பக்கங்கள்

09 அக்டோபர் 2011

ஷாருக்கானுடன் பிரியங்கா நெருக்கம்!

நடிகை பிரியங்கா சோப்ராவும், நடிகர் ஷாஹித் கபூரும் பிரிவதற்கு ஷாருக் கான் தான் காரணம் என்று பாலிவுட்டில் பரவலாகப் பேசப்படுகிறது.
நடிகை பிரியங்கா சோப்ராவும், நடிகர் ஷாஹித் கபூரும் அவ்வப்போது சேர்வதும், பிரிவதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த முறை அவர்கள் பிரிந்ததற்கு ஷாருக்கான் தான் காரணமாம். ஷாருக்கானும், பிரியங்கா சோப்ராவும் மிகவும் நெருக்கமாகியுள்ளனர். இதனால் ஷாருக் வீட்டில் ஒரே புகைச்சல்.
கௌரிக்கும், ஷாருக்கிற்கும் அடிக்கடி தகராறு வருகிறது. அவர்கள் சண்டைபோட்டாலே அதற்கு காரணம் பிரியங்கா சோப்ராவாகத் தான் இருக்கிறதாம். ஏனென்றால் ஷாருக்கும், பிரியங்காவும் எப்பொழுது பார்த்தாலும் ஒட்டி, உறவாடுகிறார்களாம். அப்ப பொண்டாட்டிக்கு கோபம் வரத் தானே செய்யும்.
ஷாஹித் கபூரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாராம். என்னடா காதலன்னு நான் ஒருத்தன் இங்க இருக்கேன். என்ன மதிக்காம பிரியங்கா எப்ப பார்த்தாலும் ஷாருக்குடன் ஊர் சுற்றுகிறாரே என்று கடுப்பான ஷாஹித் உனக்கும், உன் காதலுக்கும் ஒரு பெரிய கும்பிடு என்று சொல்லிவி்ட்டு இடத்தை காலிபண்ணிவிட்டாராம்.
ஷாருக் பெயரைச் சொல்லும்போதெல்லாம் பிரியங்கா வெட்கச் சிரிப்பு சிரித்து ஷாஹித்துக்கு கடுப்பேற்றியுள்ளார். எத்தனை நாட்கள் தாங்குவார் அவரும்.
இப்பொழுது பிரியங்கா ஷாருக்குடன் இருக்கிறார். ஆனால் ஷாஹித் ஆள் கிடைக்காமல் தனியே, தன்னந்தனியே இருக்கிறார். கரீனாவால் புண்பட்ட ஷாஹித் மனதை பிரியங்கா ஆற்றினார். இப்போது மறுபடியும் 'ஆற்றப்' போவது யாரோ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக