பக்கங்கள்

02 மார்ச் 2011

உறக்கமின்றி தவித்த சமீராரெட்டி!

ரெட் அலர்ட் படத்தில் கற்பழிப்பு காட்சியில் நடிச்சதால பல நாள் தூக்கமே வரல என்று சமீரா ரெட்டி கூறியிருக்கிறார். பாலிவுட்டில் வெளியான ரெட் அலர்ட் படத்தில் நக்சலைட் பெண்ணாக நடித்திருப்பவர் நடிகை சமீரா ரெட்டி. இந்த படம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நக்சலைட்டா நடிக்க ரொம்பவே தயங்கினேன்.
என் முகத்துல அப்படி ஒரு ரியாக்ஷனைக் காட்ட முடியுமான்னு தெரியல. அப்புறம் ‌டைரக்டர் கொடுத்த தைரியத்துல நடிச்சேன். நிஜமான நக்சலைட் பிரச்னையைப் பற்றி நான் சொல்ல விரும்பல. ஒரு நடிகையா அந்த படத்துல என்னை கற்பழிப்பது போன்ற ஒரு காட்சியில், நடிச்சுட்டு பல நாள் தூக்கமே வரலை. தனிமையில் கண் கலங்கியிருக்கேன். ரெட் அலர்ட் படம் வேறு யாரும் நடிக்கத் தயங்குற நக்சலைட் வேடம். இதை ஏன் என்னை செய்யச் சொல்லணும். ஏதோஒரு விஷயத்துக்கு நான் ரொம்ப சரியா இருப்‌பேன்னு டைரக்டர்கள் நினைக்கிறாங்க. அதே சமயம் ரசிகர்களுக்கு கவர்ச்சி காட்டுறது ஒரு பெரிய குற்றமா நினைக்கல. கவர்ச்சியும் நடிப்பில் ஒரு பகுதிதான், என்று கூறியுள்ளார்.
ரெட் அலர்ட் படத்தில் லட்சுமி என்ற பெண்ணாக சமீரா ரெட்டியை, போலீஸ்காரர்கள் போலீஸ் நிலைய கழிவறையில் வைத்து கற்பழித்து விடுகிறார்கள். அதன் பின்னர் அவர் நக்சலைட் இயக்கத்தில் சேர்த்து பழிவாங்குவதுதான் படத்தின் மொத்த கதையும் என்பது கூடுதல் தகவல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக