பக்கங்கள்

25 அக்டோபர் 2011

என்னை அண்ணி என்பதா.....?த்ரிஷா பாய்ச்சல்!

மகேஷ் பாபுவுக்கு அண்ணியாக ஒரு படத்தில் தான் நடிக்கப்போவதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை த்ரிஷா.
மங்காத்தாவுக்குப் பின் த்ரிஷா நடித்து வரும் தெலுங்குப் படம் கங்கா. ஏற்கெனவே பாடிகார்ட் படத்தை முடித்துவிட்டார்.
இந்தப் படங்களுக்குப் பிறகு தெலுங்கில் அவருக்கு வாய்ப்புகளில்லை. தமிழில் விஷாலுக்கு ஜெடியாக சமரன் படத்தில் நடித்து வருகிறார். அதற்குப் பிறகு வேறு படம் இல்லை.
இந்த நிலையில் திரிஷாவை தெலுங்கு படமொன்றில் அண்ணி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருப்பதாக வதந்தி பரவியது. பட வாய்ப்புகள் இல்லாததால் அண்ணி கேரக்ட்டருக்கு இறங்கி வந்துள்ளதாகவும் கூறப்பட்டது. அப்படத்தில் வெங்கடேஷ், மகேஷ் பாபு என இரு நாயகர்கள் நடிக்கின்றனர்.
வெங்கடேஷின் தம்பியாக மகேஷ்பாபு நடிக்கிறார். வெங்கடேஷ் மனைவி வேடத்தில் திரிஷா நடிக்கிறார். அதாவது மகேஷ் பாபுவின் அண்ணியாக வருகிறார் என்று செய்திகள் வெளியாயின.
இது பற்றி திரிஷாவிடம் கேட்டதுமே கடுப்பாகிவிட்டார். அவர் கூறுகையில், "மகேஷ்பாபு, வெங்கடேஷ் இணைந்து நடிக்கும் படத்துக்கு நான் ஒப்பந்த மாகவில்லை. எனவே மகேஷ்பாபுவின் அண்ணியாக நடிக்கிறேன் என்ற கேள்வியே எழவில்லை. விஷால் ஜோடியாக நடிக்கும் சமரன் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் அமைந்துள்ளது. திறமையை காட்டுவதற்கு இப்படத்தில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்தப் படத்துக்குப் பிறகே வேறு படம்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக