப்புகள் இல்லாததால் அண்ணி கேரக்ட்டருக்கு இறங்கி வந்துள்ளதாகவும் கூறப்பட்டது. அப்படத்தில் வெங்கடேஷ், மகேஷ் பாபு என இரு நாயகர்கள் நடிக்கின்றனர்.
வெங்கடேஷின் தம்பியாக மகேஷ்பாபு நடிக்கிறார். வெங்கடேஷ் மனைவி வேடத்தில் திரிஷா நடிக்கிறார். அதாவது மகேஷ் பாபுவின் அண்ணியாக வருகிறார் என்று செய்திகள் வெளியாயின.
இது பற்றி திரிஷாவிடம் கேட்டதுமே கடுப்பாகிவிட்டார். அவர் கூறுகையில், "மகேஷ்பாபு, வெங்கடேஷ் இணைந்து நடிக்கும் படத்துக்கு நான் ஒப்பந்த மாகவில்லை. எனவே மகேஷ்பாபுவின் அண்ணியாக நடிக்கிறேன் என்ற கேள்வியே எழவில்லை. விஷால் ஜோடியாக நடிக்கும் சமரன் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் அமைந்துள்ளது. திறமையை காட்டுவதற்கு இப்படத்தில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்தப் படத்துக்குப் பிறகே வேறு படம்," என்றார்.

23 அக்டோபர் 2011

அமெரிக்காவில் ஆடப்போகும் அமலா!

முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிக்காக அமெரிக்கா செல்கிறார் அமலா பால்.
அதர்வா - அமலா பால் நடிக்கும் இந்தப் படம், பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் இடம்பெறும் மூன்று பாடல்களை அமெரிக்காவில் படமாக்குகிறார்கள். லாஸ் வேகாஸ், கிராண்ட் கேன்யன், நியூயார்க் நகரங்களில் இதுவரை எந்த தமிழ்ப்படமும் படமாக்கப்படாத லொகேஷன்களில் இந்தப் பாடல்கள் படமாகின்றன.
இவற்றில் 'ஒரு முறை...' என்ற பாடலில் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் தோன்றுகிறாராம்.
இந்தப் பாடல்களில் நடிக்க அமலா பால் மற்றும் படக்குழுவினர் வரும் 28-ம் தேதி அமெரிக்காவுக்குப் பறக்கிறார்கள்.
கடந்த ஆண்டு தமிழில் அறிமுகமான அமலா பால், படப்பிடிப்புக்காக அமெரிக்கா போவது இதுவே முதல் முறையாம். ஆர் எஸ் இன்போடைன்மெண்டின் இந்தப் படத்தை மிக முக்கியமானதாகக் கருதுகிறார் அமலா.

21 அக்டோபர் 2011

பொங்கலுக்கு வருகிறான் நண்பன்!

வரும் தைத் திருநாளில் நண்பன் படம் வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இப்போதெல்லாம், தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ தினங்களில் ரிலீசாகும் படங்களுக்கு இரண்டு மாதங்கள் முன்பாகவே தியேட்டர்களில் இடம்பிடித்தாக வேண்டிய நிலை.
எனவே பொங்கலுக்கு வெளியாகப் போகும் படங்கள் என்னென்ன என்பதை இப்போதிலிருந்தே தெளிவுபடுத்த ஆரம்பித்துள்ளனர்.
முதலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள படம் விஜய் - ஜீவா - ஸ்ரீகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள நண்பன்.
இதுகுறித்து இயக்கநர் ஷங்கர் கூறுகையில், "நண்பன் படம் 100 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. இந்த தீபாவளிக்கு வேலாயுதம், பொங்கலுக்கு நண்பன் என விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். டிசம்பரில் நண்பன் ஆடியோ வெளியாக உள்ளது," என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் நண்பன் படம் பொங்கலுக்கு வருவது உறுதியாகிவிட்டது.

18 அக்டோபர் 2011

ஐஸ்வர்யாவிற்கு வளைகாப்பு!

காலங்கள் கடந்தாலும் இன்றும் உலக அழகியாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராய்க்கு இன்று மாலை மும்பையில், அவரது மாமியார் வீட்டில் வளைகாப்பு நடக்கிறது. இதில் பாலிவுட் நடிகைகள் திரளாக பங்கேற்கின்றனர்.
எட்டு மாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா ராய் வளைகாப்புக்காக அமிதாப்பச்சனின் இல்லம் இன்று வண்ணமயமாக ஜொலிக்கிறது. ஐஸ்வர்யா ராயின் மாமியார் ஜெயா பச்சன் இந்த விழாவை நடத்துகிறார். மும்பை கலாச்சாரப்படி இந்த விழா நடக்கிறது.
ஐஸ்வர்யா ராய் நவம்பரில் குழந்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஐஸ்வர்யா கணவர் அபிஷேக் கூறுகையில், "குழந்தை பிறக்கும் தேதி இன்னும் எங்களுக்கு கூறப்படவில்லை. எனினும் அது நவம்பர் மாத குழந்தையாக இருக்கும்.
இந்தக் குழந்தை மூலம் எங்கள் குடும்பத்தில் நவம்பர் மாதத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6-ஆக உயரப் போகிறது," என்ரார். குழந்தை பிறக்கும்போது ஐஸ்வர்யாவுடன் இருக்க விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார்.
மேலும் ஐஸ்வர்யாவுக்கு இரட்டைக் குழந்தைகள் என வெளியான செய்திகளை மறுத்தார் அபிஷேக்.
2007-ல் அபி - ஐஸ் திருமணம் விமரிசையாக நடந்தது. நான்கு ஆண்டுகள் கழித்து இவர்களுக்கு முதல் குழந்தை பிறக்கிறது!
இன்று நடக்கும் சீமந்த விழாவில் பாலிவுட் நடிகைகள் கஜோல், ஷாரூக்கான் மனைவி கௌரி கான் உள்பட பலரும் பங்கேற்கின்றனர்.

15 அக்டோபர் 2011

திரிஷாவின் இந்தி ஆசை!

காட்டா மீட்டா தோல்விக்குப் பிறகு கொஞ்ச காலம் சட்டி சுட்டதடா என்று தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமே நடித்து வந்தார் த்ரிஷா.
இப்போது அவருக்கு இந்திப் பட ஆசை மீண்டும் வந்துவிட்டது. ஒரு படம் தோற்றால், மீண்டும் அந்த மொழியில் நடிக்காமல் போவதா என்று சிலிர்த்துக் கிளம்பியுள்ளார் த்ரிஷா.
இதுபற்றி அவர் கூறுகையில், "எந்த மொழியாக இருந்தாலும் படம் தோற்றால் மனசு கஷ்டப்படுகிறது. காட்டாமீட்டா இந்திப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் சந்தோஷப்பட்டேன். அப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நிறைய இந்திப் பட வாய்ப்புகள் வந்தன. அட்வான்ஸோடு தயாரிப்பாளர்கள் காத்திருந்தார்கள்.
ஆனால் நான் எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. காட்டாமீட்டா ரிலீஸ் ஆனபிறகு தான் புதுப்படங்களுக்கு ஒப்பந்தமாவேன் என்று கூறிவிட்டேன்.
படம் நன்றாக போகாததால் என்னைத் தேடிவந்தவர்கள் காணாமல் போனார்கள். இதுதான் சினிமா என்றாலும், இந்த ஏமாற்றத்தை என்னால் தாங்க முடியவில்லை. ஆனால் மீண்டும் இந்திப்பட வாய்ப்பைப் பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இப்போது ஒரு தமிழ் மற்றும் இரு தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறேன்," என்றார்.

14 அக்டோபர் 2011

ஸ்ருதி சித்தார்த் இடையே பிரிவு!

நடிகர் சித்தார்த்தும் ஸ்ருதியும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு நடிகர் சித்தார்த்தும், ஸ்ருதி ஹாஸனும் ஒரு படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணமாகாமலேயே இணைந்து வாழ்வதாக கடந்த சில மாதங்களாகக் கூறப்பட்டு வந்தது. கமல் ஹாஸனுக்கும் மகளின் இநத உறவு குறித்து தெரியும் என்றும் கூறினர்.
இதனை ஸ்ருதி மறுக்கவில்லை. அவரிடம் கேட்டபோதெல்லாம், அது எனது தனிப்பட்ட விவகாரம் என்றே கூறி வந்தார். சித்தார்த்தும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து வந்தார்.
இந்த நிலையில் இருவரும் இப்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக தெலுங்கு திரைப்பட உலகில் பரபரப்பாக செய்தி பரவி வருகிறது.
உறவு குறித்து மவுனம் காத்தது போலவே, இந்தப் பிரிவு குறித்தும் ஸ்ருதி - சித்தார்த் எதுவும் கூற மறுத்துவிட்டனர். ஆனால் சித்தார்த் தன்மேல் ஆதிக்கம் செலுத்துவது பிடிக்காததால் ஸ்ருதி விலகிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
சித்தார்த் ஏற்கெனவே திருமணமாகி, மனைவியை விவாகரத்து செய்தவர் என்பவது குறிப்பிடத்தக்கது.

உடல் தானத்திற்கு விரும்பும் சினேகா!

நடிகர் கமலஹாசன் ஏற்கனவே உடல் தானம் செய்து பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளார். அவரை தொடர்ந்து நடிகை சினேகாவும் உடல் தானம் செய்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், சமூகத்துக்கு ஒவ்வொரு வரும் நல்லது செய்ய வேண்டும். எனது பிறந்த நாள் விழாவினை ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி கொண்டாடுகிறேன். இவ்வருட பிறந்த நாளில் மாற்றுத் திறனாளிகளுக்கு விருந்து கொடுத்து கொண்டாடினேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இரு வருடங்களுக்கு முன் எனது கண்களை தானம் செய்தேன். விரைவில் உடல் தானம் செய்யவும் முடிவு செய்துள்ளேன். ரசிகர்கள் கண்களை தானம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.சினேகா தற்போது முரட்டுக்காளை, விடியல் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ராமண்ணா என்ற படத்திலும் நடிக்கிறார்.

11 அக்டோபர் 2011

துணை இயக்குனராகிறார் அக்சரா!

கமல் ஹாசன் குடும்பத்திலிருந்து இன்னொரு கலை வாரிசு வெளி வந்துள்ளது. மூத்த மகள் ஸ்ருதி, பாடகியாக, இசையமைப்பாளராக, நடிகையாக கலக்க ஆரம்பித்துள்ள நிலையில், இளைய மகள் அக்ஷரா தனது தந்தை இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படத்தில் துணை இயக்குனராகியுள்ளார்.
கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷராவுக்கு நடிப்பை விட இயக்கத்தில் தான் ஆர்வம் அதிகம். நான் திரைக்குப் பின்னால் இருக்கவே விரும்புகிறேன் என்று அவரே ஒருமுறை தெரிவித்துள்ளார். ஆனால் அண்மையில் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க அக்ஷரா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இலங்கைத் தமிழர் ஒருவரை காதலிப்பதாகவும் கிசுகிசு வந்தது. தாயார் சரிகாவுடன் தங்கியுள்ள அக்ஷரா, பாலிவுட் இயக்குனர் ராகுல் தோலாகியாவின் சொசைட்டி என்ற படத்தில் இயக்கத்தில் உதவியாக இருந்தார்.
நடனம், இயக்கத்தில் ஆர்வம் காட்டும் அக்ஷரா தற்போது தந்தை நடித்து வரும் விஸ்வரூபம் படத்தில் துணை இயக்குநராக இணைந்துள்ளார். தனது தந்தையை வைத்து முழுப் படத்தை இயக்கும் ஐடியாவில் உள்ள அக்ஷரா அதற்கு முன்பாக இயக்கத்தில் நல்ல பயிற்சி பெறுவதற்காகவே இப்போது கமல் படத்தில் துணை இயக்குநராகியுள்ளார்.
விஸ்வரூபம் படத்தை கமல்ஹாசனே இயக்கி நடிக்கிறார் என்பது நினைவிருக்கலாம். இந்த படத்தை முதலில் செல்வராகவன் தான் இயக்குவதாக இருந்தது. அதன் பிறகு தானே இயக்கப்போவதாக கமல் அறிவித்தார்.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா...!

09 அக்டோபர் 2011

ஷாருக்கானுடன் பிரியங்கா நெருக்கம்!

நடிகை பிரியங்கா சோப்ராவும், நடிகர் ஷாஹித் கபூரும் பிரிவதற்கு ஷாருக் கான் தான் காரணம் என்று பாலிவுட்டில் பரவலாகப் பேசப்படுகிறது.
நடிகை பிரியங்கா சோப்ராவும், நடிகர் ஷாஹித் கபூரும் அவ்வப்போது சேர்வதும், பிரிவதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த முறை அவர்கள் பிரிந்ததற்கு ஷாருக்கான் தான் காரணமாம். ஷாருக்கானும், பிரியங்கா சோப்ராவும் மிகவும் நெருக்கமாகியுள்ளனர். இதனால் ஷாருக் வீட்டில் ஒரே புகைச்சல்.
கௌரிக்கும், ஷாருக்கிற்கும் அடிக்கடி தகராறு வருகிறது. அவர்கள் சண்டைபோட்டாலே அதற்கு காரணம் பிரியங்கா சோப்ராவாகத் தான் இருக்கிறதாம். ஏனென்றால் ஷாருக்கும், பிரியங்காவும் எப்பொழுது பார்த்தாலும் ஒட்டி, உறவாடுகிறார்களாம். அப்ப பொண்டாட்டிக்கு கோபம் வரத் தானே செய்யும்.
ஷாஹித் கபூரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாராம். என்னடா காதலன்னு நான் ஒருத்தன் இங்க இருக்கேன். என்ன மதிக்காம பிரியங்கா எப்ப பார்த்தாலும் ஷாருக்குடன் ஊர் சுற்றுகிறாரே என்று கடுப்பான ஷாஹித் உனக்கும், உன் காதலுக்கும் ஒரு பெரிய கும்பிடு என்று சொல்லிவி்ட்டு இடத்தை காலிபண்ணிவிட்டாராம்.
ஷாருக் பெயரைச் சொல்லும்போதெல்லாம் பிரியங்கா வெட்கச் சிரிப்பு சிரித்து ஷாஹித்துக்கு கடுப்பேற்றியுள்ளார். எத்தனை நாட்கள் தாங்குவார் அவரும்.
இப்பொழுது பிரியங்கா ஷாருக்குடன் இருக்கிறார். ஆனால் ஷாஹித் ஆள் கிடைக்காமல் தனியே, தன்னந்தனியே இருக்கிறார். கரீனாவால் புண்பட்ட ஷாஹித் மனதை பிரியங்கா ஆற்றினார். இப்போது மறுபடியும் 'ஆற்றப்' போவது யாரோ...?

07 அக்டோபர் 2011

வடிவேலுவை கழற்றி விட்ட சுந்தர் சி.

காற்று எந்தப் பக்கம் அடிக்கிறதோ, அந்தப் பக்கம் சாயும் நாணலைப் போன்றவர்கள்தான் சினிமாக்காரர்கள். காரணம் இது முழுக்க முழுக்க வர்த்தகம். கலை என்பது காசுக்கு அப்புறம்தான்!
இயக்குநர் சுந்தர் சியும் ஒரு பக்கா சினிமாக்காரர்தான். இவர் ஆரம்பத்தில் கவுண்டமணியை மட்டுமே நம்பி காமெடிப் படம் எடுத்தார். கவுண்டர் அலை ஓய ஆரம்பித்ததும், அன்றைக்கு பரபரப்பாக இருந்த வடிவேலுவை தனது ஆஸ்தான காமெடியன் ரேஞ்சுக்கு கொண்டு வந்தார்.
வின்னர், கிரி, இரண்டு, தலைநகரம், நகரம் என வரிசையாக இவர்களின் படங்களில் காமெடி களை கட்டியது. இந்த நிலையில் அரசியலில் குதித்து 'அடிபட்டார்' வடிவேலு.
சினிமாவில் மீண்டும் நடிக்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில்தான் சுந்தர் படத்தில் வடிவேலு மீண்டும் நடிக்கிறார் என செய்திகள் வந்தன. சுந்தர் மற்றும் அவர் மனைவி குஷ்பு இருவருமே திமுகவினர். வடிவேலுவும் திமுகவுக்காக களமிறங்கித்தான் இந்த நிலையில் உள்ளார். எனவே வடிவேலுவுக்கு சுந்தர் கைகொடுக்கிறார் போலிருக்கிறது என 'நம்பி' அனைவரும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் தர, சுந்தரோ இதை உடனே மறுத்தார்.
இப்போது தான் இயக்கும் அடுத்த படத்துக்கு காமெடியனாக சந்தானத்தை ஒப்பந்தம் செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்!!

03 அக்டோபர் 2011

சிம்புவின் இரண்டாவது ஜோடி!

சிம்பு நடிக்கும் வேட்டை மன்னன் படத்தில் சிம்புவின் இரண்டாவது ஜோடியாக இணைகிறார் ஹன்சிகா மோத்வானி.
நிக் ஆர்ட்ஸ் தயாரிக்க, நெல்சன் இயக்க உருவாகும் படம் வேட்டை மன்னன். இப்படத்தில் ஜெய்யும் நடிக்கிறார். பக்கா ஆக்ஷன் படமாக உருவாகும் வேட்டை மன்னனுக்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.
படத்தில் இரண்டு நாயகிகள். இதில் ஒருவரான ஹாட்டான தீக்ஷா ஷேத்தை ஏற்கனவே புக் செய்து விட்டனர். இன்னொரு நாயகிக்காக தீவிர வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். தற்போது அந்த வலையில் சிக்கியிருக்கிறார் ஹன்சிகா மோத்வானி.
மாப்பிள்ளை படத்திலும், பின்னர் எங்கேயும் காதல் படத்திலும் நடித்தவரான ஹன்சிகா தற்போது விஜய்யின் வேலாயுதம் படத்தை எதிர்பார்த்திருக்கிறார். ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது ஹன்சிகாவுக்கு. ஆனால் அவர் நடித்த மாப்பிள்ளையும், எங்கேயும் காதலும் பெரும் தோல்விப் படங்களாகி விட்டதால் ராசியில்லாத நடிகையாக பார்க்கப்படுகிறார். இந்த நிலையை வேலாயுதம் மாற்றும் என்ற நம்பிக்கையில் இருக்கும் ஹன்சிகா தற்போது சிம்புவின் வட்டாரத்திற்குள் நுழைந்துள்ளார்.
வேலாயுதமும், வேட்ட்டை மன்னனும் ஹன்சிகாவை எப்படி தூக்கி விடப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...!

30 செப்டம்பர் 2011

நடிப்பாரா ஸ்ரீதேவியின் மகள்?

“படத்துக்கு படம் நடிகர், நடிகைகளின் வாரிசுகள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றனர். பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கும்கி’ படம் மூலமாக அறிமுகமாகிறார் நடிகர் பிரபு மகன் விக்ரம். மணிரத்னம் இயக்கும் படத்தில் கார்த்திக் மகன் கவுதம் நடிக்க பேச்சு நடக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தியில் கலக்கியவர் ஸ்ரீதேவி. அவரது மகள் ஜான்வி தெலுங்கு படத்தில் ராம்சரண் தேஜா ஜோடியாக நடிப்பார் என்று தகவல் பரவியது.
இதைக்கேட்டு கோபம் அடைந்த ஸ்ரீதேவி, எந்த துறையில் ஈடுபடுவது என்பது பற்றி இன்னும் ஜான்வி முடிவு செய்யவில்லை. இப்போது படித்துக்கொண்டிருக்கிறாள். இன்னும் சொல்லப்போனால் 18 வயதுக்கு பிறகுதான் அவளிடம் நடிக்க ஆர்வம் இருக்கிறதா என்றே கேட்பேன்” என்றார். மீடியாதான் என் மகள் நடிக்கிறாள் என்று கிளப்பிவிட்டிருக்கின்றன. நடிப்பாரா? இல்லையா? என்பதை சொல்வதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.
அப்படி நடிப்பதென்றால் அவரை பாலிவுட்டிலேயே என்னால் அறிமுகப்படுத்த முடியும். அதைவிட்டு ஏன் தெலுங்கு படத்தில் அறிமுகம் செய்ய வேண்டும் என்றார் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர்.
அம்மா ஒன்னு சொல்றாங்க; அப்பா ஒன்னு சொல்றாரு.. யாரு சொல்றதத்தான் நம்புறது…?

25 செப்டம்பர் 2011

சோனாவிற்கு மகளிர் அமைப்பு துணை!

மது விருந்தில் கலந்து கொண்ட தனக்கு எஸ்.பி. பி. சரண் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சோனா அவர் மீது போலீசில் புகார் கொடுத்தார். சோனா சென்னை கமிஷனரை சந்தித்து வீடியோ ஆதாரம் ஒன்றையும் கொடுத்தார். இந்த வழக்கில் எஸ்.பி. பி. சரண் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்நிலையில் நடிகை சோனாவுக்கு ஆதரவு தெரிவித்து எஸ். பி. பி. சரண் வீட்டுக்கு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத் தலைவி கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சோனா ஒரு நடிகையாக இருக்கலாம். அதற்காக எஸ்.பி.பி. சரண் அவரை ஆபாசமாக திட்டி இருக்கக் கூடாது. சோனா ஒரு பெண். அவருக்கும் கவுரவம் உள்ளது. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு பெண்கள் திரண்டு கறுப்புக் கொடியுடன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டம் நாளை தொடங்குகிறது. சோனாவுக்கு நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

22 செப்டம்பர் 2011

ஸ்ரேயா கோஷலும் நடிகையாகிறார்!

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், நடிப்பு சேவையை துவக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
பிரபல பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல், தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி என பல மொழிகளில் சினிமா பின்னணி பாடல்களை பாடி பிரபலமடைந்தவர். பல மொழிகளிலும் 180க்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி பாடி, 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழில் விண்ணை தாண்டி வருவாயா, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் பாடியதற்காக பல விருதுகளைக் குவித்தவர். கோஷல் பார்க்க சினிமா நடிகைகளைப் போலவே படு அழகாக இருப்பார். இதனால் அவரை நடிக்க வைக்க பலரும் முயன்றனர். ஆனால் அவர் ஜகா வாங்கிக் கொண்டே வந்தார்.
எல்லாருக்கும் 'நோ' என்ற பதிலை மட்டுமே கொடுத்து வந்த கோஷலும் இப்போது நடிப்பு வலையில் விழுந்து விட்டதாக தெரிகிறது. இயக்குநர் ஒருவர் கூறிய கதையைக் கேட்டு மெய்மறந்து போய் விட்டாராம். அந்தக் கதையில் நான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.
ஏற்கனவே உள்ள ஒரு ஸ்ரேயா வழங்கும் 'நடிப்புச் சேவையில்' திளைத்து வரும் ரசிகர்களுக்கு கலை சேவையாற்ற இன்னோரு ஸ்ரேயா வருகிறார். 'டபுள் டிலைட்'தான். இனி நீங்க கவர்ச்சியா நடிப்பீங்களா, முத்தக் காட்சியில் நடிப்பீர்களா என்ற பழைய கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஸ்ரேயா கோஷலும் தள்ளப்படுவார் என எதிர்பார்க்கலாம்.

18 செப்டம்பர் 2011

சேலை கட்ட இஷ்டமில்லை!

மைனா புகழ் அமலா பால் எந்த விழாக்களுக்கு வந்தாலும் மாடர்ன் டிரஸ்ஸில் தான் வருகிறார். அவரைப் புடவையில் பார்க்க வேண்டும் என்றால் திரையில் மட்டுமே அது சாத்தியம். காரணம் அவருக்கு சேலை கட்டுவதில் இஷ்டம் இல்லையாம், அது கஷ்டமான வேலை என்கிறார்.
அழகாக இருக்கிறீர்கள், லட்சணமாக தழையத் தழைய அழகாக புடவை அணிந்து வரலாமே என்று கேட்டால், விழாக்களுக்கு புடவையில் வருவது கஷ்டம். புடவை கட்ட நேரமாகும். அதனால் தான் விழாக்களுக்கு நான் புடவை கட்டி வருவதில்லை என்றார்.
யாராவது விழா ஏற்பாட்டாளர்கள் அம்மணியை புடவையில் வரச் சொன்னாலும் கூட ஸாரிங்க என்று 'சாரி' கட்ட மறுத்து விடுகிறாராம்.
தெய்வத் திருமகள் படத்தில் வண்ண வண்ண புடவைகளில் வந்து அசத்தினாரே, நிஜத்திலும் அப்படி வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
என்ன பண்றது, கொசுவம் வைத்து சேலை கட்ட அமலாவுக்கு கஷ்டமா இருக்குதாமே...!

14 செப்டம்பர் 2011

ரஜனியிடம் அடிவாங்க ஆசை!

ஒரு படத்திலாவது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாகி, அவர் கையால் அடிவாங்க வேண்டும். அன்றுதான் என் சினிமா பயணம் பூர்த்தியடையும், என்று நடிகர் அஜீத் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் மிகப்பெரிய ரசிகர், ரஜினியை கடவுளாகவே போற்றுபவர் நடிகர் அஜீத். ரஜினியைப் போலவே சினிமாவில் தனக்கென தனித்த கொள்கைகளை வைத்திருப்பவர்.
அவரது இந்த அணுகுமுறை புதிதாக ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளது, குறிப்பாக ரஜினி ரசிகர்களை. ரஜினிக்கு அடுத்து அஜீத்தை அவர்கள் அதிகம் விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அஜீத் அளித்துள்ள பேட்டி, அவர் எந்த அளவு ரஜினியை நேசிக்கிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
உங்கள் அடுத்த ஆசை என்ன அஜீத்திடம் கேட்டதற்கு அவர் இப்படிக் கூறியுள்ளார்:
எனக்கு நம்பர் ஒன், நம்பர் டூவில் ஈடுபாடில்லை. அந்த எண்ணங்களும் இப்போது மனதில் இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் ரஜினி சாரைப் பார்க்கிறேன். அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் கவலை இல்லை. நான் ஏகலைவன் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்.
சூப்பர் ஸ்டாரை நான் தூரத்திலிருந்து பார்த்து ரசித்தபடி படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன்.
ரஜினி சார் நடிக்க வேண்டும். அவர் படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும். அவர் கையால் நான் அடி வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு நடக்கிறதோ, அன்று என் சினிமா பயணம் ஒரு முழுமையடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என் லட்சியம். மங்காத்தாவின் மாபெரும் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்!"என்றார் அஜித்.

11 செப்டம்பர் 2011

த்ரிஷாவை கடுப்பாக்கிய லட்சுமி ராய்!

அஜீத் ஜோடி மற்றும் வில்லி கேரக்டரில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யுமாறு தன்னிடம் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதாக லக்ஷ்மி ராய் தெரிவித்ததால் த்ரிஷா கடுப்பாகியுள்ளார். ராயைப் போட்டுத் தாக்கியுள்ளார்.
மங்காத்தாவில் த்ரிஷா நடித்த கேரடக்டருக்கு தன்னைத் தான் வெங்கட் பிரபு முதலில் அணுகினார் என்றும், அஜீத் ஜோடி, வில்லி கேரக்டரில் எது வேண்டுமானாலும் தேர்வு செய்யுமாறு கூறியதாகவும் நடிகை லட்சுமி ராய் தெரிவித்துள்ளார். ஆனால் இதை இயக்குனர் வெங்கட் பிரபு மறுத்துள்ளார். தான் த்ரிஷாவைத் தான் அஜீத் ஜோடியாக நடிக்கக் கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த த்ரிஷா கடுப்பாகிவிட்டாராம். என்ன இந்த லக்ஷ்மி ராய் இப்படி அல்பத்தனமாக நடந்து கொள்கிறாரே என்று எரிச்சல் அடைந்துள்ளாராம். அம்மாடி இப்படி பொய் சொல்கிறாரே லக்ஷ்மி ராய் என்று மங்காத்தா யூனிட்டும் கூட கடுப்பாகியுள்ளதாம்.
மங்காத்தா படத்தில் நடிக்கப் போய் இப்படி திரிஷாவை காஞ்சனா ரேஞ்சுக்கு மாற்றி விட்டாரே லக்ஷ்மி ராய்.

06 செப்டம்பர் 2011

முப்பொழுதும் உன் கற்பனைகள்.

முப்பொழுதும் உன் கற்பனைகள் மூலம் தெலுங்குக்கும் போகும் அமலா பால் நடிகை அமலா பாலின் டோலிவுட் ஆசை நிறைவேறியுள்ளது. இதனால் அவர் படு குஷியாக உள்ளார்.
மலையாள நடிகையான அமலா பாலுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது கோலிவுட் அதுவும் மைனா தான். கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிவிட்டார் அமலா. இந்நிலையில் டோலிவிட்டிலும் ஒரு ரவுண்ட் வர அவர் ஆசைப்பட்டார். அதற்காக நிறைய தெலுங்கு படங்களைப் பார்க்குமாறு தோழி அனுஷ்கா கூட அறிவுரை வழங்கியிருந்தார்.
அமலா தெலுங்கு படங்கள் பார்த்தாரோ, இல்லையோ தெரியவில்லை. ஆனால் அவரது ஆசை நிறைவேறியுள்ளது. எப்படி என்கிறீர்களா? முரளி மகன் அதர்வாவுடன் அமலா ஜோடி சோர்ந்த முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை தெலுங்கிலும் எடுத்து வருகின்றனர். நிரந்தரம் நீ வூகாலே என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் அம்மணி தான் கதாநாயகி.
அமலா பால் காட்டில் மழை தான். இந்த படம் ஹிட்டானால் தெலுங்கிலும் ஒரு கை பார்க்க திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே மைனா, தெய்வத்திருமகள் வெற்றியால் பூரித்துள்ள அமலாவுக்கு இந்த செய்தி மேலும் பூரிப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.