பக்கங்கள்

25 செப்டம்பர் 2011

சோனாவிற்கு மகளிர் அமைப்பு துணை!

மது விருந்தில் கலந்து கொண்ட தனக்கு எஸ்.பி. பி. சரண் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சோனா அவர் மீது போலீசில் புகார் கொடுத்தார். சோனா சென்னை கமிஷனரை சந்தித்து வீடியோ ஆதாரம் ஒன்றையும் கொடுத்தார். இந்த வழக்கில் எஸ்.பி. பி. சரண் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்நிலையில் நடிகை சோனாவுக்கு ஆதரவு தெரிவித்து எஸ். பி. பி. சரண் வீட்டுக்கு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத் தலைவி கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சோனா ஒரு நடிகையாக இருக்கலாம். அதற்காக எஸ்.பி.பி. சரண் அவரை ஆபாசமாக திட்டி இருக்கக் கூடாது. சோனா ஒரு பெண். அவருக்கும் கவுரவம் உள்ளது. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு பெண்கள் திரண்டு கறுப்புக் கொடியுடன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டம் நாளை தொடங்குகிறது. சோனாவுக்கு நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக