பக்கங்கள்

18 அக்டோபர் 2011

ஐஸ்வர்யாவிற்கு வளைகாப்பு!

காலங்கள் கடந்தாலும் இன்றும் உலக அழகியாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராய்க்கு இன்று மாலை மும்பையில், அவரது மாமியார் வீட்டில் வளைகாப்பு நடக்கிறது. இதில் பாலிவுட் நடிகைகள் திரளாக பங்கேற்கின்றனர்.
எட்டு மாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா ராய் வளைகாப்புக்காக அமிதாப்பச்சனின் இல்லம் இன்று வண்ணமயமாக ஜொலிக்கிறது. ஐஸ்வர்யா ராயின் மாமியார் ஜெயா பச்சன் இந்த விழாவை நடத்துகிறார். மும்பை கலாச்சாரப்படி இந்த விழா நடக்கிறது.
ஐஸ்வர்யா ராய் நவம்பரில் குழந்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஐஸ்வர்யா கணவர் அபிஷேக் கூறுகையில், "குழந்தை பிறக்கும் தேதி இன்னும் எங்களுக்கு கூறப்படவில்லை. எனினும் அது நவம்பர் மாத குழந்தையாக இருக்கும்.
இந்தக் குழந்தை மூலம் எங்கள் குடும்பத்தில் நவம்பர் மாதத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6-ஆக உயரப் போகிறது," என்ரார். குழந்தை பிறக்கும்போது ஐஸ்வர்யாவுடன் இருக்க விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார்.
மேலும் ஐஸ்வர்யாவுக்கு இரட்டைக் குழந்தைகள் என வெளியான செய்திகளை மறுத்தார் அபிஷேக்.
2007-ல் அபி - ஐஸ் திருமணம் விமரிசையாக நடந்தது. நான்கு ஆண்டுகள் கழித்து இவர்களுக்கு முதல் குழந்தை பிறக்கிறது!
இன்று நடக்கும் சீமந்த விழாவில் பாலிவுட் நடிகைகள் கஜோல், ஷாரூக்கான் மனைவி கௌரி கான் உள்பட பலரும் பங்கேற்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக