பக்கங்கள்

07 அக்டோபர் 2011

வடிவேலுவை கழற்றி விட்ட சுந்தர் சி.

காற்று எந்தப் பக்கம் அடிக்கிறதோ, அந்தப் பக்கம் சாயும் நாணலைப் போன்றவர்கள்தான் சினிமாக்காரர்கள். காரணம் இது முழுக்க முழுக்க வர்த்தகம். கலை என்பது காசுக்கு அப்புறம்தான்!
இயக்குநர் சுந்தர் சியும் ஒரு பக்கா சினிமாக்காரர்தான். இவர் ஆரம்பத்தில் கவுண்டமணியை மட்டுமே நம்பி காமெடிப் படம் எடுத்தார். கவுண்டர் அலை ஓய ஆரம்பித்ததும், அன்றைக்கு பரபரப்பாக இருந்த வடிவேலுவை தனது ஆஸ்தான காமெடியன் ரேஞ்சுக்கு கொண்டு வந்தார்.
வின்னர், கிரி, இரண்டு, தலைநகரம், நகரம் என வரிசையாக இவர்களின் படங்களில் காமெடி களை கட்டியது. இந்த நிலையில் அரசியலில் குதித்து 'அடிபட்டார்' வடிவேலு.
சினிமாவில் மீண்டும் நடிக்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில்தான் சுந்தர் படத்தில் வடிவேலு மீண்டும் நடிக்கிறார் என செய்திகள் வந்தன. சுந்தர் மற்றும் அவர் மனைவி குஷ்பு இருவருமே திமுகவினர். வடிவேலுவும் திமுகவுக்காக களமிறங்கித்தான் இந்த நிலையில் உள்ளார். எனவே வடிவேலுவுக்கு சுந்தர் கைகொடுக்கிறார் போலிருக்கிறது என 'நம்பி' அனைவரும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் தர, சுந்தரோ இதை உடனே மறுத்தார்.
இப்போது தான் இயக்கும் அடுத்த படத்துக்கு காமெடியனாக சந்தானத்தை ஒப்பந்தம் செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக